பிரஞ்சுப் பல்கலைக் கழகப் பேராசியரும், உலக அளவில் அறியப்பட்ட அரசியல் பொருளாதார ஆய்வாளருமான சமீர் அமீன் இன்று -01/11/2011- நோதிங்ஹாம் பல்கலைக் கழகத்தில் உரை நிகழ்த்தவுள்ளார். சமீர் அமீன் அரபுலக மாவோயிச வாதியாக அறியப்பட்டவர். பல அரசியல் நூல்களை எழுதியுள்ள சமீர் அமீன் உலக அரசியலும் புரட்சிகர உலகிலும் நன்கு அறியப்பட்டவர். நொதிங்ஹாம் பல்க்லைக் கழகத்தில் நடைபெறும் சமீர் அமீனின் கருத்தரங்கில் கலந்துகொள்ள அனைவரும், குறிப்பாக ஒடுக்கப்பட்ட மற்றும் போராடும் மக்கள் பிரிவினர், வரவேற்கப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கையின் அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் கைதிகள் அதிகாரிகளால் தாக்கப்படுவதாகக் கூறப்படும் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கையின் அனைத்துச் சிறைகளிலும் உள்ள தமிழ் கைதிகள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை நடத்தியிருக்கிறார்கள். கைதிகளின் போராட்டங்களை இன மத வேறுபாடுகளுக்கு அப்பால் ஆதரிக்க வேண்டும் என உதுல் பிரேமரத்ன இனியொருவிற்குத் தெரிவித்தார்.
தமிழக அரசும் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இருந்தும், அரசு நிறுவனங்களில் இருந்தும் யாரையும் இலங்கை செல்ல அனுமதி அளிக்கக்கூடாது என்று ம.தி.மு.க. சார்பில் வலியுறுத்துகிறேன் என வை.கோ அறிக்கை விடுத்துள்ளார். டிசம்பர் 14, 15 தேதிகளில் இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்டிடியூட் ஆப் ஹியூமன் டெவலப்மென்ட் அன்ட்டிரெய்னிங், ஸ்ரீலங்கா என்ற நிறுவனத்தின் சார்பில் மனிதவளக் கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதே போல கொழும்பு பல்கலைக்கழகம் டிசம்பர் 19, 20, 21 தேதிகளில் கொழும்பில்
ஜே.வி.பியின் அதிருப்தியாளர்கள் குறித்து ஒழுங்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக ஜே.வி.பியின் பொதுசெயலாளார் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். இதற்காக பிரசார செயலாளர் விஜித ஹேரத் ஜினதாஸ கிட்டுலேகொட மற்றும் லச்மன் நிபுணாராச்சி ஆகியோரை கொண்டு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை கட்சியையோ கட்சி தலைமையையோ கட்சியின் எந்த உறுப்பினரும் விமர்சிக்கமுடியாது என்று கட்சியின் மத்திய குழு தீர்மானம் எடுத்துள்ளது. எந்த உறுப்பினரும் ஊடகங்களுக்கு தமது கருத்தை வெளியிடுவதற்கு கட்சி தலைமையின் அனுமதியை பெறவேண்டும் என்றும் டில்வின் சில்வா
ஐந்து இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நடுக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் நெடுந்தீவு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மீனவர்கள் கைது செய்யப்பட்ட விடயம் இந்திய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், என்ன காரணத்திற்காக குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டனர் என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. இலங்கை கடற்படையினர் தம்மீது கற்களை எறிந்து தாக்குதல் நடத்தியதாக இந்திய மீனவர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்
சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு என்பது அவசர கோலத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அல்ல. சிந்தித்துதான் எடுத்துள்ளோம். அன்னிய முதலீட்டில் சில நிபந்தனைகள வைத்துள்ளோம். இது சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகளை ஊக்கப்படுத்தும். விசவாயிகள் நல்ல விலை பெறுவர் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார். மேற்குநாடுகளில் தமது பகற்கொள்ளையால் பெரும் அழிவை ஏற்படுத்திய பல்தேசிய நிறுவனங்கள் இப்போது வறிய நாடுகளைக் குறிவைக்கின்றன. தொழில் வளர்ச்சியடைந்திருந்த நாடுகளின் சீரழிவை வேகப்படுத்திய அதே பல் தேசிய நிறுவனங்கள் இந்தியா
இன்று 30/11/2011 பிரித்தானிய அரச ஊழியர்கள் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள். பொதுவாக இங்கிலாந்திலும் வேல்சிலும் பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் எனவும், ஸ்கொட்லாந்தில் பாடசாலைகள் நடைபெறுவது பாதிக்கப்படலாம் என்றும் எதிர்வுகூறப்படுகிறது. 29 தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன. 1979 ஆம் ஆண்டில் நடைபெற்ற வேலை நிறுத்ததின் பின்னர் மிகப் பெரிய அளவில் நடைபெறும் வேலை நிறுத்தம் இதுவாகும் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பிரித்தானிய பல் தேசிய முதலாளிகளின் வருமானம் பல மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த வரம்
பிரித்தானிய அரசு ஈரான் மீது விதித்துள்ள பொருளாதாரத் தடையை எதிர்த்து தெஹ்ரானில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் பிரித்தானிய தூத்ரகம் சிறிய அளவிலான சேதத்திற்கு உள்ளானது. தெஹ்ரான் பல்கலைக் கழக மாணவர்கள் ஏற்பாடுசெய்திருந்த ஆர்ப்பாட்டத்தில் பலர் பிரித்தானிய தூதரக வளாகத்துள் நுளைந்து கட்டடத்தின் யன்னல்களைச் சேதப்படுத்தினர். பிரித்தானியக் கொடியையும் எரித்துள்ளனர். மாணவர்களின் இந்த நடவடிக்கைகாக ஈரானிய வெளியுறவுத் துறை அமைச்சகம் உடனடியாகவே மன்னிப்புக் கோரியிருந்தது. பிரித்தானிய வெளியுறவுத்துறை செயலர் வில்லியம் ஹக் ஈரான் விளைவுகளைச் சந்திக்கவேண்டியிருக்கும் என மிரட்டல்
கருணாவின் அமையவே சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப் பினர்கள் என்ற சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டு பகுதி பகுதியாக விடுவிக்கப்படுவதாக ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று நடை பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளில் இன்னும் தடுத்துவைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் ஆலோசனைக்கு அமைவாக அடையாளம் காணப்பட்டு,
திகார் சிறையிலிருந்து கனிமொழி பின் வாசல் வழியாக வெளியேறிவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்று மாலை 7 மணி அளவில் கனிமொழி சிறையில் இருந்து வெளியே வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கனிமொழியை வரவேற்பதற்காக திமுக தலைவர்கள் மற்றும் எம்.பி.க்கள் பலர் திகார் சிறை முன்னர் திரண்டு நின்றனர். அதேப்போன்று தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை நிருபர்கள்,கேமராமேன்களும் ஏராளமான அளவில் சிறை வாயிலில் குவிந்திருந்த நிலையில், சிறை அதிகாரிகளின் அறிவுரையின் பேரில் கனிமொழி பிரதான வாயில் வழியாக அல்லாமல் இரண்டாம் எண்