எல்லோரையும் பீதியில் ஆழ்த்தியிருக்கும் இம் மர்ம மனிதர்கள் அரசைச் சார்ந்தவர்கள் என்பது மட்டும் எல்லோரதும் ஒருமித்த ஏக கருத்தாக இருக்கிறது.
வடக்கில் ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி இன்று(16.08.11) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தெற்கிலிருந்து வருகை தந்திருந்த ஊடகவியலாளர்களுடன் குடாநாட்டு நாளிதழ்களது ஊடகவியலாளர்களும் பங்கெடுத்திருந்தனர். வடக்கில் ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தியும் உதயன் செய்தியாசிரியர் குகநாதன் மீதான தாக்குதலை கண்டித்தும் சுலோகங்களை எழுப்பிய ஊடகவியலாளர்கள் அரசுக்கு எதிரானவும் சுலோகங்களை எழுப்பினர். துமிழ் தேசிய்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிறேமச்சந்திரன், சிறீதரன், சரவணபவான் ஆகியோர் கலந்து கொண்டிந்தனர். ஜ.தே.க நாடாளுமன்ற உறுப்பினரான வி;ஜயகலா மகேஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம் மற்றும் கஜேந்திரன் ஜே.வி.பியின்