இவ்வாறு போராட்டங்கள் திட்டமிடப்ப்பட்டிருந்தால் குறைந்தபட்சம் வன்னி அழிவுகளின் கோரம் தணிந்திருக்க வாய்பிருந்திருக்கும்.
“அண்மையில் எம்மால் மேற்கொள்ளப்பட்ட சமூக ஜனநாயக சக்திகளை அணிதிரட்டும் முயற்சிகள் வெற்றியளித்துள்ளன. இந்த நாட்டில் உண்மையான ஜனநாயக சுதந்திரத்தை நிலைநாட்ட மூன்றாவது சக்தியொன்றின் தேவைப்பாடு பற்றி எல்லா மட்டங்களிலும் உணரப்படுகிறது” என கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன வீரகேசரிக்கான கட்டுரையொன்றில்(26.11.2010) கருத்துத் தெரிவித்திருக்கிறார். மேலும் இலங்கை அரசியல் பற்றிக் குறிப்பிடுகையில், இந்த நாட்டின் வளங்களை உலகமய முதலாளித்துவ சக்திகள் கபளீகரம் செய்வதற்கு எதிரான போராட்டங்களைப் போன்று , நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்குவதற்கான போரட்டங்களும், தமிழ்
அருந்ததி ராய், ஹுரியத் மாநாட்டு இயக்கத் தலைவர் சையத் அலி ஷா கிலானி ஆகியோர் மீது தேச விரோத வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சுசில் பண்டிட் என்பவர் தாக்கல் செய்த மனு தொடர்பாக டெல்லி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் மூலம் இந்த நடவடிக்கையை காவல்துறை மேற்கொண்டுள்ளது. கடந்த மாதம் 21ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்று பேசிய அருந்ததி ராய், காஷ்மீர் மாநிலத்தை சொந்தம் கொண்டாட இந்தியாவிற்கு உரிமை இல்லை என்று கூறியிருந்தார். அவருடன் பேசிய
ஒரு புதிய தளத்திற்கு போகவேண்டிய இந்தக்கட்டத்தில் இதுவரை இருந்த சிந்தனைமுறை தூக்கி எறியப்படவேண்டும்.
இன்று (29.11.10) லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தின் நான்காவது இறங்குதளத்தில் நடைபெற்ற மகிந்த ராஜபக்சவின் வருகைக்கு எதிரான போராட்டத்தில் 500 வரையான பிரித்தானியா வாழ் தமிழர்கள் உணர்வு பூர்வமாகக் கலந்துகொண்டனர். இன்று அறிக்கப்பட்ட போராடம் குறித்த் நிகழ்வில் இவ்வளவு தொகையானோர் கலந்துகொண்டமை எதிர்பார்க்கப்படாத ஒன்றாகும். கலந்துகொண்டவர்கள் மகிந்த ராஜபக்ச போர்க்குற்றவாளியென முழக்கமிட்டனர். பத்து மணியளவில் சுமார் பத்துப் பேர்வரை மறைத்து வைத்திருந்த புலிக் கொடிகளோடு ஆர்ப்பாட்டத்தின் முன்னேவந்து நின்றனர். இதனால் அதிர்ப்தியடைந்த பலர் ஆர்ப்பாட்ட நிகழ்விலிருந்து விலகிச்சென்றதைக்
இன்று(29.11.2010) இரவு மணிக்கு இலங்கைச் சர்வாதிகாரியும் போர்க்குற்றவாளியுமான மகிந்த லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் வந்திறங்குகிறார். இவரின் வருகைக்கு எதிராக அவசர ஆர்ப்பாட்டம் ஒன்றை பிரித்தானியத் தமிழர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். ஹீத்ரோ விமானநிலையத்தின் நான்காவது இறங்கு தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் பிரித்தானியா வாழ் தமிழ்ப் பேசும் மக்களும், மனிதாபிமானிகளும், சமூக அக்கறை கொண்ட அனைவரும் பங்காற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இப் போராட்டத்துக்கான அழைப்பை அனைத்துத் தமிழ் அமைப்புகளும் ஒன்றாக விடுத்துள்ளன.
அரச அடக்குமுறை அதிகரித்துள்ள நிலையில் வடகிழக்கில் பல பிரதேசங்களிலும் மாவீரர் நாளுக்கான முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மட்டக்களப்பில் சில இடங்களில் சுவரொட்டிகளும் சுவர் எழுத்துக்களும் காணப்பட்டன. யாழ்ப்பாணம் நகரம் நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு மேலாக விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்பில் இருந்தது. தவிர யாழ்ப்பாண வீதிகள் முழுவதும் படைத்தரப்பினர் இரவிரவாக பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். வீதி ரோந்துகளில் ஈடுபட்டதுடன் வீதியால் சென்ற மக்களிடம் விசாரணைகளையும் செய்தனர். நேற்றிரவு யாழ் பல்கலைக்கழக சூழலில் படைத்தரப்பின் கண்காணிப்பு தீவிரமாக
எஸ்.எம்.கிருஷ்ணாவின் இலங்கை விஜயம் குறித்து நெடுமாறன் அறிக்கை: இலங்கையில் தமிழர்களை மீண்டும் அவர்களுடைய சொந்த இடங்களில் குடியமர்த்துவதும், இனப் பிரச்சினைக்கு படிப்படியாக தீர்வு காணும் வகையில் பேச்சுவார்த்தை நடத்துவதுமே இப்போது முக்கிய பிரச்சனைகளாக உள்ளன. அவற்றை இலங்கை அரசு நிச்சயம் செய்யும் என நம்புகிறோம் என இந்திய – இலங்கை கூட்டுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த வெளியுறவுத் துறை அமைச்சர் எம்.எம். கிருஷ்ணா கூறியுள்ளார். மேலும், போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் அகதிகளை மீண்டும்
அரச தரப்பு எம்.பி.யான எல்லாவெல மேதானந்த தேரர் பாராளுமன்ற வரவு – செலவுத் திட்ட விவாதத்தின் போது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முன்பு வாழ்ந்த தமிழ், முஸ்லிம், சிங்களவர்கள் மீண்டும் தமது சொந்த இடங்களில் குடியேறுவதை எவரும் கேள்விக்குட்படுத்த முடியாது” என பாராளுமன்ற வரவு – செலவுத் திட்ட விவாதத்தின் போது தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே ஜே.வி.பி. யின் தலைவர் நாங்கள் தழிழ், முஸ்லிம், சிங்கள பிரிவாதத்தினை எதிர்க்கிறோம் எனக்கூறியருந்தமை நினைவுக்கு வரலாம். தங்கள் இனவாதத்தினை மூடி மறைக்க
பாகிஸ்தான் இலங்கைக்கு வழங்கிய உதவிகளின் நோக்கங்கள் பற்றிக் கருத்தத் தெரிவித்துள்ள பாகிஸ்தானின் இராணுவு புலனாய்வு எழுத்தாளர் ஆயிஷா சித்தீகா, தெற்காசிய நாடுகளின் அரசியலில் செல்வாக்குச் செலுத்துவதன் மூலமாக இந்தியாவுடனான சமபலத்தைப் பேணுவதான தோற்றத்தை உருவாக்குதல், பிராந்தியத்தில் அச்சமூட்டத்தக்க செல்வாக்கை வளர்த்ததெடுத்தல், இந்தியப் புலானாய்வுத் துறையினரால் உருவாக்கப்பட்ட தமிழ்ப் போராளிகளை அழித்தல் என்பவை பிரதான நோக்கங்களாக குறிப்பிட்டிருக்கிறார். மேலும் உள்ளுரில் உற்பத்தி செய்யப்பட்ட ஆயதங்களை சந்தைப்படுத்துவதும் துணைநோக்கங்களில் ஒன்றாகக் கருதலாம் எனவும் தெரிவித்திருக்கிறார். ஸ்ரீலங்கா கார்டியனுக்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே