நீங்கள் போராட்டம் என தொல்லை கொடுத்தால் நான் பொறுமை இழந்துவிடுவேன் : டக்ளஸ் மிரட்டல்
நீங்கள் அடிக்கடி இவ்வாறு போராட்டமென தலையிடி கொடுப்பீர்களானால் நான் பொறுமையிழந்து விடுவேனென எச்சரிக்கை விடுத்துள்ளார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. இன்றைய தினம் வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த தொண்டராசிரியர்களது போராட்ட முடிவில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.நான் உங்களது நியமனம் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசி வருகின்றேன்.அவரும் உறுதி வழங்கியுள்ளார். இதை குழப்பும் வகையில் நீங்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளீர்கள்.இவ்வாறான சீண்டல்கள் என்னை பொறுமையிழக்கச் செய்துவிடும் இதனை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த அரசை நீங்கள் மிரட்டி எதனையும் செய்ய முடியாது.அதனை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.இங்கு ஊடகவியலாளர்களும் நிற்கிறார்கள்.எனக்கு எது சரியென படுகின்றதோ அதனையே நான் செய்வேன் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.அவருடன் வடக்கின் ஆளுநர் சந்திரசிறி மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகளென பலரும் கலந்து கொண்டனர்











