இலங்கை அமைச்சரின் கோரிக்கைக்கு இணங்க ஒரு போதும் ஐ.நா. நிபுணர்குழு கலைக்கப்படமாட்டாது என்று ஐ.நா.பேச்சாளர் பர்ஹான் ஹக் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பி.பி.சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
கொழும்பு ஐ.நா. அலுவலகத்தில் பணியாற்றும் எமது ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து நாம் ஆழ்ந்த கவலையடைந்துள்ளோம்.அத்துடன் இது குறித்து இலங்கை அரசுடன் இது தொடர்பாக பேசிவருகின்றோம்.
எனினும் எமது பணியாளர்கள் குறித்து எமக்கு முழுமையான தகவல் எதுவும் கிடைக்கவில்லை. எங்களுக்கு தெரிந்தவகையில் நேற்றைய சம்பவத்தில் எவரும் பாதிக்கப்படவில்லை.
ஆனால் அவர்கள் தற்பொது அலுவலகத்துக்கு உள்ளே இருக்கின்றனரா அல்லது வெளியே உள்ளனரா என்பது குறித்து எம்மிடம் முழுமையான தகவல் இல்லை.