June, 2009

Page 1 of 1012345...10...Last »

இடதுசாரிகளும் பிரிவினைவாதிகளும் : வடக்கான் ஆதம்

இடதுசாரிகளும் பிரிவினைவாதிகளும் :<font color=red> வடக்கான் ஆதம்</font>

wardiary

தமிழ்ப் பேசும் மக்கள் ஏனைய தேசிய இனங்களுடன் இணைந்து சம உரிமையுடன் ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழ விரும்பியதை என்றைக்குமே மறுத்ததில்லை. அவ்வாறான விருப்புக்களெல்லாம் தொடர்ச்சியாக அதிகாரத்திலமர்ந்த பேரினவாதக் கட்சிகளால் நிர்மூலமாக்கப்பட்டு, வன்முறை சார்ந்த திட்டமிட்ட அடக்குமுறை தமிழ்பேசும் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட போதே அவர்கள் அவ்வன்முறையை எதிர்கொள்ள ஆயுதம் ஏந்தும் நிலைக்குள் தள்ளப்பட்டனர்...83 இனப்படுகொலை போன்ற ஒடுக்குமுறை வடிவங்கள் காலாவதியாகி விட வன்னி...

ஹோண்டுராஸ் அரசு கவிழ்க்கப்பட்டது;கவிழ்ப்பில் அமெரிக்காவுக்கு பங்கு:சாவேஸ் குற்றச்சாட்டு.

    ஹோண்டுராஸ் நாட்டின் இடதுசாரி ஆதரவு ஜனாதிபதி மானுவேல் ஸெலாயா ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டதுடன், கோஸ்டாரிகாவுக்கு பலவந்தமாக அனுப்பப்பட்டார். ஹோண்டுராஸ் ஆட்சிக் கவிழ்ப்பில் அமெரிக்காவுக்கு பங்கு உண்டு என்று வெனிசுலா ஜனாதிபதி சாவேஸ் கூறிய குற்றச் சாட்டை அமெரிக்கா மறுத்துள்ளது. ஜனாதிபதியின் ஆட்சிக் கால வரம்பை அகற்றும் முயற்சியில் ஈடுபட்ட ஸெலாயாவை ராணுவம் நாடு கடத்தியுள்ளது. ஞாயி றன்று அதிகாலையில் ஜனாதிபதி மாளிகையை ராணுவம் சுற்றி வளைத்தது. மாளிகைக் காவலர்களின் ஆயுதங்களைப் பறித்த ராணுவம், உறங்கிக் கொண்டிருந்த

இந்தியாவில் கேள்விக்குறியாகும் ஒருபால் உறவுக்கான அங்கீகாரம்.

  இந்தியாவில் ஒருபால் உறவை சட்டவிரோதமானது என்று கூறும் இந்திய அரசியல் சட்டத்தின் 377 ஆவது பிரிவை திருத்த வேண்டும் என்கிற கோரிக்கை குறித்து நாடுதழுவிய விவாதம் நடத்திய பிறகே இந்திய நடுவணரசு இறுதி முடிவெடுக்கும் என்று இந்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து, நாடு தழுவிய அளவில் செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகள் ஊடாக விவாதம் ஒன்றை நடத்த வேண்டும் என்றும், இந்திய நாடாளுமன்றத்திலும் இது குறித்த விவாதம்

இந்தியாவும் இலங்கையும் கடலின் கீழ் மின்சார கேபிள்களை அமைக்க திட்டம் .

  இந்தியாவும் இலங்கையும் பரஸ்பரம் உறவுகளை மேலும் வலுவூட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இந்த முயற்சியில் இந்தியாவிலிருந்து மின்சாரம் பெறுவதற்கென ஆசியாவிலேயே புதிய முறையிலான கடலின் கீழ் கேபிள் தொடர்புகளை ஏற்படுத்தும் சாத்தியத்தை ஆராய்வதற்கென புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் இரண்டு அயல் நாடுகளும் விரைவில் கைச்சாத்திட இருக்கின்றன. இதற்கான நகல் உடன்படிக்கை அங்கீகரிக்கப்பட்டு விட்டது என்றும் விரைவில் அது கைச்சாத்திடப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. தெற்காசிய மின்சார வலையமைப்பு ஒன்றை ஏற்படுத்திக் கொள்வதற்கான யோசனையை ஊக்குவிக்கும் ஈரிடை திட்டமொன்றை இந்தியாவிற்கும்

நவனீதம் பிள்ளை எமக்கு உதவியாக இல்லை! இலங்கை அரசு!

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையுடன் இலங்கை பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதை மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை கடினமாக்கியுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. அவருடைய அறிக்கைகள் இந்த நாட்டு மக்களின் ஆதரவு திரட்டும் விடயத்தை எமக்கு கடினமானதாக்கியுள்ளன. அத்துடன் அவரின் அலுவலகத்துடன் நெருக்கமாக செயற்படுவதையும் கடினமானதாக்கியுள்ளது. இலங்கைக்கான அவரின் விஜயத்தையும் கடினமானதாக்கியிருக்கிறது என மனித உரிமைகள் விவகார அமைச்சர் மஹிந்த சமரசிங்க பத்திரிகை ஒன்றிற்கு கூறியுள்ளார். “அரசாங்கம் தனது மக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் மனித உரிமைகள் பேரவையின்

பின் மார்க்ஸியமும் நவீனத்துவத்தின் அறவியலும் : அக்னீஸ் ஹெல்லருடன் உரையாடல்

பின் மார்க்ஸியமும் நவீனத்துவத்தின் அறவியலும் : <font color=red>அக்னீஸ் ஹெல்லருடன்</font> உரையாடல்

h1என்னை ஒரு மார்க்சியவாதியாக கட்சி ஒருபோதும் நம்பியதில்லை. நான் ஒரு கம்யூனிடும் அல்ல மார்க்சியவாதியும் அல்ல என்றுதான் அவர்கள் எப்போதுமே சொல்லி வந்தார்கள்.பிற்பாடு நான் உணர்ந்து கொண்டேன், அவர்கள் சரியாகத்தான் சொன்னார்கள்;. நான்தான் தவறாகக் கருதிக் கொண்டிருந்தேன். பாரம்பரியமான அர்த்தத்தின்படி ஒரு மார்க்சியவாதியாக நான் எப்போதும் இருந்ததில்லை

பெண்கள் பாலியல் அடிமைகளாக கடத்தப்படுவதற்கு எதிராக கூட்டு நடவடிக்கை.

  பெண்களை பாலியல் அடிமைகளாக கடத்துவதற்கு எதிராக கூட்டு நடவடிக்கை எடுக்க ஆசியாவின் போலீஸ் அதிகாரிகள் இணங்கியுள்ளனர். ஆஸ்திரேலியாவில் ஆசிய போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்ட ஒரு கூட்டத்திலேயே இதற்கான உடன்பாடு எட்டப்பட்டது. முன்னர் அறியப்பட்டிருந்ததை விட பெண்களை பாலியல் அடிமைகளாக வியாபாரம் செய்யும் தொழில் அதிக அளவில் திட்டமிட்டு நடத்தப்படுவதாக இந்த போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்ட மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது. பெரும்பாலும் தென்கிழக்கு ஆசியாவிலிருந்தே, ஆஸ்திரேலியாவுக்கு பாலியல் தொழிலுக்காக மக்கள் அடிமைகளாக கடத்தப்படுகிறார்கள் என்று கான்பெராவிலுள்ள

கந்தபஹாரி கைப்பற்றப்பட்டது

மேற்கு வங்க மாநிலத்தின் மேற்கு மிட்னப்பூர் மாவட்டத்தில் அடங்கிய கந்தபஹாரி என்ற இடத்தை மாவோயிஸ்ட் தீவிரவாதிகளிடம் இருந்து பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளனர். இப்பகுதியில் பழங்குடியினரின் ஆதரவுடன் நக்ஸலைட்டுகள ஆதிககம் செலுத்தி வந்தனர். பி.எஸ்.எஃப், சிஆர்பிஎஃப், சிறப்பு நக்ஸல் எதிர்ப்புப் படையினர் கொண்ட சுமார் 1,600 பேர் லால்கார், ராம்காரைத் தொடர்ந்து, கந்தபஹாரிக்குள் நுழைந்திருப்பதாகவும், இந்தப் பகுதி கடந்த 8 மாத காலமாக நக்ஸல் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும் காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் இருப்பிடத்தை

13வது திருத்தச் சட்டம் – ஒருபோதும் அனுமதியோம் : JVP

இலங்கையின் தேசியப் பிரசினைக்கான தீர்வு தொடர்பில் அரசாங்கத்தின் உண்மையான நிலைப்பாட்டை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று ஜே.வி.பி. அரசாங்கத்தைக் கோரியுள்ளது. 13 ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் அதிகாரப் பகிர்வை மேற்கொண்டு உள்நாட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் நினைத்தால் அதனை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்றும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது. ஜே.வி.பி.யின் விசேட செய்தியாளர் மாநாடு இன்று திங்கட்கிழமை கோட்டை சோலிஸ் ஹோட்டலில் நடைபெற்றபோதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. அங்கு

அம்பலத்தில் கருணாகரன் என்னும் லோகிததாஸ்: டி.அருள் எழிலன்

அம்பலத்தில் கருணாகரன் என்னும் லோகிததாஸ்: <font color=red>டி.அருள் எழிலன்</font>

lohidasநேற்று கேரளத்தின் மலையாள மனோரமா குழுமத்தின் வனித இதழில் மூத்த உதவி ஆசிரியர் ரஞ்சித் அழைத்து லோகிததாஸ் மாரடைப்பால் இறந்து போனதைச் சொன்னார் . அப்படியா? என்று கேட்டு விட்டு தொலைபேசி தொடர்பை துண்டித்து விட்டேன். ரஞ்சித் என்ன நினைத்தார் என்று தெரிய்வில்லை. நான் எனது பத்திரிகை பணி தொடர்பாக அடூர், எம்.டி.வி, சிபி மலையில், சீனிவாசன் என என்மனதுக்குப் பிடித்தவர்களை பேட்டி எடுக்க அலைந்த காலங்கள் ரஞ்சித்துக்குத்...

Page 1 of 1012345...10...Last »