இன்று 18.12.2009 வெள்ளி இரவு சன்ரைஸ் வானொலியில் புதிய திசைகள் குழுவினரின் அசியல் கலந்துரையாடல் இடம்பெறும். லண்டனிலிருந்து வெள்ளி இரவு 10:30 மணிமுதல் ஒலிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் இலங்கையிலிருந்து இலங்கை புதிய ஜனநாயகக் கட்சியின் சார்பில் தோழர் தம்பையாவும், பிரபல தமிழ் நாட்டு ஊடகவியலாளர் டி.அருள் எழிலனும் பங்கேற்கின்றனர். “இலங்கை அரசியலும் சர்வதேச அரசியல் பின்புலமும்” என்ற தலைப்பில் இடம்பெறும் இந்தக் கலந்துரையாடலில் லண்டனிலிருந்து பாலன், நாவலன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். கடந்த மாத நிகழ்ச்சியில் இந்தியாவிலிருந்து மக்கள் கலை இலக்கியக் கழக சார்பில் தோழர் மருதையன் கலந்து சிறப்பித்தார் எனபது குறிப்பிடத்தக்கது.
எங்களுக்கு அந்த பேட்டியின் பதிவை கேட்பதற்காக உங்கள் தளத்தில் கொடுக்க முடியுமா?
எதிர்ப்பார்க்கிறோம்.