October, 2009

Page 1 of 2112345...1020...Last »

பொலிஸ் அராஜகத்தால் படுகொலை: காட்டுமிராண்டி அராஜகத்திற்கு எதிரான சாத்வீக கண்டன ஆர்ப்பாட்டம்!

பொலிஸ் அராஜகத்தால் படுகொலை: காட்டுமிராண்டி அராஜகத்திற்கு எதிரான சாத்வீக கண்டன ஆர்ப்பாட்டம்!

கொழும்பு பம்பலப்பிட்டியில் மனநிலை பாதிக்கப்பட்ட பாலசுப்பிரமணியம் சிவகுமாரனை பல நூறுபேர் பார்த்திருக்க , பட்டப்பகலில் அடித்து கடலில் தள்ளி கொலை செய்த காட்டுமிராண்டி அராஜகத்திற்கு எதிரான சாத்வீக கண்டன ஆர்ப்பாட்டத்தை எதிர்வரும் 4ம் திகதி பொலிஸ் அராஜகத்தால் படுகொலை புதன்கிழமை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் நடத்துவதற்கு ஜனநாயக மக்கள் முன்னணி முடிவுசெய்துள்ளது. இந்த ஆர்பாட்டத்தில் அரசியல் , இன , மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் , சமூக நிறுவனங்களும் ,

கோதாபயவின் “ரத்னா லங்கா நிறுவனம்” பொதுமக்களின் நிதியில் இயங்குகிறது!

கோதாபயவின் “ரத்னா லங்கா நிறுவனம்” பொதுமக்களின் நிதியில் இயங்குகிறது!

அரச நிறுவனங்களுக்கு பாதுகாப்பு வழங்கவெனக் கூறி 2006ம் ஆண்டு ஒக்டோபர் 23ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட ரத்னா லங்கா தனியார் பாதுகாப்பு நிறுவனமானது அரசாங்கத்தினால் நடத்தப்படும் மற்றுமொரு ராஜபக்ச சகோதரர்களின் மற்றுமொரு வர்த்தக நிறுவனம் எனவும் இந்த நிறுவனம் நாடாளுமன்றத்திற்குப் பொறுப்பு கூறாத நிறுவனம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ச , பாதுகாப்பு அமைச்சின் சட்ட ஆலோசகராகக் கடமையாற்றிய தற்போதைய சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ், இந்த நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் எனவும்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் பொ.மோகன் காலமானார்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் பொ.மோகன் காலமானார்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், மதுரையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பொ.மோகன்(60) வெள்ளியன்று மாலை சென்னையில் காலமானார். அன்னாரது இறுதி நிகழ்ச்சி சனிக்கிழமை (31.10.2009) மாலை 5மணியளவில் மதுரை தத்தனேரி மயானத்தில் நடைபெறுகிறது. இடதுசாரி கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட பொ.மோகன் இந்திய மாணவர் சங்கத்தில் தம்மை இணைத்து கொண்டு தனது அரசியல் பணியை துவக்கினார். 1973ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மேலப் பொன்னகரம் காஸ்ட்ரோ கிளையில் தனது அரசியல் பயணத்தை தொடர்ந்தார். சோசலிஸ்ட் வாலிபர்

தமிழ் மக்களின் தலைவிதியை யார் தீர்மானிப்பது?:வெகுஜனன்

தமிழ் மக்களின் தலைவிதியை யார் தீர்மானிப்பது?:வெகுஜனன்

இந்தியாவையும் அமெரிக்க மேற்குலகத்தையும் அடிமைத்தனமாக நம்பும் போக்குத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அதற்கு அப்பாலும் புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்து வரும் தமிழ் மேட்டுக்குடி உயர் வர்க்கத் தமிழர்கள் எறிந்து கொள்ளும் எத்தகைய கயிற்றையும் இலங்கைத் தமிழர்கள் பற்றிக் கொள்ள முடியாது

புலிகள் இயக்கத்தால் வடக்கிலிருந்து முஸ்லீம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு 19 ஆண்டுகள்

புலிகள்  இயக்கத்தால்  வடக்கிலிருந்து  முஸ்லீம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு  19 ஆண்டுகள்

வடக்கிலிருந்து முஸ்லீம்கள் இரண்டு மணிநேர அவகாசத்தில் தமது  சொந்த இடங்களை விட்டு வெளியேற்றப்பட்டு  இன்றுடன் 19 வருடங்கள் பூர்த்தியாகிறது. வடக்கிலிருந்து  பலவந்தமாக  வெளியேற்றப்பட்ட  தமிழ் பேசும்  முஸ்லீம்கள்  புத்தளம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வசித்துவருகின்றனர். இந்த நிலையில் தமது வெளியேற்றம் குறித்தும். இத்தினத்தை நினைவு கூறும் வகையில் முஸ்லிம்; சமாதான பேரவையின் புத்தளம்; கிளை ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் மாநாடு புத்தளம் முஸ்லிம் சமாதான செயலக கேட்போர் கூடத்தில் இன்று இடம் பெற்றது. சமாதான செயலகத்தின் பிராந்திய

தமிழ் மக்களுக்குரிய காணி எல்லைகள் மாற்றப்படுவதை நிறுத்தவும் : துரைரத்தினம்.

தமிழ் மக்களுக்குரிய காணி எல்லைகள் மாற்றப்படுவதை நிறுத்தவும் : துரைரத்தினம்.

மட்டக்களப்பு மாவட்டம் கிரான் மற்றும் வாகரைப் பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக எல்லைக்குள் மாற்ற மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சியை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரத்தினம் தமிழ் அரசியல்வாதிகளிடம் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தான் ஜனாதிபதிக்கும் தொலைநகல் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில், “வாகரைப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள புனானை கிழக்கு

திருப்பதி செல்லும் மகிந்த : பெருத்த செலவில் பாதுகாப்பு

திருப்பதி  செல்லும்  மகிந்த  :   பெருத்த  செலவில்  பாதுகாப்பு

                3 லட்சம் தமிழர்களை இலங்கை அரசு கம்பி வேலிக்குள் அடைத்து வைத்துள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்சே திருப்பதி கோவிலுக்கு நாளை வர திட்டமிட்டுள்ளார். இதன்படி அவர் சிறப்பு விமானம் மூலம் கொழும்பில் இருந்து ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு நாளை காலை 11 மணிக்கு வருகிறார். பின்னர் அவர் கார் மூலம் திருப்பதி மலைக்கு செல்கிறார். இதையடுத்து அவர் மதியம்

பிரெடெரிக்கா ஜென்ஸ்,முனாஸ் முஸ்தபா : மரண அச்சுறுத்தல்

பிரெடெரிக்கா ஜென்ஸ்,முனாஸ் முஸ்தபா : மரண அச்சுறுத்தல்

லசந்த விக்கிரமதுங்க  கொல்லப்பட்ட பின்னர் பல தடவை  எச்சரிக்ப்பட்ட  அவரது  பத்திரிகையான சண்டேலீடருக்கு  மறுபடியும்  எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது. நியூயோர்க்கைத் தளமாகக் கொண்ட ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் அமைப்பு, ‘சண்டேலீடரி’ன் பிரதம ஆசிரியர் பிரெடெரிக்கா ஜென்ஸ் மற்றும் செய்தி ஆசிரியர் முனாஸ் முஸ்தபா ஆகியோருக்கு ஏற்பட்டுள்ள மரண அச்சுறுத்தல் தொடர்பாக உரிய விசாரணைகள் நடத்தப்படவேண்டும் எனக் கோரியுள்ளது. ‘சண்டேலீடரி’ன் நிர்வாக ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க இந்த வருட ஆரம்பத்தில் அவரது அலுவலகத்திற்கு அருகில் சுட்டுக் கொல்லப்பட்டு விசாரணைகள் முடிவடையாத நிலையிலேயே

குஜராத் முதல்வர் நரேந்திரமோடிக்கு பன்றிக்காய்ச்சலாம். இந்தியாவில் இதுவரை 463 பேர் பலி.

குஜராத் முதல்வர் நரேந்திரமோடிக்கு பன்றிக்காய்ச்சலாம். இந்தியாவில் இதுவரை  463 பேர் பலி.

                குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு பன்றிக் காய்ச்சல் பரவியுள்ளது.மோடிக்கு பன்றிக் காய்ச்சல் தாக்கியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசு யாகியுள்ளனர். நேற்று மட்டும் 6 பேர் உயிரிழந்தனர்.மகாராஷ்டிராவில் ஒருவரும், கர்நாடகாவில் ஐந்து பேரும் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவில் மட்டும் இதுவரை 197 பேர் இறந்துள்ளனர். கர்நாடகத்தில் 117 பேர் உயிரிழந்துள்ளனர்.நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13,722 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, பன்றிக் காய்ச்சலுக்கு நாடு முழுவதும்

இலங்கையை வலம் வரும் சீன ரஷ்ய இந்தியக் கூட்டணி

இலங்கையை வலம் வரும் சீன ரஷ்ய இந்தியக் கூட்டணி

சிறீலங்கா அரசாங்கத்திற்கு எதிராக சர்வதேச ரீதியில் ஒப்பந்த முன்னெடுப்புக்களை மேற்கொள்வது குறித்து கலந்துரையாட வேண்டிய அவசியம் கிடையாது என்று சிறீலங்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் வி. லவ் ரொவ் தெவித்துள்ளார். சிறீலங்கா அரசாங்கத்திற்கு எதிராக எழுப்பப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் விடயத்தில் ரஷ்ய அரசாங்கம் சிறீலங்காவை காப்பாற்றுமா? என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: வடக்கில் மோதல்களை ·முடிவிற்கு கொண்டு வருவதற்காக சிறீலங்கா அரசாங்கம்

Page 1 of 2112345...1020...Last »