Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைக்கு எதிராக இன்று முதல் ஜே.வி.பி. போராட்டம்!

நிறைவேற்று ஜனாதிபதி முறையினை மாற்றியமைக்க வேண்டும் எனக் கோரி இன்று முதல் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் போராட்டம் ஆரம்பமாகவுள்ளது. இந்த செயற்றிட்டம் விரைவில் பொது மக்களின் போராட்டமாக மாறும் என்று ஜே.வி.பி. யின் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைக்கு எதிராக ஜே.வி.பி.யினரால் இன்று செவ்வாய்க்கிழமை மாலை கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக பொதுமக்களுக்கு விழிப்பூட்டும் வகையில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்படவுள்ளது. இது தொடர்பாக நேற்று திங்கட்கிழமை தெளிவுபடுத்துகையிலேயே ரில்வின் சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கூறுகையில், இலங்கையில் தற்போது ஜனநாயகம் தொடர்பில் பல்வேறு வகையான கேள்விகள் எழுந்துள்ளது. சகல தரப்பினரது செயற்பாடுகளையும் கட்டுப்படுத்தக் கூடியவாறு அதிகாரம் ஒரு இடத்தில் மையப்படுத்தப்பட்ட நிலையில் காணப்படுவது மிகவும் ஆபத்தான விளைவுகளையே தோற்றுவிக்கும்.

தற்போது காணப்படும் நடைமுறை அரசியலும் அவ்வாறானதாகவே காணப்படுகின்றது. நாட்டை ஜனநாயக சூழலில் தக்க வைத்துக் கொள்வதற்கு நிறைவேற்று அதிகாரம் தடையாகவே உள்ளது. எனவே தான் இம்முøறக்கு எதிராக மக்கள் போராட்டம் ஒன்றுக்கு ஜே.வி.பி. செல்கின்றது. எதிர்வரும் நாட்களில் பொதுமக்களுடன் இணைந்து பாரியளவிலான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது.

Exit mobile version