மரினாலெடா நகரத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் கிடையாது. அனைவரும் தமது தேவைக்கேற்ப உழைக்கிறார்கள். இந்த நகரத்தில் மாத வீடு ஒன்றின் வாடகை 15 யூரோக்கள் மட்டுமே.
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கொக்குளாய் எனும் கிராமத்தில் தனியார் ஒருவருக்கு சொந்தமான 37 ஏக்கர் விவசாய நிலத்தை இல்மனைட் தொழிற்சாலைக்கென அரசினால் ஆக்கிரமிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர் இதனால் எதிர்காலத்தில் இப்பகுதியினை சுற்றியுள்ள மக்கள் இப்பகுதியை விட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என அப்பகுதி மக்கள் கவலை வெளியிடுள்ளனர். பல் தேசிய நிறுவனங்களுக்காக இலங்கை முழுவதையும் நச்சுப் பிரதேசமாக மாற்றும் அரசு, சிங்கள மக்களை இனவாத நச்சூட்டி நில ஆக்கிரமிப்பை ஆதரிக்குமாறு கோருகின்றது.
கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதால் அணுமின் நிலையத்தை தொடங்க எந்த தடையும் இல்லை. அணு மின் உற்பத்தி உலகம் முழுவது அழிவுகளை ஏற்படுத்திவரும் நிலையில் அதற்கு எதிராக உலகம் முழுவதும் மக்கள் போராடிவருகின்றனர். உலகம் முழுவதும் உருவாகிவரும் அழுத்தங்கள் காரணமாக பல நாடுகளில் அணு மின் உற்பத்தி கைவிடப்பட்டது. மக்களின் தொடர்ச்சியான போராட்டங்களை கருத்தில் கொள்ளாமால் தமிழ் நாட்டு மாநில அரசும் மத்திய அரசும் அணு மின்நிலையத்தை தொடங்கி
மேற்கு நாடுகள் குறித்து புனையப்பட்டுள்ள விம்பம் இலங்கை போன்ற பல மூன்றாம் உலக நாட்டவர்களை அந்த நாடுகள் மீது மோகம் கொள்ள வைக்கிறது. பல மாணவர்கள் இலங்கை இந்தியா போன்ற நாடுகளிலிருந்து சிறிய கல்விக் கூடங்களில் பதிவிசெய்துவிட்டு மாணவர் அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொண்டு பிரித்தானியா போன்ற நாடுகளுக்குப் படையெடுக்கிறார்கள். இவ்வாறான கல்வி நிலையங்கள் பல இன்று மூடப்படுகின்றன. இந்த வகையில் ஒரு பல்கலைக் கழகமாகத் தரம் உயர்த்தப்பட்ட லண்டன் மெற்றோ பொலிதேன் பல்கலைகழகத்திற்கான வெளி நாட்டவர்களை சேர்த்துக்கொள்ளும் அனுமதிப்பத்திரம்
நாமல் ராஜபக்ஸவின் நீலப்படை அணியின் 10 முதல் 15 பேர் கொண்ட குழு, முன்னிலை சோஷலிசக் கட்சியின் உறுப்பினர்கள் மீது இன்று காலை தாக்குதல் நடத்தியுள்ளது.இந்த சம்பவம் இன்று காலை அம்பாந்தோட்டை சூரியவௌ பிரதேசத்தில் நடந்துள்ளது. கடந்த சில தினங்களாக முன்னிலை சோஷலிச கட்சியினர், சூரியவௌ பிரதேசததில் மக்களை தெளிவுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் அரசாங்கத்திற்கு மாத்திரமே அம்பாந்தோட்டை மாவட்டத்தில் அரசியல் செய்ய முடியும் எனக் கூறியுள்ள நீலப்படையினர் தொடர்ந்தும் அச்சுறுத்தல் விடுத்து வந்தனர் என முன்னிலை
தமிழகத்திற்குரிய காவிரி நீரை கர்நாடக அரசு முழுமையாக திறந்து விடாததால், பிரதமர் தலைமையிலான நதிநீர் ஆணையத்தை உடனே கூட்ட வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து மத்திய அரசு சார்பில் இன்று சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் காவிரி நதிநீர் ஆணையம் விரைவில் கூட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காவிரி நதிநீர் ஆணையத்தை
மிஞ்சியிருப்பது இரும்பும் சாம்பலுமே, மாமிசத்தாலானதும் சுவாசிப்பதுமாகிய அனைத்தையும் சுட்டெரித்த பின் தங்கத்தாலானதும் துருப்பிடிக்காததுமாகிய அனைத்தையும் கவர்ந்து சென்றுவிட்டார்கள். மாமிசத்தாலாகாததும் துருப்பிடிக்கக் கூடியதுமாகிய இரும்பையெல்லாம் சேகரித்து உப்புக்களியில்குவித்து வைத்திருக்கிறார்கள். உப்புக்களியில் இருபோக மழையில் துருவேறிக் கிடக்கிறது கனவு. காடுகளின் சூரியன் நந்திக் கடலில் உருகி வீழ்கிறான். கானாங்கோழி காணாமற்போனவரின் கடைசிச் சொற்களை அடைகாத்திருக்கிறது. நிலாந்தன், 2012 – ஆவணி, யாழ்ப்பாணம். …………………………………………………………………………………………………….. உப்புக்களி – கடைசி யுத்தம் நிகழ்ந்த மாத்தளன், பொக்கணை, வலைஞர்மடம் மற்றும் முள்ளிவாய்க்கால் கிராமங்களிற்கும், கடலேரிக்கும்
ஈரானில் நடைபெறும் அணிசேரா நாடுகளின் மாநாட்டில் ஆரம்ப வைபவத்தில் உரையாற்றிய அந்த நாட்டின் உயர்பீடத் தலைவரான ஆயத்துல்லா அலி கொமேனி, ஐக்கிய நாடுகள் சபையை பன்கீ மூன் இன் முன்னிலையில் குற்றம் சுமத்தினார். ஐக்கிய நாடுகள் சபை பகுத்தறிவற்ற நியாயமற்ற மற்றும் முற்றிலும் ஜனநாயகமற்ற அமைப்பு, இந்த ஒரு வெளிப்படையான சர்வாதிகாரம் ஆகும் என்று குற்றம் சுமத்தினார். இந்தியா, பாகிஸ்தான் உட்பட பல நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். 120 நாடுகளின் தலைவர்கள் அணிசேரா
தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீனப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லியான் குவான்கிலி, நாடு திரும்பும் வழியில் இந்தியாவிற்கும் விஜயம் செய்ய உள்ளார். அண்டை நாடுகளுடன் நட்புறவை பேணும் நோக்கில் இந்த விஜயங்கள் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு சீனப் பாதுகாப்பு அமைச்சர் இந்தியாவிற்கு செல்ல உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
ஆயுதச் சட்டங்களினால் நாடுகள் ஒடுக்கப்படக் கூடாது என ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சாவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். சிறிய மற்றும் இலகு ரக ஆயுதப் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் சட்டமானது, நாடுகள் ஆயுதங்களை வைத்திருக்கும் உரிமையை பாதிக்கக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார். சிறிய மற்றும் இலகு ரக ஆயுதப் பயன்பாட்டை தடுப்பது தொடர்பான ஐக்கிய நாடுகள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தற்பாதுகாப்பு நோக்கில்