புலிகளின் தலைவராகும் உமாமகேஸ்வரன் : ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் ஏழு) : ஐயர்

அவ்ரோ விமானத் தாக்குதலுக்குத் திட்டமிடுகின்ற அளவிற்கு எமக்கு மத்தியில் நம்பிக்கையும் உறுதியும் வேர்விட்டிருந்தது. ஏதோ பெரிய தாக்குதலை  நடத்தி முடிக்கப் போகிறோம் என்ற பய உணவெல்லாம் எம்மிடம் இருக்கவில்லை. கடந்து சென்ற ஒரு வருடத்தினுள் எமது இராணுவத் தாக்குதல்களின் வெற்றியும், இயக்கதினுள் ஏற்பட்டிருந்த ஒழுங்கமைப்பும் நாம் குறிப்பிடத்தக்க பிரதான அமைப்பாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறோம் என்ற உணர்வை ஏற்படுத்தியிருந்தது.

பிரபாகரனது நோக்கமும் அதன் வழி எமது நோக்கமும் ஒரு பலமான இராணுவக் குழு ஒன்றைக் கட்டியமைத்துக்கொள்வதே. தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியலை நாங்கள் போதுமானதாக எண்ணியிருந்தோம்.

பெருந்திரளான மக்களைக் அமைப்பு மயப்படுத்தி, கட்சியையும் ஏன் இராணுவ அமைப்பையும் கூட அந்த மக்களின் பலத்திலிருந்து உருவாக்கும் போராட்டங்கள் மட்டுமே உலகத்தில் வெற்றியடைந்திருக்கின்றன என அப்போதெல்லாம் நாம் அறிந்திருக்கவில்லை.

இந்த வகையில் கடந்த கால இராணுவத் தாக்குதல்களின் வெற்றியையும், அரச படைகளின் இழப்புக்களையும் மட்டும் வைத்துக்கொண்டு நாம் கணிப்பிடத்தக்க வளர்ச்சியடைந்துவிட்டதாகவே எண்ணிப் பெருமிதமடைகிறோம்.

ஈரோஸ் அமைப்பினருக்கு இங்கிலாந்திலிருந்த அவர்களின் உறுப்பினர்கள் வழியாகப் பாலஸ்தீன விடுதலை இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பிருந்தது மட்டுமன்றி அவ்வியக்கத்திடம் பயிற்சி பெறும் வசதிகளையும் கொண்டிருந்தனர். கொலைசெய்யப்பட்ட பற்குணத்தினூடாக ஈரோஸ் இயக்கத்துடனான தொடர்புகள் வலுவடைந்திருந்தமை குறித்து முன்னமே பதிந்துள்ளேன்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ நடவடிக்கைகளின் மீது மதிப்புவைத்திருந்த ஈரோஸ் அமைப்பினர், எமது இரு உறுப்பினர்களுக்கும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்திடம் பயிற்சி நடவடிக்கைகளை ஒழுங்கு செய்கின்றனர்.

உமாமகேஸ்வரனும் விச்சுவும் பயிற்சி பெறுவதற்காகப் பாலஸ்தீனம் செல்வதாகத் தீர்மானிக்கப்படுகிறது. ஏறக்குறைய மூன்று மாதங்கள் வரையான பயிற்சிக்கு அவர்கள் அங்கு செல்கின்றனர்.

உமாமகேஸ்வரனும் இங்கிலாந்திலிருந்து எம்மோடு வந்து இணைந்துகொண்ட விச்சு என்ற விச்வேஸ்வரனும் எம்மத்தியிலிருந்த ஆங்கிலம் சரளமாகப் பேசக்கூடியவர்கள். இவர்கள் தவிர, கொழும்பிலிருந்து வந்து எம்மோடு இணைந்திருந்த சாந்தன் என்பவரும் சரளமாக ஆங்கிலம் பேச வல்லவர். இவரூடாகவே பிரபாகரன் ஆயுதங்கள் தொடர்பான ஆங்கிலப் புத்தகங்களை வாசிப்பதுண்டு.

உமா மகேஸ்வரன் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தில் பயிற்சிக்குச் சென்ற வேளையில், தமிழர் விடுதலைக் கூட்டணியினர் ஊடாக கியூபாவில் நடைபெற்ற உலக இளைஞர் மாநாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகிறது. இந்த வேளையில் சாந்தன் கியூபாவிற்குச் செல்வதாகத் தீர்மானிக்கப்படுகிறது. இவரைத் தவிர வேறு ஆங்கிலம் பேசக்கூடியவர்கள் இல்லாத நிலையில், சாந்தனுடன் எமது ஆதரவு மட்டத்தில் செயற்பட்ட வேறொருவரும் அங்கு அனுப்பப்படுகிறார்.

இறுதியாக தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பில் இருவரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் இருவருமாக நான்குபேரும் கியூபா செல்கின்றனர்.

இவர்கள் கியூபா சென்றதும், பாலஸ்தீனத்தில் எமது உறுப்பினர்களோடு பயிற்சியெடுத்துக் கொண்டிருந்த ஈரோஸ் அமைப்பினருடன் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக விச்சு பயிற்சியை முடிக்காமலே திரும்பிவிடுகிறார். உமா மகேஸ்வரன் தனது கால எல்லைக்குள் வழங்கப்பட்ட பயிற்சிகளை முடித்துக்கொண்டு பின்னதாக நாடு திரும்புகிறார்.

இவர்கள் திரும்பிய சில காலங்களினுள்ளேயே எமது மத்திய குழுக் கூட்டம் நடைபெறுகிறது. அங்கு பாலஸ்தீனிய விடுதலை இயக்கத்தில் விச்சு மற்றும் உமாமகேஸ்வரன் ஆகியோரின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறோம். சில நாட்களில் எமது இயக்க நடவடிக்கைகள் பரந்து பட்ட மக்களின் ஆதரவையும் எதிர்பார்ப்பையும் உள்வாங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அமைப்பிற்கான அதிகார மட்டத்திலான பேச்சுக்கள், வேறு அமைப்புக்களுடனான தொடர்புகள், அன்னிய நாட்டுத் தூதரகங்களுடனான தொடர்புகள் போன்ற அனைத்தும் எம்மது வேலைப்பணிகளை அதிகரிக்கின்றன. இந்த வேளையில் எமக்கு மத்தியில் ஆங்கிலம் பேசத் தெரிந்தவரும் ஏற்கனவே அகதிகள் மீள் குடியேற்றம் போன்ற வேலைகளில் ஈடுபட்டவரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் இளைஞர் அமைப்பான கொழும்பு இளைஞர் பேரவையின் செயலாளருமான உமா மகேஸ்வரனின் வேலைப்பழு அதிகரிக்கின்றது.

ஏற்கனவே இளைஞர் பேரவையின் செயலாளர் என்ற வகையில் அறியப்பட்டவராகவும், எம்மை விட அதிகமான தொடர்புகளைக் கொண்டிருந்தவருமான உமா மகேஸ்வரனை தமிழீழ விடுத்லைப் புலிகளின் தலைவராக நியமிக்கலாம் என பிரபாகரன் தனது கருத்தை முன் வைக்கிறார்.

உமா மகேஸ்வரன் அதை மறுக்கவில்லை. நாங்கள் அனைவரும் அதனை ஏற்றுக்கொள்கிறோம். இறுதியில் நமது இயக்கத்தின் முதலாவது தலைவராக உமா மகேஸ்வரன் நியமிக்கப்படுகிறார். அரசியல்ரீதியான சட்டத்திற்கு உட்பட்ட வேலைகளை முன்னெடுக்க அரசால் தேடப்படாத ஒருவரின் பிரசன்னம் தேவைப்பட்டது. இந்த வகையில் உமாமகேஸ்வரன் இதுவரை அரசால் தேடப்படாத நிலையில் இருந்ததால் இவரைத் தலைவராக நியமிப்பது நியாயமானது என அனைவரும் கருதினர்.

உமாமகேஸ்வரன் ஒரு கடின உழைப்பாளி. வரித்துக்கொண்ட வேலையச் செய்து முடிக்கும் வரை ஓய்வதில்லை. சிறிய தொகைப் பணத்திற்கும் கணக்கு வைத்துக்கொள்ளும் நேர்மை அவரிடமிருந்தது. நிர்வாக ஒழுங்கும் திறமையும் படைத்தவர்.

உமாமகேஸ்வரன் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தாலும் பிரபாகரனின் ஆளுமைதான் காணப்பட்டது. எமது குழுவின் அதிகாரம் மிக்கவராக பிரபாகரனே இருந்தார்.

இவ்வேளையில், கனகரத்தினம் தனி நாட்டுக் கோரிக்கையை முன்வைத்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் இரட்டை உறுப்பினர் தொகுதியான பொத்துவில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுகிறார். 23990 வாக்குகளைப் பெற்று கனகரத்தினம் பாராளுமன்றத்திற்குத் தெரிவுச்ய்யப்படுகிறார். தனித் தமிழீழத்திற்கான பிரச்சாரம் மேற்கொண்டே கனகரத்தினம் வாக்குகளைப் பெற்றுக்கொள்கிறார். டிசம்பர் மாதம் 19ம் திகதி டெய்லி நியூஸ் பத்திரிகையில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா மீது தான் ஆழ்ந்த நம்பிக்கை வைத்திருப்பதாகவும், அவர் தமிழ் மக்களிற்கு நீதி வழங்குவார் என்றும், தவிர, கிழக்கு மக்கள் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு வாக்களித்த போதும், தனித் தமிழ் நாட்டை விரும்பவில்லை என்றும் இந்தக் காரணங்களால் அவர் யூ.என்.பி கட்சியில் இணைந்து கொள்வதாகவும் தெரிவிக்கிறார்.

மறு நாளே அமிர்தலிங்கத்தின் அறிக்கை வெளியாகிறது. கனகரத்தினம் தமிழினத்தைக் காட்டிக்கொடுத்த துரோகி என்கிறது அந்த அறிக்கை. இவற்றையெல்லம் பார்த்துக்கொண்டிருந்த உணர்ச்சி மயப்பட்ட இளைஞர்களான நாம், கனகரத்தினம் உயிர்வாழக் கூடாது என்ற முடிபிற்கு வருகிறோம்.

உமா மகேஸ்வரனுக்கு நன்கு பழக்கப்பட்ட கொழும்பில் வைத்தே கனகரத்தினம் கொலை முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. கனகரத்தினம் கொலை வெற்றியளிக்காத ஒரு சம்பவமாயினும் நாட்டின் தலைநகரில், ஜே.ஆர் அரசின் இராணுவத்தின் இரும்புக்கரங்கள் இறுகியிருந்த கொழும்பின் நடுப்பகுதியில் வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்தக் கொலை முயற்சி மூழு நாட்டையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது. ஜனவரி மாதம் 26 ஆம் திகதி 1978 ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்தப் கொலை முயற்சி இலங்கையில் இதயப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் நிகழ்த்திய முதல் தாக்குதல்.

பிரபாகரன், உமா மகேஸ்வரன், செல்லக்கிளி ஆகிய மூவரும் நேரடியாக களத்தில் நின்று நிகழ்த்திய இந்தத் தாக்குதல் முழுமையான வெற்றியளிகாமல் வெறுமனே கொலை முயற்சி என்ற அடிப்படையில் முடிந்தது.

மிகக் கவனமான தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்ட உமா மகேஸ்வரனும் பிரபாகரனும், செல்லக்கிளியும் கனகரத்தினம் அவரது கொழும்பு இல்ல்லத்திலிருந்து மெய்ப் பாதுகாவலர்களோடு காரை நோக்கிச் செல்லும் போது, துப்பாகியால் சுடுகிறார்கள்.

உமா மகேஸ்வரன், பிரபாகரன், செல்லக்கிளி ஆகிய மூவருமே கைத் துப்பாக்கி வைத்திருந்தனர். உமாமகேஸ்வரன் கனகரத்தினத்திற்கு முன்னால் சென்றதும் அவரை கனகரத்தினம் அடையாளம் கண்டுகொள்கிறார். கொழும்பு இளைஞர் பேரவையின் செயலாளராகவிருந்த உமாமகேஸ்வரன் கனகரத்தினத்திற்கு முன்னமே அறியப்பட்டவர். உமாமகேஸ்வரனைக் கண்டதும் கனகரத்தினம் எப்படி இருக்கிறீர் தம்பி என்கிறார். உடனே உமாமகேஸ்வரன் துரோகியைச் சுட்டுத்தள்ளுங்கோடா என்று சத்தமிட்டவாறே கனகரத்தினத்தை நோக்கிச் சுடுகிறார்.

பின்னதாகப் பிரபாகரனும் கனகரத்தினத்தை நோக்கி குறிவைத்துச் சுடுகிறார். அவர்கள் இருவரின் குண்டுகளுமே தவறிவிடுகின்றன. இந்த வேளையில் உமா மகேஸ்வரனும் பிரபாகரனும் எதிர் எதிர்த் திசைகளிலிருந்து தாக்குதல் நடத்தியதால், உமா மகேஸ்வரனின் குண்டு பிரபாகரனுக்கு அருகாமையில் சென்றதால் அவர் அங்கு மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவத்தையும் நாங்கள் பின்னதாக அறிந்து கொண்டோம். இவர்கள் இருவரினது குறிகள் தவறிவிட செல்லக்கிளியின் துப்பாக்கியிலிருந்து பாய்ந்த குண்டு தான் கனகரத்தினத்தைக் காயப்படுத்தியது.

ஒரு துப்பாக்கிக் குண்டு அவரை நோக்கிப் பாய்கிறது. குண்டுபட்ட காயத்தோடு அவர் மருத்துவ மனையை நோக்கி எடுத்துச்செல்லப்படுகிறார். அங்கு அவசர சிகிச்சையின் பின்னர் அவர் உயிர்தப்பிவிடுகிறார். ஆனால் துப்பாக்கிச் சூட்டின் தாக்கத்தினால் மூன்று மாதங்களின் பின்னர் கனகரத்தினம் உயிரிழந்துவிடுகிறார்.

பொத்துவில் தொகுதியின் தமிழர் விடுதலைக் கூட்டணிப் பாராளுமன்ற உறுப்பினரான கனகரத்தினம் கொலை முயற்சி இடம் பெற்ற பின்னர் தான் உமா மகேஸ்வரன் தேடப்பட்டவராகின்றார். அவரும் இப்போது முழு நேரமாக எம்மோடு வடக்கிலிருந்தே இயக்க நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்.

செல்லக்கிளி, உமா மகேஸ்வரன், பிரபாகரன் ஆகியோர் தவிர கொழும்பில் வேலை பார்த்துக்கொண்டிருந்த எமது மத்திய குழு உறுப்பினர்களில் ஒருவரான நாகராஜாவும் இக் கொலை முயற்சிக்கான தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டிருந்தார். போக்குவரத்து ஒழுங்கு, தங்குமிட வசதிகள் போன்ற பல நடவடிக்கைகளை நாகராஜாவே முன்னின்று கவனித்துக்கொண்டார்.

பிரபா, உமா மற்றும் செல்லக்கிளி மூவரும் கனகரத்தினத்தின் இருப்பிடம் நோக்கிச் செல்லும் வேளையில், பொலீஸ் மோப்ப நாய்களின் தேடுதலிலிருந்து தப்புவதற்காக காகிதம் ஒன்றில் மிளகு சுற்றிக் கொண்டு சென்றனர். மிளகு தூள் சுற்றிய காகிதம் கொழும்புப் காவல்துறையிடமும், உளவுத் துறையிடமும் அகப்பட்டுவிடுகிறது. அந்தக் காகிதம் நாகராஜாவின் தங்குமிடத்தில் அச்சடிக்கப் பட்டிருந்தது. இதனை அவதானித்த பொலீசார், நாகராஜாவை விசாரணைக்கு உட்படுத்தி அவருடன் கொலைமுயற்சிக்கு இருந்த தொடர்பைக் தெரிந்துகொள்கின்றனர்.

இந்த விசாரணைகளில் முக்கிய பங்கு வகித்தவர் முன்னமே துரையப்பா கொலை வழகில் பிரதான அதிகாரியாகச் செயற்பட்ட பஸ்தியாம்பிள்ளை. நாகராஜாவை சித்திரவதை செய்து விசாரணகளை மேற்கொண்டதில் தவிர்க்கவியலாதவாறு அவர் சில தகவல்களைச் சொல்லவேண்டிய நிலைக்கு உட்படுத்தப்படுகிறார். இந்த வேளையில், அவர் எமது பண்ணைகள் குறித்தோ, எமது ஏனைய முக்கிய நிலைகள் குறித்தோ எந்தத் தகவல்களையும் வழங்கவில்லை. ஏற்கனவே வேறு வழிகளில் உமா மகேஸ்வரனுக்கு கொலைமுயற்சியோடு இருந்த தொடர்பை உளவுத்துறை அறிந்திருந்ததால், நாகராஜா, உமா மகேஸ்வரன் மீதே எல்லாப் பழியையும் சுமத்துகிறார்.

இதன் பின்னர் நாகராஜாவையும் அழைத்துக்கொண்டு பஸ்தியாம்பிள்ளை உமா மகேஸ்வரனின் கட்டுவன் இல்லத்திற்குச் செல்கிறார். நாகராஜாவும் உமாமகேஸ்வரனைக் அடையாளம் காட்டுவதாக ஒத்துக்கொள்கிறார். மிக நீண்ட நேரப் பிரயாணத்தின் பின்னர், பஸ்த்தியாம் பிள்ளையின் பொலீஸ் வாகனத்திலேயே உமா மகேஸ்வரனின் இல்லைத்தை அடைகின்றனர். துரையப்பா கொலைவழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களுல் நாகராஜாவும் ஒருவர் என்பதால் பஸ்தியாம்பிள்ளையுடன் இவர் சரளமாகப் பேசக்கூடிய நிலை இருந்தது. வழி நெடுக பஸ்தியாம்பிள்ளையுடன் பேசிக்கொண்டு வந்த நாகராஜாவிற்கு உமா மகேஸ்வரன் வீட்டில் தங்கியிருக்க மாட்டார் என்பதும் தெரியும். அங்கே கட்டுவனை அடைந்ததும், பொலீசைக் கண்டால் உமா மகேஸ்வரன் தப்பி ஓடிவிடுவார் என்றும், பஸ்தியாம் பிள்ளையை வெளியே நிற்குமாறும், தான் உள்ளே சென்று அவரைத் தந்திரமாக அழைத்து வருவதாகவும் பஸ்தியாம்பிள்ளையிடம் கூறி அவரையும் சம்மதிக்க வைக்கிறார்.

இதற்கு பஸ்தியாம்பிள்ளை சம்மதம் தெரிவிக்கவே நாகராஜா உமா மகேஸ்வரன் வீட்டினுள் சென்று, வீட்டின் பின்பகுதியால் தப்பியோடிவிடுகிறார். இந்தத் துணிகரமான நடவடிக்கையால் அங்கிருந்து தப்பிய நாகராஜா, பண்ணைகளிலிருந்த எம்மை நோக்கி வந்து எம்மோடு மீண்டும் இணைந்து கொள்கிறார். இந்தச் சம்பவத்தின் பின்னர், நாகராஜாவும் தேடப்படுபவர்கள் பட்டியலில் இணைந்து கொள்கிறார்கள்.

(இன்னும்வரும்…)

பகுதி  ஆறை  வாசிக்க…

பகுதி ஐந்தை  வாசிக்க…

பகுதி நான்கை வாசிக்க..

பகுதி மூன்றை வாசிக்க..

பகுதி இரண்டை வாசிக்க..

பகுதி ஒன்றை வாசிக்க..

125 Comments

  1. thamilmaran

    பஸ்தியாம் பிள்லை எந்த ஊரென்றூ அறீந்தவர்கள் சொல்ல மாட்டீர்களா?

  2. Raman

    //உமாமகேஸ்வரன் ஒரு கடின உழைப்பாளி. வரித்துக்கொண்ட வேலையச் செய்து முடிக்கும் வரை ஓய்வதில்லை. சிறிய தொகைப் பணத்திற்கும் கணக்கு வைத்துக்கொள்ளும் நேர்மை அவரிடமிருந்தது. நிர்வாக ஒழுங்கும் திறமையும் படைத்தவர்.//
    நாட்டில் வங்கிப் பணத்தை சுருட்டிக்கொண்டு வெளிநாட்டிற்கு கம்பி நீட்டிய இணையத் தள தூசனத் தளபதியை விட உமாமகேஸ்வரன் பரவாயில்லைபோல் தெரிகிறது. இப்படியான உமாமகேஸ்வரன் எப்படி காலப்போக்கில் கொலைகாறனாக மாறினார்? ஆராயந்து யாராவது எழுதுங்கள்.

    • vijay_kck

      தமிழினத்தின் உயர்வுக்காக தன்னுயிரைத் துச்சமாக மதித்த (மதிக்கும்) தலைவர் பிரபாகரன். அவர் பிறந்த தமிழினத்தில் நானும் பிறந்ததை எண்ணி பெருமை கொள்கிறேன். 

      • Naren

        தமிழினத்தின் உயர்வுக்காய் 35அயிரம் மாவீரர்களை பலிகொடுத்து வன்னிமக்களை யுத்தக்கேடயங்களாக பயன்படுத்தி 30வருடங்கள் நாட்டை அதள பாதாளத்தில் விழுத்தி கடைசியில் வெள்ளைக்கொடியோடு சரணடையப்போனானே எம் தலைவன். அவன் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்ததையெண்ணி வெட்கப்படுகின்றேன்.

        • sriram

          உம்மளிடமோ சொல்லிவிட்டு போனவர் தலைவர் தான் சரணடைய போனவர் எண்டு…. அங்க ஆமிக்காரரும் ,அவெர் தலைவர்களும் சொல்லித் திரியினம் , விஜயபாகு படை அணியே ,பிரபாகரனையும், அவேரோடு இருந்த இறுதிப் போராளிகளையும் ,நேரடிச் சண்டை செய்து சுட்டுக் கொண்டது எண்டு. அல்பம் வேற காட்டித் திரியினமும்.கீ..கீ..கீ ஒரு வேளைநீரும் கருணா குரூப்போட முள்ளிவாய்க்காலில் காட்டிக் கொடுக்க நிண்டீரோ! பணத்தைக் கண்டா, பிண்மும் வாய் தொறக்குமாம். கப்சா விடுறதை பாத்து விடுப்பா.நாட்டில படிச்ச சனம் இப்ப எல்லாம் ரொம்ப அதிகமப்பா

          • koothan

            கருனா, பாபப்பா, தமிலினி, எல்லொரும் புலிதான் என்பதைஉம் மரக்க வேன்டாம்.

  3. rathan

    ஆரம்பத்தில் எல்லோருமே ஒரே குறிக்கோளுடன் நல்லவராகத்தான் இருந்திருக்கின்றார்கள். பின்னர் பணம்,பதவி,அதிகாரம் அவர்களை அரசியல்வதிகளைப் போல் மாற்றிவிட்டது. உமாவுடன் நான் சிலகாலம் வாழ்ந்திருக்கின்றேன்.தினமும் காலை 5 மணிக்கு எழும்பி உடற்பயிற்சிசெய்து பின்னர் டைரியும், கணக்கும் எழுதும் பழக்கமுமுள்ளவர்.தமிழரின் விடிவில் முழு அர்ப்பணிப்புடன் இருந்தவர்.கனகரத்தினம் கொலைக்கு போன விடயத்தையும் சொல்லியிருக்கின்றார்.தனக்கு ஏற்கனவே கனகரத்தினத்தை தெரிந்திருந்த படியால் தான் அவருடன் கதைக்க தொடங்க பிரபாகரன் கொஞ்சம் தடுமாறிவிட்டாராம்.
    .
    இப்போது அந்த டைரிகளெல்லாம் எங்கேயோ தெரியாது
    சிலவேளை மனைவியிடம் இருக்கலாம்

  4. a voter

    அப்ப கனகரத்தினத்தை அவரது மகன் சுடவில்லையா? அப்படி எங்கையோ படித்த ஞாபகம்.

  5. THOTTA

    நரேன்…தமிழர் விடுதலைப் போராட்டம் தோல்வி அடைந்ததிற்கு ,தலைவர் திரு.பிரபாகரனோ அல்லது புலிகளோ அல்ல……..நீர் தான்நரேன்.ஆமாம் உம்மைபோல விடுதலையை உள்ளேயும்,வெளியேயும் இருந்து காட்டிக் கொடுக்கின்ற துரோகிகழால்தான் எமது போராட்டம் வீழத்தப்பட்டது. பண்டாரவன்னியனுக்கோ ஒரு காக்கை வன்னியன், ஆனால் எம் தலைவனுக்கு எத்தனை காக்கைவன்னியர்கள் உம்மை போல. சொந்த இனத்தின் விடுதலையை கொச்சை பண்ணி பேசிற நீர் எல்லாம் தமிழனா..வீட்டில் சும்மா முடங்கிக் கிடந்தால் விடுதலை பெறமுடியாது..சுதந்திரம் என்ன “பிச்சைய்யா “நாம் இரந்து கேட்கவும், அவென் சும்மா போடவும். தமிழில்நீங்கள் வீரர் எண்டு சொல்லுகின்ற எந்த மன்னர்கள் ,தன் மக்கழை பலி கொடுக்காமலும், வீரர்களை இழக்காமலும் விடுதலைப் போரைநடத்தினார்கள்..? எப்பவுமே ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டம் தோல்விக்கு இவைதான் காரணம் 1) சிறிலங்காவும்..தமிழ் ஈழவும் அமைந்திருக்கும் இடம் – கொசவோவை பிரிச்சு கொடுக்க முடிகிறது, யூகோஸ்லாவோசியாவை பிரிக்க முடிகிற்து,இந்தோனிசாவில் இருந்து அச்சே மானிலம் பிரிக்க முடிகிறது…எண்டால் ஏன் சிறிலங்காவில் இருந்து ஈழத்தை பிரிக்க முடியாது.பிரிக்க முடிஉம், ஆனால் உலகம் பிரித்து தராது…….2) துரோகிகழின் காட்டிக் கொடுப்புகள்- துரோகிகளை சும்மா எடை போடாதீர்கள் யாரும்,பல தமிழ் மன்னர்கள் எதிரியால் வீழ்த்தப்படவில்லையே,கூட இருந்து குழி பறித்தவர்களாலேயே வீழ்த்தப்பட்டது.கருணாவும் அவெரோடு 5000 போராளிகளும் பிரிந்து போகாட்டி , நிச்சயம் இவ்வளவு தோல்வியைநாம் கண்டிரிப்போமா.. கருணா பிரிந்ததால் கருணா என்ன மிச்சம்.. கிழக்கு மக்களுக்கு என்ன லாபம்.. என்ன காரணம் சொல்லி பிரிந்தானோ..அதை எதாவது சய்தானா அந்த மக்களுக்கு.. சே என்ன மனிதர்கள் இவெர்கள் எல்லாம். தலைவரை விட்டு உமா மகேஸ்வரன் பிரிந்தார். ராகவன் பிரிந்தார், ஏன் இந்த ஜ்யர் கூட விலகினார்,மாத்தையா.கருணா துரோகம் செய்தார்கள்.. இவெர்கள் எல்லாம் பிரிந்ததால் தமிழறிற்கு என்ன செய்தார்கள்,இதனால் என்ன லாபம் எமக்கு,புலிகழை விட சிறந்த அமைப்பை இவெர்களால் கட்டி அமைக்க முடிந்ததா… ஆனாலும் எங்கள் தலைவன் மனம் தளர்ந்தானா.. 4 பேர் செர்ந்தாநீங்கள் எல்லாம் தமிழறிற்கு தலைவன் ஆகி விட முடியுமா.. மேதகு திரு.பிரபாகரன் அவெர்கள் கடவுள் தந்த வரம் தமிழறிற்கு.இருண்டு கிடந்த எம் இனத்திற்கு அவெனே ஒளி தந்தவன், திக்கு திசை தெரியாமல் அலைந்த எமக்கு வழி காட்டியாய் வந்தவன். பிரபாகரனை அவமதிப்பது, யானை தன் தலையில் மண் அள்ளிப் போடும் செயலுக்கு ஒப்பானது. மல்லாக்கா கிடந்து எச்சி துப்பும் செயல் போன்று அருவருப்பானது..காட்டிக் கொடுபவர்களிற்கு யாரும் சிலை வைக்கப் போவதும் இல்லை, வரலாறு எழுதப் போவதும் இல்லை.. துரோகிகளே இதைநினைவில் வையுங்கள் 3) உலக ஒழுங்கு – உலகில் பல தேசங்கள் உருவாக உலக ஒழுங்கும் முக்கிய காரணம் — சிறிலங்காவில் சீனாவின் வருகை . ஈழ தேசம் உருவாவதிற்கான காலம் உருவாகின்றது.. எனக்கு 2 கண் போனாலும்பரவாய் இல்லை , எகிரிக்கு 1 கண் ஆவது போகட்டும், என்று சிந்திபதை விடுத்து, விடுதலைக்கு தோழ் கொடுங்கழ் தோழர்களே… சிறிலங்காவின் இருப்பிடத்தை யாரும் மாற்றி விட முடியாது,ஆனால் மாறி வரும் உலக ஒழுங்கை எமக்கு சாதக மாக்கி , காட்டிக் கொடுப்பதையும் , எட்ட இருந்து வேடிக்கை பாத்து ,விடுதலையை விலை பேசுவதையும்நிறுத்திவிட்டாலெ போதும், விடுதலையை வென்று எடுக்கும் காலம் வெகு தூரம் இல்லை …

    • accu

      பாவம் தோட்டா பிரபாகரனை தலைவனாக நம்பி தம் இன்னுயிர்களை ஈந்த மூளைச்சலவை செய்யப்பட்ட புலிப்போராளிகளின் குரலாய் ஒலிக்கிறார். அதுசரி இந்தோனேசியாவில் இருந்து அச்சே மாநிலம் எப்போ பிரிந்தது? சுனாமி தந்த பேரழிவால் 29 வருட போராட்டம் சமாதானத்துக்கு வழிவகுத்துள்ளது.

    • thurai

      உண்மைகள் சொல்வோரை துரோகிகள் பட்டம் சூட்டி துடிக்கத் துடிக்க
      கொலைசெய்த அமைப்புகளின் பின் செல்வோரும், அதன் தலவனை
      கடவுளாக மதிபோரும் மாந்தைகளே தவிர மனிடர்களல்ல.

      துரை

      • thamilmaran

        நாரதர் கலகம் நன்மையில்தான் முடியும்.அய்யர் எழுதுகிறார் அதற்கு எந்தச் சம்ப்ந்தமும் இல்லாமல் அலம்பிக் கொண்டிருப்பது என்னவே நாங்கள்தான்.வரலாற்ரோடு சம்பந்தப்படும் விதமாய் மற்றவர்களூம் தொடர்ந்தால் இருபது,முப்பது வயதில் உபயோகப்படும் இதை விட்டு நாய் மாதிரி குரைத்துக் கொண்டே இருப்பது போரடிக்கிறது.

        தமிழ் பொலீஸ் அதிகாரிகள் இருந்தார்கலே யார் அந்த பஸ்தியாம் பிள்லை, ஜானப்பிரகாசம் என்றூ சொல்ல மாட்டீர்களா?

        • thomas

          பஸ்தியாம்பிள்ள கரம்பொன் மண் தந்த பொற்குடம்.

        • பஸ்தியாம்பிள்ளை ஊர்காவற்துறை தேர்தல் தொகுதியின் கரம்பனைச் சேர்ந்தவரே.இவர் தமிழ் இளைஞர் பேரவையின் ஆரம்ப கர்த்தாக்களின் ஒருவரான புஸ்பராஜாவின் சகோதரியான புஸ்பரானியை காவல் நிலையத்தில் வைத்து அவரின் ஆடைகளைக் களைந்து நிர்வாண நிலையின் அவரை எஸ்லோன் பிளாஸரிக் பைப்புகளால் கண்மூடித்தனமாக தாக்கியவர்.அதனாலேயே உமாமகேஸ்வரனும் அவரது நண்பர்களுமா சேர்ந்து அவரைக் கொன்றார்கள்.புஸ்பராணியை தாக்கியதற்காக இக் கொலை இடம்பெறவில்லை.அவரை நிர்வாணமாக்கித் தாக்கியமையே இளைஞர்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியிருந்தது.அக்காலகட்டத்தில் அந்த பெண்ணுக்கு ஏற்பட்ட கொடுமையை எண்ணி மக்கள் கொதிப்படைந்திருந்தார்கள்.பஸ்தியாம்பிள்ளையை இயக்கம் மட்டும் அல்ல மக்களே வெறுத்தார்கள்.இப்பொழுது புஸபராணி தமிழ்நாட்டிலிருக்கிறார்.யூனியர் விகடனில் அவர் தனக்கு ஏற்பட்ட கொடுமையை சொல்லியிருக்கின்றார்.தாக்கப்பட்டதன் காரணத்தால் வலிந்த மாதவிடாய்க்காண வேதனையான சம்பவத்தை தனது பேட்டியில் அவர் கூறியிருக்கின்றார்.புலிகளை விமர்சிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை.ஒரு காலப் பகுதியை மட்டுமே வாசித்துவிட்டு எழுந்தமானத்திற்கு விமர்சிக்காதீர்கள்.இயக்கம் துளிர்விட்ட காலத்திலிருந்து அணுவணுவாக ஆராய்ந்தறிந்து அதற்கு விமர்சனம் எழுதுங்கள்.

          • thamilmaran

            தங்கள் தகவல் என்னை மிகவும் வேதனைப்படுத்தியது.இது கொடுமையானதும் கோரமானதும்.இதைத்தான் பாவத்தின் சம்பளம் மரணம் என்பரோ/

  6. Naren

    தோட்டா அண்ணை! தயவு செய்து உணர்ச்சி வசப்படாதீங்கோ!! ஐயோ உணர்ச்சி வசப்படாதீங்கோ!!!.. படிக்காத எம்போன்ற அப்பாவி வன்னி மக்களை பயன்படுத்தி படித்த யாழ்மேலாதிக்கப் பரம்பரையில் வந்துதித்த நீங்கள் தமிழீழம் பெற்றுத்தருவதாகக்

    கூறி புலம் பெயர்ந்த மக்களிடம் சுரண்டு! சுரண்டென்று சுரண்டி வேலை வெட்டியில்லாமல் நீங்கள் வயிறு வளர்த்த சமாச்சாரத்துக்கு ஜனாதிபதி வேட்பாளர் உங்கள் சரத்பொன்சேகா வெல்லா முள்ளிவாய்க்காலில் வைச்சானே ஆப்பு!!…. என்ன செய்வது

    இப்பொழுது உங்கள் நிலமையை நினைத்தால் எனக்கும் ரொம்பக் கஸ்டமாய்தான் இருக்கின்றது. பறவாயில்லை இப்பவும் ஒன்றும் கெட்டுப்போய்விடவில்லை. “மகிந்தவினை” பழிவாங்குவதானால் சரத்பொன்சேகாவை வெளியே கொண்டு வரவேண்டும் அதற்கு

    பணம் வேண்டும் என்று சொல்லி “கலெக்சன்ல” இறங்குங்கோ!… குடுத்துக் குடுத்தே பழக்கப்பட்டவர்கள் அள்ளியள்ளி தராமலா போய்விடுவார்கள்?.. யோசிக்காதீங்கோ உடனே களத்தில் இறங்குங்கோ உங்க வயிறு தானாநிரம்முங்கோ! ஆமா!! அது

    என்ன உம்முடைய பெயர்-தோட்டா> துப்பாக்கி> வெடிகுண்டென்று?.. ஏன் கொலைகளையும் கொலைகளுக்கு பயன்படுத்திய ஆயுதங்களையும் தங்களால் மறக்கமுடியவில்லையோ?.. அதன்மீது அப்படிப் பெரும் காதலா? தமிழனுக்கு பண்புகளையும்

    பயிற்சிகளையும் வழங்கி வழிகாட்ட நினைக்கும் நீங்கள் முதலில் உங்கள் பெயரை மாத்துங்கோ ராசா?. அப்புறம் என்னை ‘துரோகி” அது இது என்றெல்லாம் சொல்லியிருக்குறீங்களே!! ரொம்பப் பெருமையா இருக்குதய்யா!.. காரணம் உங்களைப்

    பொறுத்தவரைக்கும் -தலைவர் அமுதலிங்கம் தொட்டு- நீங்கள் மாலை போட்டு வழியனுப்பிவைத்த மகாராசன் ராஜீவ்காந்தியிலிருந்து- ஒபாமா விலிருந்து ஐநாவின் செயலாளர் பான்கிமூன்- மற்றும் அவரது செயலாளர் நம்பியார் -சார்க்கோசி ஊடாக

    கருணாநிதி- உள்ளிட்ட உலகத்தலைவர்கள் எல்லாருமே உங்களுக்கு துரோகிகள் தானே?.. எனவே அந்த வரிசையில் என்னையும் இணைத்தமைக்கு நன்றியய்யா.
    ஆமா!!! இவர்களையெல்லாம் துரோகிகள் என்று சொல்லும் நீங்கள் இந்த உலக ஒழுங்கியலில் உங்கள் பங்களிப்பு என்ன? உங்கள் நிலை என்ன? துப்பாக்கிகலாச்சாரம் தவிர்ந்த தங்களது தராதரம் தகுதி பற்றி சற்று எனக்கு விளக்குவீர்களா? ஐயா! ராசா

    நான் உண்மையான தமிழனய்யா ஆனால் புலித்தமிழன் அல்ல. தமிழர்களின் துரதிஸ்டமே புலிகளாய் இருந்தவர்கள் அனைவருமே தமிழர்கள் ஆனால் தமிழர்கள் எல்லோருமே புலிகள் அல்ல. நீங்கள் கருணாவின் பிரிவின் பின்னரே அவரை துரோகியாய்

    மாத்தினீர்கள் ஆனால் என்னுடைய பார்வையில் கருணா இன்னும் புலியாகவே தெரிகின்றார். அது அதன் வழியிலேயே சென்றுள்ளது. அது எந்த பயிற்சி பாசறையில் இருந்து கல்வி கற்றதோ அதே முறையினையே அது கையாண்டுள்ளது. எனவே புலி

    வேறு கருணாவேறு அல்ல. ///மேதகு திரு.பிரபாகரன் அவெர்கள் கடவுள்/// என்ன ராசா இதெல்லாம்? இது போன்ற பைத்தியங்களை குஸ்புவுக்கு கோயில் கட்டினதுகளில் இருந்தே பார்த்து வருகின்றோம். இதுக்கெல்லாம் பதில் சொல்லுறதே வேஸ்ட்

    இருந்தாலும் கடைசியாய் ஒரு கேள்வி? உங்க கடவுள் தன் மக்களுக்கு கொடுத்த ஒரே ஒரு வரத்தினைச் சொல்ல முடியுமா?… முதலில் உங்களை சுயவிமர்சனத்துக்கு உட்படுத்துங்கள் அதன் பின்னல் எங்களுக்கு வழிகாட்டவாருங்கள். வ..ர்..ட்..டு..மா..

    தோட்டா சாரே!!!

    • THOTTA

      நரேன்” உயர உயர பறந்தாலும், ஊர்க்குருவி பருந்தாகாது”. ஒபாமா,பான் கீ மூன்,நம்பியார் எண்டு, உலக தலைவரோடு உம்மை சேர்த்து மேதை ஆகப் பாக்காதையும்.இவெர்கள் எல்லாம்நமக்கு எதிரியாய் இருக்கலாம்.ஆனால்நீர் துரோகி.
      நீர் பிரதேசவாதம்(படித்த யழ் மேலாதிக்கப் பரம்பரையில்) பேசும் போதே தெரிந்துவிட்டது,நீர் வன்னிக்குளத்து தவளை அல்ல, வன்னிக்கிணத்து தவளை எண்டு.
      வந்தாரை வாழவைக்கும் வன்னி மண் , வன்னி மண் வளையாது ,வணங்காமண் எண்டு வீரப் பெருமை கொள்ளும் அதே வன்னி மண்ணில்தான் நானும் பிறந்தேன்.ஆனால்நான் பண்டாரவன்னியன் பரம்பரை,நீரோ காட்டிக் கொடுக்கும் “காக்கைவன்னியன்”பரம்பரை தோழனே!
      உமது சொந்த இனத்தின் விடுதலையை நீர் கொச்சைபடுத்திப் பேசுவது ,நீரே உமது சொந்த வீட்டின் பிரச்சனைகளையும்,சண்டைகளையும், தெருவில்நின்று ,கூவிக் கூவிச் சொல்லும் செயலுக்கு ஒப்பானது.சாதிச் சண்டை, வேலிச் சண்டை,வர்க்கபேதம்,பிரதேசவாதம் இவை ஒரு போதும்நம்மை வாழ விடாது.

      நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. புரியும் எண்டுநினைகிறேன்.
      போராட்டத்துக்கு அள்ளிக்கொடுத்தவர்களே சும்மா இருக்கும்போது,கிள்ளிக்கூடக் கொடுக்காத நீர் ஏன் முதலைக்கண்ணீர் வடிக்கிறீர்.
      தலைவர் வன்னியில மாடு மேய்ச்சும்,வயல் விதைச்சுமா போராட்டத்தைக்கொண்டுநடத்தினவர்.ஒரு போராளியின் ஒருநாள் செலவை எண்ணிப்பாத்ததுண்டாநீர்.தரைப்படை,கடல்ப்படை,விமானப்படை எண்டு முப்படையும் அமைத்த்டு,1000 க் கணக்கானா போராளிகளின் செலவுக்கு தலைவர் என்ன மாஜா ஜால வித்தை செய்தா பனM சம்பாதிப்பது.
      கழுதைக்கு எப்போது தெரிந்தது கற்பூர வாசனை.
      யானை பெரிய இலத்தி போடுது எண்டு, முயலும் முக்கிப் பாத்ததாம்.எத்தனையோ பேர் புலிகளையும்,எமது தலைவனையும் விமர்சித்து களைத்துப் போன பின்பு, பாவம்நீரும் முயலாய் முக்கிப் பாக்குறீர்.மற்றவர் முதுகின் அழுக்கைப் பாத்து சிரிக்க முன் ,முதல் நீர் உமது சொந்த முதுகின் அழுக்கைப்பாரும்.

      • Naren

        ||||||வணங்காமண் எண்டு வீரப் பெருமை கொள்ளும் அதே வன்னி மண்ணில்தான் நானும் பிறந்தேன்||||| யாழ் மேலாதிக்கத்தினர் தங்கள் பிள்ளைகளை யூனிவேர்சிற்றிக்கும் – வெளிநாடுகளுக்கும் அனுப்பி பாதுகாப்பாய் வைத்திருக்க உன் தலைவன் வெள்ளைக் கொடி வித்துவானை பாதுகாப்பதற்காய் வன்னிப்பிள்ளைகளை அவர்கள் பெற்றோர் கண்முன்னே கதறக்கதற இழுத்துக் கொண்டு போய் வலுக்கட்டாயமாய் கொலைசெய்த மேலாதிக்க வெறிகொண்டவர்களுக்கு வக்காளத்து வாங்கி வன்னி மக்களின் சாவுக்கே காரணமாயிருந்த “வன்னித் துரோகி தோட்டா அவர்களே” நீர் முதலில் வன்னி என்று சொல்லுவதை நிறுத்தும்.

        யுத்தத்திற்கு தங்கள் பிள்ளைகளைப்பறி கொடுத்தும் அவயங்களை இழந்தும்- உடமைகளை இழந்து நிற்கதியாய் நின்ற மக்களை தன்னுடைய கவசமாகப்பயன் படுத்தி மனிதக்கேடயமாக வைத்திருந்து அதுவும் முடியாமல் போகவே கடைசில் தங்களின் உயிராசை காரணமாய் வெள்ளைக் கொடியேந்தி போனவர்களுக்கு வக்காளத்து வாங்கி வன்னி மக்களை யாழ் மேலாத்திக்க வர்க்கத்தினரிடம் பறி கொடுக்க காரணமாயிருந்த வன்னித்துரோகியே நீ பண்டாரவன்னியன் பரம்பரை என்று சொன்னால் நானும் என்னுடைய சொந்த மண்ணைச் சேர்ந்தவர்களும் உன்னைக் காறியே துப்புவோம். நீர்! வன்னி மண்ணைச் சேர்ந்தவர் என்று சொல்லி எல்லாவற்றையும் பறி கொடுத்து விட்டு தடுப்புமுகாம்களிலே தங்கியிருக்கும் அந்த மக்களின் முன் நின்று எனக்கு கூறிய அதே வீரப்பிரதாப வசனங்களை அந்த மக்களின் முன்னின்று உம்மால் கூற முடியுமா?

        யாருக்கு காது குத்துகின்றீர் நீர் வன்னி என்று. உண்மையான வன்னி உன்னைப்போல் துரோகிகளாய் இருக்க மாட்டான் வக்காளத்தும் வாங்க மாட்டான். முதலில் உழைச்சு நக்கும் பின்னர் உமது தலைவனுக்கு காட்டுகின்ற விசுவாசத்தை உனது பெற்றோருக்கு காட்டுகின்றீரா என்று பாரும். நாட்டுக்காக செய்ததில் 10 வீதத்திற்கும் குறைந்தளவிலேனும் உனது சொந்தக் குடும்பத்திற்கு செய்திருக்கின்றீரா என்று பாரும் அதுக்கு பிறகு எனக்கு புத்தி சொல்ல வாரும்.. அதுசரி!!!

      • Naren

        வந்துட்டார்!.. தோட்டா- துப்பாக்கி- நாட்டுக்குண்டென்று!!! உங்கட பெயரை பார்த்தாலே தெரியும் நீங்கள் எந்தக் கூட்டத்திலே இருந்து வந்தனீங்கள் என்று.

        • thamilan

          நரேன் , தோட்டா பெயரில் வேறாய் இருக்கலாம். ஆனால் அவென் எண்ணத்திலும் ,மனதிலும் , செய்கையிலும் தமிழனாய் இருக்கிறான். ஆனால் நீர் பெயரில்தான் தமிழனாய் ! ஆனால் உள்ளத்தாலும், செய்கையாலும் ஒரு சிங்களவனாய் !.

          • Naren

            தம்பி தமிழா!! இனத்தால் நீ யாரென்பது முக்கியமல்ல குணத்தால் நீ மனிதனாய் நடக்கின்றாயா என்று பார். நான் நீங்கள் குறிப்பிடும் இன வக்கிரப்புத்திகளுக்கு
            அப்பால் மனிதனாகவே இருக்க விரும்புக்கின்றேன். நான் குறிப்பிடும் விடையங்கள் நல்ல மனிதங்களோடு வாழும் மனிதர்களுக்கே புரியும் உங்களைப்போன்றவர்களுக்கு
            புரிய வாய்ப்பே இல்லை. அப்போ நீங்கள் யார்?.. இதை நான் குறிப்பிட்டால் நன்றாயிருக்காது இருந்தாலும் சொல்லிவிடுகின்றேன் நீங்கள் எல்லோருமே மனிதப்பிணம் தின்னி மிருகங்கள்.

        • Prince

          சபாஸ் இப்ப தான் நீர் கருத்தாளத்தோட கதைக்கிறீர். நீர் இப்படி கதைக்கிறதுக்கு தான் லாயக்கு வேற ஒண்டுக்கும் ட்ரை பண்ணாதியும்.

      • shanthan

        வெற்றுத்தோட்டா அவர்களே தரைப்படை, கடற்படை, விமானப்படை என முப்படை கண்ட உங்கள் தலைவன் தற்போது எங்கே? 35000 இளசுகளையும் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்களையும் பலி கொடுத்து தமிழ் மக்களுடைய சொத்துக்களை கொள்ளையடித்தும் அழித்தும் இன்பம் கண்ட உங்கள் சூரியத்தேவன் எங்கே? இளம் சிறார்களுக்கு சயனைற் குப்பியைக் கொடுத்து கொலை செய்துவிட்டு தான் தனது குடும்பம், தானைத்தளபதிகள் சூழ வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த உங்கள் வீரத்தலைவன் எங்கே? முதலில் நீங்கள் உங்கள் அமைப்பினதும் தலைமையினதும் அழுக்கை அகற்றப் பாருங்கள். உலகம் முழுதும் நாறி மணக்கின்றது.

      • Naren

        மறுபடியும் தோட்டாக்காரனுக்கு! நாம் அன்றும் இன்றும் என்றும் பேனாகளினாலேயே யுத்தம் செய்து வருகின்றோம். எங்களுடைய பேனா வரிகளுக்கு பதில் சொல்ல வக்கத்த நீங்கள் அவர்களுக்கு கொடுத்தது உங்கள் “தோட்டா” களையும்

        குண்டுகளையுமே. காரணம் ஜனநாயக்கருத்துக்களை மதிக்கத் தெரிந்த அல்லது படிக்கத் தெரிந்தவர்கள் யாருமே உங்கள் கூட்டத்தில் இருக்கவில்லை. மாறான “பிரபாகர காட்டுக் கொலைக் கலாசாலையில்” கல்வி கற்றவர்களே இருந்தனர். உங்களுக்கு

        தெரிந்ததெல்லாம் கொலை! கொலை!! மட்டுமே!! நீங்கள் உங்கள் மேதாவித்தனங்களால் யார் சொன்னதை கேட்டீர்கள்? யாரை நீங்கள் விட்டு வைத்தீர்கள்?.. அன்றே “பற்குணம்” சொல்லியிருந்தான் ஜனநாயக வழியிலும் எமது போராட்டத்தை

        முன்னெடுக்க வேண்டும் ஆனால் அது சம்பந்தமான அடிப்படையறிவே இல்லாதவர் பிரபாகரன் என்று சொன்னதற்காகவே அவரை பண்ணை முகாமுக்கு அழைத்து அவரோடு சிரிச்சு சிரிச்சு பேசியே பிரபாகரன் பற்குணத்தை கொலை சொய்தாரென்று.

        (ஐயரின் பதிவுகளிலிருந்து) அவ்வாறு ஒரு பற்குணத்தை மட்டுமா கொலைசெய்தீர்கள் எத்தனை கல்விமான்களை கொன்று குவித்தீர்கள் போராட்டம் என்று சொல்லி பாதிக்கு மேற்பட்ட தமிழர்களை துரோகிகள் துரோகிகள் என்று நீங்களே எம்மினத்தை

        அழித்தீர்கள் அதற்கு மேலாக அரசியல் புகலிடம் எனக்கேட்டு எம்மினத்தவரை நாடோகளாக்கி அவர்களின் சந்ததிகளையே வெள்ளைக்காரனுகளுக்கு பலியாக்கினீர்கள். எஞ்சியுள்ள வன்னி மக்களையும் யுத்தக்கேடயங்களாக்கி ஈழத்தில் தமிழ் இனத்தையே

        சின்னாபின்னப்படுத்தி அதழபாதாளத்தில் கொண்டுபோய் தள்ளி விழுத்திபோட்டு இன்னுமா வீரம் பேசுகின்றீர்கள் வெள்ளைக் கொடியேந்தி சென்ற வெட்கம் கெட்டவர்களே!! இப்பொழுது எங்களிடம் தோட்டாவும் இல்லை துப்பாக்கியும் இல்லை பேனாவுக்கு

        பதில் சொல்லத் தெரிந்த படித்தவர்களும் இல்லை. ஆனாலும் எங்களது பேனா யுத்தம் தொடர்ந்து கொண்டேயிருக்கும் முடிந்தால் பதில் சொல்லுங்கள். உங்களை இத்துடன் விட்டு விடப்போவதில்லை இன்னும் நிறையவிடையங்களும் நிறையக்

        கேள்விகளும் இருக்கின்றன. நீங்கள் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். கேட்கிறவன் கேணப்பயல் என்றால் எருமை மாடும் ஏரோபிளேன் ஓட்டுமாம் இந்த முப்படைக்கதைகளை கொண்டு போய் அங்கே போய்ச் சொல்ங்கள்.

        |||||தரைப்படைஇகடல்ப்படைஇவிமானப்படை எண்டு முப்படையும் அமைத்த்டுஇ|||| அதுசரி உங்கள் தமிழீழ எடுக்கேசன் டிப்பாட்மென்டில்ல் துரோகி வேறு எதிரி வேறென்று இருக்கா?… ||||ஒபாமாஇபான் கீ மூன்இநம்பியார் எண்டுஇ உலக தலைவரோடு உம்மை

        சேர்த்து மேதை ஆகப் பாக்காதையும்.இவெர்கள் எல்லாம்நமக்கு எதிரியாய் இருக்கலாம்.ஆனால்நீர் துரோகி.||||

        • thamilan

          நரேன்…சூரியத் தேவன் மேதகு.பிரபாகரன் என்ன ஊராட்சித் தலைவனா இல்லை மாநகர மேயரா . ஈழதினதும், உலகத் தமிழனதும் ஒரே தன்னிகர் இல்லாத் தலவன அவென்.

          • Naren

            ஆமாம்! தன்னிகரில்லா வெண்கல வெற்றிக் கொடித்லைவன்.

      • thurai

        ஈழத்தமிழர்களின் அழிவைப்பற்றிய கவலையோ, அவர்களின் வாழ்வைப்பற்றிய சிந்தனையோ, புலிகளிற்கோ அவர்களின் ஆதரவாளர்களிற்கோ கிடையாது.

        முக்கியமான்வை:

        1) தலவரை புகழ்பாடுவது

        2) புலிப்படையினை காப்பது

        3) சிஙள்வர்களை தமிழர்களிற்கு எதிரியாக வைத்திருப்பது

        4)தமிழீழம், விடுதலை, உருமை என் குரல் கொடுத்து
        உலகினில்
        பண்ம் தேடுவது.

        துரை

        • THOTTA

          >> பராக்….பராக்…..பராக்.. அன்பான தமிழீழமக்கழே.
          இத்தால் அறியத்தருவது என்ன என்றால், திரு-நரேன், துரை என்ற,

          (அ)சுத்தமான கைகளிற்குச் சொந்தக்காரர்களும், இதுவரை கொலை( சாப்பாட்டுக்காகக்கூட, ஆடு அல்லது கோழியை) கொள்ளை செய்யாதவர்களும் , மற்றும் இலவச இணைப்பாக சூது , வாது ,கோபம் , புறம் சொல்லல் எதுவுமே அற்ற உத்தமர்களும், ஒழுக்கசீலருமான இருவருமே ,இனி எம்மை எல்லாம்( தமிழ் மக்கழை) வழிநடத்த செல்ல இருக்கிறார்கள் என்பதை அறியத் தருகிறோம்.காந்தியின் பேரன்களாகிய இருவரும் இனி “<காலி முகத்திடலிலே சத்தியாக்கிரகம் இருப்பார்கள் என்றும், அவெர்களைப் பின்பற்றிநாமும் அங்கு போய் போராட்டத்தில் ஈடு பட்டு, எமதுமண்டைகளை சிங்களக் காடையர்களிடம் உடைக்க கொடுக்கும் படி கெட்டுக் கொள்ளுகிறார்கள்.
          புலிகழ் இல்லாததால் இனி இனக்கலவரங்களை சிங்களவர்கள்நடத்தி எம்மை எல்லாம் கொதிக்கும் தாரில் தூக்கிப்போடுவார்கள்.
          முச்சந்தியில் ரயரில் எல்லாம் போட்டு எரிப்பார்கள்.
          தமிழ் பெண்களின் முலை எல்லாம் அறுத்து எறிவார்கள்.
          காணாமல் போகும் எமது இளையவர்கள் ஆத்திலோ,குளத்திலோ மிதப்பார்கள்.
          எமது தலைவர்கள் தான் காந்தியின் சீடர்களாச்சே,(நரேன்,துரை )நாமும் ஆத்திரமோ,அவசரமோ படாது,(எமக்குதான் முள்ளி வாய்க்காலிற்குப் பிறகு ,மானம், ரோசம், சூடு, சுரணை எதுவும் இல்லயே), காந்தியின் சீடர்கள் சுடச் சுட உப்பு அள்ள போய் உயிர் விட்டது போல்,நாமும் சிங்கள்வன் சுடச் சுட தலதா மாழிகைக்குள்ளே போஇ தாமரைப் பூ பறிப்போமாகா
          புத்தம் சரணம் கச்சாமி

          என்னநரேன் ,துரைநீங்க ரெண்டு பேரும் எங்களை ( தமிழ் மக்கழை)வைச்சு காமேடி . கீமேடி ஒன்றும் பண்ணவில்லைத் தானே.

          • Naren

            தமிழீழம் பெற்றுத்தருகினறோம் என்று சொல்லி உலகத் தமிழர் களிடமிருந்து உள்ளவற்றை உருவி – வன்னித் தமிழர்களை பணயக்கைதிகளாக்கி அனை வரையும் மறுபடியும் முள்ளி வாய்க்காலுக்குள் கொண்டு போய் தள்ளி அவர்களையும் சாக்காட்டி நீங்களும் மண்டையை பிழந்து கோவணத்தோடு நிற்காமல்…. நீர் சொன்னதையே மனப்பாடம் செய்து கொண்டிரும் அதுதான் சரியான முடிவு. உங்களை ஒருவரும் எங்களுக்கு வந்து வழிகாட்டுங்கோ என்று கேட்க வில்லை. நீங்களாகத்தான் மக்களிடம் சென்று நாங்கள் உங்களுக்கு வழிகாட்டுகின்றோம் எங்களுக்கு பின்னால் வாங்கோ என்று உங்கடையளை தூக்கி..தூக்கி.. நிமித்தி.. நிமித்தி..(ஆயுதங்களை) காட்டினீர்கள்.
            அதனால் மக்கள் உங்கள் ஆயுதங்களுக்கு பயந்து உங்கள் பின்னால் வந்தார்கள். வரமறுத்தவர்களை தந்திக் கம்பத்தில் தூக்கி கட்டினீர்கள்- விசம்வைத்து கொலை
            செய்தீர்கள்- பின்னர் முகத்தை மறைத்து ஹெல்மெட்டை போட்டுக் கொண்டு மிகுதிப்பேரையும் போட்டுத்தள்ளினீர்கள்- அது பின்னர் செய்திகளாக பத்திரி கைளில் வருமாம். மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணிந்து வந்த இனம் தெரியாத நபர்களால் குடும்பப் பெண்மணி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அ..ப்..ப்.ப..ப்..பா கொஞ்சநஞ்சமா இவ்வாறு நீங்கள் செய்த கொலைகள்………முள்ளிவாய்க்காலோடு தொலைந்தீர்கள்… இனியாவது மக்கள் நிம்மதியாக இருக்கட்டும் திரும்பவும். வந்து
            விடாதீர்கள். இந்த 30 வருடமாய் உங்கட தலைவர் தன்னுடைய மக்களுக்கு எதைச் செய்தார் என்று கேட்டால் அதுக்கு பதில் சொல்ல வக்கில்லை..வந்துட்டார்
            சூரியத்தலைவர்- சந்தனத் தலைவர் என்று சொல்லிக் கொண்டு.

          • thurai

            தோட்டா, தலைவரே தன் வாயால் இனி புலத்தில் வாழும் இளையோர் கையில் போராட்டத்தை ஒப்படைத்து விட்டதாக கூறிவிட்டார்.

            இதனைக்கேட்டு உலக்முழுவதும் தண்டவாளத்தில் படுத்து தலவரையும், மக்களையும் தொலைச்சாச்சு. முதலிலை
            தலைவரை தேடிப்பிடியுங்கோ. துரை

      • Naren

        என்ன தோட்டாக்காரரே! சத்தத்தையே காணோம். வாங்கோ! வந்து அப்பப்போ எதாவது சொல்லுங்கோ அவ்வாறு நீங்கள் ஏதாவது சொன்னால்தானே நாங்கள் உங்களுக்கு கல்லெடுத்து எறியமுடியும். நாங்கள் கல்லெடுத்து எறிவதானால் நீங்கள் யாரென்பது உங்களுக்கே புரியும்தானே?…யாருக்கு தெரியும் ஒருவேளை அதுவும் விளங்காது. உங்களுக்கு தெரிந்ததெல்லாம் மனிசரை குதறுறதுதானே?. வ..ர்..ட்..டு..மா?..

        • Soorya

          தோட்டா வரவில்லை என்று சும்மா துள்ள வேண்டாம். அவர் வெடிமருந்து நிரப்பப் போயிருக்கிறார். அதுவரையும் உமது கண்ணியத்தைக் காக்க முடியுமா?

        • THOTTA

          புலிகழ் வென்றால்… அது தமிழரின் வெற்றி, புலிகழ் தோற்றால் அது அவெர்களின் தோல்வி. ஜெயசிக்குறுவில் புலிகழ் வென்றபோது நாங்கள் எல்லாம் கொடி, குடை , ஆலவட்டம் பிடிச்சுக் கொண்டு ஆனையிறவில் நின்றதை நரேன்நீர் மறந்து இருக்கலாம். ஆனால் தமிழ் மக்கள் நாங்கள் மறக்கவில்லை.
          நரேன்நீர் எல்லாம்நாட்டுக்காக ஒரு தடியைக் கூட எடுத்துப்போட்டு இருக்கமாட்டீர், பெரிய தலைவன் மாதிரி கதைக்க வெளிக்கிட்டீர்.
          நாடு உமக்கு என்ன செய்தது என்பதை விட நீர்நாட்டுக்கு என்ன செய்தீர், அதுதான் முக்கியம்.

          புலிகழும் , அதன் தலைமையும் ” தமிழ் ஈழம் ” எண்ட ஒரே இலட்சியத்திற்காகவே கொலைகளைச் செய்தார்கள்
          யாழிலோ, வவுனியாவிலோ, அல்லது கிழக்கிலோநீங்கள் இருந்திருந்தால் ,னரேன் உனது பெயர் காணாமல் போன பட்டியலில் தான் இப்போது இருந்திருக்கும். மறந்துவிடதே” “குண்டு சட்டியில் குதிரை ஓட்டுவதை இனியும்நிறுத்திவிடும் தோழரே.
          இல்லாட்டி கிருசாந்திகளினதும், சாரதாம்பாள்களினதும் ,கோணேஸ்வரிகளினதும் ஆவிகள் . எதிரிகழை மட்டும் அல்ல உங்களைஉம் தான் துரத்திக் கொல்லும்.
          நரேன், எமது தலைவன்” சூரியத் தேவன்”. சூரியனைப் பாத்து “நாய்கள் ” குலைப்பதால் சூரியனுக்கு எதுவும் ஆகிவிடப் போவதில்லை.
          அடிக்கடி ” வர்ட்டுமா ” எண்டு கேட் கி றீர்…உமது இருப்பிடம் ” தெற்கே” , வடக்கு அல்ல.

          புலிகள் ஒருநாளும் பன்னிகளை ,கூட்டுச் சேர்த்ததே இல்லை, அது சிங்கங்களின் வேலையே.

          தமிழரின் தாயகம் தமிழ் ஈழத் தாயகம்

          • Naren

            என்னைப் பார்த்து ஒன்று கேள்வி கேட்கின்றது. பதில் சொல்லும்படி….! அவரைப் பாரத்து ஒட்டு மொத்த உலகமும் கேள்வி கேட்கின்றது. பதில் சொல்ல தெரியாமல் உலகத்தையே பார்த்துக் கனைக்கின்றது. நையாண்டி செய்கின்றது. காரணம் அதற்கு வேறு வழியே தெரியாது அதன் குணம் எதுவோ அதனையே அது செய்கின்றது. வ..ர..ட்;..டு..மா.. தோட்டா சாரே!!!…

  7. நக்கீரன்

    என்ர ஐயா!!! வாசிக்க வாசிக்க நெஞ்சம் கனக்குது….எவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு தமிழ் இளையோரால் அன்று உருவாக்கம் அடைந்த எம்மக்களுக்கான விடுதலை தீ, கீழ்த்தரமான அரசியல்வாதிகளினாலும் தமிழனுக்கே உரிய சுயனலங்களாலும் பாழ்பட்டு போயி விட்டதே!!!

  8. Shiva

    வரலாற்றை வெறுமனே தனிமனிதச் சாதனைகள், வீரச் செயல்கள், துரோகங்கள் என்று ஆராயும் போது நம்மால் ஒரு எல்லைக்குள்ளே தான் நிற்க முடியும்.
    விடுதலைப் புலிகளின் இறுத்தித் தோல்விக்கு ஒருவர் மீது பழி சுமத்துவதும் எளிது.
    சில துரோகங்கள் மீது பழி சொல்லிக் கையை விரிப்பதும் அதே அளவு எளிது.

    தோல்விக்குப் பின்னல் இருந்த தவறான அரசியல் போக்குக்களையோ அடிப்படையிற் தவறான கோட்படுகளையோ ஆராய நாம் இன்னமும் தயாராக இல்லை.
    “பிரபாகரன் ஆயுதம் ஏந்திய அமிர்தலிங்கம்; அமிர்தலிங்கம் ஆயுதம் ஏந்தாத பிரபாகரன்” என்றதை இந்த இணையத்தளத்தில் எடுத்துக் காட்டியவர் முக்கியமான ஒரு உண்மையை நமக்கு நினைவூட்டினார்.
    புலிகளின் சர்வாதிகாரப் போக்கின் தோற்றுவாய் தமிழரசுக் கட்சியில் தான் இருந்த்தது. அதன் விருத்தியில் அந்நியக் குறுக்கீட்டுக்கும் பெரும் பங்கிருந்தது.
    நாம் அதையும் கவனத்தில் கொள்வது பயனுள்ளது.

    • kazeeb

      அருமையான விவாதம்… தொடருங்கள். இதனால் மறைக்கப்பட்ட பல உண்மைகள் வெளியாகும். அதன் மூலமாக மறைக்கப்பட்ட வரலாறுகள் வெளிச்சத்திற்கு வரும்.

    • alex.eravi@gmail.com

      தங்கள் கருத்துக்கள் எல்லாம் ஆரோக்கியமானவையாக உள்ளன. ஓர் சிறு திருத்தம், என்னைப் பொறுத்த வரையில் “அந்நியக் குறுக்கீட்டுக்கும் பெரும் பங்கிருந்தது” என்று இல்லை.

      “அந்நியக் குறுக்கீடுகளே” எம்மை, எம் போராட்டத்தை இந்நிலையில் கொண்டுவந்து விட்டுள்ளது…….அது தற்போதும் தொடர்கிறது.

    • Shiva

      அலெக்ஸ் நீங்கள் சொல்வதில் எனக்கு மறுப்பில்லை.
      ஆனாலும் நமக்கும் ஒரு பொறுப்பு இருந்ததல்லவா.
      அதைக் கருதியே பெரும் பங்கு என்று சொன்னேன்.

    • Shiva

      “தொழிற்ப்புரட்சி வந்தபிறகு,தொழிற்சாலைகளில் இந்தக் கூலிகள் “அரிஸ்டோகிராட்டுகளின்” வியாபாரத்தை பெருக்கியதால்,அவர்களிடையே ஏற்ப்பட்ட சமூக மாற்றத்திற்கு,அப்போது தோன்றிய காரல் மார்க்ஸ்,ஐரோப்ப்வில் கல்வி பயின்ற லெனின் போன்றவர்கள் என்ன பங்கு ஆற்றினார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள்தான் கூறவேண்டும்!.”
      இது தெளிவாக இல்லை.

      மர்க்ஸ் முதலாளிய வளர்ச்சியின் பின்பு பிறந்த்தவர்.
      லெனின் முதலாளியம் ஏகாதிபத்தியமாக உருப்பெற்ற காலத்துக்குரியவர்.
      முதலாளியம் அரிஸ்டோகிராட்டுகளின் தோற்றுவிப்பா?

      இந்திய, இலங்கை முதலாளித்துவதின் தோற்றமும் விருத்தியும் பற்றிப் பல பயனுள்ள நூல்கள் வந்துள்ளான.

    • ஒரு கட்சியின் சர்வாதிகாரப் போக்கு என்பது அக்கட்சியின் கொள்கையாக இருக்காது.ஏனெனில் தமிழரசு கட்சியின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவரான அமரர் கு.வன்னியசிங்கம் இடதுசாரிக் கொள்கையுடையவர்.ஒரு கட்சி என்பது நெகிழும் தன்மையில் அல்லது வளையும் தன்மை என்பது இன முரண்பபாடே இல்லாத ஒரு இன மட்டுமே வாழும் நாடுகளில் மட்டுமே சாத்தியப்படும்.ஆனால் இலங்கையில் தமிழர்களுக்கெதிரான போர்க்குணம் கொண்ட இலங்கையரசின் போக்கிலிருந்து தமது மக்களின் விடுதலைக்காக அரசியல் நடத்தும் ஒரு கட்சி உள்ளும் வெளியிலும் சர்வாதிகாரப் போக்கை நாளடைவில் பெற்றுக் கொள்வது இயல்பு.சிங்களவர் மத்தியில் தோன்றிய இடதுசாரிக் கட்சிகள் மக்கள் கருத்தறிந்து தம்மை வழிநடத்தினார்களெனில் அவர்களால் இன முரண்பாடுகள் களையப்பட்டு தமிழரின் உரிமைக்கான தீர்வை அவை எட்டியிருக்கும்.அக்கட்சிகள்கூட காலப் போக்கில் இனவாதத்தை வெளிப்படையாக பேசாவிட்டாலும் மறைமுகமாக பேசியிருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.அந்நிய சக்திகள் இப்பொழுது இன்னும் அதிகமாவே காணப்படுகின்றது.குறிப்பாக இந்த பொதுத் தேர்தலில் ஜனாதிபதித் தேர்தலைவிட அதிகளவு ஊடுருவல் இடம்பெறும்.இந்தியாவின் தலையீடு என்பது தமிழருக்குள் மட்டுமல்ல முழு இலங்கையையும் ஆக்கிரமித்து நிற்கின்றது.

  9. மகேந்திரன் என்ற மாத்தையா துரோகம் செய்யவில்லை என்றே பல புலி உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் கூறுகின்றனர்.. இரண்டு கால்களையும் தாக்குதலில் பறிகொடுத்த மகேந்திரன் என்ற இன்ஜினியர் இந்தியாவில் இருந்து எப்படி எவரின் துணையுமின்றி வன்னி வந்து சேர்ந்தார் என்று புலிகளுக்கு புரியாத புதிராக இருந்தது. அதனால் இன்ஜினியரை கைது செய்து விசாரித்தார்கள் அவரின் பதில்கள் ஒன்றிற்கொன்று முரணானதை அவதானித்த புலிகள், அவர் சொன்னதை நம்புவதுபோல் நடித்து சாதுர்யமாக அவரை விடுதலை செய்துவிட்டு அவரை வேவுபார்க்கத் தொடங்கினார்கள். இதை அறியாத மடை மகேந்திரன் மறைத்து வைத்திருந்த தொலைதொடர்புக் கருவிமூலம் தொடர்புகொண்டதை புலிகளின் புலனாய்வுத்துறை தெரிந்து கொண்டு மறுபடியும் ம்கேந்திரனக் கைதுசெய்து சித்திரவதை செய்தபோது பல உண்மைகள் தெரியவந்தன.இவை பற்றி மாத்தையாவிற்க்கும் தெரியும் என்று அடியின் அகோரத்தில் கூறியிருக்கின்றார். ஆனால்நடந்தது என்னவென்றால் பிரபாகரனைக்கொன்றால்,இந்தியா நமக்கு உதவி புரியும் உங்களையும் தலைவராக்குவார்கள் என்று மாத்தையா என்ற மகேந்திரனிடம் கூறியிருக்கின்றார் இந்த இன்ஜினியர் மகேந்திரன். பிரதித்தலைவர் மாத்தையாவின் மிகவும் நம்பிக்கையானவரும் நண்பருமான இந்த மகேந்திரன் என்ற இன்ஜினியர் எண்பதுகளின் ஆரம்பத்தில் மாத்தையா வன்னியைத் தன் கோட்டையாகக் கட்ட பல வழிகளிலும் உதவி புரிந்தவர்.இதன் அடிப்படையில் இதனை அசட்டை செய்த மாத்தையா, “போடா போய் வேறை வேலை இருந்தால் பார்” என்று பேசியிருக்கின்றார்.மாத்தையா செய்த குற்றம் இதனத் தலைவருக்குத் தெரியப்படுத்தாதது மட்டுமே. பிரதித்தலைவர் மாத்தையாவைப்பிடித்து செய்யாத சித்திரவதையெல்லாம் செய்து பார்த்தார்கள் ஒன்றும் வெளிவரவில்லை. “பானையில் இருந்தால்த்தானே அகப்பையில் வர”.வெளியில் விட்டால் பெரும் பிளை என்பதால் வல்வெட்டித்துறை என்றும் பார்க்காமல் போட்டுத்தள்ளிவிட்டார்கள்.

    • skay

      //மாத்தையாவைப்பிடித்து செய்யாத சித்திரவதையெல்லாம் செய்து பார்த்தார்கள் ஒன்றும் வெளிவரவில்லை. “பானையில் இருந்தால்த்தானே அகப்பையில் வர”.வெளியில் விட்டால் பெரும் பிளை என்பதால் வல்வெட்டித்துறை என்றும் பார்க்காமல் போட்டுத்தள்ளிவிட்டார்கள்.//
      Is he from VVT?? I think he’s from Point Pedro

      • thamilmaran

        எங்கே இருந்து வந்தால் என்ன, பிடிக்கவில்லை என்றால் போட்டுத்தள்ளூதல் தான்.

      • Tamil

        Gobalsami Magendrarajh (Mathiya) studied at VVT Sithambara college. His class mates were Tamilmaran (Former LTTE member & NLFT Central Commite) and Kumarappa.

      • அயலவன்

        மாத்தையா பிரபாகரனின் தூரத்து உறவினர். சொந்த இடம் வல்வெட்டித்துறை.வாழ்ந்த இடம் பருத்தித்துறை.இரண்டு கரையோரப்பகுதிகளுக்கும் வெகுதூரமில்லை

    • Anpu

      எழுதுமட்டுவாள் ஆனையிறவு நினைவுத்தூபி திறப்பு நிகழ்வில் கலந்து கொள்ளவிருந்த தலைவரை படுகொலை செய்துவிட்டு கற்கோவளத்தில் மறைத்து வைக்க‌ப்ட்டிருந்த படகில் தமிழ் நாட்டிற்கு செல்வதற்காக றோவின் முகவர்களாகிய இந்திய ஆமிக்கரருக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தது முதல், சுரேஸ் முதலிய சிறந்த களவீரர்களுக்கு பெண்களை தொடர்புபடுத்தி வெருட்டி தலைவருக்கு எதிராகவும் தமிழ் மக்களின் விருப்புக்கு எதிராகவும் செயற்பட தூண்டியது, மற்றும் உதிக்கு திசை நோக்கி உண்ணத பயனம் என திருகோணமலையில்லும் மட்டக்களப்பிலும் இருந்த எமது ஒவ்வொரு முகாமிற்கும் வந்தபோது சண்டைக்கு போக விருப்பமில்லாது முகாம்களில் நின்றவர்களை தனது தனிப்பட்ட அனிக்கென தேர்வுசெய்து கொண்டுசென்றது என மாத்தையா என்கின்ற மகேந்திரா ராசாவின் திருகு தாளங்கள் பல… நாங்கள் எல்லோரும் இறந்துவிடவில்லை.

  10. JAMES FREDRIC

    “நீரளவே ஆகுமாம் நீராம்பல்,கொண்ட குலத்தளவே ஆகுமாம் குணம்” என்பது ஒரு அறுமையான தமிழ் வாசகம்!.இது சாதிய கருத்து அல்ல,”ஏலியன் ஐடியாலஜி” கலப்பற்றது.பற்குணத்தை கொலை செய்தார்கள்,மட்டகளப்பு எம்.பி.கனகரத்தினத்தை கொலை செய்ய போனார்கள் என்றால்,ஒரு மனிதன்,(பிரபாகரன்,உமா மகேஸ்)தன் சக மனிதனை கொலை செய்ய விரும்புகிறானென்றால்,அவன் மீது பழி போடுவதை விட அதன் காரணத்தை,நோக்கி இலக்கு வைத்தால்,”தமிழ்” என்ற வார்த்தையின் கீழ் இவர்களை ஒருமை படுத்துவது அபத்தம்,”சிறு இனக்குழுக்களாகவே(ஜாதி)” “இறைமை” பெற்றிருக்கின்றனர்!.தற்போது, “பிரபாகரன் குழுவின் தியாகத்தைப் பற்றி” யாழ்ப்பாணத்தில் பேசினால்,ஜோட்டால் அடிப்பேன் என்று அப்பகுதி மக்கள் தெளிவாக கூறுவது அவர்களின் சமூக செயல்பாட்டுக்கு உதாரணம்!.ஒரு ஜதியை சேர்ந்தவன் இந்த குணம் உடையவன் என்று முத்திரைக் குத்துவது ஒரு “மேற்கத்திய திரிபு ஆகும்”.எங்களுடைய பிரத்தியேக “சமூக நடவடிக்கைகளுக்கு” ,இங்கிலாந்திலிருந்து “ஈராஸ்” இயக்கம் மூலமாக தமிழரசுக் கட்சிக்கும்,பிற இயக்கங்களுக்கும்,இறக்குமதி செய்யப்பட்ட,இலண்டன் நூலக படிப்பாகும்!.ஐரோப்பியர்கள் நம்மீதான புரிந்துணர்வை நம் புரிந்துணர்வாக நாம் கருதி,அதன் அடிப்படையில்,ஆரம்பகால சிந்தனை தரவுகளை அமைத்தது!.தற்போது “ஆயுதம் தூக்கியவனையெல்லாம்” “குற்றப்பரம்பரையினராக” சமூகங்களுக்கு முன் நிறுத்தியுள்ளது!.வன்முறை என்பது “உள்ளிலிருந்து கொல்லும் வியாதி” என்ற கருத்தியியல் இங்கிருந்தே ஆரம்பமாகிறது.ஐரோப்பாவில் தொழிற்புரட்சியின் நவீன ஆயுதங்களே கால்னித்துவத்தை நிறுவின.அதை இத்துப் போன ஆயுதங்களினால் எதிர்கொண்டே சுதேசிகள் அழிந்தனர்.இதில்,தங்களுக்கு தேவையான மூலப்பொருள்களை உற்பத்திசெய்தவர்களை காலனித்துவம் வளர்த்தே விட்டிருக்கிறது – பருத்தி உற்ப்பத்தியை செய்த கோயம்புத்தூர் நாயுடுகள்,கவுண்டர்கள்.இவர்கள் முன்னாள் சுதேசிகளின் ஆயுதக்குழுக்களே!.தேயிலை உற்ப்பத்தியளர்கள்.ஆயுதம் மட்டுமே தொழிலாக இருந்தவர்கள் மட்டுமே அழிக்கப்பட்டார்கள்!.இந்த நலன்களுக்கு தகுந்த மாதிரியே “நல்லதாகவும்,கெட்டதாகவும்” நூலக புத்தகங்களில் “அச்சேற்றப்பட்டன”!. இந்த கோணம்தான் எங்களின் “சமூக உள்குத்துக்கு காரணம்”.குலத்தின் குண இயல்பு என்பது உலகின் எல்லா பாகங்களிலும் உள்ளது.பல்வேறு தொழில்களை செய்தவரிடையே,த்ற்போது இருப்பதைப் போன்று இவ்வளவு பொருளாதார வித்தியாசங்களும்,”பொறாமைகளும்(குறுக்கு வழியில் காரியம் ஆவதால்)” இருந்ததாக தெரிய வில்லை!.இதற்காக வெள்ளைகாரனிடம் முண்டியடித்து காவடி தூக்கும் “உள்குத்து” பற்றியும் ஆராய வேண்டும்!.தொழிற்ப்புரட்சி,தொழில் நுட்பம் ஆகியவைகளை,எங்களுடைய பிரத்தியேக சமூக அமைப்பின் பால் எழுந்த சிந்தனைகளுடன் “உள்வாங்காமல்”,”யார் குத்தி அரிசியானால் என்ன” என்ற சோற்று சிந்தனைதான் “உள்குத்துகளுக்கு” காரணமாக அமைந்ததா என்பது விரிவாக ஆராயப்பட வேண்டும்!.

  11. vijay_kck

    சாந்த சொரூபிநரேன் அவர்களே. புலிகள் இயக்கம் மட்டும் இல்லையென்றால் 1983ல் உச்ச கட்டத்துக்குப் போன இன அழிப்பு இன்று 2010ல் முடிந்தே போயிருக்கும் அய்யா. ஒரு தமிழன் கூட மீதி இருந்திருக்க மாட்டான். மீதி இருந்திருந்தால் கூட அவன் தமிழன் என்ற அடயாளத்துடன் இருந்திருக்க மாட்டான்.நீங்களெள்ளாம் அப்படி ஒருநிலைமையைக் கூட ஏற்றுக் கொள்வீர்கள். ஆனால் ஒரு சக தமிழன் உயிரைத் துச்சமாய் மதித்து ஒரு அரசாங்கத்தைக் கட்டியமைத்தால்நொட்டைநொள்ளை சொல்வீர்கள். மனிதனாய் பிறந்தவனுக்கு மானம் வேண்டுமய்யா மானம் வேண்டும். இப்போதுதான் புலிகள் இல்லையென்று சொல்கிறீர்களே. உங்களைப் போன்றவர்கள் களத்தில் இறங்கி தமிழர்களை முதல் தர குடி மக்களாக்குங்களேன்.

    • thamilmaran

      விஜய் என்ற என்நெருங்கிய உறவே வணக்கம்.லண்டனில் அய்.ரி.சம்பந்தர் என்ற விளக்கெண்னெய் வன்னியில் தமிழர் போரில் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தபோது யூலைக் கலவரம் என்ற புத்தகம் எழுதி தமிழன் இரத்தத்தை காசாக்கியது.இப்போது அந்த அய்.ரி.சம்பந்தரை கேட்டுப் பாருங்கள் உவன் பிரபாகரன் சில் பிழையள் விட்டுப்போட்டான்.அவன் உமா மகேஸ்வரனைக் கேட்டுநடந்திருந்தால் தமிழ் ஈழம் சுவர் எண்டுது.இத்தனை நடந்தும் இன்னும் தமிழ் ஈழம் என்றால் என் இன்ம் தாங்குமா? போராட்டம் இல்லாது இருந்தால் தமிழ் இன்ம் வளர்ந்திருக்கும் அறீவில், ஆற்றலில் நிமிர்ந்திருக்கும்.புதிய திசையில் பயணீத்திருக்கும்.

      மூன்றூ இலட்சம் தமிழன் அழிந்ததும் இன்னும் நாம் மாறவில்லையே ஏன்?

    • Shiva

      Pஉலிகல் இலாவிட்டால் போரட்டமே இல்லை என்பதற்கு ஆதாரம் இல்லை.
      அவர்களின் தவறுகளை விமர்சிப்பது அவர்களைநிராகரிப்பதல்ல.
      தமிழருக்கு மானம் இருக்க வேண்டும் என்றால் மேலைநாடுகளின் பின்னாலும் இந்தியாவின் பின்னாலும் வால் பிடிப்பதை முதலில் நிறுத்துவோமா?
      தமிழ் மக்களின் விடுதலை தனி மனித சாகசச் செயலல்ல. அது ஒரு சமூகப் பொறுப்பு.
      சவால் விடுவதை விட, நடந்ததை நிதானமாக ஆராய்வது நல்லது.

    • Naren

      ////புலிகள் இயக்கம் மட்டும் இல்லையென்றால் 1983ல் ஒரு தமிழன் கூட மீதி இருந்திருக்க மாட்டான்//// ஆமாம்!.. 1983ம் ஆண்டு நான் ‘புதன்” எனப்படும் கிரகத்தில் வீற்றிருந்தேன் அதனால் இலங்கையில் இடம்பெற்றி விபரங்கள் எதுவும் எனக்கு தெரியாமலே போய்விட்டன. யாருக்கு கயிறு விடுறீங்கள் ஒரு தமிழனும் மிஞ்சியிருக்கமாட்டான் எல்லாரையும் அள்ளிக் கொண்டு போய் சிங்களவன் கடலில் கொட்டியிருப்பான் என்று. இதேகயித்தைத்தானே பிரபாகரனின் இறுதிக்கட்டத்தின் போதும் சொன்னீர்கள் அதாவது உங்களது ‘பிரபாகரன் என்ற வெள்ளைக் கொடியேந்திய மாவீரன்” எப்பொழுது இறக்கின்றானோ அப்போதில் இருந்தே ஒரு தமிழனையும் சிங்களவன் விடமாட்டான் எல்லோரையும் அழித்துவிடுவான் என்று எனவே பிரபாகரனால்தான் இலங்கைத்தமிழினம் பாதுகாக்கப்பட்டது என்று கயிறு விட்டுக் கொண்டிருந்தீர்கள் இப்போ பிரபாகர யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அவரா வந்து மீழ்குடியேற்றம் செய்து அவர்களுக்கு உணவும் உடையும் கொடுத்துக் கொண்ருக்கின்றார். அதே சிங்களவன்தானே இவ்வளவையும் செய்து கொண்டிருக்கின்றான். உங்களது மேதாவித்தனங்களை காட்;டி துரோகி அது இது என்று எல்லோரையும் நீஙக்ளே கொலை செய்து போட்டு வெட்கமேயில்லாமல் வழிசல் தனமான கருத்துக்களையே மறுபடியும் மறுபடியும் எழுதிக் கொண்டிருக்கின்றீர்களே உங்களக்கு கொஞ்சமேனும் சூடு சொரணையே கிடையாதா?.. /////மனிதனாய் பிறந்தவனுக்கு மானம் வேண்டுமய்யா மானம் வேண்டும்.//// வெள்ளைக் கொடிவித்துவானுகளே மானம் ரோசம் சூடு சொரணை பற்றி நீங்கள் பேசாதீர்கள் இன்னுமொருதடவை.

      • ????

        நரேன் நீங்க புதனில இல்ல சனில இருந்தீங்கன்னு தெளிவாத் தெரியுது! சிங்களவன் யாழில் செய்த மீள்குடியேற்றத்தையும் செய்யும் நன்மைகளையும் பார்த்துட்டுத் தான் இருக்கோம். ஊருக்கு வந்து கன காலமாச்சோ? அடிபொடிகளோ கருத்தக் கேட்டு எழுதினா இதுதான். வெள்ளக் கொடியோட போனத பக்கத்துல இருந்து பார்த்த மாதிரி ஒரு ஜல்லி.. இந்த ஜல்லி எவ்ளோ காலத்துக்கு தான் அடிப்பீங்க. Change the beat pls! ஐயர் போராட்டத்தின் ஆரம்ப காலத்த பதிவுகள் வழி பதிவு செய்கிறார், அதுக்கு ஊடால ஊடால வந்து அ’ரி’வுசீவிதனத்தோட தங்கள் அஜண்டாக்களுக்கு ஏற்ப சிலதுகள் பெனாத்துறதப் பார்க்க வேதனையா இருக்கு!

        • THOTTA

          கேள்வி.. இன்னும உமக்கு விடயம் புரியவில்லை….சாந்தன்,துரை.. நரேன் எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.

          • thurai

            மனிதர்கள் கொலை செய்யப்படுவதை ஏற்காதவர்கள்.

            பொய்,கொலை,கொள்ளை

            இவைகளை தமிழீழ விடுதலையென்னும் போர்வையால் போர்க்க விரும்பாதவர்கள்.

            தமிழீழமெங்கும் தம்பி, தமிழர்களிற்கு ச்மாதி கட்டி முடிக்கு முன் சிங்களவர் தம்பியின்
            கதையை முடித்துவிட்டார்களென்ப்தே

            தோட்டாவின் கவலை.

            துரை

          • Soorya

            ஊறியதா இல்லை நாறியதா ? நரேன் எழுதுவதை வாசிக்க குமட்டுகிறது.

    • shanthan

      வணக்கம் விஜய்
      இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரங்களில் ஒவ்வொரு தடவையும் வடக்கு கிழக்கு வாழ் தமிழ்மக்களை விட சிங்களப்பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்கள் தான் பாதிக்கப் பட்டார்கள். வடக்கு கிழக்கிற்கு அகதிகளாக வந்தார்கள். ஆனால் 1983 க்கு பிறகு வடக்கு கிழக்கிலிருந்து சிங்களப்பகுதி தான் பாதுகாப்பு என்று கொழும்புக்கு வந்து விட்டார்கள். இது தான் புலிகள் வழங்கிய பாதுகாப்பு.1983க்கு முன்பு நூற்றுக்கணக்கான தமிழ்மக்கள் தான் இறந்தார்கள். புலிகளின் பாதுகாப்பில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் இறந்துள்ளார்கள். இது தான் புலிகளின் சாதனையா? இப்போது புலிகள் இல்லை என்று பிரகடனம் செய்தமை புலி ஆதரவாளர்கள் தற்போது உண்மையை ஒப்புக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கின்றது. மிக்க மகிழ்ச்சி. புலிகள் தமிழ் மக்களை அதல பாதாழத்தில் அல்லவா தள்ளி விட்டுச் சென்றிருக்கின்றார்கள். அது அவ்வளவு சுலபமான விசயம் இல்லை. புலிகள் 25 வருடங்களாக சீரழித்ததை மாற்றியமைக்க நீண்ட காலம் எடுக்கும். அந்த மாற்றத்தை ஏற்படுத்த மற்றவர்கள் உழைக்க தொடங்கி விட்டார்கள். அதை இன்னும் குறுகிய காலத்தில் உணர்வீர்கள். சாதாரண போராளிக்கு சயனைட்டும் தலைவர்களுக்கு வெள்ளைக்கொடியுடன் சரணடைவு என்ற முரண்பட்ட சுயநலத்தத்துவத்தைக் கொண்ட அமைப்பைச்சேர்ந்தவர்கள் நீங்கள். உங்களுக்கு யதர்த்தைப் புரிந்து கொள்ளும் தன்மை அவசியம். முதலில் உங்கள் அமைப்பு கடன்ட காலங்களில் செய்த தவறுகளைப் பற்றி சுயபரிசோதனை செய்யுங்கள்.

    • thurai

      சிங்களவரிடம் பொல்லைக் கொடுத்து அடிவாங்கியவர்கள்
      தான் விடுதலைப்புலிகள். மானத்தை இழந்தவர்கழும் புலிகள்தான்.
      ஈழத்தமிழரை தலைமைகள் இன்றி நடுத்தெருவில் விட்டவர்கழும் புலிகள்தான்.
      புலிகழும் தமிழர்கழும் ஒன்றுதான் என பொய் பிரச்சாரம் செய்து
      வன்னித் தமிழர்களை பலி கொடுத்தவர்கழும் புலிகள்தான்.

      துரை

  12. marupakkam

    எம் இனம் பிச்சை எடுக்க காரணம் தமிழ்தலைவர்கள். மனச்சாட்சியுள்ள

    (புலிச்சாட்சியல்ல) அனைவர்க்கும் தெரியும். தமிழர்களை ஒரு மனச்சாட்சியுள்ள, ஆயுதம் தெரியாத,கதிரைக்கு ஆசைப்படாத……..தலைவனை தேர்தெடுக்க, அவனை சிந்திக்க அவகாசம் கொடுங்கள். தயவுசெய்து.

  13. alex.eravi@gmail.com

    சித்திரவதை முகாம்களில் யூதர்களை விதவிதமாகக் கொலை செய்த டாக்டரின் டைரி விரைவில் ஏலத்துக்கு வருகிறதென செய்தி வரும் நேரத்தில் எமது ஈழப் போராட்டத்திலும் விடுதலைக்கான அமைப்புகளுக்குள்ளும் வெளியிலும் நடந்த கொலைகள், தமிழீழ விடுதலைப் புலிகளின் கடைசி நாட்களில் May 18 அன்றும் (முள்ளிவாய்க்கால்) முன்னும் நடந்த மானிட அழிப்புகளும் ஆதாரங்களுடன் வெளிவர பல காலங்கள் இல்லை.

    இதுகுறித்து, லண்டனிலிருந்து வெளிவரும் “திடெலிகிராப்’ பத்திரிகை கூறியிருப்பதாவது: டாக்டர் ஜோசப் மெங் கெலே என்பவர் ஹிட்லர் ஆட்சிக்காலத்தில், “மரண தேவன்’ என்று போற்றப் பட்டவர். சித்திரவதை முகாம்களில் அடைத்து வைக்கப் பட்டிருந்த யூதர்களை விதவிதமாகக் கொல்ல ஹிட்லருக்கு வழிவகை வகுத்துக் கொடுத்தவர்.

    1979 வரை வாழ்ந்த இவரது டைரிகள் பிரேசிலில் போலீஸ் ஆவணங்களிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. 1960 ல் அந்த டைரி தொடங்குகிறது.இவர் தனது டைரியில், “மனித இனத்தை விருத்தி செய்யும் வழிவகைகளைப் பின்பற்றாவிடில், வெகு சீக்கிரத்தில் மனித இனமே அழிந்து விடக் கூடும்’ என்று கவலைப்பட்டு எழுதியுள்ளார். அமெரிக்காவில் வரலாற்று ஆவணக் காப்பகத்தில் உள்ள இந்த டைரி விரைவில் ஏலத்துக்கு வரவிருக்கிறது.

    தற்போது ஐயர் அவர்கள் பதியும் பதிவிலும் இவை வரலாம்….. வந்து கொண்டுள்ளது. ஆனால் May 18 பின்னான இவ்பதிவின் பின் புலம் என் மனதில் நெருடுகிறது……பொறுத்திருந்து பார்ப்போம்.

    ஐயர் அவர்கள் அவரின் பதிவின் தொடரின் பின் பதிவுகளில், பிற்காலத்தில் தமிழீழ விடுதலை புலிகளில் இருந்து பிரிந்த உமாமகேஸ்வரன் எப்படிக் கொல்லப்பட்டார் (மாலை தீவு தாக்குதலிரிக்கு பின்னான அந்நிய ஊடுருவல்), பிரபாகரனுடன் பிரிந்திரிந்த நிலையில் அவருக்கு மெய்பாதுகாவலனாக இருந்த உடுவிலை சேர்ந்த சிவனேஸ்வரன் (காக்கா), திருச்சி, மதுரையில் பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்திக்கொடுத்த கிழக்கிலங்கையைச் சேர்ந்த கழுகுகுப் படையை சேர்ந்த இராஜ்மோகன் அண்ணர் எப்படிக் கொல்லப்பட்டார் என்பதையும் பதிவார் என எதிர்பார்க்கிறேன்.

  14. JAMES FREDRIC

    ஐரோப்பாவில் “மிடில் ஏஜ்” எனப்படும் மத்திய காலத்தில்,விவசாய கூலிகளின் ஒன்பது வயது பிள்ளைகள் கூட 16 மணி நேரம் வேலை செய்யவேண்டும்.திருமண்ம் செய்வதாயிருந்தால் முதலாளியின் அனுமதி பெற்றே செய்ய்யவேண்டும்!.பிரிட்டனில் கூலிகள் திருமணம் செய்த பெண்ணை முதலில் அனுபவிப்பதுவும் முதலாளியே என்பது சாதாரணம்!.இத்தகைய கொடுமை அந்த காலகட்டத்தில் இந்தியாவில் இல்லை என்று நினைக்கிறேன்!.தொழிற்ப்புரட்சி வந்தபிறகு,தொழிற்சாலைகளில் இந்தக் கூலிகள் “அரிஸ்டோகிராட்டுகளின்” வியாபாரத்தை பெருக்கியதால்,அவர்களிடையே ஏற்ப்பட்ட சமூக மாற்றத்திற்கு,அப்போது தோன்றிய காரல் மார்க்ஸ்,ஐரோப்ப்வில் கல்வி பயின்ற லெனின் போன்றவர்கள் என்ன பங்கு ஆற்றினார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள்தான் கூறவேண்டும்!.ஆனால் தற்போது கூட,இந்தியவிலேயோ,இலங்கையிலேயோ,”அரைவாசி தொழிற்சாலை பொருளாதாரம் கூட இல்லை”.இன்னும் விவசாய பொருளாதாரம்தன் பெரும் பங்கு வகிக்கிறது.தொழில்நுட்பத்தை கொணர்ந்த வெள்ளைக்காரனுக்கு,”மாமா வேலைப் பர்த்தவனும்,எடுபுடி வேலை செய்தவனும்தான்”,தற்போது தெற்காசிய சமூகங்களின் தலைமைகளில் ஏறி அமர்ந்துக் கொண்டு,அரசாங்க நாற்காலிகளை இறுக்கப் பற்றியிருக்கின்றனர்!.யாராவது “ஜாதி அமைப்புகளை” ஒரு நல்ல சமூக மாற்றத்தை ஏற்ப்படுத்தி,அதை ஆவணப்படுத்த முடிந்ததா?!.”சமத்துவபுரம்” என்று சினிமா விளம்பர பாணியில்,ஜாதிகளிடையே சிண்டு முடித்துவிட்டு குளிர் காய்வதை புத்திசாலித்தனம் என்று நினைக்கிறார்கள்!.நான் அப்படி,இப்படி கூறுவது ஒரு முயற்சி என்றாலும்,பாதிக்கப்பட்டவர்கள்,சரியான கோணத்தில் ஆராய்ந்து,”உள்குத்துக்கான” காரணங்களை வெளிக் கொணர வேண்டும்!.

    • Shiva

      “தொழிற் புரட்சி வந்தபிறகு,தொழிற்சாலைகளில் இந்தக் கூலிகள் “அரிஸ்டோகிராட்டுகளின்” வியாபாரத்தை பெருக்கியதால்,அவர்களிடையே ஏற்ப்பட்ட சமூக மாற்றத்திற்கு,அப்போது தோன்றிய காரல் மார்க்ஸ்,ஐரோப்ப்வில் கல்வி பயின்ற லெனின் போன்றவர்கள் என்ன பங்கு ஆற்றினார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள்தான் கூறவேண்டும்!.”
      இது தெளிவாக இல்லை.

      மர்க்ஸ் முதலாளிய வளர்ச்சியின் பின்பு பிறந்தவர்.
      லெனின் முதலாளியம் ஏகாதிபத்தியமாக உருப்பெற்ற காலத்துக்குரியவர்.
      முதலாளியம் அரிஸ்டோகிராட்டுகளின் தோற்றுவிப்பா?

      இந்திய, இலங்கை முதலாளித்துவதின் தோற்றமும் விருத்தியும் பற்றிப் பல பயனுள்ள நூல்கள் வந்துள்ளான.

      • JAMES FREDRIC

        /Krupp was an indirect participant in the German genocide, and according to one of his own employees, ironically called by his defense, even when it was clear that the war was lost,
        “Krupp considered it a duty to make 520 Jewish girls, some of them little more than children, work under the most brutal conditions in the heart of the concern, in Essen.”[4] Where he surprised many by supporting the Indian nationalist, Subhash Chandra Bose./- Friedrich Krupp (1787–1826),Otto Eduard Leopold von Bismarck (1 April 1815 – 30 July 1898)-Frederick William Victor Albert) (27 January 1859 – 4 June 1941) was the last German Emperor and King of Prussia, Franz Joseph Hermann Michael Maria von Papen zu Köningen (help·info) (29 October 1879 – 2 May 1969) was a German nobleman, Roman Catholic monarchist politician(Papen also served as intermediary between the Irish Volunteers and the German government regarding the purchase and delivery of arms to be used against the British during the Easter Rising of 1916, as well as serving as an intermediary with the Indian nationalists in the Hindu German Conspiracy.);,ChempakaramanSeptember 15, 1891–May 26, 1934.had the privilege of being the Foreign Minister of the Provisional Government of India set up in Afghanistan in December 1915, with Raja Mahendra Pratap of Kabul as President.,The economic downturn in India during the early nineteenth[dubious – discuss] century witnessed a high level of emigration. Some of these emigrants settled in North America. These included Punjabis as well as people from other parts of India. The Canadian government decided to curtail this influx with a series of laws, which were aimed at limiting the entry of South Asians into the country and restricting the political rights of those already in the country. The Punjabi community had hitherto been an important loyal force for the British Empire and the community had expected, equal welcome and rights from the British and Commonwealth governments as extended to British and white immigrants. These laws fed growing discontent, protests and anti-colonial sentiments within the community.The Ghadar Party, initially the Pacific Coast Hindustan Association, was formed in 1913 in the United States under the leadership of Har Dayal, with Sohan Singh Bhakna as its president. The members of the party were Indian immigrants, largely from Punjab.

        • JAMES FREDRIC

          கார்ல் மார்க்ஸின் காலத்தை ஒத்தவரே,ஜெர்மனியின் ஒட்டோவான் பிஸ்மார்க்!.இவர் ஒரு அரிஸ்டோகிராட்.அமெரிக்க “சிவில் யுத்ததத்திற்கே” ஆயுதங்கள் விற்பனை செய்த “குருப் ஸ்டீல்” என்ற நிறுவனத்தை,ஜெர்மன் பேரரசின் கருத்துக்களையும் மீறி,வள்ர்த்துவிட்டவர்.இதை ஜெர்மன் பேரரசு எதிர்த்தது ஏனென்றால்,ஜெர்மனிக்கும்,பிரான்ஸுக்கும்,ரஷியாவிற்கும் சண்டை நடந்தபோது,இந்த எல்லா நாடுகளிலும் ஆயுத தொழிற்சாலை வைத்து “குருப்பே” சப்ளை செய்தது.இவருடைய தொழிற்சாலையில் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் ஆயுத “டிமாண்டுக்காக” தொழிலாளர்கள் பிழியப் பட்டதாலேயே,காரல் மார்க்ஸ் தன்னுடைய பொருள் முதல்வாதத்தை மனிதத்துவத்திற்காக சிந்திக்க வைத்தது!.இந்த ஆயுத தொழிற்சாலைகளே,மன்னராட்சியையும்,அரசியலையும் அகற்றி,அதில் தங்கள் நலனுக்காக “வியாபாரத்தை” புகுத்தி,அதற்காக போர்களையும் உருவாக்கினர்கள்!.

    • இந்தியாவின் கேரள மாநிலத்தில் நம்பூதிரிகள் அல்லாதவர்களின் திருமணத்தில் திருமணப் பெண்ணை முதலில் அந்தந்த பகுதியின் தலைமை நம்பூதிரி முதலிரவில் உறவு கொள்வது என்ற ஆவண உண்மை முனைவர் க.ப.அறவாணன் அவர்களால் எழுதப்பட்ட “தமிழர் மீதான பண்பாட்டு படையெடுப்புகள்” என்ற நூலில் உண்டு.

  15. Claudiya Antony Josef

    இந்த கருத்துக்களத்தில் வாதாடும் புண்ணியவான்களே! நீங்கள் எல்லாம் வெளிநாடு வர காரணமே இந்த போராட்டம் தான் என்பதை மறந்துவிடாதீர்கள். இங்கு வந்து நாலு காசு கையில கிடைத்தவுடன் இப்படித்தான் பேசத்தோன்றும் போல. தயவு செய்து நீங்கள் வந்த பாதையை கொஞ்சம் திரும்பிப் பாருங்கள்.

    • Yohgan

      கிளவ்டியா அன்ரனி
      இதில் கருத்துக்கூறுபவர்கள் எல்லோரும் நீங்கள் கூறும் வெளிநாட்டுப்புண்ணியவான்களல்ல! அனேகமானவர்கள் இலங்கையிலிருந்தும் கருத்துக்கூறுகிறார்களென்பது உங்களுக்குத் தெரியாமலிருக்கலாம்!!

  16. விஜிதா ராமஜெயம்

    இங்கு விவாதம் நடத்தும் பலர் ஊர் வம்பளப்பது போலவே பேசுகிறார்கள். 30 வருடங்களின் பின்னர் ஐயர் எல்லா உம்மைகளையும் ஒளிப்பு மறைப்பு இல்லாமல் சொல்ல வருகிறார். இந்தத் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு இனி என்ன செய்யலாம் என்று விவாதம் நடத்தலாமே? ஐயர் தனது பணியைச் செய்து விட்டார். இனி மற்றவர்களின் பணி பாடம் கற்றுக் கொள்வது தான. ஐயரைப் போல் மற்ற இயக்கங்களில் இருந்தவர்களும் ஒளிப்பு மறைப்பு இல்லாமல் எழுத முயற்சி செய்யுங்கள்.

  17. Alex Yogaraja

    புலிகள் தோல்வி அடைந்ததனால் காரசாரமான விமர்சனக் கருத்துக்கள் வருகின்றன. ஆனால் புலிகள் வெற்றி பெற்றிருப்பின் எமது கதைகள் வேறு விதமாக இருந்திருக்கும். தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு புலிகளை குறை கூறுபவர்கள் இந்த இனப்படுகொலைகளுக்கு காரணமான அரசையும் படையினரையும் விமர்சிக்க முனையவில்லை. இது அவர்களின் நேர்மையை சந்தேகப்பட வைக்கிறது. எமது மக்களைக் கொன்றவர்கள் காந்தியினதும் புத்தரினதும் புதல்வர்கள்தான். அவர்களது தண்டனையை புத்தரும் காந்தியும் கொடுப்பார்கள். எமது மக்கள் சிந்திய குருதிக்கு இவர்கள் பதில் சொல்லியே தீர வேண்டும். தவிர யுத்தம் இன்னும் முடியவில்லை தோழர்களே. தர்மம் நிட்சயம் வெல்லும். நாம் வெல்வோம்.

    • thurai

      புலிகளின் போக்கினால் இப்படியான அழிவுகள் தமிழர்கள் சந்திப்பார்களென

      சொல்ல வாய்திறந்தவர்களையெல்லாம் 25 வருடத்திற்கு முன்பே, துரோகிகள்

      என பட்டம் சூட்டி, வாய்குள் துப்பாக்கியை வைத்து கொன்றவர்கள் தான் புலிகள்.

      புலிகள் தமிழர்களிற்குத் இன்னமும் தேவையா?

      • Ragu

        புலிகள் தேவைதான் ஏனெனில் அந்த முள்ளிவாய்க்காலில் நின்ற மனிதனுக்குத்தான் அதன் வலி தெரியும். புலிகள் என்ன தவறு செய்திருப்பினும் எமது மக்களைக் கொல்ல யாருக்கும் உரிமை இல்லை. அவர்கள் யாராக இருப்பினும். பதில் நாம் கேட்போம். இல்லாது விடின் நமது சந்ததி கேட்கும். மரணம் முடிவல்ல தோழர்களே. அதுதான் ஆரம்பம் புதிய அத்தியாயத்தின்.

        • thurai

          நோய்க்கு மருந்து தேடுமுன் நோய் வந்தகாரணத்தை கண்டறிய வேண்டும். தமிழரின்
          அழிவிற்கு புலிக்ழும் ஓர் காரண்ம்.

          இது உலக்ம்றிந்த உண்மை.

          துரை

          • Ragu

            இன்று இந்திய அரசு தமது சொந்த மக்களையே கொல்கிறார்களே அதற்கு அவர்கள் செய்த தவறு என்ன.

    • katte-thura

      அலெக்ஸ், வென்றால் வாழ்த்தும், தோற்றால் தூற்றும் இதுதான் உலகம். புலிகள் ஓகோ எண்டு இருக்கும் போது அவெர்களின் நிழலில் உண்டு , உறங்கி, உறவாடி விட்டு , இன்று தூற்றுகிறார்கள். இவ்வள்வு நாளும் வன்னியில் மட்டும் தான் தமிழர்கள் காணாமல் போகாமல் இருந்தார்கள். ஆனால் இப்பொழுதான் கிணறு எல்லாம் தமிழறின் சடலம் மிதக்குதாமே. சிங்கள்ம் திண்ட மிச்சதை தின்னும் இதுகளுக்கு ரோசம் எங்க வரப் போகுது

  18. sukran

    கருத்துக்கள் யாரும் கூறலாம்.ஏனென்றால் அதுதான் உலகத்திலேயே மிக இலகுவான வேலை.லங்காவில் அது உயிராபத்தானதுதான்.ச்
    ஐயரின் வரலாறு ஒன்றை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.அது பிரபாகரனின் இலட்சிய விசுவாசம்.பிரபா தனிமனிதர்களை கருத்தில் கொள்ளவெயில்லை.
    இலட்சியத்துக்கு எதிரானவர்கள்.அவருக்கு எதிரிகள்.
    இறுதிவரை அதை கடைப்பிடித்து இருக்கிரார்.
    தவறு சரி என்பது எல்லாமே அந்ததமிழீழக்கண்னாடியூடாகவே பார்க்கப்பட்டது.
    தனிப்பட்ட விருப்பு வெறுப்பு என்பதை விட இலட்சியம்  முன்னின்றிருக்கிரது.

    அதனால்தான் ஒரு சிறிய இனம் ஒரு பெரும் வலிமையான அமைப்பை கட்டியெழுப்பமுடிந்தது.
    இலட்ச்யத்தில் சமரசம் செய்யமுடியாமைதான் இந்த வீழ்ச்சி.

    ஆனால் இலட்சியத்தை அவர்கள் காப்பாற்றிக்கொண்டு அமைப்பை அழியக்கொடுத்துவிட்டார்கள்.
    ஆனால் மற்றைய இயக்கங்கள் இலட்சியத்தை கைவிட்டு தங்களை காத்துக்கொண்டார்கள்.அதனைநியாயப்படுத்துவதற்காக அவர்கள் எழுப்பும் கூச்சல்கள்
    எல்லாவிதமான போலி இசங்களுக்கூடாகவும்  னிகழ்கிறது.

    பிரபா சமரசம் செய்திருக்கலாம்.அதற்கு ஆதராவாக கருத்தை உருவாக்கக்கூடிய வல்லமையோடுதான் இருந்தார்கள்.மக்கள் ஏற்றுக்கொண்டிடருந்திருப்பார்கள்.

    ஆனால் பிரபாவால் அதனை செய்ய முடியாது. இது திமுக/அதிமுக  அல்ல.
    அமைப்பு ஆயிரக்கணக்கானவர்கலளை அந்த இலட்சியத்துக்காக
    பலியெடுத்து/.பலிகொடுத்திருக்கிறது.இலட்சியத்துக்கான விசுவாசமுள்ள தலைமை ஒரு சந்தர்ப்பத்தில் அழியத்தான் செய்யும்.
    அழிவு இலட்சியத்தின் மீதான மதிப்பை மேலும் அதிகரிக்கும்.

    அதை குறைப்பதற்காகத்தான் சிலர்  தலவன் சரணடைந்தான் என்று பிரசாரம் செய்கிறார்கள்.
    பிக்கு ஒருவர் சொன்னது. பிரபாகரனை அழித்துவிட்டால் மேலும் ஒரு இரண்டாயிரம் வருடஙளுக்கு இந்த பெளத்த  னாட்டுக்கு ஆபத்தில்லை.

    அதுதான் அவர்கள் அனத்து சக்தியையும் திரட்டி அழித்தார்கள். 

    காரணத்தை இசங்களுக்குள் தேடுவோம் தோழ்ர்களே

    • அயலவன்

      சுக்கிரன், நீங்கள் ஒரு சிலரைப்போல உளறாமல் உண்மைய எடுத்துரைத்திருக்கிறீர்கள். பிரபாகரனின் இலட்சியத்தின்,கொள்கையின் எதிர் விளைவுகளையும் கொஞ்சம் ஆராயுங்கள்.

      • Kirinjay Ramanathan

        Mr. Aiyalavan,
        Don’t think that the Tamil Tigers were always doing right thing. They did some wrong things as well. Also, the Tiger’s top educated leaders Ragavan, Umah didn’t advise Prabakaran the right things. In 1984, if the most intelligent educated person in the Tamil Tigers was Ragavan he was second in command and controlled most of the department. If he didn’t leave in 1984 and advised the Tamil Tiger Leader Prabakaran to do the right thing maybe the Tiger’s would have gotten their goal.

        • Sanjay Ramasamy

          கிரின்சை ராமநாதன் சார்| நீங்கள் சொல்வதைப்பார்த்தால் ராகவன் இருந்திருந்தால் தமிழீழம் கிடைத்திருக்குமோ? என்ன வேடிக்கை சார். தமிழ் சினிமா நிறைய பார்ப்பதுண்டோ?

        • thurai

          சரிதான், ஆனால் ராகவன் உயிரோடு
          இருந்திருப்ப்பாரா?

          துரை

      • sukran

        அயலவன்

        துரதிருஷ்டவசமாக  எமது முன்னோர்கள்,னூல்கள் புராணங்கள் கதைகள் எல்லமே இலட்சியவாதிகள் எத்துன்பம் வந்த போதும் கொள்கையை விடுவதில்லை என்ற கருத்தியலை புகுத்தி விட்டுள்ளார்கள்.உதாரணமாக அரிச்சந்திரன் கதை. 
        அரிச்சந்திரனின் மனைவி பிள்ளை என்ன பரிதாபநிலைக்கு போகிறார்கள்.ஆனால் அரிசந்திரன் சமரசம் செய்துகொள்ளவில்லை.அரிச்சந்திரனின் மயானக்காண்டம் எமது மண்ணில் பிரபலமானது.அ
        இப்படியான கருத்துக்கள் இலட்சியப்பற்றுள்ளோரையும் ,சாதாரண ஆசாபாசங்களோடு வாழ்கின்ற மனிதர்களுக்கு உயர்ந்தவர்களாfஅத் தெரிகிறார்கள்.
        பலரில் குற்ற உணர்வையும் ஏற்படுத்துகிறது.

        அதனால் தான் எம்மவர் பலர் தான்  சரி  என்றுநிரூபிக்க முனைந்துகொண்டே இருக்கிறார்கள்.

        அவர்களின் தவிப்புநியாயமானதே.  குற்ற உணர்வுகளை தொடர்ந்து டவிதைக்காமல்  இ
        என்னைப்பொறுத்தவரை   ஒரு பிளவுபட்ட தன்முனப்புள்ள சமூகத்துக்கு  ஒரு போராட்ட்ம் இப்ப்டி  அமந்திருக்கவிட்டால் ஆபிரிக்கனாடுகளைப் போல் ஆயுதக்குழுக்களின் ஆட்சியாக இருந்திருக்கும்.வவுனியாவில் டெலொ,  மட்டக்களப்பில் கருனா
        யழ்ப்பாணத்தில் டக்ளசஸ்
        போராட்டம் இவ்வளவுக்கு பிரபல்யமாகிருக்கமாட்டாது.இலங்கை இராணுவத்துக்கு பெரிய வேலை இருந்திருக்காது.
        இப்பொது இருப்பதைவிட தமிழ்சமூகம்  படுபயஙரமானநிலயிலிருந்திருக்கும்.விடுதலையும் இன்றி வளர்ச்சியும் இன்றி தேங்கிப்பொயிருக்கிற பொராட்டஙள் புற்றுனோய் போன்றவை.
        ஆனால் ப்ரபாகரன் தன்னல் முடிந்தவரை பொராடத்தை தள்ளிசென்றுவிட்டு  ட் எந்தவித ஆய்தக்குழுக்களையும் மிச்சம் விடவில்லை.அ
        ட்
        பத்து ஆயுதக்குழுக்களின் கையில் தமிழினம் சிக்கி 20 வருடங்கள் இருந்திருக்குமாயின் ஒ ரு குடும்ப பிரச்சினைக்கு  மனைவி பக்கத்திலிருந்து ப்ளொட், க்ணவன் பக்கத்திலிருந்து டெலோ, மச்சான் பக்கத்திலிருந்து எல்டிடீ.மாமன் பக்கதிலிருந்து  ஈபிஆர்

        இன்ருள்ளநிலையை விட  மிகமிக கெவலமானநிலயிலிருந்திருப்போம். அதைதான் இந்தியா திட்டமிட்டிருந்தது. இந்தியவுக்கு சார்பான இலஙகைக்கு கூலியாக
        சீனவுக்கு சார்பான குழுக்கள

        அப்பப்பாநினைததுக்கூட பார்க்கமுடியவில்லை

        வரலாறை ஆராயும்பொது  ப்ரபாகரனைநீக்கிவிட்டு ஒரு முறை கற்பனை பண்ணுங்கள்.

        டெலொவில் தாஸ் என்ற போராளி ஏன் டெலோவினால் படுகொலை செய்யப்பட்டான்?
        .புலிகளை விட சிறப்பான தாக்குதல்களை செய்திருந்தான்.
         அது ஒருநல்ல உதரணம் புலிக்கண்ணாடியூடாக மாத்திரம்
        பார்ப்பவர்களுக்கு.

        தமிழினம் விடுதலக்காக ஒரு வழியில் மிக சிறப்பாக முழுமையாக முயன்று பார்த்துவிட்டது.இலட்சியம் இன்னும் இருக்கிறது.
        இன்னுமொரு மனிதன்நேர்மையொடு அதே அர்ப்பணிப்போடு புதிய வழியில் செலுத்தலாம்

        • THOTTA

          சுக்கிரன்..மிகச் சரியான கருத்து. மிக விளக்காமச் சொல்லி இருக்கிறீர் .உண்மையில் இதுதான் யதார்த்தம். இழப்புகள் இல்லாமல் , வலிகள் இல்லாமல் விடுதலையை அடைய முடியாது. எங்கள் எல்லார் வீட்டிலும் விடுதலைக்காக இழப்புகள் நிகழ்ந்தே இருக்கிறது. அதுக்காக நாங்கள் போராட்டத்தை கைவிட்டு ,பயந்து ஒதுங்கலாமா…?

          உலகம் தனக்கு பிடித்தவர்களை தியாகிகள் போராட்டமாகவும், பிடிக்காதவர்களின் போராட்டத்தை பயங்கரவாதப் போராட்டமாகவும் சித்தரிக்கும். அதுதான் எமக்கும்நடந்தது.
          இன்றைய உலக ஒழுங்கில் புலிகள் என்ன வேற எந்த போராட்ட அமைப்பு எண்டாலும் ஈழத்தில் போராட்டத்தைநடத்தி இருந்தால், அவெர்களுக்கும் ஒரு ” முள்ளி வாய்க்கால் “நிச்சியம் காத்து இருந்திருக்கும். அதுவே உண்மை.

          • அயலவன்

            /இன்றைய உலக ஒழுங்கில் புலிகள் என்ன வேற எந்த போராட்ட அமைப்பு எண்டாலும் ஈழத்தில் போராட்டத்தைநடத்தி இருந்தால், அவெர்களுக்கும் ஒரு ” முள்ளி வாய்க்கால் “நிச்சியம் காத்து இருந்திருக்கும். அதுவே உண்மை./
            ஒரு தற்கொலைகுண்டுதாரி எங்கு வேண்டுமானாலும் எதற்கும் அஞ்சாமல் தமது தாக்குதல்களை மேற்க்கொள்ளுவதனால் குறிப்பாக அமெரிக்கா,பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு இது பெரும் பிரச்சனையான விடயம்.அவர்கள் அதனை தடை செய்வதற்க்கு உபயோகிக்கும் உக்திதான் பயங்கரவாதப்பட்டியல்.இலங்கையில்நடக்கும் இனப்படுகொலையப்பற்றி அறியாத மூடர்கள் அல்ல இவர்கள். குருக்கள்…….விட்டால் குற்றம் இல்லை.

      • sukran

        1985 இலிருந்தநிலமை  தொடர்ந்து இருந்திருந்தால் ….
        ஊண்P, ஸ்ள்FP,JVP,ஜாதிக கெல உருமய, அல்ல்து தமிழ்னாடில்   திமுக, அதிமுக, காங்கிரஸ் இப்படி கட்சிகளெல்லாம் தனிதனியே தமக்கென இராணுவத்தை கொண்டிருந்தால்  என்னநடந்திருக்குமோ அதுதான்நடந்திருக்கும் எமக்கு.

        போரட்டம் ஷெல் அழிவு என இறந்து போன ல்ட்சக்கணக்கான மக்களுக்கு பதிலாக வரலாற்றில் பதியப்ப்டாத இறப்புக்களாய் அதுநிகழ்ந்திருக்கும்.
        பிரபாகரன் பொராட்டத்தின் திசையை மாற்றினார்.
        1985 களிலே  இயக்கங்களின் சீரழிவு வெளித்ட்தெரியத்தொடங்கிவிட்டது.உட்படுகொலைக ள்,  கொள்ளைகள்.கொலைகள்
        யாரால் செய்யப்படுகின்ரன? இந்தக் கொள்ளை எந்த இயக்கம்.?
        அந்த இயக்கப்பொடியன் இந்தப்பெட்டைக்கு கரைச்சல் கொடுக்கிரான்  அவளின்ரை மச்சான்  மற்ற இயக்கம்…,  

         இங்கு சொல்வது சமுகத்திலிருந்து பொர்ரட்டதின்  போக்கை பார்க்கிற பார்வை.
        புலிகளுக்கு எதிரான பார்வை புலிகளுக்கு ஆதரவான பரர்வை என இரண்டு மாத்திரமே எப்போதும் வெளிவருகின்றன.
        மாற்றுக்கருத்துக்கள்  என்ற பெயரில் வெளிவருவதும் அனேக புலிஎதிர்ப்பு கருத்துக்களே.

        ஆயுதப்போராட்டத்தை தெரிவு செய்தபோது  நாம் அழிவையும் ஏற்றுக்கொண்டவர்களாகிவிட்டோம்.

    • Easan

      Sukran, i think you the only person thinking correctly here. The people who are writing here against LTTE or Praba, are tried to depend them self from their own guilty feeling of deviating the ” GOAL” if they had anything such when there were in any Tamil movement. If anybody thinking that what LTTEor Praba did was wrong, let them to write what they did in their personal life for the last 15 years. We can criticise a lot about their personal life. Because, no one can do the right things always. since Praba’s personal life is direcly connected with the Tamil people and we know his life events, we are in a position to criticise. What is the next step after the criticism? Learning from the previous mistake and find new ways/ actions to achieve the “GOAL”. Keep on criticism without doing any concrete actions to achive the GOAL are BS. Anybody before writing any comments here, please think what you are doing now and what you did to the Tamil struggle for the last 15 years, and what impact it’s made possitively. If you thing genuinely, you didsome thing, then write or give any additional relevant information here. Otherwise, shout your … and let Mr. Iyar to complete his writing.

    • Anpu

      சிங்களவர்கள் எமது நாட்டினை ஆக்கிரமிப்பது இதுதான் முதற்தடவை அல்ல, முன்னரும் ஆக்கிரமித்துள்ளனர்; பின்னர் அடித்து துரத்தப்பட்டுமுள்ளனர்.

  19. sutha

    எல்லோர் கருத்துகலையும் வாசித்தபின்நான் அறிந்தது தகுதியற்ற இனத்துக்கு ஓர் தகுதியான தலைவன் எஙகள் பிரபாகரன் என்பதாக புரிந்து கொண்டேன் நக்கீரன சொன்னது போல்.

  20. Putin said in an interview: We make China as a friend if China become stronger than us!We never go to confront! This is the modern diplomacy to survive! If India start a war with China now, it will be demolished soon! India tolerated even bombay attack,fishermen attack,AU-students attack! WHY?
    BECAUSE OF JUDGING THE SITUATIONS! IF GR/MR/BR COULD HAND-TWIST INDIA AND BARGAIN WITH CHINESE WEAKNESS, THEY WON! EVEN THEY ARE A SMALL NATION!
    IF TAMILS UNITE UNDER NEW ORGN WITH TN SUPPORT AND BARGAIN WITH INDIA & CHINA & USA,EU,RU AU ETC, WE CAN ACHIEVE MORE! GTF & PTGTE CAN WORK TOGETHER WITH TNG AND SHD TRY! WE SHD NOT SLEEP! KNOWLEDGE IS POWER! POLITICAL TACTICS&DIPLOMACY,INTL SUPPORT IS ESSENTIAL! MORE DEMOCRACY,FREEDOM,HR,EQUALITY,JUSTICE AMONG US IS VERY IMPORTANT!

    • sukran

      Mr.Nallaiah
      What you are telling is  that every one will negotiate  with a powerful country.So that every one try to become powerful.Knowledge is the power in personal life.Military and economy are the power factors for countries. Political power /position is another power  within a country.
      Small countries like srilanka can become important in 03 ways.Military aspect, its geographical position. Or any natural resources or  a new market for some country.
      So that the owners of srilanka the majority become the important persons in the lime light of the world not us .Srilnka , due to her geographical position , market and some resources  has the bargain power.World don’t bother what is happening inside until it affect its gain. They have no love for Sinhalese.Their concern is their benefit.If tamils are in power /own the country the will negotiate with us.
      Now what we have/ what the bargain power we  have to  make negotiation? Who want to negotiate with beggers?They will say “ take what we give , and keep the mouth shut”Until Prabha create a military power we have been like that.then we reached a state if anyone want to invest in Srilanka  first attend our problems.So the world has chosen a hard way.the made us beggers again.Now they are worrying the unrest in south due to the same reason.Countries compete with each other to use Srilanka.
      But one thing is new in the scene.Our struggle  ,although the world knows that our demand are genuine , they did not want to accept it. World is like a court.They depends purely on evidence not feelings.if we ask for a separate state we have to put concrete evidence for that. There after only they- the business world try to consider our demands over their benefits .It is very hard thing if we have no power.All these days Srilankan government act very cunningly. They know how to act according to the international norms while incapacitating us without evidence. Ranil make our demands are baseless. Chanthrika did the same.Prabaharan has good judgement of this.He worked for Powerful state of Tamils to bargain.He  brought us to the stage.The world judged that bargaining with sihalese is more fruitful than tamils.So that they helped government. They brand us as terrorists.The world order is like that before taking action they have to produce evidence for the action and show the world that it is morally right. Some of our academic and English writers helped them their action is right morally.Their writings and reports are become evidence that Tamileealam is Prabhaaharans dream only ,LTTe is terrorist.West used it for their propaganda like Dr.Zhivago.They were very care ful  about the war also.They tried maximam to reduce the evidences for the immoral state of the war- the crimes.They are  successful so far.
      .Now th crisis is who take the share among  India America china..So war crimes are surfacingNOW  the truth/genuiness of our demands are becoming  more supported by evidence.Mahinda  But prabha’selection  Mahinda is good. He is overacting than the world expectation.His actions prove our demands are genuine.At this stage If we prove our power in some way again we will get a solution.Power may be a international pressure through influence of diaspora  with concrete evidence supporting a separate state.I don’t think tamils have the unity and power orIf a powerful country want to get it hold in Srilanka by using tamils , it will use this evidence to support it stance.That may happen  as a result of the share struggle between countries.
      Or another military build up may  show the Sinhalese and  the world this war cannot be sttled by military means they will push the srilankan government to put a solution because our demands has been clearly proven as genuine But History repeat again and again

  21. anandan

    மதிபுக்குரியவரே உங்கள் எழுத்து எம்போன்ன்ர்வர்களுக்கு மிகவும் தெளிவை தருகிறது .நீங்கள் நடுநிலமயில் எழுது மட்டும் எல்லோர்க்கும் (நடு நிலை )பார்பவர்கள் பிடிக்கும் . தொடர்தும் உங்கள் எழுத்து சூடு ,சுவை பிடித்து எல்லோர் மனங்களிலும் இடம் பிடிக்க எல்லா கடவுல்கலயும் வேண்டுகிறேன்

  22. எதிர்வு

    அய்யர் கனகாலத்திற்கு பிறகு எழுத,எதிர்வு முருங்கை மரத்தில் மீண்டும் ஏறிக் கொள்ளுகிறது.அருகில் இருந்தும் குறி பார்த்து சுடத் தெரியாததும்,எதிர் எதிரே இருந்து சுடுகிறதும்,முகவரி உள்ள காகிதத்தில் மிளகு சுற்றியதும்,மூவர் சேர்ந்து ஒரு நிராயுதபாணியை கொல்ல முயன்றதும் “மிகக் கவனமான தயாரிப்பு வேலைகளில்” ஈடுபட்டதைக் வெளிப்படையாகக் காட்டி விடுகிறது.

    ஆங்கிலம் படித்த அல்லது பேசத் தெரிந்த என்பதாலே ஆதரவாளர்கள் அதியுயர் நிலைக்கு உயர்ந்ததும், ஆரம்பத்திலிருந்தே அவர்களை அதீதமாக நம்புகிற மனப்பாங்கும் ஈழத் தமிழர்களை முள்ளிவாய்க்காலுக்கு அழைத்து சென்றது என்பதும் எழுதுனர் காட்டிய இன்னொரு வெள்ளிடை மலை.

    புலிகளின் மீதான மதிப்பிலா அல்லது புலிகளை இராணுவப் பிரிவாகக் காட்டி,அவர்கள் கொள்ளை அடித்த பணத்தைக் கூறு போட்ட ஈரோஸ் முயற்சியா, ஆயுதப் பயிற்சி என்பதை தெளிவுபடுத்தவும்.

    உமா புலிகளின் தலைவராக கியூபா செல்ல முன்பா அல்லது பின்பா நியமிக்கப்பட்டார்? அல்லது தான்தோன்றித் தலைவராகிப் பின்னர் ஒப்புக்காக மிச்சத் தலையாட்டிகள் ஒத்துக் கொண்டனரா?

    “எமது குழுவின் அதிகாரம் மிக்கவராக பிரபாகரனே இருந்தார்.” அப்படியாயின் நீங்கள் எல்லாம் எதற்காக மத்திய குழு,தலைவர்,ஒழுக்க நெறி என்றெல்லாம் வரித்துக் கொண்டீர்கள்?

    துரையப்பா தேடல்’ நாகராசா சித்திரவதையில் ‘தவிர்க்கவியலாதவாறு அவர் சில தகவல்களைச் சொல்லவேண்டிய நிலை” ,”எமது பண்ணைகள் குறித்தோ, எமது ஏனைய முக்கிய நிலைகள் குறித்தோ எந்தத் தகவல்களையும் வழங்கவில்லை. ஏற்கனவே வேறு வழிகளில் உமா மகேஸ்வரனுக்கு கொலைமுயற்சியோடு இருந்த தொடர்பை உளவுத்துறை அறிந்திருந்ததால், நாகராஜா, உமா மகேஸ்வரன் மீதே எல்லாப் பழியையும் சுமத்துகிறார்” என்பதன் மர்மம் என்ன?

    ” “துணிகரமான நடவடிக்கை, “தந்திரமாக அழைத்து”, “மிளகு தூள்” நாகராஜா, பண்ணைகளிலிருந்த எம்மை நோக்கி வந்து எம்மோடு மீண்டும் இணைந்து கொள்கிறார். ”
    அதே பண்ணையில்தான் பஸ்தியாம்பிள்ளை புலிகளைத் தேடி வந்து தன் உயிரை இழந்து போனாரோ?

    அய்யரே! எனக்கு விளக்கம் குறைவா அன்றேல் விளக்கக் குறைபாடா என்பதை விளக்குமாறு கேட்கிறேன்

    • sukran

      எதிர்வு,

      சிலர்  பிறந்த உடனேயே இறப்பதும் உண்டு.சிலர் வளர்ந்து ஆளாகி சாதனைசெய்து விட்டு சாவதும் உண்டு.
      முடிவு எல்லவற்றுக்கும் பொதுவானது.புலிகள் என்ற அமைப்பு தொடங்கியதை படிக்கிறீர்கள்.
      ன்
      னந்திக்கடலில்  அமைப்பு அழிந்துபொயிருக்கிறது.
      இலட்சியம் இன்னும் இருக்கிறதாம் என்று  ஜகத் சூரியா இராணுவத்தளபதி சொல்லுகிறார்.
      ச்

      சிலர் ஏன் அழிந்தது என்று ஆராய்ந்து தவறுகளை திருத்தப்போகிரார்களாம்
      மிக எளிய காரணம்

      அரசாகவும் அதேநேரம் போராட்ட அமைப்பாகவும் இருந்ததுதான் காரணம்.

      சீனாவுக்கும் இந்தியாவுக்கும் போர்மூண்டால்  இந்தியர்கள் சீனவுக்கு அகதியாக ஓட மாட்டார்கள்.  உலகம் இந்தியவை மக்களை வெலளியெ விடு விடு என்ரு இந்தியவை மாத்திரம் வர்புறுத்தியிருக்கமாட்டாது.
      இந்தியா 17 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் இராணுவத்தில் சேரவேண்டுமென்றால் உலகம் அது சரியானதே என்றிருக்கும்.
      தோல்விநிச்ஷயம் என்றால் கூட இந்தியா  மரியாதயொடு சரணடையலாம். மன்மொகன்சிஙை  இலட்சியத்தை கைவிட்டு விட்டாய் என்று இறந்தவர்களின் ஆவி துரத்தப்போவதில்ல.  

      தனிப்போராட்ட அமைப்பாக இருந்திருந்தால் இப்படி ஒரு பெரிய படையெடுப்பேநிகழ்ந்திருக்காது.

    • katte-thura

      மிஸ்ரர்.எதிர்வு. உமக்கெல்லாம் இதுக்கு மேலாய் விளக்கிறது எண்டால் , அதுக்கு இனி விளக்குமாறால்தான் விளக்கணும். ஏதோநீர் இரவு பகலாய் பரிட்சைக்கு படிக்கிற மாதிரித் துள்ளுறீர். முந்திரிக்கொட்டை மாதிரி முன்னுக்கு நிண்டு சொல்லுறது எண்டால்,நீர் எழுதும் ,னாங்கள் படிக்கிறோம்.

      • allvettisri

        நண்பர் காற்-துரா, எதிர்வு அவர்கள் திண்ணப்பேச்சு மூலம் ஈழ போராட்ட வரலாற்றில் சில விடயங்களை “பொறுக்கி வைத்திருக்கிறார்.முன்னுக்கு நின்று சொல்வதற்கு அவரிடம் சரக்கும் இல்லை துணிவும் இல்லை போராட்டப்பங்களிப்பும் இல்லை.வெற்றுப்பேச்சு வீரன். அவ்வளவு தான்

        • எதிர்வு

          அய்யரிடம் கேட்ட கேள்விகளுக்கு,கட்டையும்(katte-thura) ஆள்வெட்டியும்(allvettisri) நிண்டு களம் …

          அய்யரும் ஆள் வைச்சு அடிப்பாரோ!

          • This commentar is actually “ALAVEDDY SRI”.Allvetty is wrong.Alaveddy is correct name.The village of alaveddy between the villages of Pannalai-Mallakam-Vilan-Mullanai.His father is a CID Police .His name is Karunanithy and his pet name is Aruppillai.He is from Kallaveddy.I think so.

      • kathir

        Katte-Thura
        well done I like it.

      • தாரணி

        கட்டே-துரா,

        எதிர்விற்கு விளங்கிறமாதிரி நல்ல விளக்கம் இருவரியில் கொடுத்ததிற்கு எனது பாராட்டுக்கள்.

  23. siva

    தகுதியற்ற இனத்துக்கு ஓர் தகுதியான தலைவன் எஙகள் பிரபாகரன் என்பதாக புரிந்து கொண்டேன் நக்கீரன சொன்னது போல்.100000 unmai

  24. mamani

    சும்மா சண்டை பிடிக்க வேண்டாம் அண்ணை உயிர்த்தெழுது அடிச்சு போடுவார்

  25. jeevan

    Anton Balasingam, kittu, matthaiya when they join in L TTE

  26. pista

    தம்பி தோட்டா குஞ்சு நீங்கள் 1980 இல் அல்லது பிறகோதான் பிறந்திருக்க வேண்டும்.குஞ்சு நீங்கள் உறுதியுடன் இருந்த காலம் போய்விட்டது .எனியும் அடம் பிடித்தால் (மஹிந்தா)சொல்லேவேண்டி வரும் .பிறகு கொத்துதான் .குஞ்சு பெரிய மனுசர்வார இடத்தில .பொத்திகொண்டு மிச்ச காலத்த கழிக்க பாரும் .இப்ப உமது நண்பர்கள் தான் உம்மை எமக்கு அடையாளம் காட்டி தந்தார்கள்.இவர்களே ஒரு 30 வெள்ளி காசுக்கு உம்மை காட்டி தர எவளவு நேரம் ?குஞ்சு ராசா சந்திப்போம்.

  27. நானில்லை

    நூறுக்கு கிட்ட கருத்துக்கள் வந்திட்டுது அடுத்ததை கெதியிலை அவிட்டு விடுங்கோ.

  28. புதியவன்

    சுக்கிரன் சொன்னது மிக மிக சரியான கருத்து

  29. வெப்தமிழன்

    சுக்கிரன் சொன்னது” தமிழினம் விடுதலக்காக ஒரு வழியில் மிக சிறப்பாக முழுமையாக முயன்று பார்த்துவிட்டது.இலட்சியம் இன்னும் இருக்கிறது.இன்னுமொரு மனிதன்நேர்மையொடு அதே அர்ப்பணிப்போடு புதிய வழியில் செலுத்தலாம்”  இதுவே உண்மை

  30. marupakkam

    தமிழ் இனம் தான் தமிழனை அழித்த இனம். அது மட்டுமா? JVP என்னும்

    கட்சியை வழர்ப்பதர்க்கும்,சிங்களமக்கள் விவசாயத்தில் வளர்ச்சியடையவும், …..காரணமாகவும் இருந்த தந்தை செல்வா, தம்பி பிரபா,
    ……….. அனைவர்க்கும் நன்றிகள் 1000.

  31. எதிர்வு

    ANKAYATPIRIYAN !

    ஊருக்கு உபதேசம்.

    இது உங்கள் வரிகள்.

    “இவர் தமிழ் இளைஞர் பேரவையின் ஆரம்ப கர்த்தாக்களின் ஒருவரான புஸ்பராஜாவின் சகோதரியான புஸ்பரானியை காவல் நிலையத்தில் வைத்து அவரின் ஆடைகளைக் களைந்து நிர்வாண நிலையின் அவரை எஸ்லோன் பிளாஸரிக் பைப்புகளால் கண்மூடித்தனமாக தாக்கியவர்.”

    “ஒரு காலப் பகுதியை மட்டுமே வாசித்துவிட்டு எழுந்தமானத்திற்கு விமர்சிக்காதீர்கள்”

    புஸ்பராணியின் கருத்தாடலில் ”
    உங்கள்மீதான விசாரணைக்குப் பொறுப்பாயிருந்தவர் சித்திரவதைகளிற்கு பேர்போன இன்ஸ்பெக்டர் பஸ்தியாம்பிள்ளை என்று அப்போது செய்திகள் வந்தன. அவர்தானா உங்களை விசாரணை செய்தார்?

    இல்லை…..http://www.shobasakthi.com/shobasakthi/?p=507

    • sukran

      சோபாசக்தி பொன்றவர்கள் அவர்கள் மொழியில் சொல்வதானால் உலகமுதலாளித்துவம் தன் சந்தை விரிவாக்கத்துக்காக பயன்படுத்தப்படுபவர்கள்.ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுக்க நீண்ட காலமாக பொதுக்கருத்து உருவாக்கத்தை பரப்பியது. இப்போது ஈரான் மீது அது நடக்கிறது.ஈழப்போராட்டத்தை பயங்கரவாதமாமென்ற கருத்துருவாக்கத்தை நீண்ட காலத்துக்கு உருவாக்க்கி விட்டு, இதில் இந்தியா இலங்கை மேலைனாடுகள்-  ஒரு பெரும் போரை ஒரு மக்கள் அழிவை இந்த நூற்றாண்டின் பெரும் கொலையை நிகழ்த்தக்கூடியதாயிருந்திருக்கிறது.இந்தக் கருத்துருவாக்கிகள் அதுவும் தமிழ்ஹினத்தை சேர்ந்தவர்கள் என்பதால் முக்கியம் பெறுகிறார்கள்.வன்முறையை எதிர்த்து எழுதுவதாக சொல்லும் உங்கள் எழுத்துக்களின் கோசத்தில்  உயிர் வாழ்வதற்கான அந்த மக்களின் குரல் அடங்கிப்போனது

    • அன்புடன் “எதிர்விற்கு”ஊருக்கு உபதேசம் என்ற சொல்லை முன்னிலைப்படுத்தி கருத்தை தெரிவித்திருக்கிறீர்கள்.அது புரியவில்லை.இளைஞர் எழுச்சிகளை நசுக்குவதில் பஸ்தியாம்பிள்ளையின் பங்கு எவ்வாறு இருந்தது என்பதற்காகவே நான் அறிந்து கொண்ட சம்பவத்தை இங்கே எழுதியிருந்தேன்.அவ்வளவுதான்.

  32. தமிழீழ மக்களின் 25 ஆண்டு தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தேசிய சுதந்திரம் மக்கள் விடுதலை என்ற இலட்சியத்துடன் பல இயக்கங்கள்> சில கட்சிகள் உருவாகின. இந்த இலட்சியங்களை எவ்வளவு ஆழமாகப் புரிந்து கொண்டு அதற்கு நேர்மையாக இருந்து உறுதியுடன் இயக்கத் தலைமைகள் போராடினார்கள்> என்பதை இன்று வரலாறு காட்டுகிறது. நாம் கண்டு கொள்ள முடிகிறது.
    புலிகள் இயக்கம் மட்டுமே தேசிய விடுதலை யுத்தத்தை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறது. மற்றய இயக்கங்கள் எல்லாம் ஒன்றில் அரசுடன் சமரசம் அடைந்து விட்டன. அல்லது சிதைந்து செயற்பாடு இழந்துவிட்டன. சிறிலங்கா அரசின் ||தேசிய சனநாயக|| நீரோட்டத்தில் நேரடியாக கலந்து விட்டனர். அல்லது சமாதான இயக்கங்களில்> மனித உரிமை அமைப்புக்களில் கரைந்து விட்டனர்.
    இவ்வியக்க – கட்சித் தலைமைகளை> கொள்கைகளை> திட்டங்களை நம்பி தமிழீழ மண்ணுக்கு மட்டுமல்ல மக்களுக்கும் விடுதலை வேண்டும் என்ற உத்வேகத்துடன் இணைந்து ஆயிரம் ஆயிரம் போராளிகளை (ஆண்களும் – பெண்களும்) போராட்டத்தில் இருந்தே அப்புறப்படுத்தி விட்டார்கள். இத்தலைமைகள்> இவற்றுக்குப் பின்னால் இன்னமும் சில நூறு இளைஞர்கள் இருக்கின்றார்கள்; என்றால் அவர்களது வாழ்க்கைக்கு> உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழ்நிலைமை நாட்டில் நிலவுகிறது.
    தமிழீழப் போராட்டத்தில் இருந்து சொந்த தலைமைகளால் அந்நியப்படுத்தப்பட்ட புலிகளின் அழித்தொழிப்பில் தப்பிய போராளிகள் உலகம் முழுவதும் சிதறுண்டார்கள். சிதறுண்டுள்ள போராளிகள் உலகம் முழுவதும் சிதறுண்டுள்ள போராளிகள் மத்தியில் இருந்து பல குரல்கள்> பல நாடுகளிலிருந்து வெளிப்பட்டது. மீண்டும் ஒரு புரட்சிகர கட்சி வேண்டும்> பழைய அரசியல் திட்டம்> அமைப்பு> நடைமுறை பட்டறிவுகளில் இருந்து புதிய பாதையில் கட்சி உருவாக வேண்டும் என பல முன்முயற்சிகள் வெளிவந்தது.
    இயக்கங்களின் அராஜகம் இயக்கத்துள்ளும் மக்கள் முன்பும் கூட தலைவிரித்தாடியது. தேசியத்துக்கும் – மக்கள் முன்பும் கூட தலைவிரித்தாடியது. தேசியத்துக்கும் – மக்கள் சனநாயகத்துக்குமாக நின்ற உண்மையான போராளிகளை> தலைவர்களை புலிகள் உள்ளடங்க எல்லா அராஜகத் தலைமைகளின்> உளவுப்பிரிவுகள் கொலைப்பட்டியலின் அடிப்படையில் தேடி நாயாக அலைந்தன. கைதுகள்> கடத்தல்கள்> சிறைகள்> உரிமை கோரப்படாத கொலைகள் எனத் தொடர்ந்தன.

    புலிகளின் தலைமையிலான தேசியப் போராட்டம் வெளிப்படையாக இப்போராட்ட வழி யாருடைய வழி எனப் பிரகடனப்படுத்தாது. செயற்பட்டாலும்> இது தமிழீழ முதலாளிவர்க்க ஆதிக்க சக்திகளின் வழிதான் என்பது அரசியல் அரிச்சுவடு தொpந்தவர்களுக்கு மட்டுமல்ல> போராட்ட வரலாற்ரை உற்று நோக்கி வந்த தமிழீழ மக்களுக்கும் தெளிவான ஒன்று. ஆனால் மாற்று வழி> ஒன்று போராட்டக் கழத்தில் இல்லையே என்ன செய்ய முடியும்? புலிகளின் தனி இலட்சிய வழி அதற்கு அனுமதிக்காது என்பதை தமிழீழ வரலாறு தெளிவாகக் காட்டுகிறது. மாற்று வழிப்போராட்டம் ஒன்று களத்தில் உருவாக வேண்டும் எனில் முதலில் புரட்சிகர தேசியப் போராட்ட மாற்று அரசியல் வழி ஒன்று தன்னைத் திடப்படுத்த வேண்டும். ஆனால் முதலாளித்துவ தேசிய வாத வழி புதிய புதிய கோட்பாடுகளை முன்வைத்து முளைத்தெளுகின்ற அளவுக்கு புரட்சிகர தேசியப் போராட்ட வழி உருவாகி தன்னைத் திடப்படுத்திக் கொள்ள முடியாமல் இருந்தது. இதற்கு புறநிலையில் தேசிய> சர்வதேசிய சூழ்நிலைமைகளும் முக்கிய பங்காற்றுகிறது.
    இலங்கையில் தேசிய போராட்டம் குறித்து புரட்;சிகர தேசபக்த சனநாயக சக்திகள் மத்தியில் நடக்கின்ற கோட்பாடு போராட்டத்தை> நடைமுறை முரண்;பாடு போராட்டத்தை> நடைமுறை முரண்பாடுகளை> திசை விலகலை> தேசபக்தன் எதிர் கொண்டு வந்திருக்கின்றது. பிரித்தானிய கொலனி எதிர்ப்பு இலங்கை தேசிய இயக்கத்தில் முதலாளித்துவ நிலப்பிரபுத்துவப் பாதைக்குப்பின் தொழிலாளி வர்க்கமும்> புரட்சிகர வர்க்கங்களும் ஏன் வால்பிடித்தது? கலைந்து போனது? நவ காலனிய இலங்கையில் எஸ்எல்எவ்பி
    இன் ||தேசிய வாத- கலப்புப் பொருளாதார|| பாதைக்குப் பின் தொழிலாள வர்க்கக் கட்சிகள் ஏன் இழுபட்டுச் சென்றன? சிறீலங்காவில் 1970 இல் ஜே.வி.பி யின் தேசிய சோசலிச எழுச்சிக்குப் பின் சிறீலங்காப் புரட்சிகர வர்க்கம் ஏன் திரண்டது?
    1980 களில் தமிழீழ தேசிய எழுச்சிக்குப்பின் தொடங்கி இன்று புலிகளின் தேசியப் போரின் பின் தமிழீழ தொழிலாளர் வர்க்கமும்> புரட்சிகர வர்க்கங்களும் ஏன் பின்நிற்கிறது? வல்லரசிய எதிர்ப்பு> சோசலிசம் எனப் பேசிய தலைமைகள் ஏன் திசைமாறின. நவீன தேசியக் கோட்பாடுகள் என்ற பெயரில் மீண்டும் திசைவிலகல் வெளிப்பட்டது ஏன்? ரசியாவிலும்> சீனாவிலும் நடந்த முதலாளித்துவ மீட்சியை முன்னிறுத்தியும்> உலகளவில் குட்டி முதலாளிய தேசிய இனவிடுதலை இயக்கங்களின் அராஜகங்களை> தோல்விகளை காட்டியும் ஓர் ஒட்டுமொத்த உலகப்புரட்சிக் கோட்பாட்டை ட்ரொஸ்கிய நான்காவது அகிலம் துடிப்புடன்> மீண்டும் முன்னிறுத்துகிறது. ஆசிய> ஆபிரிக்க> லத்தீனன் அமெரிக்க நாடுகளின் தொழிலாளி வர்க்கம் தனது சமூக விடுதலைக்காகவும் வல்லரசியத்துக்கு எதிராகவும் தேசியப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது. ஆனால் நான்காவது அகிலம்> முதலாளித்துவ வல்லரசு நாடுகளின் தொழிலாளி வர்க்கத்தின் சோசலிசப் புரட்சித் திட்டத்தை முன்வைத்து |தேசிய இன விடுதலை எதிர்ப்பு| கோட்பாட்டை > புதிய சனநாயக எதிர்ப்புக் கோட்பாட்டை முன்னிறுத்தி நவகாலணிய நாடுகளின் தொழிலாளர் வர்க்கத்தை> ஒட்டுமொத்த உலக சோசலிசப் புரட்சித் திட்டத்தை நோக்கி திசைதிருப்புவது ஏன்?
    நவகொலனிய கட்ட தேசிய இனப்பிரச்சனை> புதிய சனநாயக புரட்சி பற்றிய கோட்பாடு> அரசியல் அமைப்பாக்கல்> பிரச்சனைகளை குறிப்பாகவும்> ஆழமாகவும் புரிந்து கொள்ளவும்> வளர்க்கவும்> கோட்பாட்டு ரீதியில் தன்னை திடப்படுத்தவும் போராட்டங்களை முன்னெடுக்கவும் இலங்கை தொழிலாள வர்க்க இயக்கமும் கட்சிகளும் கவனத்தை ஏன் குவிக்கவில்லை?

  33. Naren

    ஓ!!.. நம்ம பிரியமானவரைப் பற்றி இப்படியும் விசயங்கள் உண்டா?… சோக்குதாண்டியோவ்.!! வார்ரே..!! வா..வா!!

    • அன்புடன் நரேன் நீங்கள் என்னைப் பற்றி என்ன அறிந்து கொண்டீர்கள்?.அன்றைய காலகட்டத்தில் மிக நெருக்கமானவர்கள் மூலம் நான் அறிந்து கொண்டவற்றையே இங்கே பதிவு செய்தேன்.அந்தச் சகோதரி மீது மேற் கொண்ட மிருகத்தனமான தாக்குதல் பற்றி அன்று பரவலாக எல்லோருக்கும் தெரியும்.பல்லை பல்லை நெருமிக் கொள்ளும் ஆத்திரத்தில் பலர் இருந்தார்கள்.தமக்கு ஏற்பட்ட வேதனையை பலர் விபரமாகச் சொல்ல விரும்புவதில்லை.மேலோட்டமாகவே சொல்லி விடுவார்கள்.இன்னும் சிலர் தவிர்ப்பார்கள்.”சொல்லி என்ன பயன் எல்லாந்தான் முடிஞ்சு போச்சே”என்ற பெருமூச்சுடன் இந்த வேதனைகளை மனதின் ஆழத்தில் போட்டு மூடிவிடுவார்கள்.ஆனால் அந்தச் சம்பவங்கள் அடிக்கடி அவர்கள் மனதில் மீண்டும் மீண்டும் வந்து கொண்டேயிருக்கும்.அன்று அறிந்த அந்தச் சம்பவம் இன்னமும் என் மனதில் ஒரு கோபத்தை தங்க வைத்திருக்கின்றது.இந்த பஸ்தியாம்பிள்ளை யார் என்ற கேள்விக்கே எனது பதில் அமைந்தது.இந்த விடயத்தில் எந்தக் கருத்தாளர்களின் விமர்சனங்களையும் நான் விமர்சிக்கவில்லை.எதிர்வு என்ற கருத்தாளர் என்ன சொல்ல வருகிறார் என்பதை தெளிவாக சொல்லவில்லை.இந்த விடயத்தில் நான் தொடர்ந்து எழுத விரும்பவில்லை.

      • thamilmaran

        பஸ்தியாம்பிள்லை எங்கள் ஊர்க்காரர் இருந்தும் எனக்கும் இரத்தம் கொதித்தது.பெண்கலை தெய்வமாக மதிக்கும் நம் மரபு இந்தக் கொடுமையை எற்காது.

  34. எதிர்வு

    அரையும் குறையுமாக கேட்டு,பின் அதைப் புனைந்து,மற்றையோரிடம் பகிர்ந்து,திரிபு வரலாறு எழுதப் படக் கூடாது என்பதே என் அவா.
    பஸ்தியாம்பிள்ளை பற்றிய செய்திக்கு,புஷ்பராணியே கொடுத்த பேட்டியை இணைப்பாக தொடுத்திருந்தேன்.
    அதில் அவரே, இல்லை என்ற பதிலில் பலரது காதுகளில் அறைந்திருக்கிறார்.
    வீழ்ந்தவர்கள் மேல் எல்லாப் பழியையும் போட்டுத் தப்பிக்கின்றவர்களோடு நானில்லை.
    எனது கீழ் வரும் கேள்விச் செய்திகள் உங்கள் மேலதிக ஆய்வுக்காக மட்டுமே,கல்வெட்டாக இல்லை.
    அவர் ஒரு கோபக்காரர்.கடமைக்காக உயிரிழந்தவர். ‘துரையப்பா கொலை’ கலாபதி நல்ல உணவு அவர் வாங்கித் தந்ததாக சொல்லியதும், சந்ததியார் மரக்கறி சாப்பிடுவதை,போராளிகள் மாமிசம் சாப்பிட வேண்டும் எனக் கேலி பண்ணியதும் என் காதில் விழுந்தவை.சந்ததியார்,காசி,வண்ணை,மாவை போன்ற தம்மைப் பற்றி பீற்றிக் கொண்டு திரிந்த தமிழ் இளஞர்களுக்கு நல்ல அடி கிடைத்தாகவும் கேள்வி.
    ஒரு விசாரணையின் போது மங்கை’ அக்காவை இருக்க இடமில்லாவிட்டால் என் மடியில் வந்திரு என்ற கேலிக்காக அசுரரனாக சித்தரிக்கப்பட்டவர்.
    அவருக்குத் தெரிந்த ஆசிரியர்,”இந்த தமிழ் இளஞர்கள், கொள்ளை அடித்த பணத்தை இந்த மக்களுக்காகவே செலவு செய்தோம் என்று கணக்கை காட்டினால்,அவர்களை விட்டு விடுவேன் என்று பஸ்தியாம்பிள்ளை சொன்னாராம்.” என்றார்.
    தமிழ் தலைமைகளின் இரண்டக நிலையையும்,அன்று தமிழ் இளஞர்கள் எடுபிடியாக்கப்பட்ட நியாங்களையும் அறிந்த அதிகாரியாக இருந்திருக்கிறார்.நாகராசவை தப்பியோட விட்டது ஒரு நம்பிக்கையுடன் கூடிய மனிதாபிமானந்தான்.துப்பாகிகளை சாய்த்து விட்டு, சந்தேக நபர்களான இளஞர்களுடன் தேநீர் அருந்த முற்பட்டு,தன்னைப் பலி கொடுத்ததும் தமிழ்ப் பண்பாடுதான்.TNT தலைவர் செட்டியுடன் உறவுகளை பேணியது அவரது உளவுப் பணியின் உயர் நிலைகள்.அவர் தேடிக் கொல்லப்பட்டவர் அல்ல,தன் அதீத நம்பிக்கையால் அழிந்து போனவர்.அப்போதைய புலிகளின் முக்கிய விபரங்களை அவர் மட்டுமே அறிந்திருந்ததால், அவர் அழிவுதான் புலிகளின் வளர்ச்சியானது.அவர் கொலை ஒரு தற்செயல் நிகழ்வே.
    அவரது விசாரணைகளில் பங்கு கொண்டோர் மீதம் எழுதட்டும்.
    தனது திருமணத்தின் போது காரின் அலங்காரங்களை தூக்கி எறிந்து விட்டு,சாதாரணமாகச் சென்றதை சில கண்களும் பார்த்திருந்தன.

    • அரைகுறையுமாக கேட்டுவிட்டு எனது கருத்தை நான் இங்கே பதிவு செய்யவில்லை.அதே வேளை சோபாசக்தி இணையத்தில் அந்தச் சகோதரியின் நேர்காணலையும் வாசித்தேன்.பஸ்தியாம்பிள்ளையால் தான் தாக்கப்படவில்லையென அவர் கூறியிருப்பாரா என்ற கேள்வி எழுகின்றது.ஏதோ ஒரு காரணத்திற்காக சகோதரி அவர் பெயரை குறிப்பிடாமல் விட்டிருக்கலாம் அல்லது நேர்காணல் கண்டவர்கள் பஸ்தியாம்பிள்ளையின் பெயரை பதியாமல் விட்டிருக்கலாம்.பஸ்தியாம்பிள்ளையை ஒரு அப்பாவியாக காட்ட முயற்சிப்பதின் மூலம் அவர் இத்தாக்குதலில் பங்காற்றவில்லையென காட்ட முயற்சிப்பது ஏன்?.உறுதியாகச் சொல்லுகிறேன் சகோதரியைத் தாக்கியவர்களில் பஸ்தியாம்பிள்ளை முக்கிய பங்கு வகித்தவரே.ஒரு பெண்ணின் ஆடையை ஒருவன் தொட்டு களைய முற்பட்டாலே அந்தப் பெண்ணை நிர்வாணமாக்குவதற்குச் சமனே.இனக்கலவர காலங்களின் போது எமது பெண்களின் மார்பகங்களிலே காடையர் சுடுதாரால் சிங்கள சிற எழுதிய சம்பவங்களிலிருந்து இந்தச் சகோதரி கிருசாந்தி கிருஸ்ணவேணி என இன்ற எம் இளம் பெண்கள் சிங்கள இராணுவத்தால் கொடுமைப்படுத்தும் கொடுமையான செயல்கள் எம்மை ஆத்திரப்படவே வைக்கின்றன.பஸ்தியாம்பிள்ளை நல்ல புத்திசாலியான கடமை தவறாத அதிகாரியாக இருந்திருக்கலாம் ஆனால் அவரின் வழிகாட்டலில் இந்தச் சகோதரியை விசாரித்த முறையானது மிகவும் கேவலமானது.எனக்கு இந்தச் சகோதரியின் சகோதரனை மிக நன்றாகவே தெரியும்.அவர் புலம்பெயர்ந்து வந்ததன் பின்னர் எனக்கு ஒரிருமுறை கடிதம் போட்டிருக்கிறார் தொலைபேசியிலும் கதைத்திருக்கிறார்.ஒரு நாளின் 10 மணித்தியாலங்கள் வரை எனது பொழுது காங்கேசன்துறையிலேயே செலவழியும்.இராஜநாயகி தியேட்டர் பண்டரிநாதன் தேநீர்க்கடை பெற்றோல் நிலையம் ஆடியபாதம் தையல்கடை முருகையாவின் பலசரக்கு கடை போன்றவற்றைச் சுற்றியே எனது நேரம் செலவழியும்.ஆடியபாதம் தையல்கடைக்கும் முருகையாவின் பலசரக்குக் கடைக்கும் நடுவிலிருந்த மாடிக்கட்டிடத்தில் ரியுசன் வகப்புகள் நடந்தன அதை நடத்தியவர்களில் முக்கியமானவர் நாகராஜா.அவர் எப்பொழுதும் அரைச்சுவரில் இருந்தபடியே ஜிப்பீல் சைக்கிளில் போகும் பொலிசாரை நோட்டம் விடுவார்.ஜீப் ரைவராக தையிட்டியிலிருந்த பொலிஸ் சார்ஜன் பொன்னம்பலத்தின் மகன் இயக்க இளைஞர்கள் யார் யார் என்பதை தானும் இயக்கத்திற்கு ஆதரவு என்று சொல்லியே உளவு பார்த்தவர்.இராஜநாயகி தியேட்டருக்கு அருகில் தெற்குப்புறமாக இருந்த கிட்டங்கிக்கு எதிரேயிருந்த வொலிபோல் மைதானத்தில்தான் இளைஞர்கள் அடிக்கடி கூடிக் கதை;ப்பார்கள்.அந்த இடத்தில் உமாமகேஸ்வரனையும் மாவை சேனாதிராசாவின் தம்பி தங்கனையும் காண முடியும்.அல்பிரட் துரையப்பா இறந்த செய்தியை அவர் இறந்து ஐந்து நிமிடங்களில் அறிந்தவன்.அதைச் சொன்னவர் காங்கேசன்துறை பொறுப்பதிகாரியாக இருந்த ஜி.ஜெ.குணதிலாக(இன்ஸ்பெக்ரர்).எனக்கு இந்தச் சகோதரியின் சகோதரன் புஸ்பராஜாவை நன்றாகவே தெரியும்.எனக்கு காங்கேசன்துறையைச் சுற்றிய பகுதிகளில் நண்பர்கள் இருந்தார்கள்.கருணாணந்தசிவம் எனக்கு மிக நெருக்கமானவர்.புஸ்பராஜா அவரின் சகோதரி உட்பட பலர் புலி எதிர்ப்பாளர்களாக காலப் போக்கில் மாறினார்கள்.அதனால் புலி எதிர்ப்பு பத்திரிகைகளும் இணையத்தளங்களும் அவர்களை தங்களுக்கு பயன்படுத்தினார்கள்.என்னைப் பொறுத்தவரையில் அவருக்கு ஏற்பட்ட கொடுமை அந்தக் காலத்தில் என்னை மிகுந்த ஆத்திரப்படுத்தியது இன்றுவரை அது அப்படியே இருக்கின்றது.எனவே அரைகுறையாக அறிந்து எதையும் நான் எழுதவில்லை.பஸ்தியாம்பிள்ளையை பழி தீர்க்கவே அழித்தார்கள்.அன்புடன் எதிர்வு நீங்கள் சிலசமயம் பஸ்தியாம்பிள்ளையின் உறவினராக அவரின் நண்பர்களின் உறவினராக கூட இருக்கலாம்.அதனால் நீங்கள் அவரை நல்லவராக நினைக்க சந்தர்ப்பம் உண்டு.சோபாசக்தி இணையத்தளம் இனியொரு என்ற இந்த இணையத்தளம் மாற்றுக் கருத்தென்ற ரீதியில் புலிகளை குறை சொல்லும் இணையத்தளங்கள்தான என்பதைத் தெரிந்துதான் எனது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றேன்.இலக்கியச்சந்திப்பு பற்றி அடுத்து சந்தர்ப்பம் கிடைக்கும் பொது கூறுவேன்.

      • அயலவன்

        அங்கயப்பிரியன் அவர்களே, உங்களிடம் ஒரு சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள விரும்புகின்றேன்.அய்யரின் பதிவில் பிரபாகரன் யாருமற்ற அனாதையாக பல தடவை இருந்ததாக எழுதியிருந்தார்.ஆனால் எனக்குத் தெரிந்தவரை நீங்கள் சொல்லும் நாகராஜாவின் காங்கேசன்துறை ரியுசன் சென்றறில் பிரபாகரன் சிலகாலம் தங்கியிருந்தார் எனவும் பின்னர் புன்னாலைக்கட்டுவனில் ராகவனின் அம்மம்மா வீட்டிலிருந்துதான் ஐய்யரையும் குலத்தையும் சந்திக்கச் சென்றார் எனவும் அங்கேதான் பல மாதங்கள் தங்கியிருந்தார் எனவும் அறிந்திருந்தேன்.ஐய்யர், குலம் ,ராகவன் மூவரும் புன்னாலைக்கட்டுவன், அப்படியிருக்க துரையப்பாவின் கொலையின் பின் பிரபாகரன் இருக்க இடமுமின்றி,உண்ண உணவுமின்றி யாருமற்ற அனாதையாகவிருந்தார் என்று ஏன் அய்யர் எழுதினார் என்று எனக்குப் புரியவில்லை.ஒரு நாளின் 10 மணித்தியாலங்கள் வரை எனது பொழுது காங்கேசன்துறையிலேயே செலவழியும் என்று எழுதியிருக்கின்றீர்கள்.எனவே பிரபாகரன் நாகராஜாவின் காங்கேசன்துறை ரியுசன் சென்றறில் தங்கி இருந்தாரா இல்லையா என்பதனைக் கூறுங்கள். ,

  35. Naren

    அளவெட்டி சிறியண்ணை! சுவிஸ் குலம் அவர்கள் தலைவர் பிரபாகரன் இறந்து
    போனார் என்று அறிக்கைவிட்டு நையபுடைக்கபட்டு சேட்டுக் கிளிக்கப்பட்டார் என
    நீங்கள் அறிக்கை விடுவது ஒரு பக்கத்தே இருக்கட்டும். முதலில் நீங்கள் என்ன
    சொல்லவாறீங்கள் என்பதை தெளிவாய் சொல்லுங்கோ?.. தலைவர் இருக்கிறாரா?
    இல்லையா?.. சரி இருக்கிறார் என்றே வைத்துக் கொள்ளுவோம். ஏன் அவர்
    இருக்கிறார் என்று ஒரு கேள்வி வருமல்லவா? அவர் இருந்து என்னத்தை இனி
    செய்யப்போறார் என்று இன்னுமொரு கேளிவி வருமல்லவா?.. அதை விட அவர்
    இனியும் இருக்கவேண்டுமா?.. என்றும் கேட்கலாம் அல்லவா?…ஒருவேளை அவர்
    உயிருடன் இருந்தால்?.. வெளியே வரத்தானே வேண்டும். ஆனால் எப்போ வருவார்
    என்று யாராவது சொல்லுவார்களா? கண்டிப்பாக் அவர் வருவார் என்பதற்கு
    யாராவது உத்தரவாதம் தரமுடியுமா?.. ஒருவேளை அவர் வராமலே
    போய்விட்டால்?… அதுவும் தமிழீழக்கனவு போல் கற்பனையாகாதா?.. பிரபாகரனின்
    ஒரு பிறவியே போதும் சாமி. இனியும் மறுபிறவி வேண்டாம். மனிசரை நிம்மதியாக
    இருக்க விடுங்கோ?..

  36. எதிர்வு

    முதல் குற்றச் சாட்டு:

    “……ஆடைகளைக் களைந்து நிர்வாண நிலையின் அவரை எஸ்லோன் பிளாஸரிக் பைப்புகளால் கண்மூடித்தனமாக தாக்கியவர்.”

    நீண்ட பதிலில் பஸ்தியாம்பிள்ளை மீதான உங்கள் குற்றச்சாட்டை நிருபிக்க முடியவில்லை.தள்ளாடிப் போய் விட்டீர்கள்.உங்கள் நண்பனின் சகோதரியுடன் தொடர்பு கொண்டு,உங்கள் குற்றச்சாட்டை உறுதிப்படுத்துங்கள்.மீண்டும் அந்தப் பேட்டியை படியுங்கள்.கேள்வியே பஸ்தியாம்பிள்ளை பற்றியது.பதிலில் எத்தனை பொலிசாரின் பெயர்கள் வந்திருக்கின்றன.நீங்கள் பல அனுபவங்கள்,உறவுகள்,தொடர்புகள் இந்த வரலாற்றுப் பெயர்வில் கொண்டிருக்கலாம்.அதற்காக குற்றச்சாட்டுகளை எழுந்தமானமாக வீசுவது அழகல்ல.
    புனைவுகளில் வரலாறு வெளிவரக் கூடாது.

    அடுத்த புனைவு:

    “.பஸ்தியாம்பிள்ளையை பழி தீர்க்கவே அழித்தார்கள்.”

    அவர் எந்த சூழ்நிலையில் கொலை செய்யப்பட்டார் என்பதை அய்யர் வெளிக்கொணருவார் என எதிர்பார்கிறேன்.

    ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்கிற என் நிலையில், என்னை உறவினராக்கி கேள்விகள் எழுப்புவது ஒரு அநாகரிகத்தின் உச்சம்.

    • “.இருக்கலாம்”என்பதற்கும் “இருக்கும்”என்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.உறவினராக இருக்கலாம் அல்லது இருந்தால் என்ற எழுத்தின் கருத்து வேறுபாடை புரிந்து கொள்ளுங்கள்.எஸ் லோன் பைப்பால் தாக்கியது என்பது உண்மை.நோர்வேயிலுள்ள ஒரு நண்பருடன் இனியொரு வெப்சைட்டில் ஐயரின் பதிவுகள் என்ற செய்தியில் பஸ்தியாம்பிள்ளை பற்றிய எனது கருததுக்கு எதிர்வு என்பவர் பஸ்தியாம்பிள்ளைனயை நல்லவராக காட்டி எழுதி வருகின்றார் என்றேன்.அதற்கு அவர் சொன்னதை அப்படியே இங்கே எழுதுகிறேன்”அவனோ கெட்டவன்.பருத்தித்தறையில் ஒரு பெண்ணை கெடுத்தவன்”என்றார்.நான் உண்மையா என்றேன்.அவர் “முற்றிலும் உண்மை” என்றார்.எவர் பதிலிலும் நான் தள்ளாடிப் போகவில்லை.புனைவுகளில் வரலாறு வெளிவரக்கூடாது என்பதை ஒப்புக் கொள்கிறேன்.ஆனால் உண்மைகளை இருட்டடிப்புச் செய்வதற்காக சம்பவங்களின் உண்மையை நிராகரிப்பது சரியா?.

  37. எதிர்வு

    புஷ்பராணி உயிரோடிக்கிறார்.உங்கள் புனை சுருட்டை அவர் எஸ்லோன் பைப்பின் மூலம் எங்குமே புகைக்கவில்லை.இதுதான் என் வாதம்.அதற்காக ஒரு வழியுமில்லாது நோர்வேயிலிருந்து புதுப் புனைவுடன் வெளிவருகின்றீர்கள்.கற்பழிப்பு நடந்ததின் ஆதாரம் அல்லது செய்தி எந்தப் பத்திரிகையில்,எப்போது வந்தது? முடிந்தால் கண்கண்ட சாட்சியாகவோ,அல்லது உடந்தையாகவோ இருந்த உங்கள் நண்பரை எழுதச் சொல்லி,அக்கிரமங்களை வெளிக் கொணரச் செய்யுங்கள்.நானென்ன கற்கால மனிதனா கதை கேட்டு வாழவும்,நம்பவும். மதகடிச் செய்திகள் நான் சொல்லுகிற மந்திரமல்ல.

  38. அயலவன்

    பஸ்தியாம்பிள்ளை குழுவினர் மீதான தாக்குதல் திட்டமிட்டட் தாக்குதல் அல்ல.இரு தரப்பும் எதிர்பார்க்காமல் நடந்த சம்பவம் என்றே நான் கருதுகின்றேன்.

    பஸ்தியாம்பிள்ளை குழுவினர் போராளிகள் பயங்கரவாதிகள் போல தோற்றமளிப்பார்கள் தோட்டம் செய்வதற்க்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம் என்று இவர்களை சந்தேகப்படாமல் இருந்திருக்கலாம். அத்துடன் அக்காலகட்டத்தில் பல யாழ்ப்பாணிகள் வன்னிப்பகுதியில் காடுகளை அழித்து வயல் செய்த வரலாறுகள் உண்டு. “வெளிக்கிடடி விசுவமடுவுக்கு” என்ற நாடகம்,செங்கை ஆழியான் போன்றவ்ர்களின் நாவால்களும் இதனை உண்ர்த்துகின்றன.

Leave a Reply

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English