April 28th, 2011

தமிழினத் துரோகி ராஜபட்ச அல்ல… – தினமணி

தமிழினத் துரோகி ராஜபட்ச அல்ல… – தினமணி

இலங்கை அரசு திட்டமிட்டு இனப்படுகொலை நடத்தி வருகிறது என்று 2009-ல் எல்லோரும் கூறியதைத்தான் இப்போது ஐக்கிய நாடுகள் குழு அறிக்கை உறுதிப்படுத்தி இருக்கிறது. அப்போது, இந்தியா எப்படி, இந்த இனப்படுகொலை குறித்து எல்லோரும் குரல் எழுப்பியபோதும் அமைதி காத்ததோ, அதே அமைதியை இப்போதும் கையாள்கிறது. இலங்கை அதிபர் ராஜபட்ச ஒரு போர்க் குற்றவாளி என்று தண்டிக்கப்படுவதற்கான அனைத்துக் காரணிகளும் இந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இலங்கை அரசு இதுபற்றித் துளியும் கவலை கொள்ளவில்லை. மாறாக, முழு அறிக்கையை

கோர்டன் வைஸின் கருத்துக்களை உத்தியோகபூர்வ கருத்தாக ஏற்றுக்கொள்ள முடியாது .டொம் ஹோக்லி

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான முன்னாள் பேச்சாளர் கோர்டன் வைஸின் கருத்துக்களை ஐக்கிய நாடுகள் அமைப்பின் உத்தியோகபூர்வ கருத்தாக ஏற்றுக்கொள்ள முடியாது என ஐ.நாவின் தற்போதைய பேச்சாளர் டொம் ஹோக்லி தெரிவித்துள்ளார். கோர்டன் வைஸின் கருத்துக்கள் தனிப்பட்டவை. குறிப்பிட்ட காலப்பகுதியில் நாட்டில் நிலவிய சூழ்நிலைகளின் அடிப்படையில் அவர் கருத்து வெளியிட்டிருக்கலாம் என டொம் ஹோக்லி தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கை வெளியிடப்பட்டதன் பின்னர், கோர்டன் வைஸ் சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.