இந்திய மக்களின் வரிப்பணத்தை தங்களின் ஆடம்பர வாழ்வுக்கு பயன்படுத்துவதில் நேருவின் குடும்பம் அதாவது காந்தி பரம்பரை சளைத்ததல்ல. காந்தி தனது எளிமைக்கா செலவிட்ட கோடிக்கணக்கான ரூபாய்களில் இருந்து துவங்குகிறது இந்த ஆடம்பர வரலாறு. பிர்லா மாளிகையில் தங்கியிருந்து அரசியல் செய்த காந்தியின் வாரிசான ராஜீவ்காந்தி அந்தமான் தீவுக்கு ஓய்வெடுக்கச் சென்ற போது மதுரையில் இருந்து தனி விமானத்தில் பாயாசம் சென்ற வரலறுகள் எல்லாம் உண்டு. அந்த வகையில் காந்தியின் இன்றைய வாரிசுகளான ப்ரியங்கா, ராகுல்காந்தியும் இந்த ஆடம்பர வாழ்வுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். ராகுல் ஒரு பக்கம் தலித்துக்கள் குடிசை வாசிகளின் வீடுகளுக்கெல்லாம் ஏறி இறங்கி அரசியல் நாடகம் ஆடினாலும் ஆடம்பர வாழ்வில் அவர்கள் எல்லோருமே ஒன்றுதான் என்பதை ப்ரியங்கா சிம்லாவில் கட்டிவரும் ஆட்ம்பர மாளிகையே நிரூபிக்கிறது.காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், அவரது மகள் பிரியங்கா காந்தியும் அதிகம் விரும்பும் கோடைவாசஸ்தலங்களில் சிம்லா முக்கியமானது. அவர்கள் கடந்த பல ஆண்டுகளாக கோடைகால விடுமுறையை இங்குதான் கழித்து வருகின்றனர்.சில ஆண்டுகளுக்கு முன்பு கோடை விடுமுறையை குடும்பத்துடன் சிம்லாவில் கழித்துக்கொண்டிருந்த பிரியங்காவுக்கு, இங்கு நமக்கென சொந்த வீடு இருந்தால் நன்றாக இருக்குமே என்ற ஆசை ஏற்பட, அடுத்த சில தினங்களில் அவரது கனவு இல்லம் உருவாக அங்கு இடம் வாங்கப்பட்டது.2007-ல் எழில் கொஞ்சும் மலையின் மீது 8 ஆயிரம் அடி உயரத்தில் 3150 சதுர அடி பரப்பிலான இடம் வாங்கப்பட்டு அதில் பிரியங்காவின் கனவு இல்லம் உதயமாகத் தொடங்கியது.இந்த இல்லத்தை கட்டிமுடிக்கும் பணி தில்லியை சேர்ந்த கட்டடக்கலை நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைக்கப்பட்டது. கட்டடத்தின் கட்டுமானப் பணியை அந்நிறுவனத்தின் வல்லுநர் நீரஜ் சாய்னி கவனித்து வருகிறார். ப்ரியங்காவின் இந்த வீட்டின் மேற்கூறை இரும்பால் ஆனதாக அமைக்கப்பட்டு வருகிறது. கட்டடத்தை கட்டும் பணி ஒரு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டாலும் அந்த நிறுவனம் கட்டடத்தை அழகுறச் செய்யும் எந்த ஒரு பணியையும் பிரியங்காவின் அனுமதி இல்லாமல் செய்வதில்லை. அவரிடம் ஆலோசனை செய்து ஒப்புதல் பெற்றே செய்து வருகின்றது.சிம்லாவில் தொடர்ந்து மழை பொழிந்து வருவதால் பிரியங்காவின் கனவு இல்ல கட்டுமானப் பணி தாமதமடைந்து வருகிறது. எனினும் விரைவில் இல்லம் கட்டி முடிக்கப்படும் என்று நீரஜ் சாய்னி தெரிவித்தார்.தமது கனவு இல்லம் எப்போது கட்டி முடிக்கப்படும், அங்கு கோடை விடுமுறையை கழிக்கலாம் என்ற ஏக்கத்தில்தான் பிரியங்கா காந்தியும் உள்ளார்.
கட்டுரை செய்தி எந்த காந்தியை குறிப்பிடுகிறது,
கான் (Khan) காந்தியான (Gandhi) கதை
ஃப்ரோஸ் காந்திக்கும் இந்திராகாந்தி திருமணம்
இத்திருமணம் 26.03.1942 இல் அலகபாத் நகரில் நடைபெற்றது
தற்போதைய நிலமையில் கான் (KHAN) என்ற பெயர் அடையாளம் அமெரிக்கர்களுக்கு ஒரு அலர்ஜியான வார்த்தை என்பது உலகம் அறிந்த உண்மை. அது ஒரு புறம் இருக்க இந்திய வரலாற்றில், இந்தியாவின் நேரு பரம்பரைக்கு காந்தி என்ற அடையாளம் யாரால் வலிந்து கொடுக்கப்பட்டது? எப்படி நேரு என்ற குடும்பப்பெயர் காணாமல் போய் காந்தி எனும் பெயர் இடத்தைப் பிடித்துக்கொண்டது? இதுவரையில் அதற்கு ஒரு தெளிவான விளக்கம் கிடையாது.
அதுபற்றி ஒரு சிறு குறிப்பு….
ஜவஹர்லால் நேரு (Jawaharlal Nehru ) 1889 ஆம் ஆண்டு நவம்பர் 14ந்திகதி பிறந்தார். அவரது தந்தையார் பெயர் மோதிலால் நேரு (Motilal Nehru ), தாயாரின் பெயர் ஸ்வாருப் ராணி (Swarup Rani ). நேரு குடும்பத்தினர் காஷ்மீர் பிராமண இனத்தில் உள்ள புலவர் (Pandit) களாகும். ஜவஹர்லால் நேரு இந்தியாவின் முதல் பிரதமர் ஆவார். அவர் 1947 முதல் 1964 வரை இந்தியாவில் ஆட்சி புரிந்துள்ளார்.
நேரு,கமலா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 1917 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் திகதி பெண் பிள்ளை பிறந்தது. பிறந்தவுடன் அப்பிள்ளைக்கு வைக்கப்பட்ட பெயர் இந்திரா பிரியதர்ஷினி நேரு (Indira Priyadarshini Nehru) ஆகும். இந்திரா காலப்போக்கில் வளர்ந்து காதலில் விழுந்தார். அவரது காதலன் முஸ்லீம் மதத்தைச்சார்ந்தவர். அவரது பெயர் ஃப்ரோஸ்கான் (Feroze Khan) ஆகும். காதலித்தவரையே கைப்பிடிக்க இந்திரா முடிவெடுத்தார். ஆனால் இதற்கு இந்திராவின் தந்தை நேரு, தனது மகள் ஒரு முஸ்லீமை திருமணம் செய்வதை அரசியல் காரணங்களுக்காக விரும்பவில்லை என்றும், இந்திரா ஒரு முஸ்லீம் மதத்தவரை மணந்தால் எதிர்காலத்தில் அவர் நேரு அரசவம்ச (Nehru dynasty) உரிமையை இழக்கவேண்டி வரும் என்று நேரு பயந்ததாகவும் கூறப்படுகிறது. இவ்விடயம் நேருவிற்கு பெரிய தலயிடியாக இருந்து வந்ததுள்ளது.
இந்த நேரத்தில்தான் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு கண்டவர், நாமெல்லாம் “மகாத்மா” என்று போற்றப்படும் கரம்சந்த் மோகன் தாஸ் காந்தி அவர்கள் என்று சொல்லப்படுகிறது. “மகாத்மா” காந்தி தன்னுடைய குடும்ப பெயரை ஃப்ரோஸ்கானுக்கு கொடுத்து அவரை ஃப்ரோஸ்கான் காந்தி (Feroze Gandhi) ஆக்கினார் என்றும் இப்பெயர் மாற்றத்தை லண்டனில் சத்தியக்கடதாசி (affidavit) முடித்து இப்பிரச்சினக்கு முடிவு கட்டியதாவும் கூறப்படுகிறது.
மகாத்மா காந்தி ஃப்ரோஸ்கானை தனது பிள்ளையாக தத்து எடுத்திருந்தால் இது சாத்தியமாகக்கூடிய ஒன்று. அப்படி நடந்ததாக எந்த இடத்திலும் தெரிவிக்கப்படவில்லை. மற்றும்படி அது எப்படி நினைத்தவுடன் சம்பந்தமில்லாமல் யாரவது ஒருவர் தனது குடும்ப பெயரை மற்றவர்களுக்கு கொடுக்க முடியும் என்பது அந்த மகாத்மாவுக்குத் தான் வெளிச்சம். அத்துடன் சத்தியம் தவிர வேறு எதையுமே பேசாத எழுதாத நம் மகாத்மாவின் சத்திய சோதனையில் இந்த பெயர் மாற்ற கதை மட்டும் மிஸ்ஸிங்.!!
மகாத்மாகாந்தி பானியா/காந்தி (Bania/Gandhi ) இனத்தைச்சேர்ந்த வியாபாரிகள் என்றபடியால் இப்பெயரை நேரு ஏற்றுக்கொள்வதற்கு அரசியல் ரீதியில் எந்த தடையும் இருக்கவில்லையென்றும் ஆகையால் இதனை நேரு அவர்கள் முழுமனதுடன் ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
அதன்படி இந்திரா நேரு ஃப்ரோஸ் (கான்) காந்தியை 1942 ஆம் ஆண்டு திருமணம் செய்து இந்திரா காந்தி எனும் பெயரைப்பெற்றார்.
இந்திராகாந்தியின் கணவர் ஃப்ரோஸ்கான். இவர் நவாப் கானின் மகன். நவாப்கான் பார்ஸி பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இஸ்லாமிய தந்தைக்கும் பார்ஸி தாய்க்கும் பிறந்தவர் ஃப்ரோஸ்கான். ப்ரோஸ்கானின் தாய் இஸ்லாமிய மார்க்கத்திற்கு மாறி நவாப்கானைத் நிக்காக் செய்து கொண்டதாகவும் ஃப்ரோஸ்கானின் தாய் வழி குடும்ப பெயர் காந்தி என்றும் சொல்லப்படுகிறது.
அதேவேளை, ஃப்ரோஸ்சின் தந்தையார் ஒரு பார்ஸி என்றும் அவரின் குடும்பப்பெயர் “GHANDI” என்றும், நாம் அழைப்பதுபோல் “GANDHI” இல்லையென்றும் அழகபாத்திலிருந்து வெளிவரும் ஒரு ஆங்கிலநாளேடு தெளிவாக்கியதாகவும், அதன்பின்னர் இவ்விடயம் பற்றி மகாத்மா காந்திதான் நேருவிடம் “GHANDI” என்று அழைப்பதற்குப்பதிலாக “GANDHI” என்று அழையுங்கள் என்று அறிவுறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. எது உண்மை எது பொய் என்று தெரியவில்லை.
மொத்தத்தில் இந்திரா , ஃப்ரோஸ்கான் திருமணத்தை எதிர்த்த நேருவுக்கு மகாத்மாகாந்தி வழங்கிய இந்த அதி அற்புதமான மந்திரவிளக்கு Khan களை காந்திகளாக்கியது தான்..
Indira with her two sons Rajeev and Sanjay
இல்லாவிட்டால் இன்று எத்தனை கான்கள் உருவாகியிருப்பார்கள் என்று தெரியுமா? (இந்திராகாந்தி கான். ராஜீவ்கான், சஞ்சேய்கான், சோனியாகான், ராகுல்கான்.. இப்படியாக பல கான்கள்)
இந்திராவுக்கும் கானாக இருந்த காந்தியாக மாற்றப்பட்ட ஃப்ரோஸ்காந்திக்கும் இந்திய இந்து வைதீக முறைப்படி திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது..
ஃப்ரோஸ்காந்தி இறந்த பின் இஸ்லாமிய முறைப்படி புதைக்கப்படவோ இல்லை.பார்சிகள் முறைப்படி வல்லூறுகளுக்கு இரையாக மரணக்கிணற்றில் வீசப்படவோ இல்லை. இந்து முறைப்படி சிதைக்கு எரியூட்டினார்கள். சாம்பலை எடுத்து வந்து அலகாபாத்தில் கல்லறை கட்டப்பட்டது.
ஆனால் ஃப்ரோஸ்காந்தியின் கல்லறையை காந்தி அரச பரம்பரையில் வந்த யாரும் கண்டு கொள்ளவில்லை. ஏனெனில் உண்மையில் அது காந்தியின் கல்லறை அல்ல கானின் கல்லறை என்ற மண்ணுக்குள் புதைக்கப்பட்ட உண்மைதான்.
இப்ப அமெரிக்கா செல்ல விரும்பும் இந்த கான்கள் அதாவது காந்திகள்
MY Name is khan என்று சொல்வதற்குப் பதிலாக
MY Name is Gandhi என்று சொன்னால் அமெரிக்கா இவர்களை இன்முகத்துடன் வரவேற்கும்.
சுவையான தகவல்.நன்றீ.
அறிய தகவலுக்கு நன்றி.
அத்துடன் சஞ்சய் யின் பெயர் சஞ்சீவ் என்று இருந்த தகவும் ஒரு தகவல் உண்டு.
அதை பற்றியும் தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கட்டுரையை விட பாரதியின் பின்னூட்டம் நன்று.
இந்தப் பாயாசம் வியட்நாமியர்களூம் சாப்பிடுகிறார்கள் அது மட்டுமல்ல அதை டெசெர்ட் என் கிறார்கள்.மோதகம் மாதிரியான உணவு சீனர்களீடமும் காணப்படுகிறது.இந்த றம்புட்டான்,மங்குஸதான் எப்படி இலங்கைக்கு வந்தது என்றூம் தெரியவில்லை யாராவது ஆராய மாட்டார்களா?
தமிழர்கள் தான் எல்லாவற்றையும் முதலில் கண்டவர்கள். பிறகென்ன கேள்வி?
good