பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்ச புதுடெல்லி வந்திருக்கிறார். அவருக்கு இந்திய அரசு ஆடம்பர வரவேற்பை அளித்துள்ளது. ஏற்கனவே இலங்கை சென்று ராஜபக்சவை சந்தித்து வந்த தமிழக எம்.பி.க்கள், இப்போது மீண்டும் டெல்லியில் அவரைச் சந்தித்துள்ளனர். இது வெறும் சம்பிரதாய சந்திப்பாக நடைபெற்றுள்ளது. தமிழர்கள் தங்கள் சொந்த இடங்களில் இன்னும் 3 மாதங்களில் குடிமயர்த்தப்படுவார்கள் என்று எப்போதும் சொல்வதையே இப்போதும் ராஜபக்ச சொல்லியிருக்கிறார். அதனைக் கேட்டு, ஏதோ பெரிய சாதனை செய்து விட்டதைப் போல தமிழக எம்.பி.க்கள் திரும்பி வந்துள்ளனர்.
என்று மதவாதக் கட்சியான பாரதிய ஜனதாவின் மாநிலச் செயலாளர் பொன்.ராதாகிருஷ்ணன் அறிக்கை விடுத்துள்ளார். மிகவும் பிற்போக்கான மதவாதக் கட்சியை விடக் கிழானநிலைக்கு கருணாநிதியின் திரவிடக்கட்சி தன்னைத் தாழ்த்திக்கொண்டுள்ளது இது குறிக்கின்றது.