UA-9562600-1
இந்திட அரசு டெல்லியில் நடத்திய மாநாட்டின் முடிவுகள் குறித்த தீர்மானம் இன்று வெளியிடப்பட்டது. இலங்கையில் இனப்படுகொலை நடத்திய இந்திய அரசு தனது ஆதரவாளர்களை அழைத்து தனது குகைக்குள்ளேயே கூட்டம் நடத்தி 13 வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு பங்களித்தவர்களின் ஊடாகக் கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்திய அதிகாரவர்க்கத்தின் நலன்களுக்காக இலங்கையில் தலையீடுகளை மேற்கொள்வதற்காக இந்திட அரசினால் திணிக்கப்பட்ட 13 வது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றுமாறு இந்திய அரசைக் கோரும் தீர்மானம் நிறைவேற்றுவதன் ஊடாக ஈழப் போராட்டத்தின் அடிப்படை நியாயங்களைக்
இலங்கையில் தமிழ்ப் பிரதேசங்கள் பாசிச ராஜபக்ச அரசால் புற்று நோய் போல அரிக்கப்பட்டு அபகரிக்கப்படுகின்றது. ‘அமைதியை’ப் போதித்த புத்தர் ஆக்கிரமிப்புச் சிலையாக அழிக்கப்படும் மக்களின் முற்றத்தில் நிறுவப்படுகின்றது. அவலத்தின் மத்தியில் வாழப்பழகிக்கொண்ட மக்கள் கூட்டம் உருவாக்கப்படுகிறது. எங்கும் இருள் சூழ்ந்த நம்பிக்கையிழந்த தமிழ்ப் பேசும் மக்கள் இழந்தவற்றிலிருந்து கற்றுக்கொண்டு ராஜபக்ச பாசிசத்தை முறியடிக்க குறைந்தபட்ச வழிகளைக்கூட அடைத்து அருவருப்பாக அழகுபார்க்கிறது ஒரு கூட்டம். பயப்படாதிர்கள் பிரபாகரன் வருவார் என்று ஈழப் பிரச்சனையை முன்வைத்துப் பிழைப்பு நடத்தும் வியாபாரிகள்
அன்று ,இந்திய ஆமிகளோடு கப்பலேறிய அரசியலானது தமிழ்பேசும் மக்களது நலனுக்கான தெரிவில்லை!அது,முற்று முழுதாக இந்திய நலன்களை இலக்கைக்குள் திணிக்கும் ஒரு நிகழ்சியாகும்.
வன்னிப் படுகொலைகளின் பின்னர் சிங்கள ஜனநாயக முற்போக்கு சக்திகள் மத்தியிலும் எதிர்வலைகளை ஏற்படுத்தியது. மனித குலத்தின் ஒரு பகுதியை சாரிசாரியாகக் கொன்றொழித்ததை ஒரு குறித்த சிலராவது அறிந்து வைத்திருந்தார்கள்.
காஷ்மீர் மக்களிடம் சுயநிர்ணய உரிமைக்கான வாக்கெடுப்பு நடத்துவதாக சொல்லி, 1947 முதல் ஏமாற்றி வருகிறது இந்திய அரசு.
இன்று அதிகாலை யாழ்ப்பாணம் உதயன் பத்திரிகை அலுவலகம் மீது இனந்தெரியாத மூவர் கொண்ட குழுவினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஐதேக பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க விடுத்துள்ள கண்டன அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, சாந்தி, சமாதானம் ஏற்படுத்தும் தமிழ்-சிங்கள புதுவருடம் பிறக்கவுள்ள நிலையில், இன்று சனிக்கிழமை அதிகாலை யாழ், உதயன் பத்திரிகை அலுவலகத்திற்குள்
சுவிஸ் ,கனடா ,தென் ஆபிரிக்கா போன்ற நாடுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் தேசிய கீதம் பாடப்படுகின்றன.
கோத்தாபய ராஜபக்சவினால் இலங்கை அரசின் முழு ஆதரவோடு உருவாக்கப்பட்டுள்ள பௌத்த துறவிகளின் நாஸி அமைப்பான பொதுபல சேனா என்ற அமைப்பிற்கு எதிராக நாளை 12.05.2013 அன்று இரவு கொழும்பு 5 ஹவலக் வீதியில் அமைந்துள்ள சிறீ சம்புதாத்வ ஜெயந்தி சந்தியில் ஆர்ப்பாட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. சிங்கள முஸ்லிம் அமைப்புக்கள் இணைந்து ஒழுங்கு செய்துள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்ப் பேசும் மக்களின் அனைத்துப் பிரிவினரும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்ப்பதாக ஆர்ப்பாட்ட ஒழுங்கமைப்பாளர்கள் அனுப்பிவைத்துள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில்
சிங்களவரும் தமிழரும் சரித்திர காலத்து எதிரிகள். துட்டகைமுனுவுக்கும் எல்லாளனுக்கும் இடையில் நடைபெற்ற யுத்தம் சிங்கள தமிழரிடை ஏற்பட்ட அரசியல் போராட்டம் , சோழ படையெடுப்பை எதிர்த்த சிங்கள மன்னர்கள் அண்மைய பிரச்சாரத்தில் மீண்டும் உயிரூட்டப்பட்டு புகழப்பட்டனர்.
பெப்பிலியான முஸ்லிம் வர்த்தக ஸ்தாபனம் தாக்கப்பட்டது சிங்கள பௌத்த இனவாத, மதவாத சதிகாரர்களின் திட்டமிட்ட செயலாகும் என முஸ்லிம் இடதுசாரி முன்னணியின் பொதுச்செயலாளர் மொகமட் பைசால் தெரிவித்தார். பெப்பிலியான முஸ்லிம் வர்த்தக ஸ்தாபனம் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், முஸ்லிம்களின் முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் மத வழிபாட்டு மார்க்கத்தையும், இஸ்லாமிய கலாசாரத்தையும் தடுத்து நிறுத்தவோ அல்லது திருத்தவோ யாரையும் அனுமதிக்க கூடாது. எமது மதத்தையும், கலாசாரத்தையும்