துயரங்களை அனுபவித்தபடி, கேலி கிண்டல்களுக்கு ஆளான படி ஒவ்வொரு இராணுவ முகாம்களாக அலைய ஆரம்பித்து, இன்றோடு இரண்டு வருடங்கள்.
ராஜபக்ச பாசிச அரசு இலங்கையை இராணுவ சிந்தனைக்கு உட்படுத்தும் திட்டதை பரவலாக நடைமுறைப்படுத்தி வருகிறது. இதன் மற்றொரு பகுதியாக இலங்கை முழுவதும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கட்டாய இராணுவப் பயிற்சி வழங்கத் தீர்மானித்துள்ளது. வன்னிப் போருக்காகப் புதிதாக இணைக்கப்பட்ட இராணுவத்தினருக்கே மாதாந்த ஊதியத் தொகை வழங்காத நிலையில் பல்கலைக்கழக மாணவர்களையும் இராணுவ முறைமைக்குள் உட்படுத்துகிறது. இதற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களும் எதிர்ப்புக்குரல்களும் எழுந்த நிலையில் இலங்கைப் பேரினவாத அரசு இவை எதனையும் பொருட்படுத்தவில்லை. பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவ பயிற்சி வழங்கும்