தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் நாளை ஒரு நாள் நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்திய வழக்கில் சி.பி.ஐ குற்றப்பத்திரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடைபெறுகிறது என்று வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நாளை ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று வழக்கறிஞர்கள் கூறினர்.