Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அப்பாவிப் பெண்ணை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்த முயன்ற இராணுவ வீரர்கள் நையப்புடைக்கப்பட்டனர்

அசாம் மாநிலம் கவுகாத்தியில் கடந்த திங்கட்கிழமை பார் ஒன்றின் எதிரே ஒரு இளம் பெண் மானபங்கம் செய்யப்பட்டார்.
வனப்பகுதியில் விறகு சேகரித்துக்கொண்டிருந்த அந்தப் பெண்ணை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்த முயன்று சித்திரவதை செய்தவர்கள் அனைவரும் இந்திய ,ஜனநாயக, நாட்டின் இராணுவ வீரர்கள். இந்திய நாட்டை இராணுவத்தினர் பாதுகாக்க மாட்டார்கள் மக்கள் தான் மக்களின் பாதுகாவலர்கள் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம். இராணுவ வீரர்களின் அடாவடித்தனதை அறிந்த மக்கள் அங்கு விரைந்து அவர்களை அடித்து விரட்டி அந்தப் பெண்ணைக் காப்பாற்றினர்.
சுமார் 45 நிமிடம் போதையில் இருந்த 20 பேர் கும்பலிடம் சிக்கி அந்த பெண் அரை நிர்வாணமாக்கப்பட்டு கொடூர சித்ரவதைக் குள்ளானார். .
இந்த கொடூரம் உள்ளூர் தொலைக் காட்சியில் ஒளிபரப்பான பிறகே வெளியில் தெரிய வந்தது. இராணுவ காம வெறியர்களால் பாதிக்கப்பட்ட அந்த பெண் இன்னமும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இன்று மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அவள் உடலில் பல இடங்களில் சிகரெட்டால் சுட்ட காயம் இருந்தது. அந்த பெண் மானபங்கம் செய்யப்பட்ட போது போதையில் இருந்த கயவர்களால் சிகரெட்டால் சுடப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

Exit mobile version