சுதேசி இயக்கத்தை எந்த கட்சியும் சொந்தம் கொண்டாட முடியாது என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி. ராஜா வெள்ளிக்கிழமை தெரிவித்தார். தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் சுதேசி இயக்கம் குறித்த 2 நாள் மாநில கருத்தரங்கம் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற 2-ம் நாள் கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு டி. ராஜா மேலும் பேசியதாவது: 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் சுதேசி கருத்து, இயக்கம் வடிவம் பெற்றது. பெரிய அளவில் உருவானது. ரஷியாவில் ஏற்பட்ட புரட்சியின் தாக்கம்
இலங்கை ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களுக்கு கொடுக்கப்படும் தொந்தரவு அதிகரித்துள்ளதாக பல மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. அரசாங்கத்தை குறை கூறுபவர்களிடம் கணக்கு தீர்க்கும் நேரமாக ஜனாதிபதி செயற்படுவது போல தோன்றுவதாக ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு கூறியுள்ளது.
தமக்கு எதிரான துன்புறுத்தல்களை அரசாங்கம் நிறுத்தாவிடின், தனக்கு என்ன நேர்ந்தாலும் பரவாயில்லை. அரசாங்கத்தின் இரகசியங்களை வெளிப்படுத்தப் போவதாக முன்னாள் இராணுவ தளபதியும், கடந்த ஜனாதிபதி தேர்தல் பொது வேட்பாளருமான சரத் பொன்சேகா எச்சரித்துள்ளார். கொழும்பில் இன்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். தம்மை துன்புறுத்தும் அரசாங்க அதிகாரிகள் மேற்கொண்ட ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் தம்மிடம் ஆவணங்கள் இருந்ததாகவும், எனவேதான் தாம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தீர்மானித்ததாகவும் சரத் பொன்சேகா
பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு முன்னராக தேர்தல் முறைமையில் மாற்றத்தை கொண்டு வருவதற்கான முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.தற்போது நடைமுறையிலுள்ள விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறையில் மாற்றத்தைக் கொண்டு வந்து பழைய தொகுதிவாரியான தேர்தல் முறைமையை ஏற்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தோன்றுகிறது. அரசாங்கம் இந்த ஏற்பாட்டை மேற்கொள்வதாயின் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் தேவைப்படுகிறது. இதற்காக எதிரணியைச் சேர்ந்த 19 எம்.பி.க்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் முயற்சியில் அரசு ஈடுபட்டிருப்பதாக அரசின் பங்காளிக் கட்சியான தேசிய
தாய்வானுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்வதை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என சீனா இன்று சனிக்கிழமை எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. சுமார் 6.4 பில்லின் அமொக்க டொலர்கள் பெறுமதியான ஆயுதங்கள் தாய்வானுக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அமெரிக்கா தவறான முடிவினை எடுத்துள்ளதாக சீன வெளியுறவுத்துறை இன்று குற்றம்சாட்டியுள்ளது. சீனா தனது நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியுள்ளதாகவும் அது தொடர்பில் இதுவரை அமெரிக்கா பதிலளிக்கவில்லை என சீனாவுக்கான அமெரிக்க தூதரகத்தின் பேச்சாளர் சுசான் ஸ்டெவென்சன் தெரிவித்துள்ளார். யுஎச் 60எம் ரக விமானங்கள் 60 உள்ளிட்ட
லங்கா இரித பத்திரிகை நிறுவனம் இலங்கை அரசாங்கத்தின் உளவுத்துறையால் மூடப்பட்டுள்ளது. ஜே.வி.பி இற்கு ஆதரவான இந்தப் பத்திரிகை நிறுவனம், தேர்தல் நேரத்தில் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவாகச் செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தகது. முன்னதாக லங்கா இரித பத்திரிகைக் காரியாலத்திற்கு தீவைப்பேன் என இலங்கை ஜனாதிபதியின் சகோதரரும், பாதுகாப்புச் செயலரும், பல குற்றச்செயல்களோடு தொடர்புடையதகக் கருதப்படுபவருமான கோதாபய ராஜபக்ச தொலைபேசியூடாக எச்சரிக்கை விடுத்ததாக ஜே.வி.பி தமது ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கை நிலைமைகளை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகக் கூறும்
லங்கா சிங்கள வாரப் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் சந்தன சிறிமல்வத்த நேற்று மாலை குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இப்பத்திரிகையின் கடந்த வார இதழில் வெளியாகியிருந்த கட்டுரையொன்று தொடர்பில் விசாரணை நடத்தும் பொருட்டே அவர் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவரது கைது தொடர்பாக தமக்கு தெரியவந்த போதிலும் அது குறித்து குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் உத்தியோகபூர்வமான முறையில் அறிவிக்கப்படவில்லை என பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான ஐ.எம்.கருணாரத்ன தெரிவித்தார். கடந்த செவ்வாய்க்கிழமை
கோயம்புத்தூர் தந்தை பெரியார் நகரில் வசிக்கும் அருந்ததிய சமூகத்தினர் பயன்படுத்தும் சாலையை சாதிஆதிக்க சக்தியினர் மறித்து தடுப்பு சுவர் கட்டியுள்ளனர். இந்த அராஜகத்தை கோவை மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் ஆதித்தமிழர் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகள் அம்பலப்படுத்தியுள்ளன. கோவை மாநகராட்சி, சிங்கா நல்லூர் 10வது வட்டம் காமராஜர் ரோடு அருகில் உள்ள, தந்தை பெரியார் நகர். இக்குடியிருப்பில் ஆதி திராவிட நலத்துறையின் மூலம் 1989 ஆம் ஆண்டில் 58 குடும்பங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கப் பட்டது.
இது வெள்ளை மேலாதிக்க மனோபாவத்தை தான் வெளிப்படுத்துகின்றது. பூர்விக இந்தியரை பெருமளவில் கொன்று குவித்து அவர்களது கலாச்சாரத்தை அழித்த பெருமை இந்த வெள்ளையரைத்தான் சாரும்.
பாதையறிந்து பயணத்தை முன்னெடுப்பது எளிதல்ல ஆனால் அது தட்டிக்கழிக்கத் தகாத வரலாற்றுப் பணியாகும்..