ஐக்கிய நாடுகள் சபையை இலங்கையுடன் இணைந்து செயற்பாடுமாறு இலங்கை வெளி விவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அழைப்பு விடுத்துள்ளார். பிரான்ஸிற்கு விஜயம் செய்துள்ள வெளிவிவகார அமைச்சர்,தலைநகர் பாரிஸில் வைத்து இதனைத் தெரிவித்துள்ளார். 1952ம் ஆண்டு முதல் அங்கம் வகித்து வரும் உறுப்பு நாடு என்ற வகையில் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் அமைப்பு செயற்படக் கூடாது என வலியுறுத்தியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதும் இலங்கை அரசாங்கத்தின் மீதும் போர்க் குற்றங்களை முன்வைக்கும் ஐக்கிய நாடுகளின் நிபுணர்குழு அறிக்கை
கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரத்தில் அப்பகுதி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர் நேற்று 4 வது நாளாக 22 பெண்கள் உள்பட 106 பேர் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். அணுமின்நிலைய பணிக்கு சென்றவர்களை கூடங்குளம் பொதுமக்கள் திரண்டு நின்று முற்றுகையிட்டு பணிக்கு செல்லவிடாமல் தடுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். இந்நிலையில் கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு வேலைக்கு சென்ற ஊழியர்களை பொதுமக்கள் இன்றும் வழிமறித்து தடுத்து நிறுத்தினர்.
சீன கரன்சியின் மதிப்பை வலுக்கட்டாயமாக உயர்த்த வழிசெய்யும் மசோதா, நேற்று அமெரிக்க செனட் சபையில் நிறைவேறியது.பிரதிநிதிகள் சபையில், மசோதாவை நிறைவேற்றவிடாமல் தடுக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ள சீனா, இம்மசோதாவால், இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகப் போர் உருவாகும் என எச்சரித்துள்ளது. சீனா தனது “யுவான்’ கரன்சியை, டாலருக்கு எதிரான மதிப்பில் தொடர்ந்து குறைத்தே வைத்துள்ளது. இதனால், சீன ஏற்றுமதியாளர்களுக்கு அளவற்ற லாபம் கிடைப்பதாகவும், அமெரிக்காவில் ஏற்கனவே நிலவி வரும் வேலையில்லா திண்டாட்டத்தை மேலும் அதிகரிக்கும் முயற்சி இது எனவும்,
பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் லியம் பொக்ஸின் நண்பர் அடம்வெரிற்றியின் செல்வாக்கைப் பயன்படுத்தி பிரித்தானிய அரசாங்கத்திடம் இருந்து ஆயுதங்களை வாங்குவதற்கு இலங்கை அரசாங்கம் முயற்சித்ததாக சனல் 4 தொலைக்காட்சி தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கையின் உயர்மட்ட வட்டாரங்களை மேற்கோள்காட்டி சனல் 4 தொலைக்காட்சி இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. இதே வேளை பிரித்தானிய தமிழ் இனவாதிகள் நெருங்கிய உறவைப்பேணும் பிரித்தானிய ஆளும் கட்சியின் பிரதமர் டேவிட் கமரன் லியாம் பொக்சை எல்லா வழிகளிலும் பாதுகாப்பது தனது கடமை எனக் குறிபிட்டுள்ளார். இலங்கையில்
சில குறிப்பிட்ட குழுக்களும், நபர்களும் நாட்டையும், மக்களையும், போர் வீரர்களையும், அவர்களின் வெற்றிகளையும், அரசாங்கத்தையும், சிறிலங்கா அதிபரையும் காட்டிக் கொடுக்க முனைகின்றன. குறுகிய கால நன்மைகளுக்காக அவர்கள் சிறிலங்காப் படையினர் மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகின்றனர். தீவிரவாதத்தை தோற்கடித்த தமது படையினரின் வெற்றியை மழுங்கடிக்க பல்வேறு நிகழ்ச்சி நிரல்களின் கீழ் இயங்கும் குழுக்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை தோற்கடிக்க வேண்டிய நிலையில் சிறிலங்கா அரசாங்கம் இருப்பதாகக் கூறியுள்ளார் சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச. வெளிநாடுகளில் உள்ள