எதிரிகளோடும், அதிகாரத்தோடும் கைகோர்த்துக் கொள்ள முனையும் தோற்றுப்போன அதிகாரம் சார் சிந்தனை முறை இன்று மறுபடி மறுபடி தமிழ் பேசும் மக்களின் அரசியலாக முன்னிறுத்தப்படுகின்றது.
இன்றைய போர்ச்சூழலை மையமாகக் கொண்ட கவிதைகள் என்பது மனப்போராட்டங்களையும் உணர்வுகளையும் போரின் மனஉளைச்சல்களையும் தாங்கிவரும் அக்கினிகுஞ்சுகளாக எறியப்படும் காலகட்டத்தில், வீணையின் பிசிறில்லாத நாதம் போல காதல் கவிதைகள் எம்மை சில நொடி பிரபஞ்சத்தின் வெளியே அழைத்துச்செல்லக்கூடிய வல்லமை கூடியது.
பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் காஷ்மீர் குறித்து தெரிவித்த கருத்துக்காக அவரது வீட்டு முன்பு பா.ஜனதா கட்சியை சேர்ந்த மகளிர் அணியினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். காஷ்மீர் குறித்து அருந்ததி ராய் தெரிவித்த கருத்துகளுக்காகவும், அவர் மீது அரசு நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்தும் டெல்லி சாணக்கியபுரியில் உள்ள அவரது வீட்டு முன் இந்த ஆர்ப்பாட்டத்தை அவர்கள் நடத்தினர். பா.ஜனதா மஹிளா மோர்ச்சாவின் டெல்லி கிளை தலைவர் சிகா ராய் தலைமையில், அதன் தொண்டர்கள் அருந்ததி ராய் வீட்டுக்குச்
கடந்த 23 ஆம் திகதி யாழ். பொது நூலகத்திற்குள் அத்துமீறி நுழைந்த தென்னிலங்கைச் சிங்கள சுற்றுலாப் பயணிகள் புரிந்த அடாவடித்தனங்களைப் பற்றி யாழ்.பொது நூலக நூலகர், நூலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் அறிக்கையொன்றைச் சமர்ப்பித்திருக்கிறார். இவ்வறிக்கையில், இடம் பெற்ற சம்வங்கள் பற்றி விளக்கப்பட்டுள்ளதுடன், நூலகத்தில் நடைபெற்ற அடாவடித்தனங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது. நூலகரின் அறிக்கையில் ‘ இதற்கிடையில் மாலை 5.20 மணியளவில் இராணுவ அதிகாரி கதவைத் திறந்து அனைவரையும் உள்ளே விட்டார். 37 பஸ் வண்டிகளில் வந்த சுற்றுலாப் பயணிகள்
புலிகள் எவரையும் எதற்காகவும் கொலை செய்யலாம் என்ற நிலைமை உறுதிப்படுத்தப்படுகிறதைக் கண்டோம். அதற்கான பரந்து பட்ட எதிர்ப்புத் தளம் ஒன்று மக்களிடமிருந்தும் புத்திசீவிகளிடமிருந்தும் உருவாகவில்லை.
வட, கிழக்கில் பணியாற்றுவதற்கென நியமிக்கப்பட்டுள்ள நில அளவையாளர்களில் 95 பேர் சிங்களவராகவும் 5 பேர் தமிழராகவும் இருப்பது அநீதியானது எனத் தெரிவித்து வன்னி மாவட்ட எம்.பி. செல்வம் அடைக்கலாநாதன் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனுக்கு அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். வடக்கி கிழக்கில் மிகப் பெரும்பான்மையாகத் தமிழர்கள் வாழுகின்ற போதும் குறைந்த பட்ச விகிதாசார முறை கூடப் பிரயோகிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். தவிர, இலங்கை இந்திய அரசுகளிடம் யாசித்துப் பெற்றுக்கொள்ளலாம் என மக்களை
சமஷ்டி கொழும்புக்கு எதிர்மறையான கோட்பாடு! வட,கிழக்கு இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை !! - இலங்கை அமைச்சர் இந்தியாவில் தெரிவிப்பு. இலங்கை மக்களின் நலன்களை மனதில் கொண்டு சகலரும் புனிதமான தீர்வுகளைப் பற்றிச் சிநித்திக்குமாறு வேண்டுகிறேன் என ஆளும் கட்சி எம்.பி.யான ரஜீவ விஜயசிங்க புதுடில்லியில் வைத்து தெரிவித்திருக்கிறார். இதனை ஐ.ஏ.என்.எஸ். செய்திச் சேவை தெரிவத்திருக்கிறது. ரஜீவ விஜயசிங்க அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் லிபரல் கட்சி உறுப்பினராவார். ரஜீவ விஜயசிங்க, கடந்த காலத்தைப் பற்றி திரும்பத் திரும்ப பேசிக்கொண்டிருப்பதற்குப்
இலங்கை அரசு கல்வியை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை எதிர்த்து நடத்தும் போராட்டம் இன்று ராஜபக்ச ஆட்சிக்குப் பெரும் அச்சுறுத்தலாக உடுவெடுத்துள்ளது. மாணவர்கள் மீதான அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டுள்ள அரசு அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் உதுல் பிரேமரத்னவைக் கைதுசெய்துள்ளது. கடைசி மாணவன் கைது செய்யப்படும் வரை தமது போராட்டம் தொடரும் என ஒன்றியத்தின் பிரதித் தலைவர் ராஜீவ பண்டார ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் மேலும் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு: எமது ஒன்றியத்தின் தலைவர் உதுல் பிரேமரத்ன எந்தவொரு
கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் மேலிட உத்தரவிற்கமைய திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 2003 ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து வலயக்கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி வருவதுடன் ஓய்வினைப் பெறுவதற்கு இன்னும் பத்து மாதங்களே உள்ள நிலையில் இத்திடீர் இடமாற்றம் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கல்விப்பணிமனை ஊழியர்கள் இந்த இடமாற்றத்தினை உடனடியாக நிறுத்துமாறு கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே விவிசாயத் திணைக்களம், பொது வைத்திய சாலை அதிகாரிகள் திடீர் இடமாற்றங்களிற்கு உள்ளாகியிருக்கின்றனர். இச்செயற்பாடுகள் இராணுவ நடைமுறைகளும் அவர்களது அதிகாரமும் கிளிநொச்சியில் நிலவிவருவதன்
கடந்த 23 ஆம் திகதி மாலை யாழ்.பொது நூலகத்துக்குள் நூற்றுக்கணக்கான தென்னிலங்கைச் சிங்கள மக்கள் அத்துமீறி நுழைந்து கொண்டமை பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. கடந்த 23 ஆம் திகதி யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் இலங்கை மருத்துவச் சங்கத்தின் வருடாந்த ஒன்று கூடல் நிகழந்து கொண்டிருந்த சமயம், நூற்றுக்கணக்கான தென்னிலங்கைச் சிங்கள மக்கள் உள்ளே நுழைய முயன்றனர். அசமயம் நூலகத்துக்குள்ளே பொது மக்கள் நுழைவது கட்டுப்படுத்தப்ட்டிருந்ததுடன் அது தொடர்பான அறிவித்தலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. நூலகப் பாதுகாப்பு அதிகாரிகளும் உள்நுழைய