உலகின் ஆறாவது பணக்கார நாடான ஐஸ்லாந்தில், இடம்பெற்ற வெற்றிகரமான மக்கள் புரட்சியானது, வரவிருக்கும் புரட்சிகளின் முன்னறிவித்தலா? நிதி நெருக்கடியால் ஐஸ்லாந்து அரசாங்கம் கவிழ்ந்தது, நிச்சயமாக ஒரு தொடக்கம் தான். சர்வதேசம் தனது கவனத்தை ஒபாமாவின் பதவியேற்பு வைபவத்தின் பக்கம் திசை திருப்பிய வேளை தான், அந்த அதிசயம் அரங்கேறியது. செல்வம் கொழித்த மேற்கு ஐரோப்பிய நாடொன்றில், மக்கள் போராட்டம் ஒரு அரசாங்கத்தையே மாற்றியது என்பதையோ, அரச அதிகாரத்தை மக்கள்...
இலங்கையில் தமிழ் மக்கள் மோதலில் பலியாவதை கண்டிக்கும் வகையில் இன்று சனிக்கிழமையன்று லண்டனில் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. பல்லாயிரக்கணக்கானோர் அதில் கலந்துக் கொண்டனர். லண்டன் நகரின் முக்கிய வீதிகளில் நடந்த இந்த பேரணியில் எதிர்பார்த்ததை விட அதிகமாக ஆட்கள் நிறைந்துவிட்டதால், அந்தப் பாதையில் வாகனப்போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு விட்டது. பெண்கள், சிறு குழந்தைகள், முதியவர்கள் என அனைத்துத் தரப்பினரும் கூடியிருந்தனர். கலந்து கொண்டவர்கள் அனைவரும் இலங்கை நிலவரங்கள் குறித்து மிகவும் கவலையுடன் காணப்பட்டார்கள். இலங்கையில் இனப்படுகொலை நிறுத்தப்பட
நாகேஷ் இறந்துவிட்டார். மீள கட்டியெழுப்ப முடியாத ஒரு சகாப்தம் அவருடன் முற்றுப் பெறுகிறது. தமிழ்த் திரையுலகின் வற்றாத நகைச்சுவையின் பேரூற்று அவர். மக்கள் திலகம், நடிகர் திலகம் என்ற இரு பிரமாண்டங்களைக் கடந்து தனது பிரகாசத்தை தக்கவைத்துக் கொண்ட மகா கலைஞன். நாகேஷின் இயற்பெயர் குண்டுராவ். அப்பா கிருஷ்ணராவ், அம்மா ருக்மணி. சமூகத்தில் பெயர் தெரியும் அளவுக்கு முன்னேறிய பிறகே வீட்டிற்கு வருவேன் என்று கூறிவிட்டு நாகேஷ் வந்து இறங்கிய இடம், சென்னை. ரயில்வேயில் முதலில் சிறிய
31.01.2009. வடபகுதியில் நடைபெறும் மோதல்கள் குறித்த செய்திகளை வெளியிடுவதற்கு ஊடகங்கள் மீது விதிக்கப்பட்டிருக்கும் தடையை அரசாங்கம் நீக்கவேண்டுமென எல்லைகளற்ற பத்திரிகையாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. மோதல்கள் தொடர்பான செய்திகளை உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்கள் சுதந்திரமாக வெளியிடுவதற்கு அரசு அனுமதிக்கவேண்டுமென பாரிஸை தளமாகக்கொண்டியங்கும் எல்லைகளற்ற பத்திரிகையாளர் சங்கம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதேவேளை, இலங்கையில் ஊடகங்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவரவேண்டுமெனவும் அந்த அமைப்பு அரசை கேட்டுக்கொண்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக எல்லைகளற்ற பத்திரிகையாளர் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள
31.01.2009. முல்லைத்தீவில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் தற்போது 4 இலட்சம் பேர் சிக்கியுள்ளனர் என்று தெரிவித்துள்ள ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜயலத் ஜயவர்த்தன இவர்களில் 2.000 பேர் கர்ப்பிணித் தாய்மார் என்றும் தகவல் வெளியிட்டுள்ளதுடன்;வன்னியில் சிக்கியுள்ள பொதுமக்களின் நிலை குறித்த தமது ஆழ்ந்த அக்கறையை கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாடு ஒன்றில் வெளியிட்ட இவர்,அப்பாவிகளில் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் விதமாக நடந்துகொள்ளவேண்டாம் என்று இரு தரப்பினரையும் கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்தார். “மோதலுக்குள் சிக்குண்டுள்ள பொதுமக்களின்
சென்னை: இலங்கை அரசு பிரபாகரனை பிடித்தவுடன் இந்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும். பிரபாகரனை இந்தியாவில் வைத்து விசாரித்து தண்டனை வழங்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரியுள்ளது. சட்டசபையில் இன்று ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது காங்கிரஸ் துணைத் தலைவர் யசோதா பேசுகையில், எங்கள் தலைவர் ராஜீவ் காந்தியை நாங்கள் பலி கொடுத்திருக்கிறோம். சிலர் அதை கூட விமர்சனம் செய்து வருகிறார்கள். இப்படி ஒரு நிலைமை அவர்களுக்கு வந்தால் தான் வலி தெரியும். ஒரு
கொழும்பு: இலங்கையில் தமிழர்களுக்கு பாதுகாப்பான இடம் என்று எதுவுமே இல்லை என ஐநா. தெரிவித்துள்ளது. இலங்கை வன்னிப் பகுதியில் தமிழர்களுக்கும் புலிகளுக்கும் எதிராக நடக்கும் கொடூரமான தாக்குதல்களை 48 மணிநேரம் நிறுத்துவதாகவும் அதற்குள் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள தமிழர்கள் வெளியேறிவிட வேண்டும் என்றும் இலங்கை அதிபர் ராஜபக்சே அறிவித்திருந்தார். இந்நிலையில் இலங்கையில் உள்ள ஐநா மனிதாபிமான அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோடன் விஸ், இலங்கையில் தமிழர்களுக்குப் பாதுகாப்பான பகுதி என்று எதுவுமே இல்லாத நிலையில் அவர்கள் வெளியேறி
கடற்பரப்பில் நங்கூரமிட்டிருந்த கடற்படையினரின் படகுகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த முற்பட்ட புலிகளின் தற்கொலைப் படகொன்று இன்று அதிகாலை தாக்கியழிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, முல்லைத்தீவு கடற்பரப்பின் பாதுகாப்பு கடற்படையினரால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.அதற்காக கடற்படையினரின் ரோந்துப் படகுகள் மற்றும் டோராப் படகுகள் போன்றன பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கடற்படையின் பேச்சாளர் டீ.கே.பி.தசநாயக்கா தெரிவித்தார். விடுதலைப் புலி உறுப்பினர்கள் கடல்வழியாகத் தப்பிச் செல்லாதிருக்கும் வகையிலேயே இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இது தொடர்பில் கடற்படையின் பேச்சாளர் தொடர்ந்தும் கூறியதாவது முல்லைத்தீவு
30.01.2009. ஊடகப் படுகொலைகளை நிறுத்துக ! ஊடகத்தை சுதந்திரமாக விடுங்கள்! அரங்கக்கூட்டம் லசந்த விக்கிரமதுகங்க நினைவாக சிறிலங்காவில் நடக்கும் ஊடகப் படுகொலை உடனடியாக நிறுத்தக்கோரும் ஆதரவுக்கூட்டத்திற்கு தமிழ்ச் சமூக ஊடகங்களையும் ஆதரவாளர்களையும் ஒத்துழைப்பு நல்கும்படி ‘சுழியப்பகுதி” என்னும் போரற்ற இலங்கைக்கான கூட்டமைப்பு வேண்டுகோள் விடுக்கிறது. Saturday, January 31 2009, 3:00 to 6:00 pm Scarborough Civic Center Scarborough (Public Transit: subway to Kennedy, then L.R.T. to Scarborough Town Centre)
இலங்கையில் அப்பாவி தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் படுகொலை செய்யப்படுவதை கண்டித்தும், அங்கு போரை நிறுத்தக்கோரி மத்திய அரசை வலியுறுத்தியும் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற சட்டக்கல்லூரி மாணவர்கள் 40 பேர் கைது செய்யப்பட்டனர். இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு தரப்பினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில வாரங்களாகவே தமிழகம் முழுவதும் மாணவர்கள் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். ஈழத் தமிழர்களுக்காக சென்னையில் நேற்று முத்துக்குமரன் என்ற இளைஞர்