தத்துவம் சார்ந்த தமது தொலை நோக்கின் அடிப்படையிலும், நிலவிய சமூகத்தில் தாம் பெற்ற அதிருப்தியின் அடிப்படையிலும் தத்துவவாதிகள் பல சமங்களில் சீரழிந்த சமூகத் திட்டங்களுக்கும் அரசியலுக்கும் விமர்சனமற்றுத் தமது ஆதரவை வழங்கியிருக்கிறார்கள். காட்டுமிராண்டித்தனமானதும் ஒடுக்குமுறைத்தன்மை..
இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து இன்று பிரதமர் அளித்துள்ள வாக்குறுதியில் புதிதாக ஒன்றுமில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிகள் கூறியுள்ளனர். அணு சக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறுவோம் என்ற பிரதமர் மன்மோகன் சிங்கின் வாக்குறுதி குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத்திடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, “பிரதமரின் வாக்குறுதியில் புதிதாக ஒன்றுமில்லை. ஆனால், எங்கள் அரசியல் தலைமைக் குழுவின் நிலைப்பாடு மிகத்
இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துதற்கு முன் பன்னாட்டு அணு சக்தி முகமையுடனும், அணு தொழில்நுட்ப வணிகக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இறுதி முடிவு எடுக்க அரசை அனுமதிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். டெல்லியிலுள்ள தனது இல்லத்தில், வெப்ப நிலை மாற்றத்திற்கான பிரதமரின் பேரவை தயாரித்துள்ள, “வெப்ப நிலை மாற்றம் மீதான தேச நடவடிக்கைத் திட்டம்” என்ற திட்ட நடைமுறை அறிக்கையை வெளியிட்டப் பிறகு, அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக எழுந்துள்ள
காத்மண்டு, ஜூன் 29- நேபாளத்தில் மன்ன ராட்சிக்குப் பின் அமைய வுள்ள முதல் மக்கள் அரசை மாவோயிஸ்ட் கட்சி அமைக்க வுள்ளது. மாவோயிஸ்ட் தலைவர் பிரச்சந்தா பிரத மராகிறார். நேபாள காங்கிரஸ் தலைவர் கிரிஜா பிரசாத் கொய்ராலா பிரதமர் பத வியை விட்டு விலகி னார். இவர் மன்னராட்சி மீது மட்டற்ற பிரேமை கொண் டவர் என்பது ஊரறிந்த தகவல். மன்னராட்சி ஒழிப்பு தீர்மானம் அரச மைப்பு சட்டமன்றத்தில் நிறைவேறும் வரை மன்ன ராட்சிக்கு குரல் கொடுத்து
இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கேந்திர முக்கியத்துவம் மிக்க இடமாகிய விடத்தல்தீவு பகுதி வரை இராணுவம் முன்னேறியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம அறிவித்திருக்கின்றது. விடுதலைப் புலிகளின் கடும் எதிர்த் தாக்குதல்களுக்கு மத்தியில் இராணுவத்தினர் மன்னார் – பூனகரி பிரதான வீதியில் 12 கிலோ மீட்டர் தூரத்தைக் கைப்பற்றியிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார கூறியிருக்கின்றார். உயிலங்குளம் – அடம்பன், உயிலங்குளம் – ஆண்டான்குளம் ஆகிய விடுதலைப் புலிகளின் முக்கிய விநியோக வீதிகள்
எதிர்வரும் ஜூலை பத்தாம் திகதி திட்டமிட்டபடி பொது வேலை நிறுத்தம் நடக்குமெனவும் 10 இலட்சம் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் குதிப்பரெனவும் தெரிவித்திருக்கும் தேசிய தொழிற்சங்க மத்திய நிலைய பிரதம அமைப்பாளரும் ஜே.வி.பி.பாராளுமன்ற உறுப்பினருமான டி.லால்காந்த, ஜனாதிபதி தொழிற்சங்கங்களை வைத்துக்கொண்டு எமது போராட்டத்தை திசைதிருப்ப முயற்சிப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் முன்வைத்திருக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதைவிடுத்து கண்துடைப்புப் பேச்சுவார்த்தைக்கு நாம் போய் ஏமாறப் போவதில்லை எனவும் நேற்று ஞாயிற்றுக்கிழமை அவர் தெரிவித்தார். ஜனாதிபதியின் அழைப்பு தொழிற்சங்கங்களுக்கிடையில் காணப்படும்
இலங்கை அரசாங்கம் கடந்த சில வாரங்களில் எரிபொருள் விலை மற்றும் போக்குவரத்து கட்டணத்தில் முன்னெப்போதும் இல்லாதளவு அதிகரிப்பை அறிவித்துள்ளமை ஏற்கனவே ஆசியாவிலேயே உயர்ந்த மட்டத்தில் இருந்த கிட்டத்தட்ட 30 வீதம் பணவீக்க வீதத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளதோடு, ஆழமான சமூக அமைதியின்மையினையும் தூண்டிவிட்டுள்ளது. பூகோள ரீதியில் காணப்படும் எண்ணெய் மற்றும் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்புடன் சேர்த்து தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான அரசாங்கத்தின் பிற்போக்கு யுத்தத்திற்கான அதன் தொடர்ந்தும் அதிகரித்துவரும் செலவின் காரணமாக சாதாரண உழைக்கும்
ஆயிரத்திற்கு மேற்பட்ட இந்திய ராணுவத்தினரும் உலங்கு வானூர்திகள், கப்பல்கள் போன்றனவும் விரைவில் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்படும் என இந்திய இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்ததாக AFP செய்திநிறுவனம் தெரிவித்துள்ளது. 3000 துருப்புக்களையும், மூன்று யுத்தக் கப்பல்களையும், அடுத்த மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள தெற்காசிய நாடுகளின் உச்சி மாநாட்டிற்கு முன்னதாக அனுப்பவுள்ளதாக புதுடெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. புலிகளின் தாக்குதலுக்கான சாத்தியப் பாட்டைக் கருத்தில் கொண்டே இந்த முன்நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக மேலும் தெரிவித்த புதுடெல்லி பாதுகாப்பு வட்டாரங்கள், இலங்கை சர்வதேச விமானநிலையம் பூட்டப்படும்
சிறிலங்கா அரசாங்கம் கிழக்கில் நடத்திய பரீட்சார்த்த அரசியல் நடவடிக்கையைப் போன்று வடக்கிலும் நடத்தி அங்கும் ஒரு பிள்ளையானை உருவாக்க வேண்டும் என்பதில் இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் “லக்பிம” ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் “லக்பிம”வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:பாதுகாப்பு மற்றும் ஏனைய விவகாரங்கள் தொடர்பான தொடர்புகளைப் பேணுவதற்கு சிறிலங்காவுடன் இந்தியா ஒரு உடன்பாட்டைச் செய்துள்ளது.அதிகாரபூர்வமற்ற ஒரு செயற்பாட்டை இந்திய மற்றும் சிறிலங்கா அரசுகள் இது தொடர்பில் செய்துள்ளன என்று வெளிவிவகார அமைச்சக அதிகாரிகள்
ஞாயிறு, 29 ஜூன் 2008( 17:49 IST ) ஆந்திராவில் வீரர்கள் சென்ற படகு மீது நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் அந்த படகு அணையில் மூழ்கியதால், அதில் பயணம் செய்த 40 போலிசார் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது!மலிகுடா பகுதியில் உள்ள சித்ரகொண்டா அணைப் பகுதியில் நக்சல்களை தேடி அழிக்கும் பணியில் ஈடுபட்டுவரும் 50 போலிசார் படகு சென்றுக் கொண்டிருந்தபோது, அவர்கள் மீது நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தியதாகவும், அதில் படகு தண்ணீர் மூழ்கியதாகவும் மால்கன்கிரி