24.01.2009. கோல்டன் குளோப் விருதுகளை குவித்த ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருதுக்காக 10 பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன. மும்பையை சேர்ந்த குடிசை பகுதி இளைஞர் ஜமால் மாலிக், டிவி பரிசு போட்டியில் கோடி ரூபாய் வென்று, தொலைத்த அன்பை தேடுவதே ஸ்லம்டாக் மில்லியனர் கதை ஆகும். இந்த திரைப்படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், ஹாலிவுட்டில் உள்ள அயல் நாட்டு பத்திரிகையாளர்கள் வழங்கும் கோல்டன் குளோப் விருதை வென்றார். இந்த விருதை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையும்
ஏ.ஆர் ரகுமானுக்கு கோல்டன் குளோப் விருதை பெற்றுக் கொடுத்த படமான “குப்பத்து நாய் லட்சாதிபதி” என்ற படம்இந்திய குப்பத்து சிறுவர்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டது. சர்வதேச ரீதியாக பல விருதுகளை பெற்றுக் கொண்ட இப் படம் ஒஸ்காரிலும் சில விருதுகைள பெறுலாம் என கருதப்படுகின்றது. ரொரண்ரோ திரைப்படவிழாவில் பலரது பாராட்டைப் பெற்ற படம். அத்துடன் சிறந்த மக்கள் தெரிவு விருதையும் பெற்றுக் கொண்ட படம்.
ஓஸ்காரில் பத்து...
23.01.2009. இன்று காலை மற்றுமொரு ஊடகவியலாளர் தாக்கப்பட்டுள்ளார். ரிவிர பத்திரிகையின் பிரதம ஆசிரியர் உபாலி தென்னக்கோன் இன்று தாக்கப்பட்டதாக அப்பத்திரிகையின் அலுவலக உத்தியோகத்தர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களினால் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று காலை அவரும் அவரது மனைவியும் பயணித்துக் கொண்டிருந்த வேளை, இனந்தெரியாத சிலர் இவர்களது காரைத் தாக்கியுள்ளனர். காருக்குப் பலத்த சேதம் ஏற்பட்டிருந்த போதிலும் உபாலி தென்னக்கோன் உயிர் ஆபத்து ஏதுமின்றி தப்பித்துள்ளதாகவும் அவர் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.