இலங்கை அரசையும், தமிழ்த் தேசிய அரசியலையும் குறிப்பாக புலிசார் அரசியலையும் தமது தேவைக்காகப் பயன்படுத்தும் தன்மைகொண்ட மிகத் தந்திரமான கூறுகளைக் கொண்ட அறிக்கை
ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கை பாதுகாப்புப் பேரவையில் விவாதம் செய்யப்படுவதற்கு இந்தியா எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவை அமர்வுகளின் போது நிபுணர் குழு தொடர்பான விடயங்களை நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்க வேண்டாமென இந்தியா கோரியுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இதே வேளை இந்தியா தமது பாதுகாப்பு அரசியல் நலன்களைக் கருத்தில் கொண்டே செயற்படும் என முத்துவேல் கருணாநிதி தெரிவித்துள்ளார். சீனா ரஷ்யா ஆகிய நாடுகள் ஏற்கனவே தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப்போது நடைபெற்றுள்ள இயக்கங்கள் அந்த மக்களுக்கு வழங்கியுள்ள செறிந்த படிப்பினைகள் நிச்சயம் சரியான அமைப்புகளை அவர்கள் உருவாக்கிக் கொள்வதற்கு அவர்களுக்குப் பெரிதும் உதவும்.