மகிந்த ராஜபக்ச அரசு இந்திய துருவ வல்லரசின் துணையோடு வடகிழக்கைச் சூறையாடிக்கொண்டிருக்கிறது. உலகமே பார்த்துக்கொண்டிருக்க வன்னிப் படுகொலைகள் நிகழ்த்தி முடிக்கப்பட்டு ஒரு வருடம் கடந்துவிட்டது. அறுபதாண்டுகால தேசிய இனப் பிரச்சனைக்கு எந்த அரசியல் தீர்வும் முன்வைக்கப்படாமலே, தமிழ்க் கட்சிகளின் பக்கபலத்தோடு ராஜபக்ச குடும்பம் தனது அதிகாரத்தை மறுபடி உறுதி செய்திருக்கின்றது.
உலக அதிகார வர்க்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட இனப்படுகொலையும் இனச் சுத்திகரிப்பும் எந்தத் தடையுமின்றி இலங்கைத் தீவில் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. தென்னிந்திய அரசியல் வியாபாரிகள், புலம்பெயர் ஆட்காட்டிகள், அரச துணைக்குழுக்கள் என்று ஒரு இறுக்கமான கூட்டு அப்பாவி மக்கள் மீது தமது அதிகாரத்தை நிறுவிக்கொண்டிருக்கிறது.
ஆசியப் பொருளாதாரத்தின் உலகு சார்ந்த புதிய மாற்றம், பிராந்திய அதிகார மையங்களின் புதிய எழுற்சி, மேற்குப் பொருளாதார ஆதிக்கத்தின் பின்னடைவு என்ற சிக்கலான பிரச்சனைகள் எல்லாவற்றிற்கும் அப்பால் பேரினவாத அடக்கு முறைக்கெதிரான வீழ்ச்சி என்பது சில இலகு படுத்திய பாடங்களைக் கற்றுத்தந்திருக்கிறது.
புலிகள் தமது போராட்டத்தின் ஆரம்பப் காலப் பகுதிகளிலிருந்தே அதிகார வர்க்கங்களுடனான சமரசம் மட்டுமே தமது அரசியற் தந்திரோபாய உக்தியாகக் கையண்டிருந்தனர்.
இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் மனித அவலமான வன்னிப்படுகொலைகள் நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருந்த வேளையில் யாரெல்லாம் மௌனமாயிருந்தார்களோ, யாரெல்லாம் காட்டிக்கொடுத்தார்களோ, யாரெல்லாம் இலங்கை அரசின் பின் புலத்தில் செயலாற்றினார்களோ அவர்கள் மட்டும் தான் புலிகளின் பின்பலமாகக் கருதப்பட்டவர்கள்.
கருணாநிதி, திருமாவளவன்,ஜெகத் கஸ்பர், வை.கோ, நெடுமாறன், பிரித்தானியத் தொழிற்கட்சி, ஒபாமா குழு என்று உலக அரசியல் அதிகார மையங்களின் பங்குதாரர்களின் நீண்ட பட்டியலில் அடங்கக்கூடிய அத்தனை புலி சார்ந்த அரசியல் வியாபாரிகளும் ஆயிரக்கணக்கில் சாதித்திருக்க முடியும். வன்னிப் படுகொலைகள் நிகழ்ந்துகொண்டிருந்த வேளையில்,அப்பாவி மக்கள் இரசாயனக் குண்டுகளுக்கு இரயாக்கப்படுக்கொண்டிருந்த வேளையில் தமிழ் நாட்டையோ ஏன் உலகையோ கூட நிலை குலையச் செய்திருக்க முடியும். அப்படி ஏதும் நடந்தாகவில்லை.
இனப்படுகொலை நிறைவேற்றி முடித்துவிட்டு எந்தச் சலனமுமின்றி தனது குடும்ப சர்வாதிகாரத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது ராஜபக்ச அரச அதிகாரம். வடகிழக்கின் தேசியத் தன்மையைச் சீர்குலைத்து சின்னாபின்னமாக்கும் இனச் சுத்திகரிப்பை புலிகள் நம்பியிருந்த அதிகார வர்க்க வியாபாரிகளின் எந்த எதிர்ப்புமின்றி அரங்கேற்றிக்கொண்டிருக்கிறது. எந்த அதிகார வர்க்கத்தால் ஏமாற்றப்பட்டோமோ, யாரால் கைவிடப்பட்டு காட்டிக்கொடுக்கப்பட்டோமோ அதே அதிகாரவர்க்கத்தைத் திருப்த்தி செய்ய, அவர்களுக்கு நாங்கள் தமிழர்கள் என்று கூற உருவாக்கப்பட்டது தான் நாடுகடந்த தமிழீழம். யார் யாருக்கெல்லாம் எதிராகப் போராட வேண்டுமோ அவர்களோடு கைகோர்த்துக் கொள்வதற்காக கட்டமைக்கப்படுவது தான் நாடுகடந்த தமிழீழம்.
புலிகளும் நாடுகடந்த அரசுக் காரர்களும் நம்பியிருப்பவர்கள் வன்னிப் படுகொலைகளை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் என்பது மட்டும் அவர்கள் தகைமையல்ல ஆயிரக்கணக்கான படுகொலைகளை அவர்களே முன்னின்று நடத்தி முடித்துள்ளார்கள். கஷ்மீரிலும், நாகாலந்திலும்,ஆப்கானிஸ்தானிலும்,
ஈராக்கிலும்,கிரனடாவிலும்,பொஸ்னியாவிலும்,அயர்லாந்திலும் இன்னும் நீண்டுவிரிகின்ற பட்டியலில் அடங்கக்கூடிய அனைத்து நாடுகளிலும், முதியவர்களையும்,சிறுவர்களையும், அப்பாவிப் பொதுமக்களையும் துடிக்கத் துடிக்கக் கொன்றுபோட்டவர்கள் தான் இவர்கள். முப்பதாயிரம் போராளிகளின் தியாகங்களையும்,இலட்சக் கணக்கான மக்களின் அர்ப்பணங்களையும் இவர்களின் காலடியில் அடகுவைப்பதற்காகவா நாடுகடந்த தமிழீழம்?
இன்றும் இலங்கைத் தீவில் மக்கள் சார்ந்த ஆயுதப் போராட்டத்தின் தேவை அருகிப் போய்விடவில்லை. மக்கள் நம்பிக்கை கொள்கின்ற ஒரு போரட்டம் சாம்பல் மேடுகளிலிருந்து உருவாவது தவிர்க்கமுடியாதது. காட்டிக்கொடுத்தவர்களுக்கும், துரோகமிழைத்தவர்களுக்கும் எதிராக கடந்துபோன தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு புதிய போராட்டம் உருவாகும். அதற்கான அனைத்து சாத்தியங்களும் இலங்கைத் தீவின் ஒவ்வோரு அசைவிலும் காணப்படுகிறது. அதனை தோற்றுப் போவதற்குத் துணைபோன அதிகார வர்க்கத்திற்குக் காட்டிக் கொடுப்பதற்காகவா நாடுகடந்த தமிழீழம்?
இந்திய அரசு நேபாளத்தில் எழுந்த போராட்டத்தை அழிப்பதற்கு தன்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது. அமரிக்காவிலிருந்து அத்தனை நாடுகளும் போராளிகளை அழிப்பதற்கு தம்மாலான அனைத்தையும் முயன்று தோற்றுப் போய்விட்டன. இவர்கள் அதிகார வர்க்கத்துடனும் அதிகார மையங்களுடனும் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை. உலகின் ஒடுக்கப்பட்ட மக்களின் ஆதரவோடு தமது போராட்டத்தை வெற்றிவரை கொண்டு சென்ற்றிருக்கிறார்கள்.
1980 களின் ஆரம்பத்தில் தமிழ் நாட்டின் கட்சி அரசியல் வாதிகளைப் பின்புலமாகக் கொண்டும் அதிகார மட்டத்தில் செல்வாக்கு நிலையிலுள்ளவர்களை ஆதாரமாகக் கொண்டும் தமது செயற்பாடுகளை வளர்த்துக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள், ஐரோப்பிய நாடுகளிலும் இதேவைகையான தமது செயற்பாட்டுத் தளத்தை விரிவு படுத்தியிருந்தனர்.
ஐரோப்பாவின் அரசியல் வாதிகள், தன்னார்வ அமைப்புக்களின் உறுப்பினர்கள், வியாபார நிறுவனங்கள் என்பனவற்றை மையமாகக் கொண்டே புலிகள் அமைப்பின் சர்வதேசச் செயற்பாடுகள் அமைந்திருந்தன. மத்தியதரவர்க்க, படித்த நிர்வாக அமைப்பாளர்களூடாகவும் கட்சிசார் அரசியல் வாதிகளூடாகவம் மேற்கொள்ளப்பட்ட இச்செயற்பாடுகளின் ஆதார சக்தியாக புலிகளின் பண வலிமையும் உலக மயப்படுத்தப் பட்டிருந்த அவர்களின் வியாபார அமைப்புக்களுமே அமைந்திருந்தன.
இவையெல்லாம் இராணுவத்தளபாடங்கள் மட்டுமே போராட்டத்தின் ஒரே பலமென நம்பிடிருந்த புலிகளின் தலைமைக்கு அதற்கான இராணுவப் பலத்தை அதிகரிப்பதற்காகவே பயன்பட்டன.
உள்நாட்டில் மட்டுமல்ல அன்னிய தேசங்களிலும் கூட மக்களின் பலத்தையும் மக்கள் சக்தியையும் முற்றாகவே நிராகரித்த அதிகார அரசியல் மீது நம்பிக்கை கொண்டிருந்த புலிகளின் மக்களுக்கெதிரான செயற்பாடுகள் புலிகளை மட்டுமல்ல போராட்டத்திற்கான நியாயத் தன்மையையும், உலகெங்குமுள்ள ஜனநாயக, மனிதாபிமான சக்திகள் மத்தியில் சிதறடித்து இனப்படுகொலைக் கெதிரான போராட்டத்தைச் சின்னாபின்னப்படுத்தி விட்டது.
G20 நாடுகளின் ஒன்று கூடல் லண்டனில் நிகழ்ந்த போது பிரித்தானிய அரசு அதிர்ந்து போகும் வைகையில் போராட்டம் நிகழ்த்தப்பட்டது. ஆயிரக்கணக்கான சமூக உணர்வுள்ள மக்கள் கலந்து கொண்ட இப்போராட்டம் நிகழ்ந்து கொண்டிருந்த அதே நாளில் வன்னியில் இலங்கை அரசு தனது சொந்த மக்களைக் கொசுக்கள் போலச் சாகடித்துக் கொண்டிருந்தது. இன்னொரு புறத்தில் பிரித்தானியத் தமிழ் போரம் போன்ற புலி சார் அமைப்புக்கள் பிரித்தானிய அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன. அவர்கள் தலைமை தாங்கி நடாத்திய புலம் பெயர் தமிழ் மக்களை மட்டுமே உள்வாங்கிக் கொண்ட எதிர்ப்புப் போராட்டங்கள் பிரித்தானிய மக்கள் மத்தியிலோ, அவர்களைப் பிரதிநித்தித்துவப் படுத்தும் அரசியல் முற்போக்குக் கூறுகள் மத்தியிலோ எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
ஈராக் ஆக்கிரமிக்கப்பட்ட போது அவ்வாகிரமிப்பை எதிர்த்து “போர் எதிர்ப்பு அணி” பிரித்தானியாவில் உருவாக்கப்பட்டது. இவர்கள் நடாத்திய முதல் எதிர்ப்பூர்வலம் மூன்று லட்சம் பிரித்தானிய மக்களைத் தெருவில் இறக்கியிருந்தது. இவ்வணியின் தொடர்ச்சியான போராட்டங்களும் பிரச்சாரங்களும் பிரித்தானியப் பிரதமராகவிருந்த ரொனி பிளேயரின் அரசியல் செல்வாக்கையும், அவரின் மனிதாபிமான பிம்பத்தையும் குழிதோண்டிப் புதைத்தது மட்டுமல்ல தொடர்ந்து வந்த தேர்தலில் குறித்த தோல்வியைச் சந்திக்கவும் இது பிரதான காரணமாக அமைந்திருந்தது.
பிரித்தானிய அரசின் மீது அழுத்தங்களைப் பிரயோக்கும் சக்திவாய்ந்த இது போன்ற அமைப்புக்களோ, அவ்வமைப்புக்களைச் சார்ந்தவர்களோ இலங்கை இனப்படுகொலை தொடர்பில் இன்று வரை அணுகப்படவில்லை. ஐம்பதாயிரம் அப்பாவிகள் கொல்லப்பட்டுக்கொண்டிருந்த வேளையில் கூட அதிகார மையங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்த புலி சார் அமைப்புக்களின் இந்தச் சிந்தனை முறையும் அரசியலும் தான் எதிர்ப்புப் போரை அதன் தடையங்கள் கூட இல்லாமல் நிர்மூலமாக்கியிருக்கிறது.
இலங்கைத் தமிழர்கள் மீது திட்டமிட்ட இனவழிப்பு நடத்தப்பட்ட போதெல்லாம் தெருவுக்கு வந்து போர்க்குரல் கொடுத்தவர்கள் தான் தமிழ் நாட்டுமக்கள். 1983 இல் இலங்கையில் இனப்படுகொலை ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த போது நடைபெற்ற போராட்டங்களில் தமிழ் நாடே செயலிழந்து போயிருந்தது. இலங்கை அரசின் திட்டமிட்ட இனப் படுகொலைகளை நன்கு அறிந்திருந்த தமிழ் நாட்டு மக்கள் புலிகளை அவ்வடக்கு முறையின் பிரதானமான எதிர்ப்புச் சக்தியாகக் கருதினார்கள்.
மக்களை ஒரு போதும் நம்பியிராத புலிகள் தமிழ் நாட்டின் சந்தர்ப்பவாத அரசியல் வாதிகளை தமக்குச் சார்பாகக் கையாளும் வழி முறையாக இம் மக்கள் எழுச்சிகளைப் பயன்படுத்திக் கொள்ள, கருணாநிதி, வைகோ, நெடுமாறன் போன்ற சந்தர்ப்பவாதிகள் இலங்கைப் பிரச்சனையை முன்வைத்துத் தம்மை வளர்த்துக் கொண்டனர்.
பிரபாகரன் கொல்லப்பட்டால் தமிழ் நாட்டில் இரத்த ஆறு பாயும் என்றவர்களின் கரங்களில், பிரபாகரனோடு ஐம்பதாயிரம் மக்கள் கொல்லப்பட்ட போது கீறல் கூட ஏற்படவில்லை.
புலிகள் இராணுவ பலம் மிக்க அமைப்பாக இருந்த போது அவர்களால் புறக்கணிக்கப்பட்ட அமைப்புக்களும், தனி மனிதர்களுமே இன்று இலங்கைத் தமிழ்ப் பேசும் மக்களுக்காகத் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கின்றனர்.
மேற்கு நாடுகளிலும், தமிழ் நாட்டிலும் மக்கள் சார்ந்த அமைப்புக்களைப் புறக்கணித்த புலிகளின் சிந்தனை முறையையும் செயற்பாட்டுத் தன்மையையும் இன்று கவனத்தில் கொள்ளப்படவேண்டியது அவசியமானதும் அவசரமானதுமாகும்.
இராணுவ அமப்பின் பலம் மட்டுமே புலிகளின் பலம் என்ற நிலையானது, புலிகளின் அப்பலம் அழிக்கப்பட்ட போது அவர்கள் எதிர்ப்பரசியற் தளத்திலிருந்து அகற்றப்பட்டுவிட்டார்கள். இந்நிலையில் புலிகள் குறித்த தொடர்ச்சியான விமர்சமென்பது இலங்கை அரசின் பேரினவாத அடக்கு முறையை நியாயப்படுத்துவதாக அமையும் என்ற வாதம் பரவலாக முன்வைக்கப்பட்டாலும் புலிகளின் தோல்வியுற்ற போராட்ட முறைமை என்பதும் அதற்கான சிந்தனை வடிவங்களும் முற்றாக விமர்சனத்திற்குட்படுத்தப் படவேண்டியது அவசியமாகும்.
புலிகளின் இவ்வாறான அதிகார சமரச அரசியலின் நேரடியான தொடர்ச்சியே தேசம்கடந்த தமிழீழ அரசாகும். ஏலவே தோல்வியுற்ற இவ்வரசியல் சிந்தனை முறமையானது முற்றாக நிராகரிக்கப்பட வேண்டும்.
புதிய ஒழுங்கமைபின் அதிகார மையங்களான ஐரோப்பா,அமரிக்கா,இந்தியா,சீனா போன்ற நாடுகளின் அணிகளிடையேயான சர்வதேச உறவு என்பது மக்கள் நலன் சார்ந்த, மனிதாபிமானம் சார்ந்த ஒன்றல்ல.
சரிந்து விழுகின்ற வியாபாரக் கட்டமைப்பை மறுபடி ஒழுங்கைமைக்க முடியாமல் திணறுகின்ற மேற்கிற்கும், புதிய ஆசிய வல்லரசுகளுக்கும் தமது வியாபார நலன்களே பிரதானமானவை. ஆப்கானிஸ்தானிலும்,இந்தியாவிலும், இலங்கையிலும், உலகம் முழுவதிலும் இதே வியாபார நலன்களுக்காக இன்னும் மனிதப்படுகொலைகள் நிறைவேற்றப்படும்.
இலங்கைத் தமிழ் பேசும் மக்களைப் போலவே உலகெங்கும் படுகொலைகளையும், அவலத்தையும் எதிர்னோக்கும் மக்கள் கூட்டங்களைப் பலப்படுத்த வேண்டும். மேற்கு நாடுகளில் ஒடுக்கப்பட்ட மக்கள் சார்ந்த அழுத்தக் குழுக்களோடு இணைந்து கொண்டு அந்நாட்டு அரசுகளுக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்கவேண்டும். தமிழ் நாட்டிலும் இந்தியாவிலும் சந்தர்ப்பவாத அரசியல் வாதிகளை நிராகரித்து, புதிய முற்போக்கு இயக்கங்களைப் பலப்படுத்தவேண்டும். இவர்கள் முன்னெடுக்கும் ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டங்களை நாம் பலப்படுத்த வேண்டும்.
தவிர, தேசம் கடந்த தமிழீழ அரசு என்ற புலிகளின் தோல்வியடைந்த அரசியலின் தொடர்ச்சியென்பது அபாயகரமானது. அநாவசியமான, மறுதலையான நம்பிக்கையை வளர்க்கும் இவ்வாறான நடவடிக்கைகள் ஏனைய போராட்ட சக்திகள் ஈழத் தமிழர்களுக்காக முன்னெடுக்கும் போராட்டங்களை மழுங்கடிப்பது மட்டுமல்ல நீண்டகால நோக்கில் எதிர்ப்பரசியலுக்கான சாத்தியப்பாட்டையே நிமூலமாக்கும் தன்மை வாய்ந்தது.
தகுந்த நேரத்தில் ஒரு சிறப்பான பதிவு. நாடு கடந்த அரசியல் பிரமுகர்கள் நம்பி இருப்பது அமெரிக்கா களடா பிரித்தானியா போன்ற நாடுகளை. இந்த நாடுகள் தான் யப்பானில் அணு குண்டு வீச காரனமானவர்கள்.அமெரிக்க்h குண்டு வீச அக் குழுவில் இருந்த கனடா இங்கிலாந்து மெளனமாக தலை ஆட்டினார்கள. வட லத்தீன் அமெரிக்க பூர்விக குடிகள் பல்லாயிரக் கணக்கில் கொன்றொழித்தவர்கள் இந்த ஜரோப்பிய பிரித்தாளிய குடியேறிகள். இவர்கள் சுய நலத்திற்காக செயற்படுபவர்கள் மக்கள் நலன் அற்றவர்கள்
நாடு கடந்த தமழீழம்? புத்திஜீவிகளுக்குரியது. சாதாரண மக்களுக்குரியதல்ல. இதனால் மக்கள் சகதியையோ மக்கள் போராட்டங்களையோ ஏற்படுத்த முடியாது. பேரம் பேசுதலே இவர்களது தொழில். தமிழ் மக்கள உரிமைகளையும் போராட்டங்களையும் பேரம் பேசி விற்கவே இவர்கள் கிளம்பியுள்ளார்கள். இவர்கள் பிண்ணனியை அறிந்தால் இது உறுதிப்படுத்தப்படும்.
ஈழத்தமிழரின் உருமைக்குரல் என்பது புலிகளின் குரலல்ல என்பதையே முதலில்
உலகின் முன் கொண்டுவரவேண்டும். அப்போதுதான் தமிழரில் உள்ள பிளவுபட்டுக்கிடக்கும் அமைப்புக்கள்
ஒன்றுபடவும் தமிழரிடையே பலமான் ஓர் அர்சியலை முன்னெடுக்கவும் முடியும்.
கணனிக்காதல்ர் போல தொலக்காட்சி விடுதலையும் அரசியலுமே புலிக்ள சார் ஊடகங்களினால்
முன்னெடுக்கப்படுகின்றன. உல்லாசமாக உலக்த்தைப்பற்ரியோ வாழும்நாட்டின் அரசியலைப் பற்ரியோ சிந்தனையில்லாமல் மானாட மயிலாடவும் காலைமுதல் மாலை வரை சினிமாவும்,
தொடர்நாடகங்கழும் பார்க்கும் தமிழர்களிற்கு அதே தொலக்காட்சிகள் செய்யும் அரசியல்
வியாபாரமே நாடுகடந்த அரசாகும்.
துரை
இந்தியாவில் மார்க்சிய போராட்த்தை நசுக்க நக்சலைட்டுக்கள் அதிகமாக உள்ள பகுதிகளில் இலவச தொலைக் காட்சி விநியோகிக்குமாறு மு.கருணநிதி கூறியதாக ஒரு தகவல். இது உண்மையாயின் துரை கூறியது போல் புரட்சியை மழுங்கடிக்க மேற்கத்திய தொலைக் காடசி நிகழ்ச்சிகளும் நாடகங்களும் உதவும். ஈரானில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் கலாச்சார மாற்றத்திற்கு கள்ளமாக ஈரானுக்குள் அமெரிக்காவால் நுழைக்கப்படும் அமெரிக்க சற்றலைட் தொரைக் காட்சி நிகழ்ச்சிகளும் ஒரு காரணம் என ஈரானிய கலாச்சார காவலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்தியாவில் இது சர்வசாதாரணமாக அமெரிக்க நிறுவனங்களின் பொருள் விற்பனைககும் இந்திய “மு”ககளின’ தொப்பை அதிகரிப்புக்கும் உதவுகின்றது. புலியும் இவர்களில் ஒருவர் தானே!!!!!!!!
கருணாநிதியின் கணக்கில் ஒரு பிசகு. மாஓவாதிகளின் செல்வாக்கு உள்ள இடங்கள் பலவற்றில் மின்சாரமே கிடையாது.
அவர்களடைய வறுமையைப் போக்க இந்திய அரசு வழி செய்தால் மாஓவாதிகட்கு அங்கு வேலை ஏது?
சுதந்திரம் வந்து 63 ஆண்டுகளகியும் வறுமை போகவில்லை, நிலம் பறி போகிறது, பொலீஸ் மிரட்டுகிறது. மாஓ வாதிகள் இல்லவிட்டாலும் மக்கள் என்றவது போராடித்தான் தீருவார்கள்.
I think Navalan has misunderstood the basic principles of TGTE, pls revisit Mr. Ruthrakumaran’s interview about the TGTE.
Why don’t you use this site to tell the readers exactly where SN has seriously erred in his reading of the TGTE.
The idea of the TGTE arose out of the political bankruptcy of a pro-LTTE elitist clique among the Tamil diaspora to cover up its criminal role in misguiding the Tamil diaspora (as well as the desperate LTTE leadership in its last two years).
That clique will dare not face questions raised about the tragedy of the Tamils for which it is as responsible as the LTTE leadership.
It is only seeking to divert attention away from the burning issues facing the Tamil people at home.
I think this artcle a type of a psycological war against tamil diaspora ,.. Be careful tamila…
Or, is it a declaration of war against a mafia that is trying to shield itself using the Tamil diaspora?
The Tamil people have nothing more to fear after they have been taken for a thundering ride for years on end by a gang of so called “intellectuals” who are still out to brainwash the Tamil diaspora.
Rather than run away screaming, why cannot you not stand up and answer the charges in the Tamil tradition of ‘Puranaanuuru heroism”.
Can any one tell me why the writer has failed to mention Chinas role in Sri Lanka, not only India and Pakistan assisted Sri Lankan govt, China too helped in greta way both militarily and finacialy, when India for some reason refused or was reluctant to delver arms China filled the gap. When confronted Chinas envoy said, he was not intrested in the internal politics, Sri Lanka is friendly country which is faighting the terrorist, as friend China helps another friend in need.
Only the author can respond to that and no other.
But it has been more than amply clear that it is only the US and India that have been vying to control Sri Lanka militarily and politically. India ans US have Sri Lanka in an economic vive in their own ways.
China was one among many including Russia and EU countries that supplied arms to Sri Lanka, but whose role was nothin compared to that of India actively undermining of the peace process and participating in the war by way of logistics, advice and direction in ther later stages. The US played a role in breaking up the LTTE and in undemining the status of the LTTE vis-a-vis the government. But far less underhand than that of India.
What needs explaining though is why people point to China when there is a lot for India to answer for and while India is actively meddling in Sri Lankan affairs including the recent elections.
Criticising China is one matter, but missing what India is up to will be tragic.
If the writer is at fault, it is for not telling us enough about the sinister role of India in Sri Lanka.
India actively undermining of the peace process and participating in the war by way of logistics, pardon me plas explain this, was not the tigers and Rajapkse got to gether and undermined the process,
Dear Chandro
India was doing everything possible to derail the peace talks that were initiated in 2002. You may refer to various Indian interventions via Norway as well as the SL Govt at various points during the talks.
India provioded logistical support to the Rajapakse government since the war resumed. The sinking of 10 LTTE supply vessels by the SL Navy in 2007-2008 was with the help of the Indians. Also direct involvement in the war was exposed when two Indian ‘advisors’ were wounder in 2008 in an LTTE raid on a military air base.
There is a lot of evidence which could fill pages. This sample would suffice I guess.
(What you have in mind is getting Rajapakse elected. The LTTE did not want Ranil W to be elected and there was charge of a massive bribe to call for a Tamil boycott.
But, I do not think that Ranil would have brought peace to us).
ranil contested the election on federal solution , he went around and told the sinhalese masses to vote for for federelism, ur leader late Velu feard to accept that, because it woul have brought peace and democracy, he was the one who destroyed the peace process, in that matter he helped indians there by digging his own grave, whic he deserved,
Sorry, you are wide of the mark.
Ranil did not contest on ON ANY SPECIFIC SOLUTION let alone FEDERAL.
Two weeks before the election, two of Rannil’s party men claimed in public that Ranil (with American help) caused a split in the Eastern wing of the LTTE.
It was Ranil’s dilly dallying that brought the talks to a halt. Chandrika took advantage of it to take 3 ministries away from the UNF gocernment and then formed an alliance with the JVP to bring the UPFA to power.
If you have evidence of Ranil contesting on a ‘FEDERAL SOLUTION’, I will be pleased to read it.
I am not saying that the LTTE was all out for peace. But the UNF and Ranil were even less sincere.
I guess u have not read the Unp manifesto in 2005 election, I have attended many public meetings in the South and can tell you with first hand information that UNP speakers defended federal solution, Chandrika wanted to derail the proces late Mr Velu helped it by helping Mr Pakse to come to power, there by digging his own grave.
Two weeks before the election, two of Rannil’s party men claimed in public that Ranil (with American help) caused a split in the Eastern wing of the LTTE.
It was Ranil’s dilly dallying that brought the talks to a halt— is not true at all, when late Tamilselvan arrogantly toldLate Mr Chandrasekaran 3 days before the election in Killinochi that tigers would not allow people to vote UNP had no choice but to appeal Sinhalese to vote, Karuna splited because he beleved in the peace process, he wanted to save eastern carders from death.
In any event Mr Sooriya devan helped both Chandrika and Rajapakse to derail the peace process, in that he helped both tamils and inidians , because his death brought peace, Indians wanted him dead,
I think that you are mixing up dates and events. Chandrika was barely involved in the 2005 campaign.
I am talking about the UNP dodging issues in 2002-2003 and leading to the crash of the talks.
To my knowledge, the UNP did not make any concrete proposal or campaign on it in the South. Please tell me where the UNP has spelt out its Federal Solution in its Manifesto. Surely there must be a location that you can point to.
The UNP talked of Federalism when the LTTE talked of it in early 2003 in Oslo. After that both sides went to sleep on that subject.
If you really believe that “Karuna splited because he beleved in the peace process”, then you can also believe that pigs have wings.
Note:
Please do not assume that anyone who refuses to blame LTTE for everything is a supporter of the LTTE.
# A consensus reached between the UNP and the UPFA on the ethnic problem, the agreement arrived at between the government and the LTTE and the Oslo and Tokyo declaration, which guarantees the unity, democratic character and territorial integrity of Sri Lanka, has created the framework of a sol, ution acceptable to all communities of the country. this was wat manifesto says
, whats Oslo accord, it says parties have reached the agreement to find a solution based on federal structure.
I m not a not fool to believe pigs can fly,the fools are those who believed, that Eel am can b achived under Pirabakarans leadership, Ranil was only in power for 2 years, in those 2 years Velu misused Ranils good intentions and went on in killing spree and smuggled arms,provoking sinhalese, thats y they wanted to elect Mr Rajapakse, if velu behaved responsibly Pakse would have had support to be elected, We tamils rarly get sinhalese leadera like Ranil, if we miss the opportunity we missed it forever, Ranil will not come back 2 power, now accept wat Pakse oofer
Good to know that you are “not a not fool to believe pigs can fly”.
Sadly you believe more silly things like “Karuna splited because he beleved in the peace process”.
That is as silly as if not more silly than people believing that VP could deliver Eelam.
The UNP manifesto did not pledge federalism. The UNP did not campaign on that basis.
The text cited only explains its role in the peace process (which in rerality it wrecked).
The truth was that Ranil & Co had no intention to solve the national question. It was RW who sat laughing in parliament in 2000 when copies of Chandrika’s draft amendment was burnt in the chamber by his colleagues.
I agree with your comment, because these people are ‘communist fundamantalist’.
Namy thanks for ur comment
die hard tigers.never die, its waste of time to convince them, their past mistakes and arrogance led to the detsruction of tamils, they will never admit that underestimated Rajapkse and got in return what they deserved, in fact 18 of may is deepavali day for tamils, (not for people like XXX ), the arakkan velu died on this day, his failure and arroganse to seize the opportunity brought calamity on tamils, Mr Chandro u r wasting ur times
LTTE’s credibility as a mass liberation force was consistently questioned by the genuine left among Tamils in Sri Lanka (I do not mean the parliamentary opportunists with other ideas) as well as by other Tamils who were not necessarily government hangers on .
Its defeat became inevitable, especially after its leadership’s isolation from the people.
But to imagine that Ranil W was a safer option than MR is folly. The signal for an all out war to destroy the LTTE went from various powers, the West as well as India, in different ways. (EU and Canada banned the LTTE when they were not at war and not earlier when they were waging war).
The LTTE was on the wrong track for a long time, not in choosing between one potential killer and another, but in trusting the West and misreading Indian intentions.
More importantly–
If an occassion of wanton killings and destruction on a massive scale by a cruelly insensitive military machine is one fit for celebration, one may celebrate Hiroshima since, after all, it was — as the US tried to justify it — part of the destruction of Japanese fascism. The bombing of Dresden by the UK and US — destroying 90% of the peaceful city — could be celebrated too on similar grounds.
And .. .. .. why not the Nazi gas chambers — after all, on hind sight, the Zionist has proved to be no better than the Nazi.
It is a day of celebration for the Rajapakse regime too. Its celebrations go on for a week. Join the fun — if you have the heart — or rather, shall I say, if you do not have a heart.
EU and Canada banned the LTTE when they were not at war and not earlier when they were waging war). hhhhhh- tigers were not at war, amazing, they did not obey ceasefire, the y wer at war all time
Dear Anton.
Ceasefire violations are often committed in post-conflict situations but do not amount to war.
The breaches here were not serious on either side and bans by the EU & Canada were owing to US pressure.
The point is that they did not ban the LTTE was it on the offensive but when the ceasefire was still on — certainly as far as the two parties and mediators were concerned.
If you cannot understand the significance of this, there is little that I can add usefully.
cease fire was on the paper, Mr Kadirgamer was killed when it was on the peper, tigers never obeyed it fully, Eu got enough of tigers when their attemt to sink a navy vessel with 800 soldiers failed,and banned the terrorist, the truth is tigers never obeyed cease fire, they got their own taste from Rajapakse.
Ceasefire violations were not only by the LTTE but also by the government’s armed forces. The EU ban was as a result of British presssure through the UK.
The fact was that when the LTTE committed far greater offences, the EU and Britain stood by and let things go.
What bothered the West was that the LTTE was not playing its game, or rather that of the US. The LTTE always misjudged the West, as do its successors today.
Namy
I do not know whom you are agreeing with.
Also, I do not know what you mean by “I agree with your comment, because these people are ‘communist fundamantalist’.”
Do you always agree with communist fundamantalists, or always disagree with them?
Is that fundamantalism in any way worse than “Tamil fundamentalism”? (Don’t ask me whose brand?)
இன்னமும் உங்களைப்போன்றோர் புலிகளைப்பற்றி வெறுப்புணர்வோடு எழுதுவது எனக்கு வேதனை தருகிறது.எல்லோரும் இணைந்து கசப்புகளை மறந்து தமிழீழ இலட்சியத்தை நாக்கி பயணப்படவேண்டிய தருணத்தில்
பழைய நினைவுகளோடு இன்னமும் தொடர்வது பின்னடைவைத்தான் ஏற்படுத்தும்.
அண்ணே தமழீழம் எடுத்து என்ன கிழிப்பீங்கள் என்று ஒருக்கா சொல்ல முடியுமா?
அதுதான் புலிகளின் சித்தாந்தம் தோற்றுவிட்டதே. இனியாவது அதை ஒதுக்கி விட்டு சரியான தலைமையின் கீழ் ஒன்று பட வேண்டும் அதில் ஈற்றில் இணைந்து கொள்ள வேண்டியவர்கள்தான் இந்த புலம்பெயர்ந்த புலித்தலைவர்கள். அதை விடுத்து எதையுமே உத்தியோகபூர்வமாக அறிவிக்காமல் மக்களை ஏமாற்றி வாக்கு பெற்று அதன் மூலம் நாடு கடந்த தமிழீழத்தையோ அல்லது வட்டுகோட்டை தீர்மானத்தையோ நிறைவேற்றுவதில் என்ன லாபம் மக்கள் மீண்டும் தமிழீழ மாயைக்குள் வாழ மட்டுமே இது உதவும். புலித்தலைமை வாழும் காலத்தில் ஏக பிரதினிதித்துவத்தை எப்படி தங்கள் லட்சிமாக வைத்திருந்தார்களோ அதையேதானே இந்த நா.க.த வும் செய்கிறார்கள் .
Mr Arul seliyan I am not wring I think I have read ur articles about Sri Lanka and tiger in the vikatan, those article were not impartial, they were pro tiger articles ignoring the suffering imposed by the tigers on ordinary civilians, Left over tigers and their tails stil dont admit their mistakes, I dont expect them to admit either. so the tuth is that in many more years to come people will be there who hate tigers.
மீண்டும் போராட்டம் தவறான பாதையில் போகக் கூடாது என்ற மீள் பார்வையே இவை. இல்லாவிடில் பல உயிர்களை வீணாக இழக்க வேண்டி வரும். நாடு கடந்த தமிழீழத்தின் பிதா கே.பி இன்று அரசுடன். இதன் கருத்து வடிவ முன்வைப்பாளர் கவிஞர் எங்குள்ளார் என்பது எவருக்குமே தெரியாது. மக்கள் யாரை நம்புவது? இவ்வாறான மீள் ஆய்வுகள் மூலமே உண்மையான போராட்டத்தை நோககி நகரலாம்.
விடுதலிப் புலிப் போராளிகளை யாரும் இழிவாகப் பேசநியாயமில்லை.
ஆனால் 2.5 லட்சம் சாவுகட்குக் காரணமான போரின் நெறிப்படுத்தலை விமர்சிக்காமல் இருக்க முடியுமா?
இன்னமும் “தமிழ் ஈழத்தை” வியாபாரமாக்கும் போக்கை விமர்சிக்காமல் இருக்க முடியுமா?
விமர்சனம் என்பது முழு நிராகரிப்பல்ல. என்ன பிழையாக நடந்தது என்பதைநேர்மையாக விசாரிப்பதே. அதைத் தவிர்த்துத் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் ஒரு அடி கூட முன் செல்ல முடியாது.
முடிந்த முடிவாக எதுவுமே இருக்க முடியாது, இருக்கவும் கூடாது.
தமிழீழ இலட்சியம் என்பதும் மீள் பார்வைக்குட்பட வேண்டியதே.
/படித்த சமூகம் கல்வி மேம்பாடடைந்தவ்ர்கள், அமெரிக்காவிலும், லண்டனிலும் உலக்முழுவதும் உயர் பதவிவகிப்பவர்கள் எங்களிற்கு நாடு ஆழ வேணும் என்று கேட்பதும் ஓர் இனத்தின் விடுதலை என்பதும் இரு வேறான விடய்ங்கள். இதனை தண்டவாளத்தில் தலையை வைத்துப் படுக்கும் புலிகளின் சாதாரண ஆதரவாளர்கள் புரிவத்ற்கும் சிந்திப்பதற்கும் இன்னும் 100 வருடமமாகும்./–துரை
– இந்தக்கருத்தை நான் ஆமோதிக்கிறேன்!.
/Can any one tell me why the writer has failed to mention Chinas role in Sri Lanka, not only India and Pakistan assisted Sri Lankan govt, China too helped in greta way both militarily and finacialy, when India for some reason refused or was reluctant to delver arms China filled the gap. When confronted Chinas envoy said, he was not intrested in the internal politics, Sri Lanka is friendly country which is faighting the terrorist, as friend China helps another friend in need./–estate boy
—இந்தக் கருத்தையும் நான் ஆமோதிக்கிறேன்!.
நட்புடன் சபாநாவலனுக்கு
/
தங்கள் கட்டுரையில் விடயங்களைத் தெளிவாகவே கூறியிருக்கிறீர்கள்.
விஜய்
yes we don’t care what Sri Lankan Singhala Govt does to Tamil people, but we will not allow Tamils to raise against it!
estate boy,
இலங்கையில் நிறைவேற்றப்பட்ட இனப் படுகொலையும் அதன் தொடர்ச்சியான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையும் இந்தியாவினதும் சினாவினதும் அரசியல் பொருளாதார பலத்துடன் தான் மேற்கொள்ளப்படுகிறது என்பது தவிர ரஷ்யா, கியூபா, ஈரான் போன்ற நாடுகளும் கூட குறிக்கத்தக்க பாத்திரத்தை வகித்திருக்கின்றன. ஆனால் இதன் தலைமைப் பாத்திரத்தை இந்தியாவே வகிக்கின்றது. ஐ.னா சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட வேளையில் எவ்வாறு இந்தியா இந்த நாடுகளின் தலைமைப் பொறுப்பை இலங்கை குறித்து ஏற்றுக்கொண்டது என்பது ஒரு உதாரணம். புதிய உலக ஒழுங்கமைப்பில் தாம் சார்ந்த பிரதேசங்களின் அல்லது துருவங்களின் வல்லரசுகளாகச் செயற்படுதலே இந்தியா சீனா போன்ற துருவ வல்லரசுகளின் பண்பாக அமைகிறது. இந்தத் துருவ வல்லரசுகளை கட்டுப்படுத்த அமரிக்கா தலைமையிலான அணி முயற்சித்தாலும் இவற்றை நிராகரிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இதன் வெளிப்பாடு தான் இலங்கைத் ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட முரண்பாடுகள் கூட.
ஆக ஆசியப் பொருளாதாரத்தின் கோர முகமென்பது ஐரோப்பிய அமரிக்க போலி மனிதாபிமானத்தைக் கூடக் கொண்டிராத ஒன்று. இலங்கை இனப்படுகொலை என்பது சீனா-இந்தியா இணைந்த ஆசியப் பொருளாதாரம் இந்தியா தலைமயில் நிகழ்த்திய கோர நிகழ்வு.
இதுகுறித்த விரிவான கட்டுரைகள் :
https://inioru.com/?p=3475
https://inioru.com/?p=7044
https://inioru.com/?p=3879
http://www.fromnowona.com/?p=185
Mr. Naavalan,
We can all talk about everything, because we are good at it, but do nothing consttuctively. At least TGTE is doing something about the aspirations of Eelam Tamils. If not for them who else is talking about any action these days, please tell me explicitly. Dont just beat around the bush. If there are 2 Tamils living in one place there will be 3 parties there. This is what happened aand still going. Please for the sake of unity tell me what you have done or will do for our cause in the near future.
It was in the name of unity that Tamil people were taken for thundering rides from 1956.
Unity for what? For Rudrakumaran & Co to have their turn to dupe us all?
Firstly, let them explain their past and the consequences. Why are they afraid to discuss the past? How can peole trust them with the future?
Tell us WHAT IS CONSTRUCTIVE about getting 200000+ people killed, 30000+ people crippled, rendering 300000 people homeless, driving 800000+ people out of the country.
The Tamil people of the North have shown great unity by rejecting all the options before them.
So, that means everybody has to get back to the drawing board.
It is a good thing. Let there be some fresh air.
People knew what happened and why happened. Until now if you don’t know, nobody can explain to you. You better watch and learn, if you blind listen and learn, if you dumb ???????????
Congratulations lalalu. You hit the nail on the head: the people are not fools as the TNA and other narrow nationalists think.
The people in Jaffna & Vanni knew what happened and why; and expressed their thought by keeping off the polls. They even rejected the Tamil Eelam slate of the Tamil Congress.
They had different concerns in the East about losing treprersentation. Even there the voting was just enough to save Tamil representation.
“இலங்கை இனப்படுகொலை என்பது சீனா-இந்தியா இணைந்த ஆசியப் பொருளாதாரம் இந்தியா தலைமயில் நிகழ்த்திய கோர நிகழ்வு” என்பதில் ஒரு சிக்கல் உள்ளது.
சீனாவின் நோக்கங்களும் இந்திய நோக்கங்களும் மட்டுமன்றி அணுகுமுறைகளும் வேறு பட்டவை.
“இணைந்து” செயற்படக் கூடியளவுக்கு இரண்டுக்கும் பொது அடிப்படை இல்லை. ஒன்றுக்க்கொன்று பகை என்று கொச்சையாக இந்திய நடத்தையை விளக்குவது தவறென்று முன்னர் சுட்டிக் காட்டினீர்கள். அது நியாயமானது
ஆயினும், இலங்கையில் இரு வல்லரசுகளது பொருளாதார-மேலாதிக்க நோக்கங்களும் இணையும் சூழல் இன்னமும் இல்லை.
பிறநாடுகளிற் போல, இலங்கையிலும் சீனா உள்நாட்டு அரசியலில் தன்னை ஈடுபடுத்துவதில்லை. இன்னமும் அரசுக்கும் அரசுக்கும் இடையிலான உறவு என்ற நிலையிலிருந்தே சீனா இயங்குகிறது. அதனாலே தான் ஆபிரிக்க ஆட்சிக் கவிழ்ப்புக்கள் கூட (1970கட்கு முன்பு போலன்றி) சீனாவுடனான உறவையோ சீன நலன்களையோ பாதிப்பதில்லை.
சீன-இந்திய நடத்தை வேறுபாட்டை விளங்கிக் கொள்ள நேபாளம் இன்னொரு நல்ல உதாரணம்.
please read this. this is about Makkalavai people who contested trans national gvt election in Norway, http://www.nortamil.com/index.php?option=com_content&view=article&id=310:2010-04-27-09-48-28&catid=15:2009-11-09-23-16-49&Itemid=83
நாடுகடந்த தமிழீழத் தேர்தல் கூட்டம் ஒரு பார்வை. – பத்மநாதன்
சென்ற 24.04.2010 அன்று வெயிற்வெற்(veitvet) பாடசாலையில் நடைபெற்ற நாடுகடந்த தமிழீழக் கூட்டத்திற்குச் சென்றிருந்தேன். அவர்களது கருத்தை அறிய ஆர்வமாகச் சென்றிருந்தேன்.
அங்கு நடைபெற்ற விரும்பத்தகாத பேச்சுகள் தான் என்னை இது எழுதத் தூண்டியது. இது மக்களவைத் தேர்த்லை நடாத்திய TCC இனால் ஒழுங்கு படுத்தப் பட்டிருந்தது. முதலில் தொடக்கமே பிழையாக இருந்தது. ஒட்டுக்குழுக்களாலும், இலங்கை இராணுவத்தினராலும் கொலை செய்யப் பட்டவர்களிற்கு மௌன அஞ்சலி என்று தொடங்கியது. பின்பு பேசிய திருமதி.யெயசிறி என்பவர் நாடுகடந்த திரு.உருத்திரகுமாரன் அவர்களது ஆதரவாளர்களை ,இலங்கை அரசு , இந்திய அரசு போன்றவற்றின் உளவாளர்கள் என்றும் குறிப்பிட்டார். அவர்களையும் துரோகி ஒட்டுக்குழு என்ற சொற்பிரயோகம் நேரடியாகப் பாவிக்காவிட்டலும், இந்திய உளவு , இலங்கை அரசின் சதிக்குள் வீழ்ந்தது என்பது அதையே குறிக்கிறது. மக்களாகிய உங்களால் செய்யக்கூடியது வாக்குப் போடுதல் மட்டுமே என்றும் குறிப்பிட்டு இருந்தார். மக்கள் முட்டாள்களாக இருந்து தாங்கள் செய்வதற்கு தலையாட்டினால் போதும் என்பதே அதன் கருத்து.
இந்தப் பெண்ணை விட பல வருடங்கள் விடுதலைப் புலிகளுக்காக வாழ்ந்தவர்களை துரோகி என்று முத்திரை குத்துவது அவரால் எப்படி செய்ய முடிகின்றது. ஒருமாதத்தின் முன்பு திரு.உருத்திரகுமாரன் அவர்கள் நடாத்திய கூட்டத்தில் மக்களவை உறுப்பினர் வந்து குழப்பம் செய்தனர். திரு.உருத்திரகுமாரனது பேச்சில்- மக்களவையில்(TCC) புலிகளுடன் நேரடியாகச் சம்பந்தப் பட்டவர்கள் கூடுதலாக இருப்பதால், நாடுகடந்த தமிழீழத்தில் புலிகளின் நேரடி பதவி வகிக்காதவர்களை பெரும்பான்மையாகக் கொண்டு அமைத்தாலே குத்தப்பட்ட பயங்கரவாத முத்திரையில் இருந்து வெளிவரமுடியும். என்றும் குறிப்பிட்டிருந்தார். நாடுகடந்த தமிழீழமும், மக்களவையும் ஒற்றுமையாச் செயற்படுவோம் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
நான் நாடுகடந்த தமிழீழத்தையோ, மக்களவையையோ ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் நாடுகடந்த தமிழீழத்தினர் ஜனநாயக வழிக்கு வரும் விருப்பத்திற்கு ஆதரவு தெரிவிக்கின்றேன்.
அவர் யாப்பு ஒன்றும் எழுதி ஜனநாயகத்தைக் கொச்சைப் ப்டுத்தவில்லை. அது வரவேற்கக் கூடியதே. ஆனால் ஜனநாஜகத்தை விரும்பாத மக்களவையினர் அந்தப் பதவிகளையும் தாங்கள் எடுக்க விரும்பியே பொய்ப் பிரச்சாரம் செய்ய விரும்புகின்றனர். அவர்களின் குற்றாச்சாட்டு யாப்பு எழுதவில்லையென்பதே.
மக்களவைத் தேர்தலில் யாப்பு எழுதி, மக்களால் தெரிவு செய்யாமல் தாங்களே ஐவரைத் தெரிவு செய்தார்கள். அதிகாரங்கள் இல்லாத மிகுதிபேரையே மக்கள் தெரிவு செய்தார்கள். சில உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று ஜனநாயக விரோத யாப்பு எழுதினார்கள். அங்கு ஜனநாயகம் என்பது வெறும் கேலிக்கூத்தாகவே இருந்தது. இக்கேலிகூத்துக்கு 20 – 25% மக்களே வாக்களித்திருந்தனர்.
திரு.உருத்திரகுமாரன் அவர்கள் நினைத்திருந்தால் , தாங்கள் விரும்ம்பியவர்கள் நேரடியாக வரவும், திரு.முரளி போன்றவர்கள்(புலியில் நேரடியாகப் பதவி வகித்தவர்கள்) தேர்தலில் பங்கு பற்றாது இருக்கும்படி யாப்பு அமைத்திருக்க முடியும். அவர் அவ்வாறு ஜனநாயக விரோதச்செயல் செய்யவில்லை. அந்தளவில் வரவேற்கக் கூடியதே. யாப்பு எழுதாதது முரளி போன்றவர்கள் தேர்தலில் நிற்க வளி வகுத்தது.
முரளியின் ஏனைய குற்றச்சாட்டு திரு.பாஸ்கரன் அவர்கள் 50% சம்பளம் பெற்று தமிழ் பாடசாலைக்கு வேலை செய்ய்வது. இந்தப் பெரிய பாடசாலைக்கு திரு.முரளி போன்றவர்கள் ஓரிரு மணித்தியாலங்கள் வேலை செய்து நிர்வாகத்தை நடாத்த முடியாதென்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். அவர் இப்பொழுது தான் அந்த வேலையைச் செய்யவில்லை. அந்த 50% ஐ சேமிக்க விரும்பினால் ஏன் இவ்வளவு காலமும் அதை திரு.முரளி போன்றவர்கள் பொறுப்பெடுத்துச் செய்யவில்லை. இபாடியான கீள்த்தர தேர்தல் பிரசாரம் -இருக்கின்ற பாடசாலையையும் இல்லாது செய்துவிடும்.
அடுத்த குற்றச்சாட்டு,Rødt கட்சிதான் தமிழீழத்திற்கு ஆதரவு வழங்கியதாகவும்,SV , Arbeidparti ஆகிய கட்சிகள் தமிழீழத்தை ஆதரிக்காத பொழுதும் ஏன் தமிழர்கள் அந்தக் கட்சியில் அங்கம் வகிக்கிறார்கள் என்று ஒருவர் கேட்டார். கேள்விக்கு பதில் அளித்த திரு.முரளி அவர்கள் – தான் SV கட்சியில் அங்கத்தவராக இருந்ததாகவும், அக்க்ட்சி தமிழீழத்திற்கு ஆதரவு தெரிவிக்காததால் அதிலிருந்து விலகியதாகவும், திரு.பாஸ்கரன், திரு.புலேந்திரன் போன்றவர்களும் விலக வேண்டும் என்று கேட்டிருந்தார்.
முரளி அவர்கள் சாதாரண அங்கத்தவர். அவர் விரும்பினால் சேரலாம், பிரியலாம் . ஆனால் மக்களால் தெரிவு செய்யப் பட்ட புலேந்திரனும், பாஸ்கரனும், ஆதித்தனும் அக்கட்சிகளில் இருந்து பிரிந்தால் பின்பு தமிழருக்காக அரசியல் கதைப்பதற்கு வேறு எவரும் கட்சிகளில் இல்லை. இது இலங்கையா- தந்தை (எனக்கு அல்ல) செல்வநாயக்தின் காலமா- சவால் விட்டு மறு தேர்தல் வைப்பதற்கு? அவர்கள் கட்சிகளில் இருந்தால் தான் எமக்காக ஒரு வார்த்தையாவது கதைக்க முடியும். மற்றவ்ர்களை கதைக்கவிட்டால் என்ன கதைப்பார்கள் என்பது தெரியும் தானே? உஙளுக்குச் சும்மா கதைத்தால் விளங்காது துப்பாக்கி கொண்டு வாறேன் என்று விட்டு வந்து விடுவார்கள். நோர்வேயிய அரசியலில் ஜனநாயக வளியில் பழக்கப் பட்டவர்களே எங்கள் பிரச்சனையை தெளிவாக துப்பாகியில்லாமல் விளங்கப் படுத்த முடியும். இப்படியாக மறு பக்கத்தையும் ஆராயாது கூறிய முரளியின் கருத்துக்கள் சிறுபிள்ளைத்தனமானதே.
அங்கு பிரச்சாரத்திற்காக் வந்திருந்த பாஸ்கரன் இவர்களின் கூட்டம் காரணமாக பார்வையாளர்களாக வந்திருந்தார். இது கூட நல்லதொரு ஜனநாஜக முன்னேற்றமே. அவரை நோக்கி வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க அவருக்கு போதிய நேரம் கொடுக்காதது ஜனநாஜக விரோதமே. நண்பன் முரளி அவர்கள் எனது நட்பை தனது பிரச்சாரத் துணைக்கு கொண்டு வந்த படியால் தான் நானும் கதைத்தேன். போதியளவு நேரமிருந்தும் 12:00 மணிக்கு முடிக்க வேண்டிய கூட்டத்தை, 11:30 முடித்து விட்டார்கள். முரளி அவர்களும் அவர்களுக்கு வால் பிடித்தவர்களும் முரளிக்கு சார்பாகக் கதை அல்லது கதையாதே என்ற ஜனநாஜக விரோதப் போக்குடனே நடந்து கொண்டார்கள்.
ஜனநாயகத்தை மறுத்த இவர்களால்(TCC) ஆதரவு அளிக்கப்பட்ட கட்சிகள் கடந்த காலத்தில் படு தோவியே அடைந்திருக்கின்றது.ஜெயலலிதாவிற்குக் கொடுத்த ஆதரவால் அவர் படு தோல்வியடைந்தார். அடுத்து இரு ஆசன்ங்களைப் பெறும் என்று கருத்துக்கணிப்பு கூறிய பொழுதும் Rødt கட்சியானது இவர்களின் கடைசி நேர வெளிப்படை ஆதரவால் அது படு தோல்வியடைந்தது.பின்பு கடைசித் தேர்தலில் இவர்களது இணையத்தளங்கள் ஆதரவளித்த திருமதி.பத்மினி சிதம்பரநாதன் , திரு கஜேந்திரன் குழுவினர் மண்னைக் கவ்வினர்.மக்கள் தற்பொழுது ஜனநாஜக வாதிகளையே விரும்புகின்றன்ர் என்பதற்கு இவை சிறந்த உதாரணங்களாகும்.
நான் நாடு கடந்த தமிழீழத்திற்கோ , மக்களவைக்கோ ஆதரவு இல்லை. ஆனால் அவர்கள் விரும்பிய கருத்துக்களை அடைய அமைப்பை உருவாகுவதற்கு அவர்களுக்கு ஜனநாயக்ம் உண்டு. அந்த ஜனநாயகத்திற்காக அவர்களுக்காகக் கொடுக்கும் குரலே இது.
இப்படிக்கு
ஜனநாயக விரும்பி
பத்மநாதன்
சபா நாவலன் ஒரு ககிதப்புலிகளின் கையால் . அகவே தான் பிரபாகரன் இருக்கிறார் எனவும் நாடுகடந்த அரசாங்கம் ஆட்காட்டி அரசியல் எனவும்
சொல்கிறார். வெளிநாட்டில் உள்ள எல்லா அமைப்புகளும் பதவிக்கும் பணத்திற்கும் அல்லைகிரார்களே தவிர தமிழ்மக்களுக்கு ஒன்றுமே செய்யபோவதில்லை.
“பிரபாகரன் கொல்லப்பட்டால் தமிழ் நாட்டில் இரத்த ஆறு பாயும் என்றவர்களின் கரங்களில், பிரபாகரனோடு ஐம்பதாயிரம் மக்கள் கொல்லப்பட்ட போது கீறல் கூட ஏற்படவில்லை.” என்றல்லவா கட்டுரையில் உள்ளது.
சபா நாவலன் “…பிரபாகரன் இருக்கிறார் எனவும் …சொல்கிறார்”. என்கிறீர்களே !
கட்டுரையைநீங்கள் படித்தீர்களா? படிக்கத் தெரியாத யாராவது படித்துச் சொன்னார்களா?
“கருணாநிதி, திருமாவளவன்,ஜெகத் கஸ்பர், வை.கோ, நெடுமாறன், பிரித்தானியத் தொழிற்கட்சி, ஒபாமா குழு என்று உலக அரசியல் அதிகார மையங்களின் பங்குதாரர்களின் நீண்ட பட்டியலில் அடங்கக்கூடிய அத்தனை புலி சார்ந்த அரசியல் வியாபாரிகளும் ஆயிரக்கணக்கில் சாதித்திருக்க முடியும். வன்னிப் படுகொலைகள் நிகழ்ந்துகொண்டிருந்த வேளையில்”
இப்படி ஒட்டுமொத்தமாக குறை சொல்லுவது கேனத்தனமாக தெரியவில்லையா? வன்னிப்படுகொலை நிகழ்ந்த வேளையில் இந்த போலி முற்பொக்கு வாதி கிழித்துக்கொண்டிருந்த்ததென்ன? இந்தியாவில் இயங்கும் புரட்சி இயக்கங்கள் என்ரு எதைச் சொல்லுகிறார்கள்.இந்திய பார்ப்பன பனியா வர்க்கத்துக்கு முட்டுக்கொடுக்கும் மார்க்சிச்டுகலையா? சீன ஆதரவில் செயல்படும் மவோயிச்டுகலையா? வைகோ,நெடுமாறன் பற்றி சொல்ல உமக்கு எந்த தக்தியும் இல்லை.
English
Why nobody is writing about Pillars Perk Committee?
2000 years Jews’ hard work makes few Jews permanent membership in Pillars Perk Committee.
That is the reason why UN passes resolution for Jews homeland.
Diasporas can achieve homeland for Tamils within 20 years.
So please write article how Tamils can unit now, and become members in Pillars Perk Committee.
French
Pourquoi personne n’est écrit sur le comité de piliers perk ? 2000 ans dur travail des Juifs rend quelques membres de Juifs permanents dans le comité de perk piliers. C’est la raison pourquoi UN transmet la résolution pour la patrie des Juifs. Diasporas peuvent obtenir une patrie pour tamouls dans 20 ans. Veuillez écriture article tamouls comment unité maintenant, et deviennent membres de comité de perk piliers.
Tamil ஏன் யாரும் பில்லேர்ஸ் பேர்க் கம்மிட்டேயை பறயீ எழுதுவதில்லை.
ஜூதர்களின் 2000 வருட உழைப்பு அவர்களளை உறுப்பினர் ஆகியது
ஆதன் வழய்வு UN அவர்கழுக்கு நாட்டை உருவாகியது.
தமிழர்கள் 20 வருடங்களில் உறுப்பினர் ஆகினால் UN என்கழுகும் தமிழ் ஈழத்தை உருவாகும்.
Lesson 36879021 of “Eelam Made Easy” by every other ****t.
நாவலன் மீது சுமத்தப்பட்டிருக்கும் பின்வரும் குற்றச்சாட்டுக்கள் குறித்து நாவலனின் கருத்துக்களை அறிய ஆவலாக உள்ளேன்.
இந்தியப் பொலிஸ்சுடன் கூட்டுச் சேர்ந்து கட்டைப் பஞ்சாயத்து நடத்திய சபா நாவலன், குகநாதனிடம் 30 இலட்சம் கோரினார்! பதிவேற்றியது பி.இரயாகரன் Thursday, 02 September 2010 20:53 பி.இரயாகரன் – சமர் 2010 எழுத்து (பெருப்பிக்க – சிறுப்பிக்க)
இது ஒன்றும் கற்பனையல்ல. நிஜம். அண்மையில் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இந்திய பொலிசார் பிடித்த குகநாதனை விடுவிக்க, சபா நாவலன் அவரிடம் இந்திய ரூபா 30 இலட்சத்தைக் கோரினார். நடந்த சம்பவம் உண்மை. கைது, பேரம், ஊழல், இலஞ்சம் … இதில் சபா நாவலன் சம்மந்தப்பட்டது எல்லாம் உண்மை. இதன் பின்னணியில் உலவும் தகவல்கள் பல. பொய், புரட்டு, உண்மை, மூடிமறைப்பு என்று அனைத்தும் கலந்த தகவல்கள் வெளிவருகின்றது. அதைத்தான் இங்கு நாம் தொகுத்துத் தர முனைகின்றோம்.
கைது, கடத்தல், மிரட்டல், கட்டைப் பஞ்சாயத்து … மூலம் பல இலட்சங்கள் சம்பாதிப்பது, இலங்கை அரசியலில் ஒரு அம்சமாகிவிட்டது. இதற்குள் மாமா வேலை பார்த்து அரசியல் செய்வது, கட்டைப் பஞ்சாயத்து செய்து பணம் பண்ணுவது என்று, இடைத்தரகுத் தொழில்களும் புரட்சி அரசியலும் கூடத்தான் செழிக்கின்றது. இதைத்தான் சபா நாவலன் செய்தார். கடந்தகாலத்தில் இதை, பல தளத்தில் தொழிலாக செய்தவர் தான். நாம் அறிய முதன் முதலில் ஒரு நபரை பிடித்து வைத்துக்கொண்டு, அவரை விடுவிக்க கட்டைப் பஞ்சாயத்தை செய்த தகவல் இதுதான். தன்னுடன் அரசியலில் இருப்பவர்களுக்கு இதை நியாயப்படுத்த, மார்க்சியத்தை கையில் எடுத்து அவர் கூறிய விளக்கங்கள் வேறு. அது என்ன என்பதையும் பார்க்க முன், இதன் பின்னணியில் என்ன நடந்தது என்று முதலில் பார்ப்போம்.
முன்னாள் பாரிஸ் ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியரும், முதல் ஜரோப்பிய தமிழ் தொலைக் காட்சியான ரீ.ரீ.என் நிறுவனத்தை நடத்தியவரும், இன்று டான் தொலைக்காட்சியை இலங்கையில் நடத்துபவருமான குகநாதனை, இந்தியாவில் பொலிசாரின் துணையுடன் சிலர் அவரை பிடித்து வைத்திருந்தனர். ஒருபுறத்தில் இதை கைது என்றும் கூறலாம். கட்டைப் பஞ்சாயத்து சார்ந்த, பொலிஸ் நடத்தும் இரகசிய மாபியாத் தொழில் என்றும் சொல்;லாம். 30 இலட்சம் தந்தால் விடமுடியும் என்று நாவலன் தொடர்பு கொண்ட குகநாதனின் முதல் ஜரோப்பிய தொலைக்காட்சியான ரீ.ரீ.என் யை, வழமை போல் புலிகள் மாபியா வழிகள் மூலம் கைப்பற்றியது முதல் பின்னர் எல்லாளன் படைப்பிரிவால் துரோகி என்று துண்டுபிரசுரமும் வெளியிட்டு அவரைத் துரோகியாக்கினர். இது போன்று பல கதைகள் உண்டு. புலிகள் வழமை போல் தாம் அல்லாதவரை துரோகியாக காட்டும் வரை, இவரும் பலரைப் போல் புலிக்கு ஆதரவாகத்தான் வானொலி, தொலைக்காட்சி மற்றும் பத்திரிகையை நடத்தி வந்தார். புலிகள் அவரைத் துரோகியாக்கிவுடன், அவரை தனிமைப்படுத்தி இந்த துறையில் இருந்தும் திட்டமிட்டு ஒதுக்கினர். இதன் பின் இன்று இலங்கையில் டான் தொலைக்காட்சியை அவர் நடத்துகின்றார். இப்படி இதற்கு நீண்ட அரசியல், உள்ளீடாக உள்ளது.
இந்த நிலையில் தனிப்பட்ட இருவருக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல் தொடர்பான விடையத்தில் தான், குகநாதனை இந்திய பொலிஸ் பிடித்து வைத்துக் கொண்டனர். இப்படி இந்திய பொலிசாரின் துணையுடன், ஒரு மாதத்துக்கு முன் இந்த பணப் பேரம் நடந்தது. கைது என்பதன் பின்னணியில் பணப்பேரமாக இருந்ததால், இது கைதல்ல. இது கட்டைப் பஞ்சாயத்தாக பரிணாமத்தைப் பெற்று, மற்றொரு அரசியலாகின்றது. இதன் பின்னணியில் தமிழக புலியாதரவு பிழைப்புவாத தமிழ்தேசியக் கும்பல் இருந்துள்ளது. இவருடன் தனிப்பட்ட கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் ஈடுபட்ட நபரின் தம்பி, சபா நாவலனின் இனியொரு இணையத்தில் “முற்போக்காக” (பெயர் தவிர்க்கப்படுகின்றது) தமிழ் தேசியம் பற்றி தொடர்ச்சியாக எழுதுபவர். இப்படி இதன் பின்னணியில் புலிசார்பு தமிழ்தேசியம் சார்ந்த சில வழக்கறிஞர்களும் தலையிட்டு, பணப்பேரத்தை நடத்தினர்.
இப்படி திடீரென பொலிசார் மூலம் பிடித்துவைத்துக் கொண்ட பின்னணியில் வழக்கறிஞர்கள், பொலிஸ் என்று ஒரு கூட்டு களவாணிக் கும்பல், திரைமறைவான பணப் பேரங்கள் நடத்தியிருக்கின்றது. இந்தக் கைது நடந்த அடுத்த ஒரு சில மணி நேரத்தில், அவருடன் சபா நாவலன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, 30 இலட்சம் தந்தால் உடன் விடுவிக்க முடியும் என்ற பேரத்தை நடத்துகின்றார். பாரிசில் உள்ள ஒருவரின் பெயரைக் (பெயர் தவிர்க்கப்படுகின்றது) குறிப்பிட்டு, அவர் பொறுப்பு நின்றால் உடன் அவரை விடுவிக்க முடியும் என்று பேரத்தை நடத்துகின்றார். இப்படி இந்த விவகாரத்தில் சபா நாவலன் மாமா வேலை பார்க்கின்றார். பல போட்டி மாமாக்கள் இந்த தொழிலில் இருப்பதால், இதன் பின் என்ன நடந்தது என்பதும், இது எப்படி முடிவுற்றது என்பதும் வௌ;வேறு கதைகள்.
இங்கு பொலிஸ், தமிழினவாதிகள் கூட்டாக பணப் பேரத்தை நடத்தினர். அதன் மாமாக்களில் ஒருவராக சபா நாவலனும் செயல்பட்டார். இந்த மாமா வேலைக்கு சிலர் தொழில் என்றும், சிலர் உதவி என்றும் கூட, ஆளுக்காள் விளக்கம் கொடுக்கலாம்.
இந்த விளக்கத்தைத் தாண்டியும் சபா நாவலன் இதற்கு ஒரு விளக்கத்தை, தன்னுடன் அரசியல் செய்வோருக்கு மத்தியில் கொடுத்துள்ளார். அதைத்தான் குறிப்பாக ஆராயத் தூண்டுகின்றது.
குகநாதன் குடும்பம் தான் தன்னை இதில் தலையிடக் கோரியதாக கூறியுள்ளார். இது ஒரு பொய். இவரை பொலிசின் துணையுடன் பிடித்து வைத்திருந்தவர்கள், இவரின் அரசியல் நண்பர்கள்.
குகநாதன் தான் இவரைக் கோரினார் என்று கூறிய சபா நாவலன், இதில் ஏன் தன்னை தலையிடக் கோரினர் என்றால், கடத்தியது மார்க்சிய இயக்கம் என்பதால்தான் என்றார். இப்படி இதை இனம் தெரியாத கடத்தல் என்று புதுக்கதையைப் புனைந்துள்ளார். இப்படி அவர் கூறிய தகவல்கள், யார் என்று எம்மை ஆச்சரியப்பட வைத்;தது.
குகநாதனை தமிழகத்தில் உள்ள மார்க்சிய இயக்கத்தில் ஒன்றுதான் கடத்தியதாகவும், தனக்கு இந்திய மற்றும் சர்வதேசிய மார்க்சிய இயக்கத்துடன் தொடர்புகள் இருப்பதால், தன்னை அடையாளம் கண்டு குகநாதன் தன்னை இதில் தலையிட்டு விடுவிக்கக் கோரியதாக கதை கூறியுள்ளார். அவர்களுடன் கதைத்து விடுவிக்கவே, தான் தலையிட்டதாக கூறியுள்ளார்.
இப்படி ஒரு மாதத்துக்கு முன் நடந்த இந்த விவகாரத்தின் பின்னனணயில்
1. என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ளவும், அட யார் அந்த மார்க்சிய இயக்கம், அதுவும் தமிழகத்தில் என்று தகவல்களை நாம் திரட்ட வேண்டியிருந்தது.
2. ம.க.இ.க. வுடன் ஒரு ஒருங்கிணைந்த போராட்டத்தை, சபாநாவலன் உள்ளடங்கிய குழு அறிவித்தும் இருந்தது. இந்த நேரம் இதை நடுச்சந்திக்கு நாம் கொண்டு வந்தால், அதைக் குழப்பவே இந்நடவடிக்கை என்று திரிப்பார்கள் என்பதால், இதைப்பற்றி எழுதுவதை நாம் பிற்போட்டோம். அந்த ஒருங்கிணைந்த போராட்டம் தொடர்பாக, நாம் அபிப்பிராயம் கூட சொன்னது கிடையாது. ஆனால் நாம் ம.க.இ.க. உடன் தொடர்பு கொண்டு, இதை அவர்கள் ஊடாக நிறுத்த முயன்றதாக, அவதூறு பொய்ப் பிரச்சாரம் வேறு இன்று செய்கின்றனர். இந்த ஒருங்கிணைந்த போராட்டத்தில், இலண்டன் போராட்டம் வீம்புக்கு நடத்திய விளம்பர போராட்டம் என்பது எமது அபிப்பிராயம். அந்தக் கோசங்கள் எவையும் சமூகத்தின் முன் கொண்டு சென்று, கிளர்ச்சி பிரச்சாரம் செய்து நடத்திய போராட்டமல்ல. வெறும் விளம்பர போராட்டம் என்பது எமது அபிப்பிராயம்.
3. பணம் கோரியது யார்? கடத்தியது யார் என்ற விடை எமக்கு தெரிய வேண்டியிருந்தது.
4. குகநாதனுடன் இது பற்றி உரையாடும் சூழலும் கிடைத்தது.
இப்படி இதன் பின்னணி தேடிய போதுதான், புலிப்பினாமி மாமாக்கள் தான் பொலிசின் துணையுடன் பிடித்து பணப்பேரத்தை நடத்தியது எமக்கு தெரியவந்தது.
இதில் ஈடுபட்ட சபா நாவலன் தன் மாமா தனம் மூலம் பொலிஸ் பிடித்து வைத்திருந்தவரிடம் பணத்தைக் கறக்க முனைந்ததை மூடிமறைக்க, தமிழகத்து மார்க்சிய இயக்கத்தை இழிவுபடுத்தி தன்னை நியாயப்படுத்துகின்றார். ம.க.இ.க. வின் தொடர்பு மூலம் நடத்துகின்ற அரசியல் ஒருபுறம், இதன் பின்னணியில் மார்க்சிய இயக்கத்தை சம்பந்தப்படுத்தி காட்டிய போது நாம் அதிர்ந்துதான் போனோம். “இனியொரு” மற்றும் “புதிய திசைகள்” முதலான அரசியல் பொதுத்தளத்தில், தன் “மார்க்சிய” அரசியலை தக்கவைக்க, இதற்கு இப்படி ஒரு முடிச்சு மாற்றித்தனமான மாமா கதையை அவிழ்த்துவிட்டுள்ளார்.
இதுதான் நாம் அறிந்ததும், இதில் தெரிந்து கொண்டதுமாகும். இதை அவர் மறுக்கலாம்! அவருடன் அரசியல் செய்பவர்கள் கூட மறுக்கலாம்! இதை நீங்கள் தனிநபர் அவதூறு என்று கூறலாம்! இதைப் பேசுவது அரசியல் நாகரீகம் அல்ல என்றும் கூறலாம்! சரி எதுவாக இருந்தாலும், இது தவறான வாதம் என்றால், சரி என்ன நடந்தது என்று நீங்களாவது கூறுங்கள். நாங்களும் அதைத் தெரிந்து கொள்ள தயாராக உள்ளோம்.
பி.இரயாகரன்
02.09.2010
மின்னஞ்சல் அனுப்புக உலாவியோர்: 128Trackback(0)TrackBack URI for this entryகருத்துக்கள் (1)Subscribe to this comment’s feedFIR NO:622/05 நிஜக்கதை
பதிந்தவர் டி.அருள்செழியன், September 03, 2010
திரு.இராயகரன் அவர்களுக்கு,
வணக்கம்.நான் டி.அருள்செழியன் சென்னையின் வசிக்கும் ஒரு பதிரிகையாளர். கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாக தங்கள் கட்டுரைகளை படித்து வருகிறேன். அதில் சிலவற்றில் உடன் பாடு உண்டு சிலவற்றில் மாறுபட்ட கருத்தும் உண்டு.
குறிப்பாக சமிபகாலமாக காலை எழுந்ததும் நான் முதலில் தேடுவது “ வதை முகாமில் நான்” என்ற தங்களின் தொடரைத்தான்.தங்களின் தன்நம்பிக்கை என்னை வியக்க வைத்தது
அதே தன் நம்பிகையோடு தான் கடந்த ஆறு ஆண்டுகளாக இடை விடாது போராடித்தான் குகநாதனிடம் நான் வஞ்சகமாக இழந்ததில் பெரும் பங்கு பணத்தை மீட்டேன்.
இந்த நிலையில் ”இந்தியப் பொலிஸ்சுடன் கூட்டுச் சேர்ந்து கட்டைப் பஞ்சாயத்து நடத்திய சபா நாவலன், குகநாதனிடம் 30 இலட்சம் கோரினார்! .”என்ற தங்கள் கட்டுரையை இன்று பார்த்தேன்.
அந்த சம்பவத்தில் முக்கியமான நபர் என்ற முறையில் இதனை எழுதுகிறேன்.
குகநாதன் விஷயயத்தில் சபா நாவலன்,அசோக் போன்றவர்களிடம் குகநதனின் மனைவி அழுது கதறியதால்தான் அவர்கள் அவருக்காக என்னிடம் பேசினர்.அப்போது நான் எனக்கு வரவேண்டிய பணத்திற்கு யாராவது பொறுப்பெடுத்தால் என்னை ஏமாற்றிய குகனாதனை விட்டுவிடலாம் என்றேன்.அவர்கள் ஒதுங்கிக் கொண்டனர். இதுதான் நடந்தது.
எனனைப் பொறுத்தவரையில் நான் குகநாதனை சிறையில் அடைக்கவே விரும்பினேன்.
சாதாரண குடும்பத்தில் பிறந்து நேர்மையாக உழைத்து சராசரி வாழ்க்கை வாழும் என்னை வஞ்சகமாய் ஏமாற்றி என்னையும் என் குடும்பத்தையும் மன வேதனையிலும் கண்ணீரிலும் தவிக்கவிட்ட குகநாதனை – என்னைப்போல நம்பிய பலரையும் ஏமாற்றிய குகநாதனை சிறையில் அடைப்பதுதான் பலருக்கும் ஆறுதலாய் அமையும் என்று கருதுனேன்.
குகநாதனும் அவர் மனைவியும் நன்றி மறந்து கடந்த சில வருடங்களாக ஏதோ நான் அவர்களை ஏமாற்றி விட்டதாக பலரிடமும் கதைவிட்டு வந்தனர். அதெற்கெல்லாம் இதுவே பதிலாக அமையும் எனக் கருதினேன்.ஆனால் மேற்படி குகநாதனின் மனைவி என்னிடமும் போனில் கதறினார்.குகநாதன் உள்ளே போகும் பட்சத்தின்ல் அடுத்தடுது இரண்டு மூன்று வழக்குகளிலும் அவர் சிக்கி குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது அவர் புழலில்தான் காலம் தள்ளியிருக்க வேண்டும்.இந்த சூழலில் நண்பர்கள் பலரும் தலையிட்டதாலும் குகநாதன் கெஞ்சியாதாலுமே அவரோடு ஒரு உடன்படிக்கை செய்து நான் இழந்த பணத்தின் பெரும் பகுதியை மீட்டேன்.
குக நாதனுக்கும் எனக்கும் என்ன தொடர்பு..?நான் அவரிடம் எப்படி ஏமாந்தேன்..?
2005 ஆகஸ்ட்டில் அ தி மு க ஆட்சியில் இதே குகநாதன் நேரடியாக வராமல் (அ தி மு கவின் போலி பத்திரிகையாளர்) அண்ணா சக்தி என்பவர் மூலம் இதே சென்னை போலிஸில் என் மீது கொடுத்த புகார் என்ன?அதன் மூலம் நான் அடைந்த மன வேதனைகள் இழப்புகள்.பண கஷ்டங்கள் ,பிறகு எனது போராட்டம்.1985ல் ஆனந்த விகடனில் துவங்கி 1996 வரை முக்கிய தொலைக்காட்சி ஊடகங்களிலும் வேலை பார்த்த நான் 1997 முதல் குநாதனின் டி ஆர் டி தமிழ் ஒளி தொலைக்காட்சியில் வேலை பார்க்கத் துவங்கியதிலிருத்து துவங்கி.2002 முதல் அவருக்கும் எனக்கும் ஏற்பட்ட ஆத்மார்த்தமான நட்பு. 2004 ஜனவரி முதல் அவருடன் வியாபார ரீதியான தொடர்பு.அப்போது அவருடன் இருந்தவர்களாலேயே நான் கவனமாக இருக்கவேண்டுமென்று நான் எச்சரிக்கப்பட்டதை அலட்சியம் செய்தது.ஆனால் நான்கே மாதத்தில் அவரின் மோசடித்தனங்களை புரிந்துகொண்டது.அதன் பிறகு விட்ட பணத்தை பிடிப்பதாய் நினைத்துக்கொண்டு மிச்சமிருந்த பணத்தையும் இழந்ததுடன் குகநாதனால் மோசடி புகாருக்கு ஆளானது.
பின் அனைத்தையும் இழந்து வறுமையில் வீழ்ந்து மறுபடியும் 2007கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு பிறகு தமிழக ஊடகங்களிலேயே மறுபடியும் வேலைக்கு சேர்ந்தது.
அதன் பிறகு குகநாதானை பிடிக்க பல முயற்சிகள் எடுத்தது கடைசியில் ஒரு சுவாரஸ்மான நாடகத்தை அரங்கேற்றி மேற்படியாரை சென்னைக்கு (சொந்த செலவிலே) வரவைத்து அன்நாரின் வாக்குமூலங்களை பதிவு செய்ததோடு அவரிடமிருந்து எனக்கு வரவேண்டிய பணத்தையும் நான் இழந்த மகிழ்ச்சியையும் நான் மீட்டுக்கொண்டது வரை அனைத்தையும் FIR NO:622/05 என்ற் தலைப்பில் ஆதாரங்களுடன் ஒரு (நிஜ) நாவலாகவே எழுதி வருகிறேன். விரைவில் அந்த புத்தகம் ஒரு விழாவைத்து வெளியிடப்படும்.
மேலும் குகநாதன் கைது செய்யப்பட்ட விதம் காவல் நிலையத்தில் அவரது கெஞ்சல்,இராயகரன் குறிப்பிடும் ஆட்களுடன் அவரது பேச்சுகள் ஆகியவை என்னால் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.அதை பார்த்தால் நடந்தது கட்டபஞ்சாயாதா அல்லது குகநாதனுக்கு காட்டப்பட்டது கருணையா என்பது தெரியவரும்.இராகரன் விரும்பினால் அந்த ரகசிய வீடியோவின் 8 மணி நேரப்பதிவின் ஒரு பிரதியை அனுப்பித்தரத்தயாரா��� இருக்கிறேன்.
எனது தொலைபேசி எண் +91 91766 87984 இராகரனுடன் வேண்டுமென்று சமிபகாலமாக நான் விரும்பியிருக்கிரே���்.இப்போது அதற்கான நேரம் வந்துவிட்டது போலும்.இராகரன் தனது தொடர்பு எண்னை எனக்கு தந்தாலும் நான் அவருடன் பேச ஆவலாய் உள்ளேன்.
நன்றி
அன்புடன்,
டி.அருள்செழியன்
திரு.அருள் எழிலன் நீங்கள் ஆரம்பித்த 1985 ஆண்டுகளில்தான் நான் முதல் இலங்கைத்தமிழருடன் தொடர்புக் கொள்ள ஆரம்பித்தேன்,பல இழப்புகள்,மன உழைச்சல்கள்!.ஏன் இப்படி,”மனம் பிறழ்ந்த விட்டில் பூச்சிகள்” என் நீண்ட கதையையும் உங்களுடன் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு கூறுகிறேன்….
ரயாகரனிடம் எத்தனையோ ஆண்டுகளகக் கேட்கப் பட்ட கேள்விகளுக்குப் பதிலைத் தவிர்த்துத் தன் சுயபுராணதைக் கொஞ்சம் கறபனை வளத்துடன் எழுதுவதுடன் பிறரையும் வலிந்து நிந்தித்துவருகிறார்.
அவர் முன்வைக்கும் ஒவ்வொரு குற்றாச்சாட்டிலும் முக்கியமான இரு பண்புகள்:
(1) தனது கருத்துக்களை மறுப்போரை அவர் இலக்கு வைப்பார்;
2) ஆதாரமில்லாமல் கதை கட்டுவார்.
அவருடைய சொற்களிலிருந்து:
“இதை நீங்கள் தனிநபர் அவதூறு என்று கூறலாம்! இதைப் பேசுவது அரசியல் நாகரீகம் அல்ல என்றும் கூறலாம்! சரி………”
சரி என்ற பகுதிக்குப் பின் வருவதை “மெத்தச் சரி” என்று திருதிக்கொண்டால் போதுமானது.
தான் எத்தகைய மனிதர் என்பதையே அவரது ஒவ்வொரு அபாண்டத்தின் மூலமும் உலகுக்கு அறிவித்து வருகிறார்.
அவரைப் புறக்கணிப்பதே அவருடைய தகுதிக்கேற்ற எதிர்வினை.
அருள் செழியனுக்கும் பாகிஸ்தான் நிழல் உலகத் தாதா தாவூத் இப்ராஹிமுக்கும் உள்ள தொடர்பு குறித்து புலனாய்வுப்புலி ரயாகரன் விசாரித்து எழுதவும். அவரது தம்பிக்கும் ஓசாமா பின்லேடனுக்கும் தொடபு ஊரறிந்தது…. வாழ்க ராயாகரன் புகழ்…
நீங்கள் பாட்டுக்குகுச் சொல்லிவிட்டுப் போவீர்கள்.
கொமிசார் ஐயா அந்த லைனில் தொடங்கினார் என்றால் பூமி தாங்காது
DEAR FRIENDS. OK, NOW YOU GUYS ARE WRITING GOOD AND BAD, RIGHT AND WRONG AND EVERYTHING ABOUT TIGERS! RIGHT, WHERE WERE YOU ALL THESE DAYS? WHY DIDN’T YOU TALK ABOUT IN THE LAST THIRTY YEARS? OK, IN SRILANKA, YOU CANNOT TALK ABOUT , AT LEAST EVEN IN AMERICA OR CANADA OR ANY OTHER COUNTRIES, YOU COULD HAVE TALKED ABOUT. YOU KNOW WELL, IF YOU TALK LIKE THIS ,EVEN THE PEOPLE WOULD NOT HAVE LISTENED TO YOU GUYS.
NOW. PEOPLE ARE NOT READY TO LISTEN TO ANY ONE. THEY STILL WANT A LEADER LIKE PRABHAKARAN. IF ANOTHER PRABHAKARN COMES, THE SRILANKAN GOVT WILL NOT EVEN THINK OF ANOTHER WAR. BECAUSE THEY KNOW THAT THEY CANNOT GO AGAIN TO COUNTRY TO COUNTRY FOR MORE HELP. LTTE LOST IT’S WAR BECAUSE OF THE POLITICAL BUSINESS BASTARDS AND OTHER MONEY MAKING WOLVES IN EVERY WESTERN COUNTRY. YOU MAY HAVE MILLIONS WEBSITES, MILLI0NS OF NEWS PAPERS, MILLIONS OR RADIOS, MILLIONS OF T.V PROGRAMS. MEETINGS. DISSCUSIONS, DEBATES, AND YOU NAME IT OR ANY KIND OF MEDIA OR ANY NUMBER OF MEDIAS WILL NOT BE EQUAL TO ONE OF THE ATTACKS OF LTTE. WHEN THE SIRLANKAN GOVT FAILS TO LISTEN TO THE VOICE OF THE TAMILS, WE HAVE TO PREPARE FOR ANOTHER WAR AND THE WAR OF PRABHAKARAN. LET THE SRILANKAN GOVT STARTS SOME THING, THEN THERE WILL BE ANOTHER WAR OF PRABHAKARAN. THAT WILL BE THE ANOTHER REAL WORSE ONE.
Mr V
We have heard this nonsense about “Where were you then?” many times when people lose an argument.
We were exactly where we were always and continue to be.
The point is that your tunnel vision had thus far prevented you from even noticing anythig different from what you chose to believe as the only truth.
It is not a matter of where one was or is, but a matter of understanding how things went horribly wrong. Sadly you are not interested to know, perhaps because there is something to conceal.
Some of the “B******s” you denounce were ardent supporters of the messianic mission that you still seem to have faith in.
நாவலன்
நீங்கள் இன்னும் ரயாகரன் பற்றி எழுதவில்லை ஏன்?
ரயாகரனிடன் தொங்கியிருக்கும் ஒரு மில்லியன் டொலர் கட்டன்நசனல் வங்கிக் காசு பற்றி தெரிந்தவர்களில் நீங்களும் ஒருவர் என அறிகிறேன். அதை பற்றி எல்லாம் நீங்கள் ஏன் எழுதவில்லை என்றால் உங்களுக்கும் ரயா பணம் தந்தானா?
அல்லது பயமா?
நாவலனோ அல்ல எவரோ உண்மையானவர்களாயின் நான் எழுதிய பின்னூட்டத்தை வெளியில் விட்டு விவாதித்து இருப்பர்.இவர்கள் போலிகள்-பணப் பிசாசுகள்!எனவேதாம் தமது நாணயமற்ற நடாத்தையை மறைக்க எமது பின்னூட்டத்தை மறைக்கின்றனர்!என்ன நம் புரட்சி!
:-(((
நீங்கள் எழுதுகிற பின்னூட்டங்களைப் பெறுமதியுடையதாகக் கொள்ளுகிற எவரதும் மூளையைக் கவனமான பரிசோதனைக்கு உட்படுத்துவது தகும்.
நீங்கள் கூட நிதானமாக இருக்கும் போது அவற்றைப் பெறுமதியுடையதாகக் கொள்ள மாட்டீர்கள் என நம்புகிறேன். இல்லாவிடின் பரிசோதனையைப் பரிந்துரைக்கிறேன்.
உங்கள் வாயால் வரும் அவதூறுகளும் வக்கிர நிந்தனைகளும் அவற்றின் முன்பின் முரண்பட்ட தன்மையும் உங்களை ஒரு அறிஞர் என்று காட்டிக்கொள்ளும் முயற்சிகளின் பயனின்மையையும் பற்றி அறிந்த எவரும் அவை பற்றிப் பேசிக் தமது காலத்தை வீணாக்க மாட்டார்கள் என இப்போதாவது அறியாவிடின் எப்போது அறிவீர்கள்?
இங்கே ஒரு பொய் மூட்டை அம்பலப்பட்டுச் சந்தி சிரிக்கிறது. அது போதாதா?
நண்பரே உங்களை மிக நிதானமாகக் கவனித்தால் நீங்கள் நாவலனுக்குச் செக்கிரிட்டியாகக கருத்திடுவதில் முந்துகிறீர்.உங்களை நாவலன்தானெனக்கொள்வதில் உடன்பாடின்றியிருப்பினும்>எனது பிரச்சனை நீங்கள் குறிப்பிடும்”அறிஞர்”எனப் பகரும்-உணரும் நிலையென்பது உங்களுக்கான முன் தீர்பாகவிருந்தால் அது தங்களது அறிவின் கோளாறு.உண்மைகளோடு அரசியல் பேசுவதென்பது அறிவுக்குட்பட்ட சேட்டை அல்ல.அதை முதலில் புரிந்து -முகத்தோடு வாரும்.நீர் மொட்டாக்குப் போட்டாலும்-முகமூடி போட்டாலும் உமது ஆர்வமே உம்மைக் கெடுக்கிறது.
சிறி ரங்கனின் பின்னூட்டங்களை வெளியிடாமைக்கு இனியொருவுக்கு நன்றிகள். சிறி ரங்கன் எழுத்தில் ஓர் மற்றொரு பிரபாகரன். தமிழ மக்களின் தலைவிதி சிறி ரங்கன் போன்றோரின் ஞானமற்ற பின்னூட்டங்களை வெளியிட சில களங்கள் இருப்பதே.
எப்பா ரங்கா….நீ வேறும் ரங்கனா அல்லது பாண்டு ரங்கனா? அல்லது போண்டா ரங்கனா?
PVSR
உங்களுக்கு மற்றவர்கள் மீது வசைமாரி பொழிவதை விட எதுவும் தெரியாது.
நான் சொன்னவற்றையே உங்கள் ஒவ்வொரு சொல்லும் மீள மீள உறுதிப்படுத்தும்.
உங்களுடன் விவாதிப்பதை விடத் தெருவால் போகிற குடிகாரனுன்டன் பயனுற உரையாடலாம்.
இராயாகரன் வெளியிட்ட அவதூறுகளுக்கு பின்னால் ’தேசம்’ கடந்து லண்டனில் வாழும் ஒரு நபரும் உள்ளார். அவர் பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் விளையாட்டில் வீரரும் ஆவார். குகநாதனை தொடர்பு கொண்டு பேசி அனைத்தையும் ரைக்கோட் செய்து அதன் பிரதி ஒன்று இராயாகரனுக்கு அநாமதேய ஈ.மெயில் மூலம் அனுப்பியதாக ‘தேசம்’ கடந்து பாரிஸில் இருந்து லண்டன் வந்து வாழும் அவர்களின் பழைய பங்காளி ஒருவர் தனது மனவேதனையை என்னிடம் தொலைபேசியில் கொட்டி தீர்த்தார்.
DEAR MR OR MRS XXX, THE MAIN TOPIC IS TAMIL EELAM. THE IDENTITY OF TAMIL EELAM WAS SPREAD OUT ALL OVER THE WORLD BY LTTE. NOT THAT THE WHOLE WORLD GOT INVOLVED IN OUR STRUGGLE BECAUSE THE TAMILS IN THE WESTERN COUNTRIES.
WHAT THE NEWS PAPERS SAY IN SRI LANKA?
THE SINHALESE TOURISTS VISITING TO JAFFANA. WHAT THAT MEANS? THE TAMIL EELAM IS ALREADY IS THERE AND IT IS OUR DUTY TO REORGANIZE THE PEOPLE WITHOUT GETTING LOST IN THE ILLUSION OF OTHER OPPORTUNISTIC POLITICAL BUSINESS GUYS AND ALSO SOME OF THE PART TO BE REFORMED IN A DEPLOMATIC WAYS BUT THAT IS TO MIXED WITH IDEAS AND ACTIVITIES AND THE GOAL , LEFT BY THE HONORABLE LEADER PRABHAKARAN.
WHAT THE TAMIL EELAM WANTS TODAY?
1) THE POPULATION IS TO BE INCREASED
2) ALL THE WIDOWS ARE TO BE MARRIED BY THOSE WHO ARE WILLING TO LIFE TO THOSE VICTIMS. 3) THOSE WHO HAVE MONEY TO BE ENCOURAGED TO INVEST IN OUR AREAS. 4) THOSE WHO ARE DOING SOCIAL AND RELIGIOUS SERVICES ARE TO BE WELCOMED TO BE WITHOUT GETTING ANY TROUBLE OF OTHER LOCALHOOLIGANS
5) MAKE SURE OUR GOVERNMENT SERVENTS DOING THEIR JOB TO OUR PEPLE WITH HEART. 6) VOLUNTEERS FROM ALL PART OF THE WORLD ARE TO BE THERE TO WORK IN THE HOSPITAL AND SOME OTHER PUBLIC SECTORS. 7) THE YOUNG BOYS AND GIRLS ARE TO BE INTRESTED IN SPORTS. 8) FARMERS ARE TO BE GIVEN ALL KIND OF FINANCIAL HELP. 9) THE PUBLIC PLACES ARE TO BE VERY CLEAN AND THE PEOPLE HAVE TO CORPORATE SOCIAL RESPONSIBILITIES IN ORDER KEEP THOSE PLACES TO BE CLEAN.
YOU DON’T NEED TO DISCUSS OR WORRY ABOUT WHAT RAJAPAKSHA SAYS OR WHAT INIDA DOING OR WHAT AMERICA PLANING OR CHINA GIVING OR PAKISTAN PLANING. THE PEOPLE IN TAMIL EELAM ARE WELL SMART ENUGH TO HANDLE THOSE PEOPLE. WE ARE HERE TO GIVE SOME SUPPORT TO OUR PEOPLE. THAT IS ALL.
My objection was about your deflecting arguments with the cheap stunt: “Where were you then?”.
The people who misled the LTTE by their uncritical support have a lot to answer for.
The people where I live (which is not called anything but Ilangkai or Eelam by us) have learnt the hard way. Please do not thrust your agenda on us. It is as bad as what Rajapaksa and his henchmen are trying to do. Before trying to “help” find out what the people here want. Sadly, you haven’t a clue.
IT IS TIME THAT PATRONISING REMARKS FROM THOSE WITH NO COMMITMENT TO THE PEOPLE HERE CAME TO AN END AND SERIOUS DISCUSSION TOOK THEIR PLACE.
பல பேர் ரஜாகரனுக்கு மன நோய் என்று பேசிக் கொள்கிறார்கள். உண்மையில் அப்படி இல்லை. ரஜாகரன் தனது கர்ரன் நாசனல் திருட்டுப் பணத்தை மறைப்பதற்கு மற்றவர்கள் மீது அவதூறூ நாடகம் நடத்தும் கொள்ளைக் காரன். முழு சுயநினைவோடு தான் அவதூறு பொலிகிறார். பணத்துக்கு கணக்குக் காட்டாமல் விடுதலைப் புலிகள் மீது பணம் எங்கே என்று கேட்க உரிமை இல்லை. மக்களின் பணம் எங்கே என்று அவர் வேலை பார்க்கும் புலிப் பினாமியின் அச்சகத்துக்கு முன்னால் சத்தியாக்கிரகம் செய்ய வேண்டும்.
நட்புடன் அனைவருக்கும்,
ரயாகரன் உட்பட பலர் தமது சுய நோக்கங்களுக்காக முன்வைக்கும் அவதூறுகளுக்குப் பதில் கூற வேண்டும் என்று இதுவரை எண்ணியதில்லை. அவற்றால் எனக்கு எந்த மன உளைச்சலும் இதுவரை ஏற்பட்டதில்லை. அவதூறுக் காரர்களின் பிரதானநோக்கம் மற்றவர்களின் கவனத்தைத் தம்மை நோக்கித் திசைதிருப்புவதே. அதற்கு நான் பலியாக விரும்பியதில்லை. அரசியல் கருத்துக்களுகு மட்டும் பதில் சொல்லியிருக்கிறேன். இப்போது இந்த அவதூறுகளில் வேறு அமைப்புகளும் தொடர்புபடுத்தப்பட்டிருப்பதால் பதில் கூற வேண்டிய கடமை எனக்கு உண்டு என்பதை உணர்கிறேன். இருப்பினும் கடந்த சில தினங்களாக நான் வெளி நாடு ஒன்றில் இருப்பதால் அதிலும் கணனி வசதிகளற்ற தொலைக் கிரமங்களில் வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டதல் விவாதங்களில் பங்காற்றவோ, அவதூறு குறித்து பதிலிறுக்கவோ இயலாத சூழல் இருந்தது. நான் திரும்பியதும் இது குறித்த விரிவான பதிலை எழுத எண்ணுகிறேன். அதுவரை நன்றிகள்..
நட்புடன் நாவலன்
தயவு செய்து பச்சைப் பொய்கள் எவை என்பதை மட்டும் சுட்டிக்காட்டுவது போதுமானது.
நீங்கள் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் திரித்து விளக்கப் பட்டு அவதூற்றுக்கான இணையத்தள அரங்கங்களில் காலத்தை வீணக்குவோருக்குத் தீனி போட மட்டுமெ உதவும்.
தயவு செய்து வீணர்களுடன் விவாத்த்தை வளர்க்காதீர்கள்.
பித்தலாட்டம் போடும் மந்தை கூட்டங்களே!
தயவு செய்து சிந்தியுங்கள்!, முந்திய காலங்களை ஒருதடவை தன்னும் சிந்தித்து பாருங்கள்!,
அன்று ஒரு காலம், வடக்கு, கிழக்கு இணைந்த எல்லைகளை கொண்ட, தமிழ்நாட்டுக்கு நிகரான மாநிலம், வரி அறவீடு, போலிஸ், நீதி, காணி, கல்வி, என்று சகல உரிமையும், சகல சந்தர்பங்களும் மட்டுமல்ல,
இலங்கை இராணுவம் உள்ளே வரமுடியாது, ஆனால், புலிகள் இலங்கையில் எப்பகுதிக்கும் தடையின்றி செல்லலாம்,
ஸ்ரீலங்கா வானுர்த்திகளிலும் செல்லலாம், கொழும்பில் தங்கலாம், சிகிட்சை பெறலாம், பிள்ளைகள் படிக்கலாம்,குடும்பமாக எங்கும் போகலாம்,
பாதுகாப்புக்காக சிறிலங்கா விசேட இராணுவத்தினரை கேட்கலாம்,
…….. சொல்லி வேலையில்லை….
அப்படியெல்லாம் வந்த அறிய வாய்ப்புகளை, சந்தர்ப்பங்களை எல்லாம், குறுக்கு புத்தி, குறுகிய சிந்தனையால் உதாசீனம் செய்து விட்டு,
தலைக்கனம், ஆணவம், ஆசை பிடித்து, நம்பியவர்களுக்கு எல்லாம் துரோகம் செய்து, தமிழ் மக்களை மட்டுமல்ல உலகத்தையே ஏமாற்றி…..,
குட்ட, குட்ட குனிபவனை மேலும், மேலும் குட்டி மடையனாக்கிய காலம் அன்று, இவற்றை எல்லாம் ஒன்றுமே தெரியாதவர்கள் போல் பார்த்து, கேட்டு, ரசித்து விட்டு,
இப்போ மட்டும் துள்ளி பாய்வது ஏன்?
IT IS TOTAL WASTAGE AND IT TAKES US MILLIONS OF MILES FROM WHERE WE SUPPOSE TO TRAVEL. OUR MAIN ROAD IS TO BE CONTRUCTED JUST FOR THE UNITY OF OUR PEOPLE.
IT IS A TOTAL WASTAGE AND ALL THESE COMMMENTS TAKE US MILLIONS AND MILLIONS OF MILES AWAY FROM WHERE WE SUPPOSE TO TRAVEL. RIGHT NOW OUR MAIN ROAD IS TO BE CONSTRUCTED AND TO BE VERY CLEAR JUST FOR THE UNITY OF OUR PEOPLE.
” புலிகள் இராணுவ பலம் மிக்க அமைப்பாக இருந்த போது அவர்களால் புறக்கணிக்கப்பட்ட அமைப்புக்களும், தனி மனிதர்களுமே இன்று இலங்கைத் தமிழ்ப் பேசும் மக்களுக்காகத் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கின்றனர். ”
யார் அவர்கள் …?
சபாஷ் (ஏ)மாற்று கருத்து போலிகளிடையே சரியான போட்டி
மாறாத கருத்துப் போலிகளிடையில் உள்ள மோதலை விடவா?
“(ஏ)மாறாத கருத்து போலிகள்” என்று XXX ஏன் எழுதவில்லை?
Niranjan போன்றவர்கள் புலிப் பினாமிகளிடம் ஏமாந்தவர்கள் என்றாலும் மாறாத மனப் பிரமையுடனே இருப்பவர்கள் என்பதாலா?
மீனுக்கு வாலும், பாம்புக்கு தலையும் காட்டி வெற்றி்யீட்டிய சிங்களனின் இற்றைய நிலையென்ன, அமெரிக்கா,அய்ரோப்பா அவர்களின் சிங்கள்ன் மீதான் பிடி நழு்விப்போவதன் பொருளென்ன ; அங்கே துன்பத்தில் வாடும் ஈழ மக்களுக்கான விடுதலை அரசியல் மூலமாகவே இயலும் . வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் ஒற்றுமையுடன் செயல்படுங்கள் , வீதிகளில் இறங்கி போராடுங்கள் , அனைத்து நாடுகளுக்கும் ஆசைகாட்டி , ஆப்பு எடுத்த குரங்காக முழிக்கின்றான் சிங்கள்ன் ; தமிழினம் ஒன்றுபட்டு செயல்படவேண்டிய தருண்ம இது.