ராஜபக்ச அரசின் பேரினவாத முன்முகமாகத் தொழிற்படும் ஜாதிக ஹெல உறுமய என்ற சிங்கள பெளத்த அடிப்படைவாதக் கட்சி வடக்கில் வரலாற்று ரீதியான முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களை அரசாங்கம் பாதுகாக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்கள் சேதப்படுத்தப்படுவதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார். எதிர்கால சந்ததியினருக்காக வரலாற்று தளங்களை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். தேசிய மரபுரிமைகள் அமைச்சின் வரவு
யாழில் கடத்தப்பட்ட லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் ஆகியோர் கடத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் இன்று புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆரப்பாட்டமொன்று இடம்பெற்றது. மக்கள் போராட்டத்திற்கான இயக்கம் நாம் இலங்கையர் அமைப்பு ஆகியன ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாடத்தில் பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, பாதுகாப்பு படையினரால் கடத்தப்பட்ட குகன், லலித் ஆகியோரை உடன் விடுதலை, கடத்தியவர்களை விடுதலை செய் போன்ற சுலோகங்களை கொண்ட பதாகைகளை ஏந்தியவாறு இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
வடமாகாணத்தில் சில பகுதிகளில் சிங்கள பௌத்தர்கள் இருந்ததாக சில சக்திகள் நிரூபிக்க முயற்சிக்கின்றன, உண்மையில் அங்கிருந்தவர்கள் தமிழ் பௌத்தர்களாகும்’ தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார். தொல்பொருள் ஆய்வுகளின் போது இந்த சான்றுகள் கிடைக்கப் பெற்றதாகத் தெரிவித்துள்ளார். தேசிய மரபுரிமைகள் அமைச்சு வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த சான்றுகளை சிங்கள பௌத்தர்களுக்கு உரிமையானது என வெளிக்காட்ட சில தரப்பினர் முயற்சி மேற்கொண்டு
சந்தர்ப்பவாதிகளை அறிந்து வைத்திருக்கும் தமிழக விவசாயிகள் அவர்களை புறம் தள்ளி தன்னிச்சையாக அணையைக் காக்க அணிதிரண்டு வருகிறார்கள். விவசாயிகளோடு கைகோர்த்துச் செல்ல வேண்டியது இரு மாநிலங்களிலும் இருக்கும் புரட்சிகர ஜனநாயக சக்திகளின் கடமையாகும்
இன்று 12/12/2011 கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்ட லலித் குமார மற்றும் குகன் ஆகியோரை விடுதலை செய்யக்கோரும் ஆர்ப்பாட்டம் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. மக்கள் போராட்டத்திற்கான இயக்கம் என்ற அமைப்பு இந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்துள்ளது. இலங்கையில் வாழும் தமிழ் சிங்கள முஸ்லீம் மக்களை மகிந்த பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கெடுக்குமாறு ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜபக்சவோடும், இந்தியாவோடும், மேற்கு நாடுகளோடும் ஒட்டிக்கொண்டன. இனப்படுகொலையின் பின்புலத்தில் செயலாற்றிய அத்தனை அழிவு சக்திகளோடும் பேரம் பேசி