வாசகர் சுவர்

Page 1 of 1312345...10...Last »

ஆதாரங்கள் இருந்தும் அசையாமல் நிற்கும் அனைத்துலகம் : இதயச்சந்திரன்

எத்தனையோ இன அழிப்பு ஆதாரங்களை சனல் 4 தொலைகாட்சி முன் வைத்தாலும், இந்த சர்வதேச சமூக ஸ்தாபனங்கள் செவிமடுப்பது போல் தெரியவில்லை. இன அழிப்பிற்கான விசாரணைகளை ,கொலையாளிகளே நடாத்த வேண்டுமென விடாப்பிடியாக இருக்கிறது. தேசியத் தலைவரின் மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்ட காட்சிகள் முன்பு வெளிவந்த நிலையில், தற்போது அவர் கொல்லப்படுவதற்கு முன்பாக சிங்கள இராணுவத்தின் பிடியில் இருந்த புகைப்படமும் வெளியாகியுள்ளது. இதேபோன்று கேணல் ரமேசின் புகைப்படங்கள், காணொளிக் காட்சிகள் வெளி வந்தன. சரணடைந்த நிலையில் தோழர்

பாலசந்திரன் படுகொலை தமிழின அழிப்பு நோக்கத்தை உறுதி செய்கிறது – சீமான் அறிக்கை

தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் இளைய மகன், பன்னிரண்டு வயதே ஆன சிறுவன் பாலசந்திரன், சிங்கள இராணுவத்திடம் உயிருடன் பிடிபட்ட நிலையிலேயே சுட்டுக் கொல்லப்பட்டார் என்கிற உண்மை இன்று உலகின் மனசாட்சியின் முன் பட்டவர்த்தனமாக மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.  ஈழத் தமிழினத்தை திட்டுமிட்டு அழித்தொழிக்கும் போரை இந்தியா உள்ளிட்ட தெற்காசிய வல்லாதிக்கங்களின் துணையோடு மகிந்த ராஜபக்சவின் சிங்கள பெளத்த இனவாத அரசு தொடுத்தபோது, அதனை தனது வீரமிக்க தமிழீழ விடுதலைப் புலிப் படையைக் கொண்டு எதிர்த்து களமாடிய தலைவர் வேலுப்பிள்ளை

விஸ்வரூபம் : அடிப்படை வாதிகளுக்கு தீனிபோடும் சினிமா மாயை

விஸ்வரூபம் : அடிப்படை வாதிகளுக்கு தீனிபோடும் சினிமா மாயை

விஸ்வரூபம் என்ற அமரிக்க ஆதரவு பொழுதுபோக்கு சினிமா குறித்த மிகைப்படுத்தப்ப்பட்ட சர்ச்சைகள் தமிழகத்தின் நாளந்த பிரச்சனைகளில் ஒன்றாகிவிட்டது. சினிமாவோடு வாழ்க்கை நடத்திகின்ற தமிழக மக்களின் அறியாமையை உணர்ச்சி மயத்தை வியாபாரப் பெரு முதலைகள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இன்று விஸ்வரூபம் என்ற சினிமாவை முன்வைத்து இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் இந்து அடிப்படை வாதிகளும் மோதிக் கொள்கிறார்கள். இந்த மோதலை தமிழக அரசே திட்டமிட்டு உருவாக்குகிறதா என்ற சந்தேகங்கள் உருவாக ஆரம்பித்துள்ளன. இப்போது மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே இத்திரைப்படம் குறித்து கருத்து

தென்சீனக் கடலில் சீனாவின் நகர்வு என்ன? : இதயச்சந்திரன்

தென்சீனக் கடலில் சீனாவின் நகர்வு என்ன? : இதயச்சந்திரன்

3.5 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட தென்சீனக் கடலின் முழுமையான ஆதிபத்திய உரிமையை சீனா ஏன் கோருகிறது?. இந்துமகா சமுத்திரம் இந்தியாவின் கடல் அல்ல என்று கேலி செய்யும் சீனா, தென்சீனக் கடல் தனதென்று ஏன் கூற முற்படுகிறது?.

இந்தியாவுக்கு எதிரான இந்து பயங்கரவாதச் செயல்களை முறியடிப்போம் : சல்மான் குர்ஷித்

இந்தியாவுக்கு எதிரான இந்து பயங்கரவாதச் செயல்களை முறியடிப்போம் :  சல்மான் குர்ஷித்

இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதச் செயல்களை முறியடிப்போம். இதில், எந்த சந்தேகமும் இல்லை.இவ்வாறு, சல்மான் குர்ஷித் கூறினார்.அவர் மேலும் பேசும்போது, இந்தியாவில், இந்து பயங்கரவாதம் செயல்படுகிறது. மகாராஷ்டிரா மாலேகானில் நடந்த குண்டு வெடிப்பு மற்றும் பாகிஸ்தான் செல்லும், சம்ஜோதா எக்ஸ்பிரசில் நடந்த குண்டு வெடிப்புகளுக்கு, இந்து அமைப்புகளே காரணம் என, மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே கூறியிருந்தார்.இதற்கு, இந்து அமைப்புகளும், பா.ஜ.,வும், எதிர்ப்பு தெரிவித்துள்ளன. உள்துறை அமைச்சர் கூறியது, உண்மை தான். புலனாய்வு அமைப்புகள் நடத்திய

உலகின் முதல்தர ஊழல் நாடு அமரிக்காவே

உலகின் முதல்தர ஊழல் நாடு அமரிக்காவே

சீனாவை ஊழல் மிகுந்த நாடாக்கி, சீனாவின் வளர்ச்சியைத் தடுக்க அமெரிக்கா முயல்கிறது; இதை ஏற்க முடியாது. உலகிலுள்ள பிற நாடுகளைப் போலவே, சீனாவிலும் ஊழல் காணப்படுகிறது. வளர்ச்சியடைந்த நாடுகளின் மிரட்டல்களை சமாளித்து தான், சில ஆண்டுகளாக, சீனா முன்னேறி வருகிறது. ஊழலின் பிறப்பிடமே அமெரிக்கா தான். அங்கு தான் ஊழல் அதிகம் என ஜக்கி சான் என்ற திரைப்பட நடிகர் தெரிவித்துள்ளார்.

இந்தியா பாகிஸ்தான் இராணுவமட்டப் பேச்சுக்கள் ஆரம்பமானது : யாருடைய யுத்தம்?

இந்தியா பாகிஸ்தான் இராணுவமட்டப் பேச்சுக்கள் ஆரம்பமானது : யாருடைய யுத்தம்?

ஜம்மு காஷ்மீர் மாநில எல்லையில் பூஞ்ச் பகுதியில், இந்தியா பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு இடையே நேற்று மு‌ன்‌தின‌ம் விடிய விடிய துப்பாக்கிச்சண்டை நடந்தது. எல்லையில் தீவிரவாதிகள் குழு ஊடுருவ முயற்சிகள் நடைபெற்றதாகவும், இதை இந்திய ராணுவம் முறியடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாயன்று இந்திய ராணுவ வீரர்கள் இரண்டு பேர் காஷ்மீர் எல்லையில் கொல்லப்பட்ட விவகாரத்தை தொடர்ந்து, எல்லைப் பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது. பாகிஸ்தான் வீரர் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதாக அந்த நாட்டு ராணுவம் கூறி வருகிறது. எல்லையில்

டெல்லியில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை – பெரும்பாலான பெண்கள் குறித்துப் பேச்சில்லை

டெல்லியில் அதிகரித்து வரும் பாலியல் பலாத்கார சம்பவங்களால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது என்று உச்ச நீதிமன்றம் நேற்று கவலை தெரிவித்தது.தலைநகர் டெல்லியில் அதிகரிக்கும் குற்றங்கள் தொடர்பாக தேசிய சட்டக் கல்லூரியில் 4-ம் ஆண்டு பட்டப்படிப்பு பயிலும் மாணவர் நிபுன் சக்சேனா உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.இந்த மனுவை விசாரணைக்கு அனுமதித்து நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், தீபக் மிஸ்ரா அடங்கிய பெஞ்ச் கூறுகையில், தலைநகரில் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரத்துக்குள்ளான மாணவி பலியான

தா.பாண்டியனுக்கு அம்பேத்கார் விருது : அம்பேத்காருக்கு அவமானம்

தா. பாண்டியன் உட்பட தமிழ் அறிஞர்கள் ஒன்பதின்மருக்கு தமிழக அரசு விருதுகள் வழங்கி கெளரவிக்க உள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இச்செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது. தா.பாண்டியனுக்கு அம்பேத்கார் விருது வழங்கப்படுகிறது. அம்பேத்காரை திட்டமிட்டு அவமானப்படுத்த என்றே தா.பாண்டியனுக்கு விருது வழங்கப்பட்டதா அன்றி ஜெயலலித்தாவின் அடிமை என்பதற்காக விருது வழங்கப்பட்டதா என்று விவாதம் எந்தக் கோணத்தில் முன்வைக்கப்பட்டாலும் அம்பேத்கார் அவமானப்பட்டவரே. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் பரமக்குடியில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான படுகொலையை ஆரம்பித்தார். அதனைத் தொடர்ந்து ஆதிக்க

படுகொலை செய்யப்பட்ட குர்தீஸ் விடுதலை போராளிகளுக்கு எமது வீரவணக்கம் : மே பதினேழு இயக்கம்.

இந்தப் பகுதியில் இனியொரு… இன் பிரதான கருத்தியலுக்கு முழுமையாக உடன்பாடற்ற, முழுமையான தொடர்பற்ற அரசியல் சமூகம் சார்ந்த கருத்துக்கள் பதியப்படுகின்றன. விவாதத்தை நோக்கமாகக் கொண்டு கருத்துக்களைச் செழுமைப்படுத்தும் நோக்கில் இப் பகுதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆசியாவின் தேசிய இனப்போராட்டத்தில் மிக சிக்கலான தேசப்பரப்பையும், சமரசமில்லா போராட்டகளத்தினையும் கண்டிருக்கும் குர்தீஸ் விடுதலை போராளிகள் உலகமயமாக்கலுக்கும், இரட்டைகோபுர தாக்குதலுக்கு பின்பான பயங்கரவாத அரசுகளின் செயல்பாட்டின் நடுவில் தமது தீரமிகு போராட்டத்தினை தக்கவைத்து முன்னகரும் தீர்க்கமான போராட்டக் குழுவாக அறியப்படுகிறது. இதன் பல்வேறு

Page 1 of 1312345...10...Last »