“இலங்கையின் எதிர்காலம்” என்ற தலைப்பிலான அரசியல் கலந்துரையாடல் 07 நவம்பர் 2010 ஞாயிறு அன்று பாரீசில் நடைபெற்றது. சமூக அசைவிற்கான எழுத்தியக்கம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் சமகால அரசியல் குறித்த பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. இலங்கை தொடர்பான சர்வதேச மற்றும் இந்திய நிலைப்பாடுகள் , தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் இன்றைய போக்கு ,நாடுகடந்த தமிழ் ஈழ அரசு, புலம்பெயர் தமிழர்களின் அரசியல் ,இலங்கை அரசியலில் இடதுசாரிகளின் இன்றைய நிலை, புலி ஆதரவு-புலி எதிர்ப்பு, இலங்கை அரச ஆதரவு
தென்னிலங்கையில் கூறப்படுவதைப்போன்று வடக்கில் மக்கள் சுதந்திரமாகவும் மகிழ்சியாவும் இல்லை. தென்னிலங்கை ஊடகங்களும் அரசாங்கமும் மக்களை ஏமாற்றி போலியான சூழலில் வைத்திருக்வே விரும்புகின்றனவாம். இவ்வாறு சுதந்திரத்திற்கான பெண்கள் அமைப்பின் தலைவி திமுனு ஆடிகல தெரிவித்துள்ளார். நேற்று யாழ்.நகரில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளர். தொடர்ந்து அவர் அங்கு உரையாற்றும் போது தெற்கில் உள்ள ஊடகங்களும் அரசாங்கமும் வடக்கில் மக்கள் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாவும் உள்ளதாக கூறுகின்றன. ஆனால் நாங்கள் பல இடங்களிற்குச் சென்று பார்த்து திரும்பியுள்ளோம்.
அண்மைக்காலங்களில் அரசினால் வழங்கப்பட்டு வரும் புதிய தொழில் நியமனங்களில் தமிழர்கள் பறக்கணிக்கப்பட்டு வருகின்றமை பற்றிப் பல தகவல்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தன. அரச நிர்வாக சேவைக்கான நியமனம் , வட மாகாணத்திற்கான நில அளவையாளர் நியமனம் என்பவற்றில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டிருந்தமை பற்றி ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இவ்விடயம் தொடர்பாக தமிழ் அரசியல் தலைவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து தற்போது விசனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. த.தே.கூ. பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், பாராபட்சமாக நடந்து கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது, இதனை ஒர்;
இராணுவத்தினர் ஒரு போதும் சரணைடய வந்வத மக்களைச் சுடவில்லை, இராணுவத்தினர் மக்களை சரணடையுமாறே கோரினார்கள், தமிழீழ விடுதலைப் புலிகளே தமது அனுமதியின்றி மரச படையினரிடம் சரணடையச் சென்ற பொதுமக்களை சுட்டுக் கொன்றனர் என யாழ்.மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஆணைக்குழு அமர்வுகளில் இவ்வாறு அவர் சாடசியமளித்துள்ளார். யாழ்.மாவட்ட அரச அதிபர் தனது சாட்சியத்தில், யுத்தத்தின் போது மன்னார், கிளிநொச்சி பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் அனைவரும் முல்லைத்தீவு