ஊர்காவற்றுறை சாட்டி கடற்கரையில் புதன்கிழமை மாலை மனித எலும்புக் கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. கண்டெடுக்கப்பட்ட எலும்புக் கூடு ஆணினதா அல்லது பெண்ணினதா என அடையாளம் காணப்படவில்லை.
ஊர்காவற்றுறை நீதவான சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டதுடன் யாழ்.போதனா வைத்தியசாலையிடம் எலும்புக்கூடை கையளிக்குமாறு காவற்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
புதன் இரவு காவற்துறையினர் எலும்புக் கூட்டை வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.