ஐக்கிய நாடுகள் சபை(UN) இன்று வெளியிட்டுள்ள செய்மதி ஒளிப்படமொன்றில் அப்பாவிப் பொதுமக்கள் மீது சிறீ லங்கா அரசு விமானக் குண்டு வீச்சு நடாத்தியிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளக அறிக்கை ஒன்றுடன் இணைக்கப்பட்டுள்ள இவ்வொளிப்படத் தொகுப்பானது, மனித உரிமைகளுக்கான சர்வதேசச் சட்டங்களை சிறீ லங்கா அரசு மீறியுள்ளதையும் போர்க்குற்றங்கள் புரிந்திருப்பதையும் நிறுவத்தக்க ஆதாரங்கள் உள்ளதாக மனித் உரிமை வாதிகள் தெரிவிக்கின்றனர் என இங்கிலாந்திலிருந்து
போர் நின்றால் கருணாநிதிக்கு தேர்தல் நேரத்தில் நல்லது , போர் தொடர்ந்தால் ஜெயலலிதாவுக்கு தேர்தல் நேரத்தில் நல்லது , என்றுதான் இவர்கள் இப்போது நினைக்கிறார்களோ என்று தோன்றுகிறது. ஒருவர் பாதிப்புகளில் இருந்து தப்பித்துக் கொள்ள நாடகம் ஆடுகிறார். இன்னொருவர் பாதிப்பை ஏற்படுத்த நாடகம் ஆடுகிறார். இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்ற ஒன்று இன்று இருக்கிறதா? என்று தெரியவில்லை.
“உலகில் உள்ள அனைத்துத் தொலைக்காட்சிச் சேவைகளும் இப்போது எமது நாட்டின் மீதே கவனத்தைத் திருப்பியுள்ளன. செய்மதி தொழில்நுட்பத்தின் உதவியுடன் வன்னி நிலைமைகளை உலகம் முழுவதும் பார்க்கக்கூடியதாகவிருக்கின்றது. இதனைப் பார்ப்பதற்கு சிறப்பு அவதானிகளை அனுப்பிவைக்க வேண்டிய தேவை என்ன இருக்கின்றது? இதனை ஆராய்வதற்கு சிறப்புப் பிரதிநிதிகள் எதற்காக? உலகம் முழுவதற்குமே அங்கு என்ன நடைபெறுகின்றது என்பது தெரியும். ஆனால், இதில் ஆச்சரியப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் அனைத்துலக இராஜதந்திரிகள் பலர் இவை எதனையும் தெரியாதவர்களாகவே இருக்கின்றார்கள். இவ்வாறு கண்மூடித்தனமாக
இலங்கை அரசின் மனிதப்படுகொலைகளைக் கண்டித்தும், அனைத்து ஒடுக்கு முறைகளுக்கெதிராகவும், நடத்தும் மேதின ஆர்ப்பாட்ட நிகழ்வு! 01. மே. 2009 வெள்ளி நேரம் பகல் 11.30 மணி இடம்: Place des Fêtes (Métro : Place des Fêtes) _________________________________________ இலங்கை அரசின் மனிதப் படுகொலைகளைக் கண்டித்து … அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக … ஒடுக்கப்பட்டோரின் குரலாய் … தோழமையோடு அழைக்கிறோம்! Vendredi 01 mai 2009 à 11h30 Condamnons les massacres des Peuples
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களின் நிலைகுறித்து ஆராய்வதற்காக அரச சார்பற்ற அமைப்புகள் நேற்று புதன்கிழமை காலை நடத்திய சந்திப்பில் அனைத்து தமிழ்க்கட்சிகளது பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் விடுத்த அழைப்பை ஏற்றே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு பிரதிநிதிகள் உட்பட அனைத்து தமிழ்க் கட்சிகளது முக்கியஸ்தர்களும் இதில் கலந்துகொண்டனர். இந்தியாவிலிருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதியான திருமதி. இராமலிங்கமும் இதில் பங்கேற்றார். வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா வந்துள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தே இந்தச்சந்திப்பில் ஆராயப்பட்டது. காலை 10.30 மணிமுதல்
விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதல்களை முடிவுக்குக் கொண்டுவந்து, மோதல்களுக்குள் சிக்குண்டிருக்கும் மக்களை மீட்க மனிதநேயப் பணியாளர்களை அனுமதிப்பது தொடர்பில் இணக்கப்பாடொன்றை ஏற்படுத்துவதில் தாம் தோல்வியடைந்திருப்பதாக பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். “இதற்கு நாம் கடுமையாக முயற்சித்தோம். மீண்டும் மீண்டும் வலியுறுத்தியிருந்தோம். ஆனால், மனிதநேயப் பணியாளர்களை அனுமதிப்பதும் தடுப்பதும் எமது நண்பர்களின் கையில் உள்ளது” என இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் கவுச்னர், இலங்கை வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்த பின்னர் ஊடகவியலாளர்களிடம்
ஐக்கிய நாடுகள் அமைப்பைச் சேர்ந்த 13 உறுப்பினர்கள் தமது விருப்பத்திற்கு மாறாகத் தடுத்துவைக்கப்பட்டிருப்பது “ஏற்றுக்கொள்ளப்பட” முடியாததென்று கண்டனம் தெரிவித்துள்ள ஜோன்ல் ஹோல்ம்ஸ், பலதடவை வேண்டுகோள் விடுக்கப்பட்ட போதும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார். போர் நடக்கும் பகுதியில் சிக்குண்டுள்ள 50 ஆயிரம் சிவிலியன்களை விடுவிப்பதற்கான முயற்சிகளைத் தாம் மேற்கொள்வதற்குப் போர் நிறுத்தம் அவசியம் என்றும் அதற்கு இலங்கை அரசு இணங்கவில்லை என்றும் தெரிவித்தார். வெளியேறும் பொதுமக்கள் அரசால் நிர்வகிக்கப்படும் முகாம்களில் முடக்கப்பட்டுள்ளதாகவும், இம் முகாம்களில் சிறீ
வன்னியில் இராணுவ முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படும் பகுதியில் கடந்த 24 மணிநேரத்தில் விடுதலைப் புலிகளால் 7 தற்கொலைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் படைத்தரப்புக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். இந்த தற்கொலைத் தாக்குதல்களுக்கு மத்தியிலும் தமது முன்னகர்வு முயற்சியை தீவிரப் படுத்திய படையினர் இரட்டைவாய்க்கால் பகுதியில் விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்டுள்ள சுமார் 700 மீற்றர் அளவான பாரிய மண்மேட்டினை கைப்பற்றியுள்ளனர் என்றும் அவர் கூறினார். தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய
இலங்கையில் போர் நடக்கும் பகுதியிலிருந்து வெளியேற முயன்ற பொதுமக்களில் குறைந்து 200 பேரை விடுதலைப் புலிகள் சுட்டுக் கொன்றதாக, தற்போது இராணுவத்திடம் சரணடைந்துள்ள விடுதலைப் புலிகளின் முன்னாள் பேச்சாளர் குற்றம் சாட்டியுள்ளார். தயா மாஸ்டர் என்றழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி அவர்கள், விடுதலைப் புலிகள் பொதுமக்களை பணயக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாகவும், பலவந்தமாக 13 வயது சிறார்களையும் அவர்கள் படைகளில் சேர்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இலங்கை அரசின் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள ஒரு ஒளிநாடாவில் இருக்கும் பேட்டியிலேயே அவர் இந்தக்
இலங்கையில் நடைபெறுவது மனிதப்பேரவலம் என இன்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் சனல் 4 தொலைக்காட்சியின் செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். போர் நடக்கும் பகுதிக்குள் சிக்குண்டுள்ள மக்களும், அதற்கு வெளியில் முகாம்களிலுள்ள மக்களும் மனிதப்பேரவலத்திற்குள் சிக்குண்டுள்ளனர் எனக்குறிப்பிட்டார். ஊடகங்களுக்கான அனுமதி மட்டுப் படுத்தப்பட்டிருக்கின்றன, மனிதாபிமான தன்னார்வ அமைப்புக்கள் தடைசெய்யப்பட்டிருக்கின்றன என மேலும் தெரிவித்த அவர், உதவி அமைப்புக்கள் உடனடியாக அனுமதிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார். உதவி அமைப்புக்களை கட்டாயமாக