தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் மே 13ந் தேதி நடந்தது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. இதில் திமுக 21 இடங்களிலும், காங்கிரஸ் 16 இடங்களிலும், விடுதலை சிறுத்தைகள் 2 இடங்களிலும், முஸ்லிம் லீக் ஒரு இடத்திலும் போட்டியிட்டன. அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக மதிமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் போட்டியிட்டன.
மக்கள் படும் இன்னல்களைக் கருத்திற்கொண்டு தற்போதைய மனிதப் படுகொலையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக விடுதலைப் புலிகள் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக உள்ளார்கள். இந்த மனிதாபிமான நெருக்கடியை முடிவிற்குக் கொண்டு வர ஒபாமா விடுத்த அழைப்பை கவனத்திற்கெடுக்க விடுதலைப் புலிகள் தயாராக உள்ளனர். சர்வதேச சமூகம் வெளிப்படையாகவும், பாரபட்சமற்ற முறையிலும் இப்போது செயற்பட வேண்டுவதோடு இரக்கமற்றமுறையிலும், கௌரவமற்ற முறையிலும் நடாத்தப்படும் மக்களைப் பாதுகாப்பதற்கான பொறுப்பபையும் அது எடுத்துக் கொள்ள வேண்டும். ஜனாதிபதி ஒபாமாவின் அழைப்பை ஏற்று இரத்தஆறு
விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜி11 உச்சிமாநாட்டில் உரையாற்றுகையில் கூறியுள்ளார். ஜோர்தானில் நடைபெற்ற இம்மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றியபோது “”எனது அரசாங்கம் எமது ஆயுதப் படைகளின் முழுமையான பங்களிப்புடன் முன்எப்போதும் இல்லாதவாறான மனிதாபிமான நடவடிக்கையொன்றை மேற்கொண்டிருந்தது. இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடித்துள்ளது என்பதை அறிவிப்பதில் நான் பெருமைடைகிறேன்” எனக்கூறியதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. பயங்கரவாதத்தை முற்றாக தோற்கடித்த ஒரு நாட்டின் தலைவராக தான் தாயகம் திரும்பப்போவதாகவும்
மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த போதிலும் வடக்கு கிழக்க மாகாண முதலமைச்சராகவிருந்த வரதராஜப் பெருமாள் அந்த அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததன் காரணமாகவே அந் நேரம் பதவியலிருந்த ஜனாதிபதியினால் அந்த அதிகாரங்கள் மீளப் பெறப்பட்டதாக வட மேல் மாகாண முதலமைச்சர் பேர்ட்டி பிரேமலால் திசாநாயக்கா இன்று மட்டக்களப்பில் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு நகர மண்டபத்தில் நடைபெற்ற மாகாண முதலமைச்சர்கள் மாநாட்டின் பின்னரான செய்தியாளர்கள் மாநாட்டில் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசியல்
பாதுகாப்பு வலயத்தை மீட்பதற்கு முன்னேறிச்சென்ற இராணுவத்தின் 58வது படைப்பிரிவும், 59வது படைப்பிரிவும் இணைக்கப்பட்டு, இடைப்பட்ட பிரதேசங்கள் மீட்கப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பாதுகாப்பு வலயத்தின் வடபகுதியிலிருந்து கரையோரப் பகுதியாக முன்னேறிவந்த 58வது படையணி, மறுபக்கத்தில் கரையோரமாக முன்னேறிவந்த 59வது படையணியுடன் இணைந்துள்ளதாகவும், விடுதலைப் புலிகள் கடல்மார்க்கமாகத் தப்பிச் செல்வதற்கான வழி அடைக்கப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 58வது படையணி தனது மீட்பு நடவடிக்கைகளை ஆரம்பித்து மூன்று நாட்கள் கடந்துள்ள நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை மாத்திரம் 4,300 பேர்
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது உறுதியாகி விட்டது.அடுத்தடுத்து இரண்டு தடவைகள் பிரதமராகி வரலாற்றில் இடம்பிடிக்கிறார் மன்மோகன் சிங். கடந்த முறையை விட இந்த முறை கூடுதல் தொகுதிகளையும் காங்கிரஸ் கூட்டணி பிடிக்கும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.254 இடங்களில் வெற்றி பெற்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்திற்கு வெளியே காங்கிரஸார் பெருமளவில் திரண்டு பட்டாசுகளைக் கொளுத்தியும், ஆட்டம் பாட்டத்துடனும் வெற்றியைக் கொண்டாடினர்.காங்கிரஸ் அலுவலகம் உள்ள பகுதி திருவிழாக் கோலம் பூண்டுள்ளது.
இலங்கையில் தமிழர்கள் பட்டினியால் சாவதை தடுக்கும் வகையில் சமைத்த உணவு, காய்கறிகள், தண்ணீர் பாக்கெட்டுகளை விமானம் மூலம் முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு போட இராணுவம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். இதுவரை செய்த வரலாற்று பிழைகளுக்கு பிராயசித்தமாக இந்த மனிதாபிமான நடவடிக்கையை உடனே மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இலங்கை இராணுவம் இலங்கைத் தமிழர்கள் மீதான இனவெறித்
மாநிலக் கட்சிகளையும், சிறிய கட்சிகளையும் மூன்று பிரிவாகப் பிரிக்கலாம். காங்கிரஸின் ஆதரவைப் பெறத் தயாராக இருக்குமே தவிர எந்தக் காரணத்தைக் கொண்டும் காங்கிரஸின் கூட்டணியில் சேராத கட்சிகள் முதல் பிரிவைச் சேர்ந்தவை. இடதுசாரிகள், தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், சிவசேனை, அகாலிதளம், அசாம் கண பரிஷத், இந்திய தேசிய லோக் தளம், பகுஜன் சமாஜ் கட்சி போன்றவை இந்தப் பிரிவைச் சேர்ந்தவை. பாரதிய ஜனதாவுடன் சேர விரும்பாத கட்சிகள் அடுத்த பிரிவினர். தேசிய மாநாட்டுக் கட்சி,
காங்கிரஸ் ஆட்சி அமைக்க நாங்கள் ஆதரவு அளிக்கமாட்டோம். அதுபோல் பாஜக ஆட்சி அமைக்க இடம் தர மாட்டோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலர் டி. ராஜா தெரிவித்தார். காங்கிரஸ், பாஜகவுக்கு மாற்றாக மூன்றாவது அணி ஆட்சி அமைக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். தில்லியில் செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார். நாங்கள் ஆட்சி அமைப்போம் என்ற முழு நம்பிக்கை உள்ளது.தொலைக்காட்சி சேனல் மற்றும் பத்திரிகைகளில் வந்துள்ள வாக்குக் கணிப்பு, கருத்துக் கணிப்பு
காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு ஆதரவு இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திட்டவட்டமாக அறிவித்துள்ளது.மத்தியில் மதவாத பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசு அமைவதை தடுக்க, இடதுசாரிகள் ஆதரவு தெரிவிப்பார்கள் என்று காங்கிரஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் ராஜா இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், நாங்கள் எந்த நிலையிலும் காங்கிறஸ் அரசுக்கு ஆதரவு தெரிவிக்க மாட்டோம். காங்கிரஸ் அல்லது அல்லது பாரதிய ஜனதா தலைமையிலான அரசுக்கு மாற்றாக, மூன்றாவது அணி