பிரித்தானிய வெளிவிவகார செயலர் ஜூலியன் அசாஞ்சின் அகதி அந்ததஸ்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார். ஜூலியன் அசாஞ்சை சுவீடனிடம் ஒப்படைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் என அவர் மேலும் தெரிவித்தார். தூதரகங்களுக்கு வழங்கப்படும் இராஜதந்திரப் பாதுகாப்பு என்பது அவர்களது செயற்பாடுகளைச் சுந்தந்திரமாக மேற்கொள்வதற்கே தவிர ஜூலியன் அசாஞ் போன்ற குற்றம் சுமத்தப்பட்ட கிரிமினல்களைப் பாதுகாப்பதற்கு அல்ல எனவும் தெரிவித்துள்ளார். ஜூலியன் அசாஞ் விக்கிலீக்ஸ் இணையத்தில் அமரிக்கா மற்றும் மேற்கின் கொலைகளையும் திருட்டுக்களைம் அம்பலப்படுத்தியவர் என்பது தெரிந்ததே. அதே
இலங்கையில் முக்கியமான ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக மேல் நீதிமன்றில் தொடுக்கப்பட்டிருந்த வழக்கு சட்டமாதிபரால் மீளப் பெற்றுக் கொள்ளப்பட்டது.
ஜூலியன் அசாஞ் அரசியல் அகதியாக எகுவாடோர் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார். இதனை அந்த நாட்டின் வெளிவிகர அமைச்சர் தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் ரிகார்டோ பத்தினோ ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவிக்கையில் தனது நாட்டில் தஞ்சம் கோரும் அகதிகளுக்கு புலகிடம் வழங்கும் பாரம்பரியத்தைத் தாம் மதிப்பளித்து அசாஞ்ஜ் இற்கு தஞ்சம் வழங்குவதாகக் குறிப்பிட்டார். அதே வேளை புதன் கிளமை லண்டனில் உள்ள எக்குவாடோரியன் தூதரகத்திற்கு சென்று அசாஞ்சைக் கைதுசெய்யப் போவதாகத் பிரித்தானிய அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. இது குறித்து ஊடகவியலாளர்களிடம் தெரிவித்த
கே.பி இராணுவ நடவடிக்கை மையம் என்ற புதுக்குடியிருப்பிலிருக்கும் கட்டடம் ஒன்றைப் பார்வையிட அவரது 22 புலம் பெயர் நண்பர்களுடன் சென்றதாகத் தெரியவருகிறது. விடுதலைப்புலிகளின் பிரதான ஆயுத விநியோகஸ்தராக கேபி இருந்த போதிலும், புதுக்குடியிருப்பில் உள்ள பிரபாகரனின் இந்த போர் மையத்திற்கு இப்போதே முதல் தடவையாக சென்றுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. இந்த இடத்தை பார்வையிடுவதற்காக கே.பியுடன் பாதுகாப்புச் செயலாளரை சந்திப்பை மேற்கொண்ட 22 புலம்பெயர் தமிழர்களும் சென்றிருந்தனர். இந்த பயணத்தை பாதுகாப்பு அமைச்சு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஏற்பாடு செய்திருந்ததாக
செயல்பட்டதாக கூறி கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர் உதயகுமார் உள்பட 2000 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள அணுஉலையில் எரிபொருள் நிரப்ப அண்மையில் மத்திய அரசு அனுமதி அளித்தது. இதனை கண்டிக்கும் விதமாக இடிந்தகரையில் சுதந்திர தினமான நேற்று அனைத்து வீடுகளிலும் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டது. மேலும் சவப்பெட்டி ஊர்வலம் நடத்திய அணுஉலை எதிர்ப்பாளர்கள் கடைசியில் சவப்பெட்டியை எரித்தனர். இந்த நிலையில் இறையாண்மையை சிதைக்கும் வகையில் சவப்பெட்டி ஊர்வலம் நடத்துவது,
கடந்த 12-ந் தேதி சென்னையில் டெசோ அமைப்பு சார்பாக தி.மு.க. தலைவர் கலைஞர் தலைமையில் நடைபெற்ற ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாட்டுத் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டங்கள், கலைஞரின் அறிவிப்பிற்கு இணங்க 20-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் என தி.முக. கொள்கை பரப்பு செயலாளர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர் இந்த கூட்டத்தில் ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்காக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி அந்தந்த மாவட்ட கழக செயலாளர்கள் எழுச்சியுடனும் – சிறப்புடனும் நடத்திட